Category

தோட்டம்

Category

ஆரஞ்சு செடி எலுமிச்சை (சிட்ரஸ்) குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது தோடம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டிலேயே ஆரஞ்சு செடி வளர்ப்பு செய்வதன் மூலம், அதிகமான சத்துகள் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தில் விஷத்தன்மை உள்ள வேதிப்பொருட்கள் சேராமல் அதன் பலன்களை நாம் பெறமுடியும் மேலும் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற ஆரஞ்சு பழத்தை கொடுக்கலாம்.
ஆரஞ்சு செடி வளர்ப்பு
இந்தியாவில் தமிழ்நாடு, மகராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு பழமானது பெருமளவில் விளைகிறது. நம் தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு பரியிடப்படுகிறது. ஆரஞ்சு பழம் பயிரிடும் முறை, ஆரஞ்சு பயன்கள், மாடி தோட்டத்தில் ஆரஞ்சு செடி வளர்ப்பு மற்றும் ஆரஞ்சு பழம் சாகுபடி முறைகள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தேர்வு

ஆரஞ்சு விதை
ஆரஞ்சு பழத்திருந்து எடுத்த விதைகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது பழத்தை வெட்டிய பிறகு விதைகளை நீண்டநேரம் வைத்திருக்க கூடாது, உடனே அதை நாற்றுகள் தயார் செய்யும் குழித்தட்டுகளில் மண்கலவையுடன் சேர்த்து விதைப்பு செய்திட வேண்டும். நாற்றுகள் முளைத்து வந்தவுடன் அதை தனியே எடுத்து நடவு செய்யவேண்டும். இது ஆரஞ்சு பழத்தில் இருந்து செடி வளர்க்கும் முறை ஆகும்.

விதைகளில் இருந்து ஆரஞ்சு செடி வளர்ப்பது போல, ஓட்டுக்கட்டிய நாற்றுகளில் இருந்தும் கூட ஆரஞ்சு செடி வளர்க்கலாம் ஆனால் விதையில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடித்து வளரும், இந்த ஆணி வேர் தான் மரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். எனவே விதைகளில் இருந்து செய்யும் ஆரஞ்சு செடி வளர்ப்பு முறையே சிறந்தது.

மண்கலவை மற்றும் நடவு செய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மண்புழு உரம் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பிறகு குழித்தட்டுகளில் இருக்கும் நாற்றுகளை எடுத்து இந்த மண்கலவையில் நடவு செய்யவும். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆரஞ்சு செடி நடவு செய்யலாம்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆரஞ்சு செடி வளர்ச்சி

ஆரஞ்சு மரம்
ஆரஞ்சு செடி வளர்ப்பு வீட்டுத்தோட்டம்தனை மிக அழகாக்கும். ஆரஞ்சு செடி நன்கு வளரும் வரை பராமரிப்பு மிக அவசியமாகும். களைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், காய்ந்து போன கிளைகள், பக்க கிளைகள் ஆகிவற்றை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். இயற்கை உரங்களை அளிப்பதே சிறந்தது. ஆரஞ்சு மரம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை கொடுக்கத்தொடங்கும். ஆரஞ்சு மரம் வளர்ப்பு செய்வதன் மூலம் 50 ஆண்டுகள் வரை அதன் பழங்களை பெற முடியும்.

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

ஆரஞ்சு செடி வளர்ப்பு

  • ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது நமது இரத்தத்தில் இருக்கும் அவசியமற்ற சர்க்கரையின் அளவை குறைக்க உதவிபுரிகிறது. ஆகையால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினசரி ஒரு ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும், குறிப்பாக இருதய கோளாறு மற்றும் இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாகும். ஆரஞ்சு பழத்தை உண்டுவந்தால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கிவிடும்.
  • ஆரஞ்சு பழம்தனில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளதால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும், மேலும் இது நோய் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
  • தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறவர்கள் இரவு உறங்கசெல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றுடன் தேன் கலந்து உண்டுவந்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
  • ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதன் பயனாக மேனி எப்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்கும்.


ஆரஞ்சு செடிகளை வீட்டில் முளைக்க வைக்க உதவும் வழிமுறைகளை கண்டோம். நீங்களும் மேற்கண்ட முறையில் ஆரஞ்சு வளர்த்து, அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

சூரியகாந்தி பூ மத்திய அமெரிக்க நாடுகளை தன் தாயகமாக கொண்டது. கி.மு 2600 ஆண்டுகளில் முதன்முறையாக மெக்சிகோவில் இந்த சூரியகாந்தி பூ பயிரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை இந்த சூரியகாந்தி பயனளித்து கொண்டிருக்கிறது. இன்று உலகளவில் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு சிறப்பாகவும், பெருமளவிலும் செய்யப்படுகிறது.

சூரியகாந்தி பூ நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் மற்றும் புத்துணர்வுடனும் நம்மை வைத்திருக்கும் பூக்களில் ஒன்றாகும். இதனுடைய பிரகாசமிக்க மஞ்சள் நிறமானது மனதினை எப்போதுமே புத்துணர்வுடன் வைத்திருக்கும். மிக மெல்லிய நறுமணத்தை கொண்டவை இந்த பூக்கள், சூரியகாந்தியை அருகினில் சென்று முகர்ந்து பார்த்தால் தான் அதனுடைய நறுமணத்தை உணர முடியும்.
சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு
சூரியகாந்தியில் பல வகைகள் இருக்கிறது, அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தது. மாடித்தோட்டத்தில் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பது எப்படி, சூரியகாந்தி பூ அறுவடை, சூரியகாந்தி பயன்கள், சூரியகாந்தி விதை எப்படி சாப்பிடுவது மற்றும் சூரிய காந்தி விதையின் மருத்துவ பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

சூரியகாந்தி பூச்செடி நாற்றுகள்

தரமான மற்றும் நேர்த்தியான விதைகளை பார்த்து வாங்கிக்கொள்ளவும். அந்த விதைகளை வைத்து நாற்றுகள் வளர்த்து பின்பு நடவு செய்வது சிறந்ததாகும், ஏனெனில் சில சமயங்களில் நட்ட விதைகள் சில முளைக்காமல் போகும் அல்லது வளர்ச்சி சரிவர இருக்காது. நாற்றுகள் வளர்ப்பதன் மூலம் நல்ல நாற்றுகளை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாற்றுகள் வளர்க்கும் தட்டுகளில் விதைகளை போட்டு பராமரிக்கவும்.

மண்கலவை

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சரிபாதி நன்கு கலந்து நடவு செய்ய தேவையான மண்கலவையை தயார் செய்யவேண்டும். சூரிய காந்தி அதிக வேர்பிடிக்கும் என்பதால் எப்போதும் ஈரப்பதம் தேவை, எனவே தான் கோகோபீட் பயன்படுத்துகிறோம், இது ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது.

நடவு மற்றும் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு

சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு
தயார் செய்து வைத்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். சிறிய தொட்டியாக இல்லாமல் பெரிய தொட்டியாக இருந்தால் சூரிய காந்தி நன்கு வளரும். பிறகு நாற்றுகளை அந்த தொட்டியில் நடவு செய்யவும். சூரியகாந்தி நல்ல உயரமாக வளரும் தன்மை கொண்ட செடியாகும். பஞ்சகாவியா மற்றும் மீனமிலத்தை தெளித்து வந்தால் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு சிறக்கும் .

சூரியகாந்தி பூ அறுவடை

சூரியகாந்தி விதை
நடவு செய்தததிலிருந்து சுமார் 3 மாதத்தில் சூரிய காந்தி பூ நல்ல விதத்தில் முழு வளர்ச்சியை அடைந்திருக்கும், அப்போது நாம் அறுவடை செய்துகொள்ளலாம். தேவைக்கு போக மீதி பூக்களில் இருந்து விதைகளை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

சூரியகாந்தி பயன்கள்

சூரியகாந்தி

  • சூரியகாந்தி விதை பயன்கள் ஏராளம், சூரியகாந்தி விதைகளில் இருக்கும் துத்தநாக சத்துக்கள் மற்றும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக வளர பயன்படுகிறது. மேலும் இந்த பாஸ்பரஸ் இதய தசைகளை சீராக இயங்க செய்யவும், சிறுநீரக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.
  • சூரியகாந்தி விதைகளில் டயட்ரி நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இது அடிக்கடி தோன்றும் பசி உணர்வை குறைத்து வயிற்றை அமைதியாக வைத்திருக்கும், மேலும் ஜீரண கோளாறு பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுகிறது.
  • சூரியகாந்தி விதைகளில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின் பி 1 உள்ளது. இது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றலை உருவாக்கி, நாம் உற்சாகமாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்க இது உதவுகிறது.
  • சூரியகாந்தி எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, நரம்பு, வாஸ்குலார் மற்றும் மூளை செயல்பாடுகளை நன்றாக இயங்கச்செய்கிறது.


மனதிற்கும்,உடலிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சூரியகாந்தி வளர்த்து அதன் ஒப்பற்ற நற்பலன்களை பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.

சிவப்பு தண்டுக்கீரையானது அதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் அந்த பெயர் பெற்றது. கீரை வகைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இந்த சிவப்பு தண்டுக்கீரையும் ஒன்று, எனவே தான் பெரும்பாலானோர் சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு செய்கின்றனர். இந்த சிவப்பு தண்டுக்கீரையின் தண்டுகள் மற்றும் இலைகள் ஆகிய அனைத்துப் பகுதிகளுமே உணவாகப் பயன்படுகிறது. நல்ல செழிப்பான இடங்களில் 6 அடி வரை உயரம் வரை வளரக் கூடியது இந்த சிவப்பு தண்டுக்கீரை.
சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்
இந்த பதிவில் சிவப்பு தண்டு கீரை வளர்ப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து விதை சேகரிப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு முறை மற்றும் பயன்கள் மற்றும் சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி காண்போம்.

மண் வளம்

மண் வளம்
செம்மண் சிவப்பு தண்டுக்கீரை செழித்து வளர ஏதுவான மண் ஆகும். நல்ல நிலையில் உள்ள செம்மண் 40 %, நன்கு மக்கிய தொழு உரம் 40 % மற்றும் மண்புழு உரம் 20 % ஆகிய மூன்றையும் சேர்த்து மண்கலவை தயார் செய்யவேண்டும். மண்புழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். தயார் செய்து வைத்துள்ள இந்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது சிறிய தொட்டியில் போட்டு நிரப்பி கொள்ளவும்.

சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்தல்

சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு
சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்ய சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசிப்பட்டங்கள் சிறந்தவையாகும். சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இதன் விதைகள் கருப்பு நிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் போட்டு மூடி, அதன் மீது பூவாளிக்கொண்டு நீர் தெளிக்க வேண்டும், அதிகமாக நீர் ஊற்றினால் விதை வெளியே வந்துவிடும் எனவே கவனமாக நீர் ஊற்றவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி

பயிர் பாதுகாப்பு
விதைத்த 2 நாளிலே சிவப்பு தண்டுக்கீரை வெளியே முளைத்து வர தொடங்கிவிடும். நாளாக நாளாக அதன் வளர்ச்சி நன்றாக அமையும். சுமார் 30 நாள் முதல் 40 நாளில் சிவப்பு தண்டுக்கீரையை அறுவடை செய்து கொள்ளலாம். சாகுபடி செய்யும் சமயத்தில் கீரையின் உச்சியில் பூவும், அதனோடு சேர்ந்து விதைகளும் இருக்கும், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு அந்த விதைகளை சேகரித்து வைக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாகவே கீரைகளில் பூச்சிகள் அதிகமாக காணப்படும். இந்த பூச்சி தாக்குதலால் சிவப்பு தண்டுக்கீரையின் வளர்ச்சி தடைபட கூடும். இந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்ய முடியும். இஞ்சி, பூண்டு கரைசலை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் படிப்படியாக குறைந்து விடும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்

  • சிகப்பு தண்டுக்கீரை கீரையை பொரியல் அல்லது கூட்டு செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாமல் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்.
  • பித்த நீரின் பாதிப்பால் உடலில் ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றை எளிமையான முறையில் இந்த சிகிப்பு தண்டுக்கீரை சரிசெய்யும் திறன்கொண்டது.
  • சிவப்பு தண்டுக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க வல்லது, உடல் உஷ்ணத்தால் சிரமப்படுகிறவர்கள் சிவப்பு தண்டுக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் பெறலாம்.
  • சிலருக்கு உடற்பருமன் அதிகமாக இருக்கும், எவ்வளவு தான் முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த சிவப்பு தண்டுக்கீரை அரும்மருந்தாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துகொண்டுவந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட இந்த சிவப்பு தண்டுக்கீரையை மாடித்தோட்டத்தில் வளர்த்து அதன் முழு பலன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

பெரும்பாலானோர் வீட்டை அழகு படுத்த பல வகையான செடிகளை வளர்ப்பார்கள், சிலர் அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள். அழகு மற்றும் அதிர்ஷ்டத்தை தர வல்லதாக இந்த மயில் மாணிக்கம் கருதப்படுகிறது. எனவே தான் பலரது வீட்டில் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
மயிர் மாணிக்கம்
விதையை வைத்து தான் இந்த செடியானது வளர்ப்பது செய்யப்படுகிறது. மயில் மாணிக்கம் என பெயர் வரக்காரணம் என்னவென்றால், இதன் செடியில் பூக்கும் பூக்களின் நிறமானது அடர் சிவப்பு நிறமாக மாணிக்கம் போன்றும், அதன் வடிவம் மயில் தோகை போல விரிவாக இருப்பதாலும் தான் இதற்கு மயில் மாணிக்கம் என்று பெயர் வந்தது. ஆனால், இதன் இலைகள் மயிர் கணுக்கள் போல உள்ளதால் மயிர் மாணிக்கம் என்ற பெயர் கொண்டதாகவும், நாளடைவில் அதுவே மருவி தான் மயில் மாணிக்கம் என ஆனதாக கூறுகிறார்கள்.

மகத்துவம் பல நிறைந்த இந்த மயில் மாணிக்கம் செடி வளர்ப்பது எப்படி, வீட்டுத்தோட்டம் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு மற்றும் மயில் மாணிக்க செடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

மயில் மாணிக்கம் விதைப்பு செய்தல்

மயில் மாணிக்கம் ஒரு கொடி வகை தாவரம் ஆகும். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கலந்து மண்கலவை தயார் செய்துக்கொள்ள வேண்டும். நெகிழி பை அல்லது பூந்தொட்டியில் அந்த மண்கலவையை போட்டு நிரப்பவும். பிறகு தேர்ந்தெடுத்த நேர்த்தியான மயில் மாணிக்கம் விதைகளை அந்த மண்கலவையில் சிறிது பள்ளம் தோண்டி விதையை உள்ளே வைத்து மூடி கொஞ்சமாக தண்ணீர் தெளிக்கவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

செடியின் வளர்ச்சி

மயில்-மாணிக்கம் செடி வளர்ப்பு
விதையை விதைத்தப்பிறகு சரியாக 16 நாட்களுக்குள் மயில் மாணிக்க கொடியானது முளைத்து வெளியில் வந்துவிடும். இந்த மயில் மாணிக்க கொடியானது ஆரம்ப நிலையில் சிறிது சிறிதாகத்தான் வளரும். ஓரளவு கொடி வளர்வதற்கு அதிகபட்சமாக 50 நாட்களுக்கு மேலாக ஆகும். கொடி வளர எதுவாக பந்தல் அமைப்பது சிறந்தது. மயிர் மாணிக்க பூக்கள் கண்களை கவரும் நிறம் உடையதாக இருக்கும்.

பராமரிப்பு

மயில்-மாணிக்கம் செடி வளர்ப்பு
மயில் மாணிக்க கொடிகளுக்கு நீர் எந்தளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு வெயிலும் தேவை. மயில் மாணிக்க செடியை அதிகமான வெப்பத்திலும் வளர்க்க முடியும். இந்த செடிக்கு காலை நேரத்து வெயில் மிகவும் அவசியமாகும், சாதாரணமாக ஒரு செடிக்கு எட்டு மணி நேரம் வெயிலானது தேவைப்படும். ஆகவே அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் இடத்தை தேர்வு செய்து பராமரித்துக்கொள்ளவும்.

உரமேலாண்மை

மயில் மாணிக்கத்திற்கு தனியாக எந்த விதமான உரமும் அவசியமே இல்லை, அதுவாகவே நன்கு வளரும், குறிப்பாக இந்த செடி நடவு செய்து 65 நாட்களில் மொட்டுக்கள் வைக்கத்தொடங்கிவிடும். ஆனால் பூக்கள் பூக்குவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். கொடி உயர வளர துவங்கியதும் மேற்புறம் நோக்கி நூல்களைகொண்டு கட்டிவிட்டால் கொடி அதுவாகவே மேலே ஏறிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மயில் மாணிக்க செடி பயன்கள்

மயில் மாணிக்கம்

  • பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது கருமுட்டைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் ஆகும். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய மயில் மாணிக்க சாறை குறைந்தது ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும், எனவே தான் இதை அழகுச்செடி மயில் மாணிக்கம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள்.
  • மயில் மாணிக்கத்தின் இலைகளை அரைத்து பூசிவந்தால் கை, கால்களில் உள்ள கட்டிகள் விரைவில் குணமாகும்.
  • பொதுவாக அனைவருக்கும் பொடுகு பிரச்சனை தீராத தொல்லையாக இருக்கும், அதை சரி செய்ய மயில் மாணிக்கத்தை அரைத்து தலையில் பூசிவந்தால் பொடுகு பிரச்சனை குறைந்து, தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • மயிர் மாணிக்க மூலிகை சிறுநீரக கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.


இந்த மயில் மாணிக்கத்தை வீட்டில் வளர்த்து வீட்டின் அழகையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

நிலக்கடலை பொதுவாக வேர்க்கடலை என்று அழைக்கப்படும், மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதன் பூர்விகம் தென் அமெரிக்காவாகும், என்றபோதிலும் இன்று உலக அளவில் நிலக்கடலை வளர்ப்பு செய்வதில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது.
நிலக்கடலை-வளர்ப்பு
விதையிலிருந்து வேர்க்கடலை செடி வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் நிலக்கடலை வளர்ப்பது எப்படி, நிலக்கடலை சாகுபடியில் உர நிர்வாகம், நிலக்கடலை ரகங்கள் மற்றும் நிலக்கடலை பயன்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

விதைநேர்த்தி

நிலக்கடலை-பயன்கள்
சரியான விதைகளை தேர்ந்தெடுக்கவிட்டால் நிலக்கடலை வளர்ப்பு சரிவர நடைபெறாது எனவே நேர்த்தியான விதைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். முற்றிய நிலக்கடலையை எடுத்து அதன் ஓட்டு பகுதியை உடைத்து உள்ளிருக்கும் கடலை பருப்பை தனியே எடுத்துக்கொள்ளவேண்டும், பிறகு அந்த கடலையை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவேண்டும். அடுத்து நாள் காலையில் ஊறவைத்த விதைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி நடவுக்கு தயாராக இருக்கும்.

மண்கலவை தயாரித்தல்

மண்கலவை-தயாரித்தல்
களிமண், மணற்பாங்கான வண்டல்மண் மற்றும் செம்மண் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை ஆகும். எந்த மண் எடுத்து கொண்டாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தை கலந்து பயன்படுத்தவும். மக்கிய தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். இப்படியாக மண்கலவை தயார் செய்யவேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நிலக்கடலை நடவு செய்தல்

நிலக்கடலை-நடவு-செய்தல்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நெகிழி பையில் போட்டு நிரப்பி கொள்ளவும். ஊற வைத்து தயார் நிலையில் இருக்கும் கடலையை மண்கலவையில் விதைப்பு செய்யவேண்டும், ஒரு பைக்கு அதிகபட்சமாக 4 விதைகளை வரை நடவு செய்யலாம். அரை இன்ச் ஆழம் இருந்தாலே போதுமானது, நடவு செய்த பிறகு மண்ணை போட்டு மூடி சிறிது தண்ணீர் தெளிக்கவும். இரண்டு அல்லது மூன்று நாட்களிலே நிலக்கடலை முளைத்து வர தொடங்கிவிடும். நிலக்கடலை நடவு செய்ய ஏற்ற பட்டம் ஆடி பட்டம் ஆகும்.

நிலக்கடலை அறுவடை

நிலக்கடலை-அறுவடை
நிலக்கடலை சாகுபடியில் உர நிர்வாகம் சரியாக இருப்பது அவசியமாகும். மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் மற்றும் முதிர்ந்த இலைகள் எல்லாம் காய்ந்து விடுதலும் கடலை அறுவடை காலத்தைக் குறிக்கும். பெரும்பாலும் 110 நாளில் இருந்து 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பூச்சித்தாக்குதல்

பூச்சித்தாக்குதல்
நிலக்கடலை ரகங்கள் பல இருந்தாலும் அனைத்திலும் இலைப்பேன், சுருள் பூச்சி மற்றும் அசுவினி பூச்சித்தாக்குதல் அதிக அளவில் இருக்கும், இது கடலையின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்கும். வேப்பெண்ணை கரைசலை தொடர்ந்து 2 வாரங்கள் தெளித்து வந்தால் விரைவில் இந்த பூச்சித்தொல்லைகள் இல்லாமல் போகும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

நிலக்கடலை பயன்கள்

நிலக்கடலை வளர்ப்பு

  • நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து மிகுந்து காணப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலிருந்து கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கப்பெற பயன்படுகிறது. பெண்கள் இந்த நிலக்கடலையை தொடர்ந்து உண்டு வந்தால் எலும்புத்துளை நோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
  • வேர்க்கடலை நமது இளமையை தக்கவைக்க பெரிதும் உதவுகிறது. இந்த நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்கிற ஆண்டி ஆக்ஸிடண்டு இருக்கிறது. இது நோய் ஏற்படுவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்க உதவுகிறது.
  • வேர்க்கடலையை வெல்லம் மற்றும் ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது சிறு குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும் மேலும் தாய்ப்பால் கொடுகின்ற தாய்மார்களுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்க வல்லது.
  • நிலக்கடலையைத் நீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு சாப்பிடலாம், கடலையைக் கூழாக்கி தேன் மற்றும் வாழைப்பழம் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் குழந்தைகள் அதிக பலம் பெறுவார்கள்.
  • நிலக்கடலை உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கை பிடி நிலக்கடலையை மட்டும் உண்டால் உடலையின் எடை அதிகரிக்காது. உடல் எடை அதிகரிக்க விரும்புவோர்கள், ஆரோக்கியமாக எடை கூட அதிகமாக வேர்க்கடலை சாப்பிடவேண்டும்.


விவசாயிகளுக்கு நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை தனை மாடி தோட்டத்தில் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம். நீங்களும் அந்த முறையில் நிலக்கடலை செடி வளர்த்து, அதன் பயன்கள் எல்லாம் பெற்று உங்கள் ஆரோக்கியம் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

வெட்டி வேரினை விலாமிச்சை வேர், இரு வேலி, குரு வேர், விழல் வேர் மற்றும் விரணம் என பல வித பெயர்கள் வெட்டிவேருக்கு உண்டு. இது புல் இனத்தைச் சேர்ந்தது, ஆகையால் வெட்டிவேர் செடி வளர்ப்பு செய்வது மிக எளிது. வெட்டிவேர் பெரும்பாலும் மணற்பாங்கான இடத்திலும் மற்றும் ஆற்றுப் படுகைகளிலும் மிக சிறப்பாக வளரும். இது 4 முதல் 5 அடி வரை உயரம் வளரும்.
வெட்டிவேர் செடி வளர்ப்பு
வெட்டி வேரின் வாசனைக்கு ஈடுஇணையே கிடையாது என்றும் சொல்லலாம். தோற்றத்தில் பகட்டாகத் தெரியாத போதிலும் இந்த வெட்டி வேர் அதீத நறுமணம் கொண்டது. அதுமட்டுமின்றி உடலுக்கும் பல்வகை நற்பலன்களை கொடுக்கவல்லது. எனவேதான் நம் முன்னோர்கள், வெக்கையை விரட்ட வெட்டிவேர் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடியது எனவே தான் வெட்டிவேர் விற்ற காசும் மணக்கும் என்பார்கள்.

வெட்டிவேர் செடி வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் வெட்டிவேர் செடி வளர்ப்பு மற்றும் வெட்டிவேர் நன்மைகள் ஆகியவற்றை பற்றி தெளிவாக இக்கட்டுரையில் காண்போம்.

தேவையான மண்கலவை

வெட்டிவேர் வளர்ப்பு செய்வதற்கு கரிசல் மண், செம்மண் மற்றும் களிமண் என அனைத்து வகை மண்ணும் ஏற்றது, மேலும் மணல் பாங்கான மண்கலவையாக இருந்தால் வெட்டி வேர் இன்னும் நன்கு இறங்கி வளரத்தொடங்கும், இதனால் எதிர்பார்த்தபடி நல்ல மகசூலை பெறலாம்.

பயிரிடுதல்

வெட்டிவேர் நாற்றுகள்
வெட்டிவேர் நாற்றுகள் வாங்கியும் நடவு செய்யலாம் அல்லது ஏற்கனவே வளர்ந்திருக்கும் புல்லையும் வேரையும் வெட்டி, பின்பு நடுப்பகுதியான அதன் தண்டை மட்டும் மண்கலவையில் நட்டுவைத்தலே போதுமானது, வெட்டிவேர் செடி தானாக வளர தொடங்கிவிடும். இப்படியாக வெட்டி எடுத்து நடவு செய்வதால் தான் ‘வெட்டி வேர்’ என பெயர் பெற்றது.

உரம் அவசியமில்லை

வெட்டிவேர் நன்மைகள்
வெட்டிவேர் சாகுபடிக்கு எந்த விதமான உரமும் அவசியமில்லை, மற்றும் எந்த வித நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலும் இருக்காது எனவே பூச்சி விரட்டியும் தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சி விரட்டியாக செயல்படுவதால், காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த வெட்டிவேர் செடியை வரப்புகளிலோ அல்லது ஊடுபயிராகவோ நடுவு செய்தால் இது பூச்சி விரட்டியாகவும் செயல்படும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வெட்டிவேர் சாகுபடி

வெட்டிவேர் செடி வளர்ப்பு
வெட்டிவேர் செடி நட்டு ஒரு வருடத்தில் சாகுபடி செய்யலாம். அதிகபட்சம் 14 மாதத்திற்குள் அறுவடை செய்து கொள்ளலாம். வெட்டிவேர் செடியின் வேர் சேதப்படாமல் பிடுங்கி எடுக்கவேண்டும், மேலே இருக்கின்ற பச்சை செடியை அகற்றி விட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி பயன்படுத்தலாம். மேலும் வெட்டிவேர் செடியின் பச்சை இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வெட்டிவேர் நன்மைகள்

வாசனை

  • வெட்டிவேரை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு ஊறவைத்து பிறகு, தலைமுடிகளின் வேர் பகுதியில் படும்படி தேய்த்துவந்தால் தலைமுடியின் வேர்பகுதிகள் பலப்படும். இவ்வாறு
    வாரம் ஒரு முறை செய்து கொண்டு வந்தால் தலைமுடி உதிர்வது படி படியாக குறைந்து கருமையாகவும், பளபளப்பாகவும் முடி வளரும் மற்றும் கண்களும் குளிர்ச்சியடையும்.
  • கோடைக் காலத்தில் ஏற்படும் வயிற்றுக் கடுப்பு, நீர்க் கடுப்பு மற்றும் உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சுலபமாக நம்மைத் தொற்றிக்கொள்ளும், இந்த பிரச்சனைகளை மிக எளிதாக விரட்டி அடிக்க வெட்டி வேர் நீரை அருந்தினாலே போதுமானது.
  • வெட்டி வேரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, அதனுடன் கடுக்காய் ஒன்றை ஒரு இரவு முழுவதும் சூடான நீரில் ஊற வைக்கவும். அடுத்தநாள் அதை அரைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் நீங்கி விடும்.
  • பாசிப்பயறு 50 கிராம் மற்றும் வெட்டிவேர் 50 கிராம் இரண்டையும் எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு அந்தப் பவுடரை தினசரி உடலுக்கு தேய்த்து குளித்து வர உடம்பில் ஏற்படும் சிறு உஷ்ணக் கட்டிகளும், உடல் பருப்பதால் ஏற்படும் வரிகளும் மறைந்துவிடும்.
  • உடலுக்கு நறுமணத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்க வல்லது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும் மேலும் வெட்டிவேர் சோப் தயாரிப்பிலும் பயன்படுகிறது.


எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வெட்டிவேரு வாசம். இதை வீட்டில் வளர்த்து நல்ல ஆரோக்கியம் பெற்று வெட்டிவேரை போல் நறுமணமிக்க வாழ்க்கை சூழல் அமைய வாழ்த்துகிறோம்.

நமது மாடி தோட்டங்களில் வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளில் அகத்திக்கீரை வளர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது, எனவே தான் இது அகத்திக்கீரை எனும் பெயர் பெற்றது. அதனால் தான் கால்நடைகளுக்கு தீவனத்தில் அகத்திக்கீரையை கலந்து கொடுக்கின்றார்கள். நாமும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு இருமுறையோ அகத்திக்கீரையை சாப்பிடுவது நமது உடல்நலத்தை சீராக்க உதவும்.
அகத்திக்கீரை-வளர்ச்சி
அகத்தைக் காக்கும் அகத்திக்கீரை விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் அகத்திக்கீரை வளர்ப்பு முறை, அகத்திக்கீரை பயன்கள் மற்றும் அகத்தி கீரை சாகுபடி ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

அகத்திக்கீரை பயிரிடும் முறை

மாடி தோட்டத்தில் அகத்திக்கீரை பயிரிட முற்படும் போது சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அகத்திக்கீரை 20 முதல் 25 அடி உயரம் வரை வளரும் என்பதால் சிறிய அளவிலான நெகிழி பையை விடுத்து பெரிய நெகிழிப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அதில் மண்கலவையை நிரப்பி விதைகளை நடவு செய்ய வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

அகத்திக்கீரை வளர்ச்சி

தீவனம்
அகத்திக்கீரை விதைத்த 4 முதல் 7 நாட்களுக்குள் முளைத்து வர தொடங்கிவிடும். 50 நாட்களில் நல்ல வளர்ச்சியை அடைத்திருக்கும், அப்போது செடியின் நுனியை கிள்ளி விடவும். கிள்ளி விட்டபிறகு மேல் நோக்கி வளர்வது நின்று பக்க கிளைகள் வளர்ந்து அடர்த்தியாக காணப்படும், இவ்வாறு செய்வதால் மாடி தோட்டத்தில் பராமரிக்க வசதியாக இருக்கும்.

இந்த அகத்தி செடியிலிருந்து கிடைக்கும் அகத்தி கீரை மற்றும் அகத்திப் பூ மிகச் சிறந்த உணவாகும், அதிக சத்துக்கள் இதில் உள்ளது மேலும் அகத்தி பலதரப்பட்ட மண்ணிலும் வளரும் திறன் கொண்டது.

கால்நடை தீவனம்

அகத்திக்கீரை-பயன்கள்
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் என்று பலருக்கும் எண்ணம் இருக்கும், பசு மாட்டிற்கு மட்டுமல்ல அனைத்து கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக அகத்தி கீரை இருக்கிறது. இந்த அகத்தியை ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பன்றி பண்ணை போன்ற பண்ணை விலங்குகளுக்கும் அகத்தியை கொடுக்கலாம்.

நோய் தாக்குதல்

அகத்தி கீரையில் சொல்லுமளவில் பெரிதாக எந்த நோய் தாக்குதலும் ஏற்படாது, அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் நடைபெறக்கூடும். அசுவினி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை நீரில் கரைத்து தினசரி தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் சரியாகி விடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

அகத்திக்கீரை பயன்கள்

அகத்திக்கீரை-வளர்ப்பு-1

  • அகத்தி கீரையை பற்றி சித்த மருத்துவம் கூறுகையில், அகத்திக் கீரையில் 63 வகையான சத்துகள் இருப்பதாக கூறுகின்றது. அகத்தி செடியின் அனைத்து பகுதிகளும் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் 8.4 சதவிகிதம் புரதமும், 3.1 சதவிகிதம் தாது உப்புகளும் மற்றும் 1.4 சதவிகிதம் கொழுப்பும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
  • அகத்திக் கீரையின் சாறுடன் சிறிதளவு தேன் சேர்ந்து கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள சிறு குழந்தைகளின் உச்சித் தலையில் தடவினால் நீர்க்கோவை பிரச்சனை குணமாகும். அடிபட்ட காயங்களுக்கு அகத்தியை அரைத்துப் பூச புண்கள் ஆறிவிடும்.
  • அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பித்த தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதுடன் உணவு சீக்கிரத்தில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு ஒருமுறையேனும் அகத்திக் கீரை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
  • இதில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக இருக்கிறது, இது எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அகத்தி இலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் பாலில் அரைக் கரண்டி அளவு கலந்து குடித்தால் வயிற்றுவலி சரியாகும்.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அகத்தி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.


அகத்திக்கீரை பயிர் செய்யும் முறை தனை பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் பயிர் செய்து அற்புதம் நிறைந்த அகத்திக்கீரை சாகுபடி செய்து மகிழ வாழ்த்துகிறோம்.

கொத்தவரங்காய் செடியானது ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்றாகும். இதனுடைய காய்களானது செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கின்ற இயல்பை கொண்டது. கொத்தவரங்காய், ஆப்பிரிக்க காட்டு ரக செடியிலிருந்து தனித்து விளங்கும் ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடியதாக இனம் கண்டு சமையலுக்கு பயன்படுத்திய நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகளவில் கொத்தவரங்காய் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
கொத்தவரங்காய்-செடி-வளர்ப்பு-1
கொத்தவரங்காய் சமையலுக்காகப் பயன்படுவதை விட , அதன் விதையிலிருந்து பிரித்து தயாரிக்கப்படும் கார் பிசின் ஆனது உணவுத்தயாரிப்பு தொழிலில் மிக முக்கிய சேர்க்கைப் பொருளாக மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பணப்பயிராக கொத்தவரங்காய் விளங்குகிறது.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now


கொத்தவரங்காய் செடி வளர்ப்பு, மாடியில் கொத்தவரங்காய் வளர்ப்பது எப்படி, கொத்தவரங்காய் சாகுபடி செய்வது எப்படி மற்றும் பிரமிக்க வைக்கும் கொத்தவரங்காய் மருத்துவ பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விதை தேர்ந்தெடுத்தல்

கொத்தவரங்காய்-செடி-வளர்ப்பு
நன்கு முற்றிய காய்களில் இருந்து எடுத்த விதைகள் அல்லது கடைகளில் விற்கும் விதைகளை வாங்கிக்கொள்ளவும். தேர்ந்தெடுக்கும் விதையானது நேர்த்தியானதாக இருத்தல் அவசியம், அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கவேண்டும். அடுத்த நாள் விதைகள் எல்லாம் ஈரப்பதத்தை உறிஞ்சி சற்று பெரிதாகி இருக்கும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை-தயார்-செய்தல்
நடவு செய்வதற்கு ஏற்ற மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும். 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மணல், 20 சதவிகிதம் மக்கிய தொழு உரம் ஆகிய இந்த மூன்றையும் நன்கு கலந்து தயாரிக்க வேண்டும். மண்கலவை தயார் செய்ததும் உடனே விதைப்பு செய்யக்கூடாது. ஏழு முதல் பத்து நாட்களில் மண்கலவை நன்கு காய்ந்து, நுண்ணுயிரிகள் எல்லாம் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு தான் கொத்தவராங்காயை விதைப்பு செய்யலாம்.

நடவு மற்றும் வளர்ச்சி

நடவு-மற்றும்-வளர்ச்சி
கொத்தவரங்காய் விதையின் அளவைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் விதைகளை போட்டு பிறகு மண்ணால் மூடி அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் முளைத்து வர தொடங்கிவிடும். 40 நாட்களுக்கு பிறகு மொட்டுகள் வைக்க ஆரம்பிக்கும், 60 நாட்களில் கொத்தவரங்காய் சாகுபடி செய்யலாம்.

உரமேலாண்மை

கொத்தவரங்காய்-செடி-வளர்ப்பு
வேப்ப இலைகளை பறித்து நன்கு காய வைத்து, அதை தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும். அந்த தூளை கொத்தவரங்கா செடியின் வேர் பகுதியில் படும்படி போட்டு சிறிது கொத்திவிட வேண்டும், இது கொத்தவரங்கா செடிக்கு அடி உரமாக செயல்படும். செடிகளை பாதுகாக்க கூடிய இயற்கை பூச்சி விரட்டியான வேப்ப எண்ணை கரைசலை மாதத்திற்கு ஒரு முறை தெளித்துவிட வேண்டும். இவ்வாறு கொத்தவரங்காய் பராமரிப்பு செய்ய வேண்டும்

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொத்தவரங்காய் பயன்கள்

கொத்தவரங்காய்-பயன்கள்

  • கொத்தவரங்காவின் கலோரி அளவு குறைவாக இருப்பினும், உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கும் உணவாக கொத்தவரங்கா இருக்கிறது. எனவே உடல் எடையை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் இந்த காயை உணவில் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை கண்கூட பார்க்கலாம்.
  • நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் மேலும் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கும் உடலின் ரத்த ஓட்டமானது முறையாக இருப்பது அவசியம். ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் குறைபாட்டாலே தன் இரத்தச் சோகை ஏற்படுகின்றது. இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொத்தவரங்காயை சாப்பிட்டுவந்தால் ரத்த சோகை சரியாகி உடலானது மீதும் ஆரோக்கிய நிலைக்கு திரும்பும்.
  • அன்றாடம் உண்ணும் உணவில் மற்ற சத்துக்களோடு நார்ச்சத்தும் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். நார்ச்சத்து நமது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காயில் மிகுந்த புரதச்சத்துகள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளதால் நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றது.
  • தினசரி வெளியில் செல்லும் போது நாம் பல்வகையான நோய் கிருமிகளால் தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்கிறது. இத்தகைய நோய் தாக்குதலில் இருந்து காப்பது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும். கொத்தவரங்காயை அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்து வந்தோமேயானால், அது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி நோய்களில் இருந்து நம்மை காக்கும்.
  • பற்கள் மற்றும் எலும்புகளின் வலுவிற்கு கால்சியம் அவசியமானதாகும் . கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளதால், வாரத்திற்கு மூன்று முறை உணவில் கொத்தவரங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் எலும்புகள் நன்கு வலுப்பெறும்.
  • இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் சிலருக்கு எதற்கெடுத்தாலும் பதற்றம், மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படுவார்கள், அவர்களெல்லாம் கொத்தவரங்காயை சாப்பிட்டுவந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெற்று உடல் நலம் மற்றும் மன நலம் சிறக்கும்.


இக்கட்டுரையில் கொத்தவரங்காய் செடி வளர்ப்பு மற்றும் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் பார்த்தோம். இயற்கையின் அருட்கொடையான இந்த கொத்தவரங்காவை வீடுதோறும் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.

கோழி அவரை எனப்படும் கொடி அவரை அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஓன்றாகும்.இது கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். செழிப்பாக வளர்ந்து, படர்ந்து வளர கூடியது இந்த கோழி அவரை செடி. கொடி வகை தாவரங்களில் அவரை தான் மிக அடர்த்தியாக வளரும் மேலும் அதிகப்படியான காய்களை கொடுக்கும், வெகு நாட்களுக்கு அறுவடை செய்யலாம்.
கோழி-அவரை-செடி-வளர்ப்பு
கோழி அவரை செடி வளர்ப்பு முதல் அறுவடை வரை, மாடித்தோட்டத்தில் கோழி அவரை செடி வளர்ப்பது எப்படி, அவரை வகைகள் மற்றும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கோழி அவரை பயன்கள் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

மண்கலவை-1
கோழி அவரைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, அதற்கு தகுந்தாற்போல மண்கலவை தயார் செய்வது சிறந்தது. செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்யலாம். மண்புழு உரம் கிடைத்தால் மூன்றையும் கலந்து பயன் படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கோழி அவரை நடவு

கோழி அவரை செடி வளர்ப்பு
நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும், ஒரு நெகிழிப்பையில் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை போட்டு நிரப்பவும். ஒரு பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். சிறிய அளவில் பள்ளம் தோண்டி விதையை வைத்து சிறிது மண்கலவையை அதன் மேலே போட்டு மூடி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்தால் போதுமானது. கொடி வளர ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சாகுபடி

கோழி-அவரை-செடி-வளர்ப்பு-1
கோழி அவரை விதைத்த 3 நாட்களுக்குள் முளைப்பு வீற்றிருக்கும். 20 நாட்களில் கொடியின் வளர்ச்சியை காணமுடியும், 35 நாட்களில் கோழி அவரை கொடி பந்தலை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கும். நட்டத்திலிருந்து 100 ஆம் நாள் பூ வைக்கத்தொடங்கும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம், அதிக காய்கள் காய்க்க கோழி அவரையை ஆடி பட்டத்தில் நடவு செய்ய வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் கோழி அவரை செடி பராமரிப்பு

பூச்சி-தாக்குதல்
காய்கறிகளில் அதிகமான பூச்சித் தாக்குதல் இந்த கொடி அவரையில் தான் வருகிறது. இது பொதுவாக வரும் பிரச்சனை தான், அசுவினி பூச்சி போல சாறு உறுஞ்சும் பூச்சிகள் கூட்டமாக கோழி அவரை செடியின் தளிர்கள் மற்றும் பூக்களில் இருந்து சாற்றை தனியே உறிஞ்சி எடுத்து அதை வாடிப்போக செய்து விடும். மேலும் காய் துளைப்பான் பூச்சி தொல்லையும் ஏற்படுகிறது, இது அவரையில் துளை இட்டு அதன் விதையை சாப்பிடும், இதனால் அவரையை சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போக நேரிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

இந்த பூச்சி தாக்குதலை சமாளிக்க, இரண்டு நாள் ஆன அடுப்பு சாம்பலை செடியின் மீது பரவலாக தூவுவதின் மூலம் அந்த பூச்சிகளை விரட்டலாம். இரண்டு நாள் ஆனா சாம்பலில் மீதமான சூடு இருக்கும், இதுவே அந்த பூச்சிகளை விரட்டும் காரணியாக அமையும். முக்கியமானதாக, அதிக சாம்பலை பயன்படுத்தினால் செடியின் வளர்ச்சி பாதிக்க வாய்ப்பு உண்டு, எனவே தேவையான அளவு பயன்படுத்தவும். இம்முறையை பயன்படுத்தினால் கோழி அவரை செடி வளர்ப்பு சிறக்கும்.

அவரை வகைகள்

கோழி அவரை, செடி அவரை, சப்பத்தவரை, சீனி அவரை, வெள்ளை அவரை, வாழவரை, காட்டவரை, பெயவரை, பூனைக்கால் அவரை, ஆட்டுக்கொம்பு அவரை.

கோழி அவரை பயன்கள்

வளர்ச்சி-மற்றும்-சாகுபடி

  • கோழி அவரை சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு குறையும், மேலும் இதயநோய் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோழி அவரைப் பிஞ்சில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அவரை பிஞ்சை உணவில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை குணமாகும்.
  • அவரைக்காய் சத்துக்கள் உடலுக்கு மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும்.
  • இரவில் சரிவர தூங்க முடியாதவர்கள், இரவு உணவில் கோழி அவரையை எடுத்துக் கொண்டால் ஆழமான உறக்கம் பெறலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் இந்த கோழி அவரையை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த அருமருந்தான கோழி அவரையை மேற்கண்ட வழிமுறைபடி வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.

பீன்ஸ் பொதுவாக கொடிகளில் வளர்வதை பார்த்திருப்போம், அதே போல செடிகளிலும் நன்கு செழித்து வளரும். கொடிவகையாக வளர்க்கும் பொழுது அதிகமான இடவசதி தேவைப்படும், போதிய இடவசதி இல்லாதவர்கள் இந்த செடி பீன்ஸ் வளர்ப்பு செய்தால் சிறிய இடத்திலும் கூட நல்ல விளைச்சலை காண முடியும்.
செடி-பீன்ஸ்-வளர்ப்பு
செடி பீன்ஸ் விதைப்பு முதல் அறுவடை வரை , மாடியில் செடி பீன்ஸ் வளர்ப்பது எப்படி, செடி பீன்ஸ் பயன்கள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

விதை நேர்த்தி

விதை-நேர்த்தி
தேவைக்கு ஏற்ப விதைகளை எடுத்து கொண்டு அதை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வைக்கவேண்டும். அடுத்த நாள் ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சிக்கொண்டு விதைகள் சற்று பெரிதாகி இருக்கும், இந்த ஈரப்பதமானது செடி நன்கு வளர உதவும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை
செடி பீன்ஸ் வளர்ப்பு தனில் மண்கலவை முக்கிய வகிக்கிறது. நல்ல வளர்ச்சியை பெற செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபங்கு கலந்து பயன்படுத்தலாம். மண்புழு உரம் இருக்குமேயானால், செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மண்புழு உரம் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் கலந்து மண்கலவையை தயார் செய்யலாம்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

நடவு மற்றும் வளர்ச்சி

செடி-பீன்ஸ்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையில், ஊறவைத்து எடுத்து வைத்துள்ள விதைகளை நடவுசெய்ய வேண்டும். இது ஒரு அடி வரை மட்டுமே உயரம் வளரும் என்பதால், ஒரு நெகிழி பையில் 4 முதல் 6 செடிகள் வரை நடவு செய்யலாம்.

நடவு செய்த 7 முதல் 10 நாட்களில் செடி பீன்ஸின் வளர்ச்சியை கண்கூடாக காண முடியும், மேலும் 30 நாட்களில் செடி பீன்ஸ் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கும்.

செடி பீன்ஸ் சாகுபடி

பீன்ஸ்-சாகுபடி
செடி பீன்ஸ் 45 நாட்களில் பூ வைக்க தொடங்கிவிடும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும், ஒவ்வொன்றும் தனி தனியே காணப்படும், அதேபோல காய்களும் தனித்தனியே தன் காய்க்கும். 55 நாட்களுக்கு மேல் அறுவடை நிலையை அடைந்து விடும், அப்போது தாராளமாக அறுவடை செய்யலாம். ஒரு வேலை செடி பீன்ஸின் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் உன்ன நினைத்தால், 90 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்தால் உள்ளே இருக்கும் விதை நன்கு முற்றி, அதிக சுவை கொடுக்க கூடியதாகி இருக்கும்.

பூச்சி தாக்குதல்

செடி பீன்ஸை அஸ்வினி பூச்சிகள் அதிக அளவில் தாக்கக்கூடும், செடியின் ஆரம்ப கால வளர்ச்சியை இது பெரிதும் பாதிக்கும். இந்த அஸ்வினி பூச்சி தொல்லையில் இருந்து செடி பீன்ஸை பாதுகாக்க விட்டால் செடி முழுவதுமாக வீணாகிவிடும். வேப்பெண்ணெய் கரைசலை தெளிப்பதன் மூலமாக இந்த அஸ்வினி பூச்சியை முற்றிலுமாக அகற்றலாம்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

செடி பீன்ஸ் பயன்கள்

செடி-பீன்ஸ்-பயன்கள்

  • செடி பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால், அதிலிருக்கும் ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சி தனை தடுத்து நிறுத்தி, புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைகிறது.
  • பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்தத்தை உறையாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த செடி பீன்ஸை தினசரி உணவில் சேர்த்து கொண்டார்களேயானால் அந்த நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
  • செடி பீன்ஸில் நார்ச்சத்து, மாங்கனீஷ் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து அதை ஊட்ட சத்தாக மாற்றுகிறது.
  • இரும்புச்சத்தைக் கிரகித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது இந்த செடி பீன்ஸ், மேலும் செரிமான சக்தியை அதிகரித்து, வாயுத் தொல்லையயையும் நீக்குகிறது.
  • இரைப்பையில் ஏற்படும் பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவதுண்டு, அவர்காலம் இந்த செடி பீன்ஸை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.


பீன்ஸ் வகைகள் பல உண்டு அதில் செடி பீன்ஸ் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் செடி பீன்ஸ் வளர்த்து, அந்த பச்சை பீன்ஸ் போல உங்கள் வாழ்க்கையும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

Pin It