Category

தோட்டம்

Category

முத்துச்சோளம் எனப்படும் மக்காச்சோளத்தின் தாயகம் நடு அமெரிக்கா என்று கூறப்படுகின்றது. மக்காச்சோளம் மிக முக்கியமான ஒரு தானியப் பயிராகும், மேலும் இது தானியப் பயிர்களின் அரசி எனவும் அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களை ஒப்பிடும்பொழுது அதிகமாக மக்காச்சோளம் வளர்ப்பு செய்ய காரணம் என்னவென்றால் இதை சாகுபடி செய்வதற்கான வேலையாட்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு மற்றும் நோய் தாக்குதல் மிகவும் குறைவு என்பதால் தான்.
மக்காச்சோளம் வளர்ப்பு
100-105 நாட்களில் நல்ல வருமானம் தரக்கூடிய பணப்பயிராகும். எல்லா சூழ்நிலையிலும், வருடம் முழுவதும் அறுவடை செய்ய ஏற்ற பயிர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் இருப்பதாலும், தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், உழவர்களைத் தேடிவந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதாலும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியுடன் மக்காச்சோளம் வளர்ப்பு செய்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க மக்காச்சோளத்தை விவசாய நிலங்களில் மட்டுமல்ல வீடு தோட்டத்திலும், மாடித்தோட்டங்களிலும் கூட வளர்க்க முடியும். மக்காசோளம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மக்காச்சோளம் செடி வளர்ப்பு, மக்காச்சோளம் மகசூல், மக்காச்சோளம் சாகுபடி மற்றும் மக்காச்சோளம் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மக்காச்சோளம் நடவு செய்ய ஏற்ற மண்

அனைத்து வகையான மண்களிலும் வளரும் தன்மை கொண்டிருந்தாலும் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மக்காச்சோளம் வளர்ப்பு செய்வதற்கு மிக ஏற்றதாகும். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

20kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி

விதை விதைத்தல்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நெகிழிப்பை அல்லது தொட்டிகளில் போட்டு நிரப்பவும், தொட்டியின் அளவிற்கு ஏற்றார் போல் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும். விதைகள் விதைத்த 5 வது நாளில் இருந்தே செடிகளில் துளிர் விட தொடங்கிவிடும். செடிகள் நன்கு வளர்ந்த பிறகு கதிர்கள் வைக்க தொடங்கும், அப்போது பூச்சிகள் கதிர்கள் மீது மொய்க்கும், அவற்றை கண்டு பயம் கொள்ள வேண்டாம். பூச்சிகள் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது.

மக்காச்சோளம் அறுவடை

மக்காச்சோளம் அறுவடை
மக்காச்சோளம் விதைத்த நாளில் இருந்து 90 நாட்களில் பிஞ்சு கருதாக இருக்கும், சிறு குழந்தைகளுக்கு இந்த நிலையில் சாப்பிட கொடுத்தால் எளிதாக இருக்கும், 100 நாட்களில் அறுவடைக்கு ஏற்ற பக்குவத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அறுவடை செய்வது சிறந்தது. சோளத்தை மாவாக அரைத்து பயன்படுத்த நினைப்பவர்கள் 115 நாட்களுக்கு பிறகு சாகுபடி செய்தால் நன்கு முற்றி மாவாக அரைக்க ஏற்ற நிலையில் இருக்கும்.

பூச்சி தாக்குதல்

மக்காச்சோள செடிகளை பொறுத்த வரைக்கும் அதிகமாக நோய்கள் தாக்குவது கிடையாது, ஒருவேளை அசுவினி பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் வேப்பிலையை நன்கு அரைத்து, அதோடு ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டு சேர்த்து அரைத்து இரண்டையும் ஒன்றாக நீரில் கலந்து பூச்சி தாக்குதல் உள்ள செடிகளின் மீது தெளித்தால் அது பூச்சி விரட்டியாக செயல்பட்டு அசுவினி பூச்சிகளை விரட்டிவிடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

மக்காச்சோளம் பயன்கள்

மக்காச்சோளம் வளர்ப்பு

  • மக்காச்சோளத்தில் இருக்கின்ற மிகுதியான நார்ச்சத்து குடல் மற்றும் வயிற்று புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பதை சீராக்கி உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆக உதவுகிறது.
  • கருவுற்ற பெண்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அவர் அறிவுறுத்திய அளவின்படி மக்காச்சோளத்தை சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
  • இரும்புச்சத்து மிகுதியாக இருக்கின்ற இந்த சோளத்தை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி மென்மேலும் அதிகரித்து, இரத்த சோகை பாதிப்பு அறவே நீங்கும்.
  • சோளத்தில் இருக்கின்ற ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கெட்ட கொழுப்புகளை குறைத்து, இதயத்தில் உள்ள இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • மக்காச்சோளத்தை மாவாக அரைத்து அந்த மாவை நீர் அல்லது சிறிது பாலுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவிவந்தால் முகப்பரு தழும்புகள் மற்றும் எண்ணெய் வடிதல் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.


மக்காச்சோளம் பயிரிடும் முறை & பயன்கள் ஆகியவற்றை பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் வளர்த்து உங்கள் மாடித்தோட்டத்தை அழகாக்கி மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் தம்பட்டை அவரை அல்லது கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது வெகுவாக மக்களிடையே குறைந்து வருகிறது. நம் முன்னோர்களை மிக திடகாத்திரமாக வைத்திருக்க உதவியதில் இந்த கொடி தம்பட்டை அவரை காய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதில் செடி தம்பட்டை மற்றும் கொடி தம்பட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இந்த செடிகளில் பெரிதாக பூச்சி தாக்குதல்கள் இருக்காது. இது வாள் அவரை என்றும் அழைக்கப்படுகிறது.
கொடி தம்பட்டை
தற்காலத்தில் வீட்டுத்தோட்ட மற்றும் மாடித்தோட்ட ஆர்வலர்களால் அழிவிலிருந்து மீண்டு வரும் அரிய காய்கறிவகைகளில் இந்த கொடி தம்பட்டையும் இருக்கிறது. கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடித்தோட்டத்தில் கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு, தம்பட்டை அவரை அறுவடை மற்றும் தம்பட்டை அவரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை தயார் செய்தல்

தம்பட்டை அவரை ஒரு அடி நீளம் வரை வளரக்கூடிய காயாகும், எனவே அதன் தொடக்க மண்கலவையை சரியாக தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி

தம்பட்டை அவரை விதை
விதைகள் விதைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் 7 முதல் 15 நாட்களில் தம்பட்டை அவரை முளைக்க தொடங்கும். தம்பட்டை அவரை விதை அளவில் பெரியதாக இருப்பதினால் முளைப்பதற்கு சிறிது நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. கொடிகள் நன்கு வளர்ந்து சுமார் 60 நாட்களில் பூக்கள் பூக்கத்தொடங்கும். இந்த வளர்ச்சி அந்தந்த மண்கலவையை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. இதன் பூக்கள் வெண்மை நிறம் கலந்த ஊதா நிறத்தில் இருக்கக்கூடும்.

தம்பட்டை அவரை அறுவடை

அவரை
பூக்கள் பூக்க தொடங்கிய சில நாட்களில் பிஞ்சுகள் பிடிக்கத்தொடங்கும். 75 நாளில் இளம்பிஞ்சுகள் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் அப்போதே அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். பிறகு 85 நாட்கள் முதல் 90 நாட்களில் கொடி தம்பட்டை அவரை அதன் முழு வளர்ச்சியை அடைத்திருக்கும், இப்போது கொடி தம்பட்டையை அறுவடை செய்து கொள்ளலாம். தம்பட்டை அவரை காய்கள் ஒரு அடியில் வாள் போன்ற தோற்றத்தில் வளர்ந்திருக்கும் எனவே தான் இது வாள் அவரை என பெயர் பெற்றது.

தம்பட்டை அவரை பயன்கள்

தம்பட்டை அவரை

  • கொடி தம்பட்டை அவரையில் நம் உடலுக்கு தேவையான Folate எனும் விட்டமின் சத்து 44 % இருக்கிறது. இந்த முக்கிய சத்து தான் நம்முடைய மரபணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
  • சிலருக்கு நாள்பட்ட சரும தொந்தரவு இருக்கும், அவர்களெல்லாம் இந்த கொடி தம்பட்டையை அடிக்கடி உண்டுவந்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைத்து, இனி ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • கொடி தம்பட்டை அவரை காயில் நார்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது, இதனால் மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பூரண குணமாகிறது.
  • 5 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • இரவில் உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம், உறங்குவதற்கு மருந்துகள் ஏதும் பயன்படுத்தாமல், உறங்க செல்லும் முன் உணவுடன் இந்த தம்பட்டையை உண்டால் ஆரோக்கியமான உறக்கம் பெறலாம்.
  • வெளிநாடுகளில் ஆரோக்கியபானங்கள், தேநீர் தயாரிப்பிலும், மேலும் பற்பசை, சோப்பு தயாரிப்பிலும் கூட கொடி தம்பட்டை அவரையை பயன்படுத்துகின்றனர்.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் தம்பட்டை அவரை வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.

அனைத்து நிலங்களிலும் சித்தரத்தை வளர்ப்பு செய்யலாம், இது ஒரு செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின்னாளில் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியது. இந்த சித்தரத்தை இஞ்சி வகையை சேர்ந்த செடியாகும். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளில் சித்தரத்தை முக்கியமானதாகும், இதனை அலோபதி மருந்துகளாக தயாரித்து நமது நாட்டிலேயே விற்பனை செய்கின்றனர்.
சித்தரத்தை வளர்ப்பு
சித்தரத்தை செடி வளர்ப்பது எப்படி, சித்தரத்தை வளரியல்பு, சித்தரத்தை எப்படி பயன்படுத்துவது மற்றும் சித்தரத்தை மருத்துவ குணங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

மண்ணின் தன்மை

சித்தரத்தை எல்லாவகை மண்ணிலும் வளரும் பண்பை பெற்றிருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் செழித்து வளர சிறந்த மண்கலவையை அதற்கு அளிக்க வேண்டியுள்ளது. சித்தரத்தை நடவு செய்வதற்கு, 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மக்கிய தொழுஉரம், 20 சதவிகிதம் மணல் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் சித்தரத்தை வளர்ப்பு சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சித்தரத்தை நடவு

சித்தரத்தை செடி
தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். மாடித்தோட்டத்தில் நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடமாக பார்த்து தேர்வு செய்து தொட்டியை அங்கு வைக்கவும், பின்பு அதில் பள்ளம் பறித்து சித்தரத்தை அதில் நடவு செய்யவும். ஒரு வருடம் வரை பலனை தரக்கூடியது இந்த சித்தரத்தை மூலிகை.

சித்தரத்தை வளரியல்பு

சித்தரத்தை
சித்தரத்தை சுமார் ஐந்து அடி உயரம் வளரக்கூடியதாகும். இதன் இலைகள் பசுமையாக நீண்டு வளரும் குணத்தைக்கொண்டிருக்கும். கொத்து கொத்ததாக பக்கக்கிளைகள் படர்ந்து வளரும். இதன் வேர் பகுதியில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும், இதனால் புதிய செடிகள் பக்க வாட்டில் வளர்ந்தபடியே இருக்கும்.

இதன் வேரில் விளைகின்ற கிழங்கில் மருத்துவ குணம் மிகுதியாக உள்ளது. இந்தக் கிழங்கு மிகவும் உறுதியாக இருக்கும், குறுமிளகின் வாசத்தை கொண்டிருக்கும், இதில் வரும் பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலமாக சித்தரத்தை இன விருத்தி செய்யப்படுகின்றன.

சித்தரத்தை அறுவடை

சித்தரத்தை கிழங்கு
நடவு செய்த நாளிலிருந்து சுமார் 200 நாட்களில் சித்தரத்தை அறுவடை செய்யலாம். கிழங்குக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் அறுவடை செய்திட வேண்டும். நெகிழிப்பையில் உள்ள மண் கடினமாக இருக்கும் பொழுது கிழங்கை வெளியே எடுக்க முயற்சித்தால் கிழங்கு காயம்பட வாய்ப்புள்ளது எனவே அந்த மண்ணை இலகுவாக்கி பிறகு கிழங்கை வெளியே எடுத்து விட்டு மீண்டும் செடி நடவு செய்யலாம் செடி மீண்டும் வளர்ந்து வந்துவிடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

சித்தரத்தை கிழங்கு

  • சித்தரத்தை கோழை மற்றும் கபத்தை அகற்றுவதில் பழங்காலம் முதலே முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது, மேலும் உடல் வெப்பத்தை நீக்கும் மற்றும் பசியை தூண்டும்.
  • சித்தரத்தை பொடி செய்து 2-4 கிராம் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேன் கலந்து தினசரி இரண்டு வேளைகள் சாப்பிட்டுவந்தால் வறட்டு இரும்பல் மற்றும் நெஞ்சு சளி எல்லாம் சரியாகிவிடும்.
  • சித்தரத்தையை நன்கு தட்டி, 350 மிலி சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி 30 மிலி – 40 மிலி தேன் சேர்த்து கலந்து சித்தரத்தை கஷாயம் செய்து குடித்துவந்தால் நுரையீரல் மற்றும் தொண்டை நோயெல்லாம் பூரண குணமாகும்.
  • ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு அடிக்கடி கால் வலி, மூட்டு வலி ஏற்பட்டு பெரும் தொந்தரவு ஏற்படும், இவற்றை குணப்படுத்த சித்தரத்தை ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, உடலினை நன்கு வலுப்படுத்தவும் மற்றும் சக்தியை கொடுக்கவும் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யவும் பயன்படுகிறது.


சித்தரத்தை வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் அதன் ஈடு இணையற்ற மருத்துவ பயன்கள் என்ன என்பதை பார்த்தோம். நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் பலன்கள் எல்லாம் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

இன்சுலின் செடியானது கோஸ்டேசி குடும்பத்தைச்சேர்ந்த செடி வகையாகும். இந்த இன்சுலின் செடி ஆசியாவை தன் பூர்வீகமாகக் கொண்டது மேலும் இரும்பு, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் செழிப்பான மூலமாகும், இந்த செடி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரையின் அளவை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பண்பிற்காகவே பல வீடுகளில் இன்சுலின் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது. இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் பண்பை கொண்டுள்ளதால் இதற்கு இன்சுலின் செடி என பெயர் பெற்றது.
இன்சுலின் செடி வளர்ப்பு
இந்த இன்சுலின் செடி மலைப்பிரதேசங்களிலும் மற்றும் காடுகளிலும் சுமார் பத்து அடி வரைக்கும் உயரம் வளரும் தன்மை கொண்டது, ஆனால் மாடித்தோட்டங்களில் தொட்டிகளில் வளர்க்கும் பொழுது சிறிய அளவுகளிலே வளர்கிறது. மிக மெல்லிய புளிப்புச்சுவையை கொண்டது இந்த இன்சுலின் செடி. இன்சுலின் செடி வளர்ப்பது எப்படி மற்றும் இன்சுலின் செடி நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நடவு செய்தல்

இன்சுலின் செடி நன்கு செழித்து வளர மற்றும் ஆரோக்கியமான இலைகளைப் பெற சூரிய ஒளி நல்ல விதத்தில் கிடைக்கும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும், அதே சமயம் நிழலும் இந்த செடிக்கு முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம். நல்ல முறையில் இன்சுலின் செடி வளர்ப்பு செய்ய செறிவுமிக்க மண்கலவையை தயார் செய்துகொள்ளவும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

இன்சுலின் செடியை மண்ணில் ஆழமாக நடவேண்டிய அவசியமில்லை. இரண்டு முதல் மூன்று அங்குல ஆழம் குழிபறித்தால் போதுமானது. இன்சுலின் வேர்த்தண்டுக்கிழங்கை இரண்டு அங்குல ஆழமான மண்கலவையில் மூடி, பக்கவாட்டில் நன்கு அழுத்திவிட்டு நீர் ஊற்றவேண்டும்.

செடியின் வளர்ச்சி

இன்சுலின் செடி
நடவு செய்த 90 நாட்களில் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம், வாழை மரத்தை போன்று இந்த இன்சுலின் செடியை சுற்றிலும் நிறைய இன்சுலின் செடிகள் தானாகவே முளைக்க தொடங்கிவிடும். 170 நாட்களுக்கு பிறகு அபரிவிதமான வளர்ச்சியை உங்களால் கண்கூட பார்க்க முடியும். சுமார் ஒரு வருடங்கள் களைத்து செடியின் உச்சியில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கத்தொடங்கும்.

பூச்சித்தொல்லை

எறும்பின் தொல்லை எப்பொழுதும் மற்றும் கம்பளிப்பூச்சியின் தொல்லை அவ்வப்போது ஏற்பட வாய்ப்புள்ளது. இது இன்சுலின் செடி வளர்ப்பு தனை பெரிதும் பாதிக்கக்கூடும். வேப்பெண்ணை கரைசலை தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளை எளிதில் விரட்டி செடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

இன்சுலின் செடியின் மருத்துவ பயன்கள்

இன்சுலின் செடி வளர்ப்பு

  • சர்க்கரை நோய்க்கு இன்சுலின் செடி ஒரு மாமருதாகும். இன்சுலின் அதிகரிக்க தினசரி ஒரு இலையை காலை வேளையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இன்சுலின் பற்றாக்குறை சரியாகும்.
  • ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த இன்சுலின் செடி மூலிகை நம்முடைய குடலில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாவான ஈகோலின் உடைய அளவை அதிகரிக்கிறது மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
  • இன்சுலின் இலையில் இருக்கின்ற சோடியம் நம்முடைய உடலுக்கு அத்தியாவசியமான நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு இதிலிருக்கும் ரைசோம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • முகத்தில் தோன்றக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு நல்ல தீர்வாக இந்த இன்சுலின் செடியின் இலைகள் பயன்படுகிறது.


அறிய பலன்கள் பல கொண்ட இன்சுலின் செடியை எப்படி வளர்ப்பது மற்றும் இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றி எல்லாம் பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் இன்சுலின் செடி வளர்ப்பு செய்து அதன் பயன்கள் எல்லாம் பெற வாழ்த்துகிறோம்.

கேரட் செழிப்பான ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடியது, நீளமான கூம்பு வடிவத்திலும், கிழங்கை போல வேரில் திரண்டு வளரக்கூடிய ஒரு வேர்க்காய் வகையை சேர்ந்ததாகும். முதன் முதலில் ஆப்கானிஸ்த்தான் பகுதியில் தான் கேரட் செடி வளர்ப்பு செய்ய பயிரிடப்பட்டது, பின்பு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது. குளிர் பிரதேசபகுதிகளில் வெப்பநிலை 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கின்ற பொழுது கேரட் அடர் ஆரஞ்ச் நிறத்துடன் விளையும்.
கேரட்
நம் தமிழகத்தில் கேரட் செடி வளர்ப்பு செய்வதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் மிகவும் ஏற்றது என்றாலும் வீட்டிலும் அதை வளர்க்க முடியும். கேரட் செடி வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் கேரட் வளர்ப்பது எப்படி, கேரட் சாகுபடி மற்றும் கேரட் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

மண்கலவை தயார் செய்தல்

வீட்டிலேயே கேரட் வளர்க்கும் முறையில் முக்கிய பங்கு வகிப்பது அதற்கான மண்கலவை தயார் செய்வது. கோகோபீட் 40 சதவிகிதம், செம்மண் 30 சதவிகிதம் மற்றும் மக்கிய தொழு உரம் 30 சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்துகொள்ளவும். இந்த விகிதத்தில் மண்கலவை இருந்தால் கேரட் செடி வளர்ப்பு சிறக்கும்.

gardening kit icon

CHRYZTAL Stainless Steel Heavy Duty Gardening Tool Set

Garden Tool Set, Stainless Steel Heavy Duty Gardening Tool Set, with Non-Slip Rubber Grip, Storage Tote Bag, Outdoor Hand Tools, Ideal Garden Tool Kit Gifts for Women and Men

 Buy Now

கேரட் விதை விதைத்தல்

கேரட் விதை
கேரட் விதைகள் ஜீரகத்தை போன்ற வடிவத்தில் இருக்கும், தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். சிறிது பள்ளம் தோண்டி அதில் கேரட் விதைகளை போட்டு மூடவும், சிறிய விதை என்பதால் நீர் கொஞ்சம் அதிகமானால் கூட விதை மேலே வந்து விடும் எனவே மிகவும் கவனமாக பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

கேரட் செடி பராமரிப்பு முறை

கேரட் செடி வளர்ப்பு
கேரட் வளர தொடங்கியதுமே வேர்ப்பகுதியில் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் அதன் வேரை மணலை கொட்டி மூடவேண்டும், இல்லையெனில் அதன் வேர்கள் வெளியே வந்து வளர்ச்சி பாதிக்கும் மேலும் சூரிய ஒளி நேரடியாக கேரட் மீது பட்டால் அதன் மேற்பகுதி பச்சை நிறமாக மாற வாய்ப்பு உள்ளது.

கேரட் சாகுபடி

கேரட் வளர்ப்பு
கேரட் விதைத்த நாளில் இருந்து முறையாக கவனித்து வர வேண்டும், அதிகம் நீரை தேங்க விடாமல், பூச்சி தாக்குதல் ஏதும் ஏற்படாமல் நன்கு பராமரித்து வந்தால் 60 முதல் 70 நாளில் ஆரோக்கியமான கேரட்டை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் தருணத்தில் மண் ஈரமாக இருந்தால் கேரட்டை எளிதாக பிடிங்கிவிடலாம்.

கேரட் பயன்கள்

கேரட் பயன்கள்

  • கேரட்டில் உள்ள இனிப்புச்சுவை சர்க்கரை நோய் உடையவர்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இது உதவும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து நன்மை தரக்கூடிய கிருமிகளை உற்பத்தி செய்கிறது.
  • இதயப்பிரச்சனைகள் ஏற்பட மிக முக்கிய காரணம் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பாகும். கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும்.
  • கண்பார்வை குறைபாட்டால் பலரும் பாதிக்க பட்டு அவதிப்படுவார்கள், அவர்கள் எல்லாம் தினசரி கேரட்டை உண்டு வந்தால் கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையை சீராக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • 2 Litter sprayer

    Garden Pressure Pump Sprayer

    ITISLL Manual Garden Sprayer Hand Lawn Pressure Pump Sprayer Safety Valve Adjustable Brass Nozzle 0.5 Gal 2L

     Buy Now

  • உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மேனி அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவுகிறது, தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் மேனியின் மினுமினுப்பு கூடும்.
  • பால் பிடிக்காத சிறு குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து பருக கொடுக்கலாம். இதில் கால்சியம் அதிகளவு இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.


மாடித்தோட்டத்தில் கேரட் விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி செய்வதென்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கேரட்டை விளைத்து உங்கள் ஆரோக்கியத்தை பெருக்க வாழ்த்துகிறோம்.

விளா மரம் இந்தியாவை தன் தாயகமாகக்கொண்டதாகும். விளா மரமானது எங்கும் வளரக்கூடிய இயல்பை கொண்டது என்றாலும் காட்டுப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. வீடுகள், தோட்டங்கள் மற்றும் கோவில்களில் விளா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது, இந்த மரம் 30 அடி வரை உயரம் வளரக்கூடியது. இந்த மரத்தின் இலைகள் நல்ல மணம் வீசக்கூடியது, காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்றே உருண்டை வடிவத்தில் காணப்படும். பழத்தின் மேல் ஓடு அதிக கெட்டியாகவும், உள்ளிருக்கும் சதைப்பகுதி மரத்தின் நிறத்திலும், விதைகள் வெண்மை நிறத்திலும் காணப்படும்.
விளா மரம்
கடிபகை, கபித்தம், கவித்தம், தந்தசடம், பித்தம், விளவு, வெள்ளி மற்றும் வுட் ஆப்பிள் போன்ற பல பெயர்களை இந்த விளா மரம் கொண்டுள்ளது. இந்த மரத்தின் கொழுந்து, இலை, காய், பழங்கள், பிசின், ஓடு, பட்டை என எல்லாமே பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியவையாகும். இதன் பழங்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டாலும் யாரும் இந்த மரத்தை வளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அழிவின் விளிம்பில் விளா மரம் இருக்கிறது.

எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட விளா மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, விளாம்பழம் சாப்பிடும் முறை மற்றும் விளாம்பழம் நன்மைகள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

விளா மரம் விதை

விளா மரம் வளர்ப்பு
நன்கு பழுத்த விளாம் பழத்தை வாங்கிக்கொள்ளவும், அதன் மேற்புற ஊடு கடினமாக இருக்கும். அதனை சுத்தியல் அல்லது கல்கொண்டு கவனமாக ஓட்டை உடைக்கவும். பிறகு உள்ளிருக்கும் சதைப்பகுதிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். விதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும், அதனை எடுத்து நீரில் அலசி நன்கு உலர வைக்கவேண்டும் அப்படி செய்வதன் மூலம் விதைப்பு செய்வதற்கு ஏதுவாக விதைகள் காய்ந்து தனி தனியே பிரிந்து வந்து விடும்.

விளா மர விதை நடவு செய்தல்

விளா மரத்திற்கு என்று பிரத்தேகமான மண்கலவை ஏதும் தேவை இல்லை அனைத்து வகை மண்ணிலும் நன்கு செழித்து வளரக்கூடியது. மரம் வளர இடவசதி உள்ள பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு, சேகரித்து வைத்துள்ள விதைகளை நடவு செய்யவும். விதைத்த 15 நாட்களுக்கு பிறகு விளா மர துளிர் முளைத்து வர தொடங்கியிருக்கும். 55 நாட்களுக்கு பிறகு 1 அடிக்கு மேல் விளா மர கன்று வளர்ந்திருக்கும்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விளா மரத்தின் சிறப்புகள்

விளாம்பழம்
10 ஆண்டுகள் மழை பெய்யவில்லை என்றாலும் விளாம் மரம் தாக்குப் பிடிக்கும். வேறு எந்தத் தாவரமும் வளர தகுதி இல்லையென்று கூறப்படும் மண்ணிலும் கூட இந்த விளாமரம் வளரும். இதற்கு தனிப்பட்ட முறையில் உரம் ஏதும் இட தேவையில்லை. எனவே பராமரிப்பு செலவு ஏதும் கிடையாது. மேலும், 30 அடிக்கு மேல் விளா மரம் வளரும் என்பதால் விவசாயிகள் வேலிக்கு மாற்றாக விளா மரம் வளர்ப்பு செய்கின்றனர்.

விளாம்பழம் சாப்பிடும் முறை

விளாம்பழம்
நடவு செய்த 5 முதல் 7 வருடங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகியிருக்கும். விளாம் பழத்தை பறித்து, அதன் மேற்பகுதியை உடைக்கவேண்டும், விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும், பழுத்தபிறகு துவர்ப்பு சுவையும், புளிப்பு சுவையும் கலந்த சுவையாக இருக்கும். நறுமணம் வீசுகின்ற இந்தப் பழத்தை பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

விளாம்பழம் பயன்கள்

விளாம்பழம் நன்மைகள்

  • விளா மரத்தினுடைய பட்டையை நன்கு பொடியாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க செய்து கசாயம் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர, வறட்டு இருமல், வாய் கசப்பு, மூச்சு இழுப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.
  • விளாம் பழத்தை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் மேலும் விளாம் மரத்தினுடைய இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கிவிடும்.
  • விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது இது நம் எலும்பு மற்றும் பற்களை வலுவடையச் செய்ய உதவுகிறது. மேலும் விளாம்பழத்துடன் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.
  • bone meal icon

    இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

    உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

     Buy Now

  • விளா காயை சட்டியில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும், பின்பு வெந்ததும் அதை உடைத்து அதன் உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் அரை டம்ளர் தயிர் கலந்து தினசரி காலை வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை முழுமையாக குணமடையும்.
  • விளா மரத்தினுடைய பிசினை பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு எனும் கூற்று விளாம் பழத்தின் சிறப்பை குறிக்க கூறப்பட்டதாகும், பித்தத்தை தெளிவைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்த விளாம் பழம்.


நற்பலன்கள் பல அள்ளித்தரும் இந்த விளா மரம் உங்கள் ஆரோக்கியத்தை கீழே விழாமல் பாதுகாக்கிறது. இத்தகைய மரத்தினை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைப்பது நம் கடமையாகும்.

சங்குப்பூ எனப்படும் காக்கட்டான் பூ கொடி வகையைச் சேர்ந்தது. இதன் கொடி எல்லா இடங்களிலும், வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் நீல நிறம் மற்றும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது கூட்டிலைகளை கொண்ட ஏறு கொடியாகும். அழகு செடிகளாக வீட்டின் முன்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது, தட்டையான காய்களை உடையது.
சங்குப்பூ கொடி வளர்ப்பு
பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிற சங்குப்பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப்படுகிறது, இது மிகச்சிறந்த மருத்துவ பயன்களை உடையது. மேலும் சிவபெருமானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. இதனுடைய பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போன்று இருப்பதால் சங்குப்பூ என பெயர் வந்தது.

சங்குப்பூ விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சங்குப்பூ கொடி வளர்ப்பு, சங்குப்பூ மருத்துவகுணம் மற்றும் சங்கு பூ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

சங்குப்பூ விதை

சங்குப்பூ விதைகள் அடர் காவி நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு அவரை விதைபோல இருக்கும் சங்குப்பூ விதையானது வெந்தயத்தைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்த விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு நீரில் ஊற வைக்கவேண்டும், அது நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முளைப்பதற்கு தயாராகிருக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சங்குப்பூ விதை நடவு செய்தல்

சங்குப்பூ
சங்குப்பூ கொடி வளர்ப்பு அனைத்து வகை மண்கலவையிலும் சிறப்பாக இருக்கும். நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் மண்ணைப்போட்டு நிரப்பிக்கொள்ளவும், பிறகு ஏற்கனவே நாம் தேர்ந்தெடுத்து வைத்துள்ள நல்ல தரமான விதைகளை எடுத்து அந்த நெகிழிப்பையில் உள்ள மண்ணை சிறிது தோண்டி அதில் அந்த விதைகளை போட்டு மூடவும். மேற்பரப்பில் நீர் தேங்காதவாறு பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

சங்குப்பூ செடி வளர்ச்சி

வெள்ளைச்சங்குப்பூ
சங்குப்பூ விதைப்பு செய்த 10 நாட்களில் முளைத்து வரத்தொடங்கிவிடும். 15 நாட்களுக்கு பிறகு கொடி படர ஆரம்பிக்கும், கொடி பற்றி ஏற உதவும் விதமாக பந்தல் அமைத்தல் வேண்டும் அப்போது தான் சங்குப்பூ கொடி வளர்ப்பு சிறக்கும். 30 நாட்களில் சங்குப்பூ கொடி செழித்து வளர்ந்திருப்பதை காணலாம். சுமார் 40 நாட்களில் கண்ணைக்கவரும் வண்ணத்தில் பூக்கள் பூத்திருக்கும். இந்த வளர்ச்சிக்காலம் நீல நிற சங்குப்பூ மற்றும் வெள்ளைச்சங்குப்பூ இரண்டிற்கும் பொருந்தும்.

சங்கு பூ பயன்கள்

சங்குப்பூ தேநீர்

  • இரு தேக்கரண்டி சங்குப்பூ சாற்றுடன், சம பங்கு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு அதோடு தேவையான அளவு தேன் சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகினால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கிவிடும், மேலும் தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயுடன் சேர்த்து வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.
  • இந்த பூக்கள் மனசோர்வு மற்றும் மனக்கவலை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் அதிகம் ஆண்டி ஆக்சிடன்ட் உள்ளதால் இது நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் சேதப்படுவதை பெருமளவு தடுத்து நம்மை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கச்செய்வதுடன் நம்முடைய சருமம் என்றும் இளமையாக இருக்கவும் பயன்படுகிறது.
  • Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • மூச்சுத் திணறல மற்றும் இருதய தொடர்பான நோய்களுக்கு இந்த சங்குப்பூ மருந்தாகப் பயன்படுகின்றது. உலர்ந்த சங்குப்பூக்கள், புளூ டீ எனும் சங்குப்பூ தேநீர் தயாரிக்கவே பிரத்யேகமாக விலை தந்து பல நாடுகளில் வாங்கப்படுகின்றன.
  • சங்குப்பூவினுடைய சாறு, கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. கரும்புள்ளி மற்றும் தேமலைக் குணமாக்கும். சங்குப்பூ செடியின் வேர், சிறுநீர்ப்பை நோய்களை கட்டுப்படுத்தும்.
  • சங்குப்பூவின் விதை புளிப்பு சுவைகொண்டதாக இருக்கும் மேலும் மணமிக்கதாக இருக்கும், இது உடலுக்கு வலிமை தருகின்ற சர்பத் மற்றும் பான வகைகளில் சேர்க்கப்படுகின்றது.


வீட்டிற்கு அழகு மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சங்குப்பூ கொடி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் சங்குப்பூ வளர்ப்பு செய்து அதன் வண்ணம் போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.

பருப்புக்கீரை வளர்ப்பு மிகவும் சுலபமாக செய்யலாம். மிக குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித்தர கூடிய கீரைகளில் ஒன்றாகும் இந்த பருப்புக்கீரை. இந்தக்கீரை 20 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய செடியாகும். அதிக சத்துக்கள் அடங்கிய இந்த கீரைக்கு பராமரிப்பும் மிக குறைவாக இருந்தால் கூட போதுமானது.
பருப்புக்கீரை
பருப்புடன் இந்த கீரையை சமைத்து உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருவதினால் இதனை பருப்புக் கீரை என்று அழைக்கின்றனர். மேலும் இந்த பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ எனவும் அழைக்கபடுகிறது அதற்கு காரணம் பருப்புக்கீரையானது குழந்தைகள் ஈன்ற தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை சீராக்குகிறது.

பருப்புக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் பருப்புக்கீரை வளர்ப்பு, பருப்புக்கீரை சாகுபடி மற்றும் பருப்புக்கீரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மண்கலவை தயாரித்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கொண்டு மண்கலவை தயார் செய்தால் நல்ல வளர்ச்சியை பெறலாம். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்கு கலந்து மாடித்தோட்டத்தில் நடவு செய்ய ஏதுவாக நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் அந்த மண்கலவையை நிரப்பிக்கொள்ளவும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல்

பருப்புக்கீரை வளர்ப்பு
பருப்புக்கீரை விதைகள் கருப்புநிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை மண்கலவையின் மேல் தூவ வேண்டும். முதன் முதலாக நடவு செய்பவர்களுக்கு விதை தூவல் சரியாக செய்ய முடியவில்லை என்றால் மணல் அல்லது சாம்பலுடன் பருப்புக்கீரை விதைகளை கலந்து தூவலாம். தூவிய பிறகு அதன் மீது பூவாளிக்கொண்டு கவனமாக நீர் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் அறுவடை

பருப்புக்கீரை செடி
பருப்புக்கீரை நடவு செய்த 3 மூன்று நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும். 7 நாட்களில் நல்ல வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம். சுமார் 20 நாட்களில் சாகுபடி செய்யும் அளவிற்கு வளர்ந்துவிடும். 20 நாளில் சிறிய மொட்டுக்கள் வைக்க ஆரம்பித்திருக்கும், தேவைக்கு போக மீதியை விதைக்காக விட்டுவிடலாம். அந்த மொட்டுக்கள் மஞ்சள் நிற பூக்களாக மாறி காய்வைக்கும். காய்கள் காய்ந்தபிறகு அதில் பருப்புக்கீரை விதைகள் நிறைந்திருக்கும்.

பருப்புக்கீரை பயன்கள்

கீரை பூ

  • வெய்யிலின் தாக்கத்தால் சிலருக்கு அக்கி தொல்லை ஏற்படும், பருப்புக்கீரையின் இலைகளை பறித்து தண்ணீரில் அலசி நன்கு அரைத்து அக்கி ஏற்பட்ட இடத்தின் மீது தடவி வர வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இதுபோல் செய்து வந்தால் எரிச்சல் தணிந்து அக்கி கொப்புளங்கள் குறைந்து குணமுண்டாகும்.
  • சிலருக்கு தலைவலி அடிக்கடி ஏற்படும், நாள் முழுதும் கூட அந்த வலி தொடரும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் பருப்புக்கீரையை நன்கு அரைத்து தலைக்கு பற்று போட்டுவந்தால் தலைவலி சரியாகிவிடும்.
  • பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் நுரையீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • ஒமேகா 3 உள்ள அற்புதமான கீரை இந்த பருப்புக்கீரை ஆகும், மேலும் கால்சியம் சத்து குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருப்புக்கீரையைப் பயன்படுத்தினால் மிக எளிதில் கால்சியம் சத்து பற்றாக்குறை நீங்கும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை இந்த பருப்புக்கீரை. இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து நீண்ட கால நோய்களின் பாதிப்பை குறைக்க உதவுகிறது.


வீட்டில் பருப்புக்கீரை செடி வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பருப்புக்கீரை வளர்ப்பு செய்து அதன் அற்புத பயன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

சித்தமருத்துவத்திற்காகவே நம் நாட்டில் பெரும்பாலும் பூனைக்காலி வளர்ப்பு செய்யப்படுகிறது. வெப்பமண்டல பகுதிகளில் பூனைக்காலி விதை நன்கு செழித்து வளரும். பூனைக்காலி விதை வெள்ளை மற்றும் கருப்பு நிறம் என இரண்டு வகைகளாக காணப்படுகிறது. இதன் விதையின் பூவானது காய்த்த பிறகு ஒவ்வொரு காயிலும் ஏழு விதைகள் வரை இருக்கும்.
பூனைக்காலி வளர்ப்பு
பூனைக்காலி காய்களின் மேற்புறத்தில் மென்மையான சுனை போல் இருக்கும், அதனால் தான் இதனை வெல்வெட் பீன் என பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இது மென்மையாக இருப்பினும் உடல் மீது பட்டால் ஒரு வித நமைச்சலை ஏற்படுத்துகிறது. பூனைக்காலி வளர்ப்பது எப்படி, பூனைக்காலி விதை எப்படி சாப்பிடுவது, பூனைக்காலி வகைகள், பூனைக்காலி சாகுபடி மற்றும் பூனைக்காலி விதை பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விதை நேர்த்தி

பூனைக்காலி வளர்ப்பு
நல்ல நிலையில் உள்ள பூனைக்காலி விதைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் நீரில் போட்டு ஊறவைக்கவும், அடுத்த நாள் அந்த விதைகள் நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு சற்று பெரிதாகி இருக்கும், இது விதைகள் வளர்ப்பு திறனோடு இருப்பதை குறிக்கும், வளர்ப்புத்திறன் குன்றிய விதைகளை இந்த நிலையிலே கண்டறிந்து அவற்றை நீக்கிவிடலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மண்கலவை தயாரித்தல்

மண்கலவை தயாரித்தல்
பூனைக்காலி வளர்ப்பு செய்வதற்கு செம்மண் சிறந்த மண் ஆகும். செம்மண் கிடைக்காதபட்சத்தில் மற்ற தோட்டமண்ணை கூட பயன்படுத்தலாம். எந்தமண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். 60 சதவிகிதம் மண்ணும், 40 சதவிகிதம் மக்கிய தொழு உரமும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்துக்கொள்ளவேண்டும்.

நடவு மற்றும் வளர்ச்சி

பயன்கள்
தேர்ந்தெடுத்த விதைகளை, தயார் நிலையில் உள்ள மண்கலவையில் விதைக்கவும், விதைத்த பிறகு நீர் தெளிக்கவேண்டும், நீரானது தேங்கி நிற்கக்கூடாது. விதை விதைத்த 7 முதல் 10 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும், சுமார் 20 நாட்களில் கொடியானது படரத்தொடங்கும். கொடி படர உதவியாக பந்தல் அமைப்பது மிகமுக்கியமாகும்.

விதை விதைத்த 55 நாட்களில் பூவானது பூக்கத்தொடங்கும், பூக்கள் கொத்துக்கொத்தாக பசுமையாக பூக்கும். 75 நாட்களில் பூனைக்காலி பிஞ்சுகள் பிடிக்கத்தொடங்கும்.

பூனைக்காலி சாகுபடி

பூனைக்காலி
என்பது நாட்களில் பூனைக்காலி பிஞ்சுகள் சமையலுக்கு ஏற்ற பருவ நிலையை அடைந்திருக்கும், அந்த சமயத்தில் அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். சுமார் 130 நாட்களில் பூனைக்காலி விதைகள் நன்கு காய்ந்திருக்கும் அப்போது அதை அறுவடை செய்துக்கொள்ளலாம். கருப்பு பூனைக்காலி வளர்ப்பு அல்லது வெள்ளை பூனைக்காலி வளர்ப்பு எதை வளர்ப்பு செய்தாலும் நான்கு முதல் ஐந்து மாதங்களில் அறுவடை செய்துக்கொள்ளலாம்.

பூச்சித்தாக்குதல்

பூனைக்காலி கொடி வளர்ப்பு செய்வதில் பெரும் சிக்கலாக இருப்பது மாவு பூச்சி தாக்குதல். இது பூனைக்காலி செடி வளர்ப்புதனை பாதித்து பூக்களை பிஞ்சு வைக்க விடாது. இதனை தடுக்க எளியவழி உள்ளது, நமது வீட்டில் அரிசி களையும் நீரை எடுத்துக்கொள்ளவும், அது நன்கு புளித்து போகும் வரை வைத்திருந்து பின்பு அதை மாவு பூச்சிகள் மீது தெளித்து வரவேண்டும், இது பூச்சிவிரட்டியாக செயல்பட்டு மாவு பூச்சிகளை முழுவதுமாக நீக்கிவிடும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

பூனைக்காலி விதை பயன்கள்

பூனைக்காலி பூ

  • வயதாகும் காலத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்றாகும் இந்த கை கால் நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை. பூனைக்காலி விதையிலிருந்து தயார் செய்யப்படும் பொடியை அரை கிராம் அளவு பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்ற அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகும்.
  • பூனைக்காலி விதை ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முதலிடம் வகிக்கிறது. பூனைக்காலி விதையை ஜாதிபத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு மற்றும் சூடம் போன்ற பொருள்களை சமபங்கு சேர்த்து பொடியாக்கி அதை தினமும் காலை, மாலை என இரு வேலையும் ஒரு கிராம் பாலுடன் கலந்து குடிப்பதன் மூலமாக ஆண்மையை அதிகரிக்கலாம்.
  • யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பூனைக்காலி வேரினை நன்றாக அரைத்து அதைக்கொண்டு நோய்பாதிப்பு ஏற்பட்ட இடத்தில பற்றுப்போட்டு வந்தால் யானைக்கால் நோய்க்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
  • பூனைக்காலி விதையானது தேள் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, மேலும் சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது நிறைய லேகியங்களிலும் மற்றும் சூரணங்களிலும் சேர்க்கப்படுகிறது.


அற்புத மருத்துவகுணம் பல கொண்ட பூனைக்காலி வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் பூனைக்காலி விதை எப்படி சாப்பிடுவது என்பதை பற்றி பார்த்தோம். நீங்களும் இந்த முறையில் பூனைக்காலி வளர்த்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

சொடக்கு தக்காளி என்ற பெயரே ஏதோ வினோதமாக இருக்கிறதே என்று நினைக்கீர்களா? இன்றைய கால கட்டத்தில் நாம் மறந்த போன சத்துநிறைந்த பழவகைகளுள் இதுவும் ஒன்றாகும். அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியே இந்த சொடக்குதக்காளியின் தாயகமாகும். விவசாயிகள் பெருமளவில் சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது கிடையாது, எனவே இது கடைகளில் மற்ற பழங்கள் போல கிடைப்பதில்லை, இவை சாதாரணமாக சாலை ஓரத்திலும், குப்பைகளிலும் மற்றும் காலி நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதை காணலாம்.
சொடக்கு தக்காளி வளர்ப்பு
இந்தப்பழமானது பலூன் போன்ற அமைப்புடைய உறையின் உள்ளே இருக்கும். கிராமங்களில் உள்ள சிறுவர்கள் முதிர்ந்த சொடக்கு தக்காளி பழத்தின் பலூன் போன்ற உறையினை வாயினால் அதை ஊதி தலையில் உடைத்து விளையாடுவார்கள், அப்படி தலையில் உடைக்கும்போது சொடக்கு போட்டதை போன்ற ஓலியை ஏற்படுத்தும், மேலும் இந்தப்பழம் பார்ப்பதற்கு தக்காளி பழத்தை போல இருக்கும். எனவே தான் இதை சொடக்கு தக்காளி என்று அழைக்கின்றனர்.

நமது நாட்டில் இந்தப்பழம் சந்தைப்படுத்த படவில்லை. எனவே இதை நகர்புறங்களில் வசிப்பவர்கள் மிகக்குறைந்தளவே அறிந்திருப்பார்கள். விதையிலிருந்து சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

வளரும் தன்மை

சொடக்கு தக்காளி வளர்ப்பு
சொடக்கு தக்காளி ஓராண்டுத் தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் தண்டுப்பகுதியானது கிளைத்துக் காணப்படுகின்றது. இந்தச்செடியானது பெரும்பாலும் களைச் செடியாகவே கருதுகின்றனர். மழைகாலங்களில் இந்த செடி தன்னிச்சையாக அதிகம் வளர்ந்திருப்பதை காணலாம். இந்தப்பழம் வெப்ப மண்டல பகுதி மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சொடக்கு தக்காளியின் அமைப்பு

சொடக்குதக்காளி வளர்ப்பு
சொடக்கு தக்காளி செடியானது 90 செமீ வரை உயரம் வளரக்கூடியது, சொடக்கு தக்காளி கீரை ஒவ்வொன்றும் 10 செமீ நீளம் வளரக்கூடியது. பூக்களிலிருந்து உறையை போன்ற பைக்குள் பச்சை நிறக்காய்கள் தோன்றுகிறது. இந்த உறைகள் பார்ப்பதற்கு பலூன் போல காட்சியளிக்கிறது. இந்தக்காய்கள் முற்றி பழமாகும் தருணத்தில் உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.

உறையினுள் உள்ளே இருக்கும் காயானது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். பழம் பழுத்தவுடன் மேல் உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறி விடும் மேலும் ஓரிரு நாளில் பழமானது உறையுடன் சேர்ந்து உதிர்ந்து விடும். இந்த சொடக்கு தக்காளி பழமானது 1.5 செமீ அளவில் இருக்கும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சொடக்கு தக்காளி பயன்கள்

சொடக்கு தக்காளி

  • சொடக்கு தக்காளி விதையில் விட்டமின் பி1 மிகுதியாக இருப்பதனால் தினமும் காலை எழுதவுடன் உட்கொண்டுவந்தால் இதயத் தமனியில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புதனை கரைக்கின்ற சக்தி இதற்கு இருக்கிறது. மேலும் கீழ் வாத கோளாறுகளை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
  • இந்தப்பழத்தை சாப்பிடும் பொழுது உங்களுடைய வயிறு விரைவில் திருப்தியான உணர்வை பெறும், இதன் காரணமாக நீங்கள் மேற்கொண்டு எதையும் சாப்பிட தோணாது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பர்களுக்கு இது பெரிதும் உதவும்.
  • நாம் உண்ணும் உணவுகள் சில சமயங்களில் கடினமானதாக இருக்கக்கூடும், அப்படி பட்ட கடினமான உணவுகள் கூட சுலபமாக ஜீரணம் ஆக இந்தப்பழத்தை சாப்பிட்டால் போதும், இந்த பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்தானது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய புண்கள் மற்றும் பிற ஆறாத புண்களுக்கு சொடக்கு தக்காளி இலைகள் மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதன் இலைகளை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்காய்ச்சி பின்பு புண்களின்மீது தடவினால் விரைவில் புண் ஆறும்.


அற்புத மருத்துவ பயன்களால் நம்மை சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம். இயற்கையின் அருட்கொடையாக சொடக்கு தக்காளியின் பயனை நீங்களும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It