டிராகன் பழம் வளர்ப்பு மற்றும் விற்பனை போன்றவை இன்னும் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை என்பதே உண்மை. சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போல இருக்கும் இப்பழம் கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும்.
இப்பழத்தின் தாயகம் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். தற்பொழுது தமிழ்நாட்டில் சிலர் இப்பழத்தை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் டிராகன் ப்ரூட் என்று அழைக்கப்படும் இப்பழம் வெளிநாட்டுப் பழம் என்றும், சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பழம் என்றும் அறியப்படுகிறது.
டிராகன் செடி வளர்ப்பு
டிராகன் செடி கள்ளிச்செடி போன்று வளரக்கூடியது. கொடியாக படரும் தன்மை உடையது, அதற்கு ஏற்றவாறு சிமெண்ட் தூண் அல்லது கல்தூண் போல அமைத்து அதன் உச்சியில் வட்ட வடிவ மூடி போன்று அமைக்க வேண்டும்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டிஉங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்! |
ஒவ்வொரு தூணுக்கும் இடையில் 6×8 அளவு இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கல்தூணைச் சுற்றி நான்கு கன்றுகளை நட வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை கவாத்து செய்வது அவசியம். வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை இச்செடிக்கு உண்டு என்பதால் வாரத்திற்கு இரண்டு முறையோ அல்லது நான்கு முறையோ தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
இதற்கு பெருமளவில் பராமரிப்பு தேவை இல்லை என்பதால் தேவைக்கேற்ப இயற்கை உரங்களை இடுவது நல்லது. மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகவ்யா போன்றவற்றை உரங்களாக பயன்படுத்தலாம்.
![]() |
இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பைஉங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்! |
வகைகள்
டிராகன் ப்ரூட்டில் மூன்று வகைகள் உள்ளன.
டிராகன் பழம் செடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி?<
பழத்தில் உள்ள விதையில் இருந்தும் பயிர் செய்யலாம். டிராகன் பழத்தின் விதை பார்ப்பதற்கு எள் போன்று இருக்கும். பழத்திலிருந்து விதைகளைத் தனியாக பிரித்து எடுத்து நிழலில் உலர்த்திய பின் ஒரு தொட்டியிலோ அல்லது ஜாடியிலோ விதைகளை நடலாம். விதையில் இருந்து செடி வளர்ந்து காய் வைப்பதற்கு நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். அதை விட நர்சரியில் இருந்து கன்று வாங்கி வளர்ப்பது சிறந்தது. டிராகன் பழம் நன்மைகள் பல கொண்டது.
நன்மைகள்
- இதில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ சருமத்தைப் பாதுகாக்கிறது.
- இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைய இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல், செரிமானக்கோளாறு
போன்றவற்றைக் குணப்படுத்தும். - உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.
டிராகன் பழத்தின் மருத்துவ குணங்கள்
- இப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் இருப்பதால் புற்று நோய் வருவதைத் தடுக்கிறது.
- உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
- இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கிறது.
- கால்சியம்,பாஸ்பரஸ் இருப்பதால் எலும்பு பலப்படுகிறது.
- பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது.
டிராகன் பழம் சாப்பிடும் முறை
மற்ற பழங்களை உண்பதைப் போலவே இதையும் பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஜூஸாகஉம் குடிக்கலாம்.
டிராகன் பழம் சாகுபடி மற்றும் அறுவடை
கன்றுகள் வைத்து வளர்க்கும்போது இரண்டு ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 150 ல் இருந்து 200 செடிகள் வரை வைக்க முடியும். ஒரு செடிக்கு 10 முதல் 20 பழங்கள் வரை கிடைக்கும். ஒரு தூணுக்கு வருடத்திற்கு சராசரியாக 8 முதல் 10 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு பழம் 2௦௦ கிராம் முதல் 750 கிராம் வரை இருக்கும்.
சிவப்பு நிற சதைக் கொண்ட பழங்கள் கிலோ 200 ரூபாய்க்கும், வெள்ளை நிற சதைக் கொண்ட பழங்கள் கிலோ 150 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்க முடிகிறது. வருடத்தில் 8 மாதம் வரை டிராகன் ப்ரூட் மகசூல் பெற முடியும்.
வீட்டில் டிராகன் செடி வளர்ப்பது எப்படி?
டிராகன் பழம் வளர்ப்பு இன்று எளிதாகிவிட்டது. செடி வளர்க்கப் போகும் தொட்டியில் செம்மண், தேங்காய் நார், இயற்கை உரம், மண் ஆகியவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். டிராகன் மரம் வளர்க்க பயன்படுத்தும் தொட்டி அல்லது ஜாடி எதுவாக இருந்தாலும் 10 முதல் 12 அங்குல ஆழமும், 15 முதல் 24 அங்குல விட்டமும் இருக்க வேண்டும். செடி வளர்க்க பிளாஸ்டிக் ட்ரம், களிமண் அல்லது டெரகோட்டா பானைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
பானையில் வேர்கள் பிடித்து வளர பானை நீளமாகவும், அகலமாகவும் இருப்பது அவசியம். கிளை நன்கு உலர்ந்த பின்பு அதனை செடி வைக்கப்போகும் தொட்டியில் உள்ள மண்ணில் நட வேண்டும்.
டிராகன் செடியின் மீது கண்டிப்பாக 8 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு பானையை வைக்க வேண்டும், பானையில் 2 அல்லது 3 துளைகள் இருப்பது அவசியம். இவை வடிகால் துளைகள் ஆகும்.
பூச்சி தாக்குதல் என்று பார்க்கும்பொழுது அபிட்ஸ், எறும்பு போன்றவை தான் அதிகம் பாதிக்கக்கூடியது. இதற்கு இயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம். செடி வளரத் துணையாக ஒரு குச்சியை நட வேண்டும். பச்சைக்கிளையை வெட்டி பயன்படுத்துவதாக இருந்தால் அந்த கிளையை நான்கு நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.
டிராகன் செடி வளர்ப்பைப் பொறுத்தவரை அதிக தண்ணீர் தேவை இல்லை. எனவே செடி வளர மண் வறண்டு போகாத அளவு ஈரப்பதம் இருந்தால் போதுமானது. டிராகன் பழ வளர்ப்பைப் பொறுத்தவரை அறுவடை செய்து லாபம் பெற மூன்று முதல் இந்து ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் டிராகன் ப்ரூட் சாகுபடி நல்ல லாபம் தரக்கூடிய பயிர் என்பது உண்மையே.