Category

தோட்டம்

Category

சௌ சௌ ஒரு கொடிவகை தாவரம் ஆகும். சீமை கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் இந்த செள செளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா ஆகும், ஐரோப்பியர்கள் மூலமாக தான் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதிக வெப்பநிலை உள்ள பகுதிகள் மற்றும் குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் சௌ சௌ வளர்ப்பு செய்யப்படுகிறது. இந்த சௌ சௌ கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உயரத்தில் வளரக்கூடியது.
சௌ சௌ
செள செள என்கிற சீமை கத்திரிக்காயின் ருசி புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு என்று எந்த சுவையையும் சேராது, ஆனால் பல சத்துக்கள் நிறைந்தது. மேலும் இது பூசணியின் குடும்பத்தை சேர்ந்ததாகும் மற்றும் இது மிகுதியான ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரம்பியுள்ளது.

செள செள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். சௌ சௌ வளர்ப்பு செய்வது எப்படி, சௌ சௌ மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி, சௌசௌ சாகுபடி மற்றும் சௌ சௌ மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

சௌ சௌ விதைப்பு செய்ய சிறந்த மண்கலவை தயார் செய்வது அவசியமாகும். மக்கிய தொழு உரம் நாற்பது சதவிகிதம், செம்மண் நாற்பது சதவிகிதம் மற்றும் மணல் இருபது சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மக்கிய தொழு உரத்திற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தை கூட பயன்படுத்தலாம்.

சௌ சௌ விதைப்பு

சௌ சௌ வளர்ப்பு
சௌ சௌ விதைப்பு செய்ய அதற்கென விதைகள் சேகரிக்க தேவையில்லை, நன்கு முற்றி சௌ சௌ காய்களை கொண்டே சௌ சௌ செடி வளர்ப்பு செய்யலாம், முற்றிய சௌ சௌ காயிலிருந்து சிறிது முளைப்பு விட்டு சௌ சௌ வளர்ந்திருக்கும் அந்த நிலையில் அதை அப்படியே மண்கலவையில் விதைப்பு செய்யலாம். சௌ சௌ செடிகளுக்கென தனியே பந்தலை மாடி தோட்டத்தில் அமைத்திடவேண்டும்.

சௌ சௌ வளர்ச்சி மற்றும் சாகுபடி

சௌ சௌ வளர்ப்பு
சீமை கத்திரிக்காயை விதைப்பு செய்தது முதல் அதன் மீது தனி கவனம் தேவை, பூச்சிகள் ஏதும் தாக்காமல், வேர் பகுதிகளில் நீர் ஏதும் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்கு பராமரித்தால் சௌ சௌ விதைத்த ஐந்து மாதம் முதல் ஆறு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் காய்களை சாதாரணமான வெப்பநிலையில் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையில் கெடாமல் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

சௌ சௌ மருத்துவ பயன்கள்

சௌசௌ

  • தைராய்டு கோளாரால் பாதிக்கப்பட்டவர்கள் சௌசௌவை சாப்பிட்டால் நல்ல பயன் பெறலாம். சௌ சௌவில் உள்ள மாங்கனீசு மற்றும் காப்பர் தைராய்டு பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாக செயல் படுகிறது. இதை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.
  • ஆரோக்கியமற்ற கொழுப்புகளை குறைக்கவும் சௌசௌ பயன்படுகிறது. இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் உள்ள அதிகபடியான தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சௌசௌ காயை சூப் செய்து குடித்துவந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
  • உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இது நரம்பு தளர்ச்சியை குணமாக்கி நரம்பு மண்டலங்களை சீராக்கும் வல்லமை கொண்டது.
  • சௌ சௌவில் கால்சியம் சத்துகள் மிகுதியாக காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற உதவுகிறது, எனவே வளரும் சிறு குழந்தைகளுக்கு சௌ சௌ காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பெருங்குடல் மற்றும் சிறுகுடல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து குடல் மூலம் உருவாகக்கூடிய கோளாறுகளை சரிசெய்கிறது.


ஆரோக்கியம் பல நல்க கூடிய சௌ சௌ விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி செய்வது என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சௌ சௌ வளர்ப்பு செய்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

இந்தியன் பாதாம் எனும் வாதுமை என்பது பலராலும் விரும்பி உண்ணப்படும் கொட்டை அல்லது பருப்பை தரக்கூடிய மரமாகும். வாதுமை மரத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுகின்றனர். இந்தக் கொட்டைகள் ஆரோக்கியமிக்கவை மற்றும் சுவைமிக்கவை. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் பெருமளவு இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்யப்படுகின்றன.
இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு
இந்த மரம் ஒரு இலையுதிர் மரம் ஆகும், ஒரு வருடத்தில் இரண்டு முறை இலைகளை உதிர்த்து விடக்கூடியது. இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தையுடைய பெரிய இலைகளாக தோற்றமளிக்கும், நாட்கள் செல்ல செல்ல மஞ்சள் நிறத்திற்கு மாறி பின்பு இறுதியாக சிவப்பு நிறத்திற்கு மாறி உதிர்ந்துவிடும். இந்தியன் பாதாம் மரத்தைச் சுற்றி காய்ந்த இலை சருகுகள் எப்பொழுதும் இருக்கும்.

இந்த மரம் 35 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியது, இந்த மரத்தின் கிளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக மிக சீராக அடுக்கிவைத்தது போல் குடை வடிவத்தில் அழகாக தோற்றமளிக்கும். விதை மூலம் பாதாம் செடி வளர்ப்பு செய்வது எப்படி, பாதாம் பருப்பு எடுப்பது எப்படி மற்றும் பாதாம் மரம் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தேர்ந்தெடுத்தல்

பாதாம்
நல்ல பாதாம் பழத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதன் சதைப்பகுதி முழுவதையும் நீக்கிவிடவேண்டும், பிறகு ஒரு இரவு முழுவதும் பாதாம் கொட்டையை நீரில் ஊறவைக்கவேண்டும், அடுத்த நாள் காலை நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முளைக்கும் திறனுடன் தயாராகிருக்கும்.

பாதாம் விதை நடவு செய்தல்

வாதுமை
வீட்டுத்தோட்டத்தில் செறிவூட்டப்பட்ட மண்கலவை நிறைந்துள்ள இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பின்பு ஊறவைத்து தயார் செய்து வைத்துள்ள விதைகளை அதில் பள்ளம் தோண்டி உள்ளே வைத்து மண் போட்டு மூடவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்ற வேண்டும், குறிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மரத்தின் வளர்ச்சி மற்றும் அறுவடை

பாதாம் மரம்
நடப்பட்ட நாள் முதலே நன்கு பராமரிக்க வேண்டும். மரத்திற்கு சத்து குறைபாடுகள் ஏதேனும் ஏற்படும் பச்சத்தில் இயற்கை உரங்களை அளிக்கலாம். 5 முதல் 6 வருடங்களில் பாதாம் பழங்களை அறுவடை செய்யலாம். இந்த பாதாம் பழம் சிறியதாக முட்டை வடிவத்தில் கூர்மையாக இருக்கும். பச்சை நிற காயாக இருந்து பின்னர் மஞ்சள் நிறத்தில் நார் நிறைந்த ஓட்டின் மீது நல்ல சதை மிக்க பழமாக உருமாறி பின்பு சிவப்பு நிறமாகி கீழே விழும்.

இந்தியன் பாதாம் மரம் பயன்கள்

இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு


வளம் பல தரும் இந்த இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்து அதன் நன்மைகள் அனைத்தும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த முதன்மையான பயிர் இந்த கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தான் முதன் முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகின்றது, ஆனால் தற்பொழுது உலகவில் பெரும்பாலான நாடுகளில் கோதுமை வளர்ப்பு செய்யப்படுகிறது.
கோதுமை
பெரும்பாலான விவசாயிகளால் அரிசி மற்றும் மக்காசோளத்துக்கு அடுத்ததாக அதிக அளவில் விளைவிக்கப்படும் தானியம் இந்த கோதுமை ஆகும். கோதுமை விதையில் இருந்து வளர்ப்பது எப்படி, கோதுமை புல் வளர்ப்பது எப்படி, கோதுமை சாகுபடி செய்யும் முறை மற்றும் கோதுமை நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வீட்டுத்தோட்டத்தில் பயிரிடும் முறை

கோதுமை புல்
மண்ணை பொறுத்தவரை, நல்ல வடிகால் வசதியுள்ள கொண்ட மண் உகந்தது, நன்கு பொலபொலவென்று மண் இருக்கவேண்டியது அவசியம் ஆகும். ஒவ்வொரு கோதுமை மணி விதைப்பதற்கு குறைந்தது 24 cm இடைவெளி இருக்கவேண்டும். 3 cm ஆழம் மண்ணை கீறி கோதுமை மணிகளை உள்ளே போட்டு மூடி நீர் பாய்ச்ச வேண்டும்.

பராமரிப்பு

கோதுமை
கோதுமை விதைகளை விதைத்தபிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும். அவ்வப்போது தேவையற்ற களைகளை நீக்கிவிட வேண்டும். கோதுமை பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் போது தழைசத்துக்களை இட்டு தண்ணீர் பாய்ச்சினால் கோதுமை வளர்ப்பு சிறக்கும்.

பயிர் பாதுகாப்பு

கோதுமை வளர்ப்பு செய்யும் பொழுது அவ்வளவாக பூச்சிகள் பயிர்களை தாக்குவதில்லை, இருப்பினும் பூக்கும் தருணத்தில் அசுவினி பூச்சி தாக்குதல் தென்பட்டால் வேப்பெண்ணை கரைசலை தெளிக்கலாம், அப்படி தெளிக்கும் பொழுது ஒரு சில வாரத்தில் அஸ்வினி பூச்சி தாக்குதல் முழுமையாக நீங்கிவிடும்.

கோதுமை அறுவடை

கோதுமைகள்
கோதுமை விதைத்த எழுபது நாட்கள் முதல் தொண்ணுறு நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். கோதுமை நன்கு காய்ந்த நிலைக்கு வந்த பிறகு அதன் தாள்களை சாகுபடி செய்து அதை காயவைத்து கோதுமை மணிகளை தனித்தனியே பிரித்து எடுக்கவேண்டும். கோதுமை பிரித்தெடுக்கும் முறையை கைகளிலும் செய்யலாம், இயந்திரங்களிலும் செய்யலாம்.

கோதுமை நன்மைகள்

மணிகள்

  • கோதுமை மாவு நம் உடலில் உள்ள இரத்தத்தினை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது, மேலும் இதிலுள்ள அதிக அளவு நார்ச் சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
  • வயிற்றில் புளிப்புத்தன்மை பிரச்சனை கொண்டவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வரும் தொந்தரவு கொண்டவர்கள், கோதுமையை ரவை போல அரைத்து அதில் கஞ்சி செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோதுமையில் உள்ள செலினியம் என்ற மூலப் பொருள் அதிகமாக நிறைந்துள்ளது, இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது, இது நம் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து இளமையான தோற்றத்தை வழங்குகிறது.
  • கோதுமையில் உள்ள அரிதான சத்துக்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துகிறது, இது அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • கோதுமை தவிடு அதிகப்படியான நார்சத்துக்களை கொண்டதாகும். இது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்க பயன்படுகிறது, வயிற்று பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் பண்பு இந்த கோதுமை தவிட்டில் உள்ளது.

  • இன்றியமையாத உணவுப் பயிர் கோதுமை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கோதுமை வளர்த்து அதன் அனைத்து பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

சுமார் 4000 ஆண்டுக்கு முன்னதாக இந்த காராமணி ஆப்பிரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிமு 200 முதல் கிமு 300 ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவிலும் இது அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது, தற்போது தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் அதிகளவு காராமணி செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
காராமணி கொடி
இந்த காராமணி தட்டைப்பயறு என்றும் அழைக்கப்படுகிறது. இது வறண்ட நிலங்களில் கூட செழித்து வளரும் தன்மை கொண்டது, எனவே இது ஏழை மக்களின் பசியைப் போக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது, மேலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்றும் அழைக்கப்படுகிறது.

காராமணி செடி வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் காராமணி செடி வளர்க்கும் முறை, விதையிலிருந்து காராமணி செடி வளர்ப்பது எப்படி, காராமணி வகைகள் மற்றும் காராமணி பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

காராமணியின் அமைப்பு மற்றும் வளரும்தன்மை

காராமணி
காராமணி செடியானது சுமார் மூன்று அடி வரை உயரம் வளரக்கூடியது. இந்த காராமணி செடி வறண்ட சூழலிலும் மற்றும் களர் மண்ணிலும் செழித்து வளர்கின்ற இயல்பினை கொண்டது. இத்தாவரத்தின் வேர்முடிச்சுதனில் வாழ்கின்ற பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை நன்கு வளமாக்குகிறது.

காராமணி செடியின் பூக்கள் மணி வடிவத்திலும், வெள்ளை, இளம் மஞ்சள், இளம் சிவப்பு, ஊதா மற்றும் கருஊதா போன்ற நிறங்களில் காணப்படுகிறது, இந்த பூக்களிலிருந்து உருளைவடிவக் காய்கள் நீண்டு தோன்றுகின்றன. ஒவ்வொரு காயும் 6 முதல் 15 வரை விதைகளை தன்னுள் கொண்டிருக்கும்.

காராமணி விதையானது சிறிது வளைந்து சிறுநீரக வடிவத்தில் 6-12 மிமீ நீளம் கொண்டதாகவும், கருப்பு, பச்சை, பழுப்பு, நிறங்களிலும் காணப்படுகிறது. இந்த விதைகள் 5 ஆண்டுகள் வரையிலும் முளைக்கும் திறனை கொண்டிருக்கும். காராமணியின் காய்கள் மற்றும் விதைகள் என முழுதாவரமும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

காராமணி விதைகள் நடவு செய்தல்

காராமணி செடி
விதையை நடவு செய்வதற்கு முன்பு நேர்த்தியான மண்கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும், நல்ல வடிகால் வசதியுள்ள மண் 40 சதவிகிதம், செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்தொட்டி அல்லது நெகிழிப்பையில் போட்டு நிரப்பிக்கொள்ளவும்.

20kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நெகிழிப்பையின் அளவைப்பொறுத்து காராமணி செடி விதைகளை நடவு செய்யவேண்டும். சிறிதாக தோண்டி அதில் காராமணி விதைகளை போட்டு மூடி அதன் மீது பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும்.

காராமணி செடி வளர்ச்சி மற்றும் அறுவடை

விதை நடவு செய்ததிலிருந்து பராமரிப்பு அவசியம். குறிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 7 நாட்களிலே விதையானது முளைத்து வருவதை கண்கூடாக பார்க்கலாம், சுமார் 40 நாட்களில் செடியானது பூக்கள் விட ஆரம்பிக்கும், 60 நாட்களுக்கு பிறகு காய்கள் கணிசமான அளவில் வளர்ந்திருக்கும் அப்போது அறுவடை செய்துகொள்ளலாம்.

பூச்சி தாக்குதல்

காராமணி செடி வளர்ப்பு தனை பெரிதும் பாதிப்பது அஸ்வினி பூச்சி தாக்குதலாகும், இந்த பூச்சிகள் செடியின் வளர்ச்சியை தடுப்பதோடு, காய்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதற்கு வேப்பெண்ணை கரைசல் நல்ல தீர்வாக அமையும். தொடர்ந்து ஒரு வாரம் வேப்பெண்ணெய் கரைசலை தெளித்து வருவதன் மூலம் அஸ்வினி பூச்சி தாக்குதல் கட்டுக்குள் வரும். இவ்வாறு செய்யும் பொழுது காராமணி வளர்ப்பு சிறக்கும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

காராமணி பயன்கள்

காராமணி செடி வளர்ப்பு

  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொடி காராமணியை உண்ணும் பொழுது பெரும் நன்மைகளை அளிக்கிறது, இது இன்சுலின் சுரப்பதை சீராக்குகிறது, மேலும் இது உடல் சோர்வுதனை நீக்கி நல்ல உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
  • காராமணியில் இருக்கும் புரதம், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை மேனி மேம்பாட்டிற்கு உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதை தடைசெய்கிறது.
  • இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டாலே அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படும் பாதிப்பு. காராமணியில் காணப்படும் இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து அனீமியை நீக்குகிறது.
  • காராமணியானது அதிகப்படியான நார்ச்சத்தினை தன்னுள் கொண்டுள்ளது. எனவே இது செரிமானத் தன்மையை சீராக்குவதுடன் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை சரிசெய்கிறது.
  • காராமணியில் காணப்படுகின்ற வைட்டமின் பி1(தயாமின்) இதயநலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த வைட்டமின் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளை தடைசெய்கிறது.


குறைந்த பராமரிப்பில் அதிகப்பலன்களை தரவல்ல இந்த காராமணி செடி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் நாட்டு காராமணி செடி வளர்ப்பு செய்து அதன் முழு பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

கோவைக்காய் கொடிவகையை சார்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இதை தொண்டைக்கொடி எனவும் அழைக்கின்றனர். தோட்டங்கள், வேலிகள், காடுகள் என அனைத்து இடங்களிலும் இந்த கோவை கொடி படர்ந்து காணப்படுகிறது. பல விவசாயிகளும் கோவை கொடி வளர்ப்பு செய்து நல்ல லாபம் பெறுகின்றனர். இந்த கோவை கொடி பழங்களின் சுவை இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய மூன்றும் கலந்த கலவையாக இருக்கும்.
கோவை கொடி வளர்ப்பு
‘கொவ்வை’ எனும் மற்றோரு பெயரும் இந்த கோவைக்கு இருக்கிறது. இலக்கியங்களில் அதிகளவில் கொவ்வை எனும் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ‘கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்…’ என்கிற வரிகளே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கொவ்வை என்பதே மருவி, கோவை எனும் பெயர் பெற்றது. கோவை என்றால் ‘தொகுப்பு’ என்று அர்த்தம்.

கோவை பழத்தின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு அதை பலவகையாகப் பிரிக்கின்றனர். மேலும் இதன் இலை, காய், தண்டு என அனைத்தும் மருத்துவப் பயன்கள் உடையவை. கோவை கொடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி, வீட்டுத் தோட்டத்தில் கோவைக்காய் கொடி வளர்ப்பது எப்படி மற்றும் கோவைக்காய் சாகுபடி மற்றும் கோவை கொடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வளர்ச்சிக்கேற்ற மண்கலவை

நல்ல வடிகால் வசதியை உடைய செம்மண், மணல்சாரி போன்ற மண்வகைகள் கோவை கொடி வளர்ப்பு செய்ய ஏற்றவை. செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் அல்லது செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு மண்கலவை தயார் செய்தால் கோவை கொடி வளர்ப்பு சிறக்கும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல்

சித்திரை மாதத்தைத் தவிர்த்து மீதி அனைத்து மாதங்களிலும் கோவை கொடி விதை விதைப்பு செய்யலாம். இருப்பினும், ஆடிப்பட்டத்தில் விதை விதைத்தால் கோவை செடிகளின் வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும். ஒரு முறை கோவை கொடி வளர்ப்பு செய்தோமேயானால் 2 ஆண்டுகள் வரை பலன்களை கொடுக்க வல்லது. சேகரித்து வைத்துள்ள விதைகளை, தயார் நிலையில் உள்ள மண்கலவையில் விதைப்பு செய்து, அதன் மீது பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கோவை கொடி வளர்ச்சி

கோவை கொடி வளர்ப்பு
விதை விதைத்த 10 நாட்களுக்கு பிறகு கோவை கொடி முளைப்பு விட்டு வளர தொங்கிருப்பதை காணமுடியும். கொடி பற்றி ஏற ஏதுவாக பந்தல் அமைப்பது அவசியமாகும். 50 நாட்களுக்கு பிறகு வெள்ளை நிற பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். சுமார் 60 நாளில் காய்கள் காய்க்க தொடங்கிவிடும்.

கோவைக்காய் சாகுபடி

கோவை கொடி வளர்ப்பு
காய் காய்க்க தொடங்கிய பிறகு ஒரு வாரத்திலேயே கோவைக்காயை நாம் அறுவடை செய்யலாம். ஒரு நல்ல வளர்ந்த கொடியில் வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம், இதே போல தொடர்ந்து 5 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். 5 மாதங்களுக்கு பிறகு முதிர்ந்த இலைகளை நீக்கி கவாத்து செய்து பராமரித்தால், 1 மாதத்தில் அடுத்த அறுவடையை தொடங்கலாம்.

கோவைப்பழம் வகைகள்

மூவிரல் கோவை, கருங்கோவை, படப்பை, ஐவிரல் கோவை மற்றும் நமக்கோவை உள்ளிட்ட பல வகைகள் கோவைக்காயில் உள்ளது.

கோவை கொடியின் பயன்கள்

கோவைக்காய்

  • இரத்ததில் இருக்கின்ற சர்க்கரையின் அளவுதனை கோவைக்காய் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவிபுரிகிறது, நீரிழிவு நோயால் அவதிப்படுகிறவர்கள் இந்த கோவைப்பழத்தை தினசரி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கோடை காலம் வந்த உடனே முதலில் ஏற்படும் பாதிப்பு வியர்க்குரு. கோவை கொடியின் இலையை எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தோமேயானால் வியர்குரு வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றில் இருக்கும் கிருமிகளை நீக்கும் ஆற்றல் இந்த கோவை பழத்திற்கு உண்டு. கோவை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்குள்ளே இருக்கும் தீங்கை விளைவிக்கும் கிருமிகளை நீக்குகிறது.
  • கோவை இலைச்சாறுடன் கருஞ்சீரக பொடி சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து படை மீது பூசி, ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும், இவ்வாறாக தொடர்ந்து செய்து வர படை பிரச்சனை தீரும்.
  • வாய் புண்ணால் சிரமம் படுபவர்கள், கோவைக்காயை பச்சையாக வாயில் போட்டு மென்று துப்பிவிட்டாலே போதுமானது. இப்படி செய்யும் பொழுது வாய்ப்புண் விரைவில் குணமாகும்.


கோவை கொடி வளர்ப்பு செய்வது எப்படி என்று விரிவாக பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கோவை கொடி வளர்த்து, அதன் கொடி போல உங்கள் ஆரோக்கியமும் மெம்மேலும் உயர வாழ்த்துகிறோம்.

கறிவேப்பிலை இன்றி நமது நாட்டில் சமையலே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு சமையலில் முக்கியத்துவம் பெற்றது இந்த கறிவேப்பில்லை. நாம் அன்றாடம் சந்தையில் வாங்குகின்ற கறிவேப்பில்லையானது அறுவடை காலம் வரையிலும் கூட மருந்து தெளிக்கப்பட்டு பின்பு தான் நம் கைகளுக்கு கிடைக்கிறது. இச்செயலுக்கு நிறைய காரணங்கள் கூறுகின்றனர், இருப்பினும் ரசாயனம் ரசாயனம் தானே. இந்த செயற்கை உரத்தின் பாதிப்பிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காப்பாற்றும் நோக்கில் வீட்டிலேயே கறிவேப்பிலை செடி வளர்ப்பு செய்யலாம்.
கறிவேப்பிலை செடி வளர்ப்பு
விதைகளிலிருந்து கறிவேப்பிலை செடி வளர்ப்பு செய்வது எப்படி, கறிவேப்பிலைச் செடி நடும் முறை, கறிவேப்பிலைச் செடி நன்றாக வளர என்ன செய்யவேண்டும், கறிவேப்பிலைச் செடி பராமரிப்பு மற்றும் கறிவேப்பில்லை நன்மைகள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

வளர்க்க தேவையான மண்கலவை

கறிவேப்பில்லை பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது இருப்பினும் நன்கு நீர் வடியக்கூடிய மண்ணாக இருந்தால் எந்த இடையூறும் இல்லாமல் செழித்து வளரும், அத்தகைய குணம் கொண்ட செம்மண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும், அதனுடன் செறிவூட்டப்பட்ட உரம் அதாவது மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார் செய்யவும்.

5kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கறிவேப்பிலை விதை

கறிவேப்பிலை பழம்
கறிவேப்பிலை பூக்களிலிருந்து பழங்கள் தோன்றுகின்றன, பறவைகளால் இந்த கறிவேப்பிலை பழம் உண்ணப்பட்டு விதைகளை வெளியேற்றுவதன் மூலமாகத்தான் மற்ற இடங்களில் கறிவேப்பில்லை விருத்தி ஆகின்றது. கறிவேப்பில்லை பழத்தை பிழிந்து அதனுள் இருக்கும் விதைகளை எடுக்கவேண்டும், பிறகு இந்த விதைகளை கொண்டு கறிவேப்பில்லை செடி வளர்ப்பு செய்யலாம்.

விதை நடவு செய்தல்

கறிவேப்பிலை செடி வளர்ப்பு
தயார் நிலையில் உள்ள மண்கலவையை நெகிழி பை அல்லது தொட்டியில் போட்டு நிரப்பி, சிறிது பள்ளம் பறித்து அதனுள் கறிவேப்பில்லை விதைகளை போட்டு மூடி விடவேண்டும், விதைத்த பிறகு பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும், மிக முக்கியமாக நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும், தேவைக்கேற்ப நீர் விட்டால் மட்டும் போதுமானது.

கருவேப்பிலை செடி வளர்ச்சி மற்றும் சாகுபடி

கறிவேப்பில்லை நன்மைகள்
கருவேப்பில்லை விதைத்ததிலிருந்து 10 நாட்களில் முளைத்து வரத்தொடங்கி விடும், 40 நாட்களில் ஓரளவுக்கு நல்லதொரு வளர்ச்சியை அடைத்திருக்கும், வீட்டுத்தேவைக்கு அவ்வப்போது பறித்து பயன்படுத்திக்கொள்ளலாம், அதிக விளைச்சலை எதிர்நோக்கும் பட்சத்தில் 2 மாதங்கள் பொறுத்து பின்பு மொத்தமாக அறுவடை செய்து கொள்ளலாம்.

பூச்சித்தாக்குதல் மற்றும் பூச்சிவிரட்டி

கறிவேப்பில்லை மிக வலுவான மணத்தை கொண்டது, இந்த மணம் பல பூச்சிகளை தானாகவே விரட்டி விடும், இருப்பினும் இதையும் மீறி சில பூச்சிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நேரங்களில் கருவேப்பில்லை இலைகள் சுருண்டு கொள்ளும் அல்லது பிசு பிசுவென மாறிவிடும், இதற்கு காரணம் மாவுபூச்சி, அசுவினி பூச்சி மற்றும் செதில் பூச்சி ஆகும்.

1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி வேப்பெண்ணெயை சேர்த்து கலந்து தினசரி தெளித்து வந்தால் அது பூச்சி விரட்டியாக செயல்பட்டு, தாக்குதலை கட்டுப்படுத்த உதவும், இதே போல பஞ்சகாவியவை தெளித்து வந்தால் பூச்சிகளை விரட்டுவதோடு, கறிவேப்பிலை செடி வளர்ப்பு செழிக்க உதவுகிறது.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கறிவேப்பில்லை நன்மைகள்

கருவேப்பிலை செடி வளர்ப்பு

  • கறிவேப்பில்லை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்கவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது, மேலும் இருதய நோய் இருப்பவர்களுக்கு கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும்.
  • நம் தலைமுடியின் கருமைநிறம் மாறுவதையும், முடியின் பொலிவு குறைதலையும் கறிவேப்பிலை தடுக்கிறது. எனவே தினசரி கறிவேப்பில்லை உட்கொண்டால் முடி நல்ல ஆரோக்கியத்தோடு கருமை நிறத்தோடு செழிப்பாக இருக்கும்.
  • இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தினமும் காலையில் 1 பேரிச்சம் பழத்துடன், சிறிதளவு கறிவேப்பிலையை உண்டு வந்தால், உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பாதிப்பு நீங்கும்.
  • சளித்தேக்கத்தில் இருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடிதனை தேன் சேர்த்து கலந்து தினசரி இரண்டு வேளை உண்டு வந்தால், நம் உடலில் தேங்கியுள்ள சளியானது முறிந்து வெளியேறிவிடும்.
  • கறிவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்பட உதவுகிறது.


மனித உடலின் உற்ற நண்பன் இந்த கறிவேப்பிலை ஆகும், இந்த அருமருந்தை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யவேண்டாம் என நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்குவது நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். கருவேப்பிலை செடி வளர்ப்பு செய்து அதன் இல்லை போல உங்கள் ஆரோக்கியம் பசுமையாக வாழ்த்துகிறோம்.

தற்போது கிடைக்கின்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் என்கிற ஆளி விதை. இது லினன் என்கிற நூலிழையைத்தருகின்ற தாவரத்தின் விதை ஆகும். மனித இனத்தால் உண்ணப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த உணவு வகைகளில் ஆளிவிதை ஒன்றாகும். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் ஆளி விதை வளர்ப்பு செய்ததிற்கான குறிப்புகள் இருக்கிறது.
ஆளி விதை வளர்ப்பு
ஆளி விதைகள் சூரியகாந்தி விதைகள் போல பழுப்பு நிறத்தில் இருக்கின்ற விதைகள் ஆகும். கடினமாகவும், மேற்பகுதி சற்று மொறுமொறு என்றும் தோற்றமளிக்கும், மேலும் ஆளி விதைகள் கரையக்கூடிய நார்சத்துகளின் மிகச்சிறந்த மூலமாகும். ஆளி விதை வளர்ப்பு செய்வது எப்படி , ஆளி விதையை எப்படி பயன்படுத்த வேண்டும், ஆளி விதையில் உள்ள சத்துகள் மற்றும் ஆளி விதையின் அபார நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை மற்றும் விதைத்தல்

ஆளி விதைகள்
ஆளி விதைகள் பொதுவாக அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது ஆகும். இருப்பினும் அதன் வளர்ச்சியை மேம்படுத்த செம்மண் மற்றும் அதனுடன் மக்கிய தொழுஉரம் இரண்டும் சரிபாதி கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும். பிறகு ஆளி விதைகளை அந்த மண்கலவையில் பரவலாக தூவிவிட்டு லேசாக மண் போட்டு மூடி அதன் மீது நீர் தெளிக்கவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆளி விதை வளர்ச்சி மற்றும் அறுவடை

ஆளி விதை வளர்ப்பு
ஆளி விதைகளை விதைத்த 5 நாட்களில் சிறு சிறு தளிர்களாக காணப்படும், இந்த நிலையில் கூட அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். 40 நாட்களில் செடி நன்றாக வளர்ந்திருக்கும், 60 நாளில் பூ தோன்ற தொடங்கிவிடும், 65 நாளில் இருந்து காய் காய்க்க ஆரம்பிக்கும். 100 நாட்களில் அறுவடை செய்யலாம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆளி விதை பயன்கள்

விதைகள்

  • ஆளி விதை பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் தொந்தரவுகளை சமாளிக்க பெண்களுக்குக் கைக்கொடுக்கிறது, மேலும் தினமும் ஆளி விதைகளை பயன்படுத்திவந்தால் கேசப்பிரச்சனைகள் நீக்கி நீண்டு வளரச்செய்யும்.
  • ஆளி விதைகளுக்கு இன்னொரு சிறப்பு பண்பும் இருக்கிறது, அது பிசுபிசுப்பாக மாறிவிடும் குணம். திரவப் பொருளுடன் இந்த ஆளி விதை சேர்த்தால், அது ஜெல்லியைப் போல உருமாறிவிடும். இது குடலுக்கு மிகவும் நல்லது, குடலை சுத்தப்படுத்தி மலம்கழித்தலை இலகுவாகும், மேலும் நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க செய்கிறது, இதன் மூலமாக உணவுதனில் உள்ள ஊட்டச்சத்துகளை முழுமையாக கிரகிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகிறது என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரை நோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆளி விதையை தினமும் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
  • எரிச்சலை தவிர்த்து விடுதல் மற்றும் இதயத் துடிப்புதனை சீராக்குதல் போன்றவற்றை செய்கின்ற திறன் கொண்டதாக ஒமேகா-3 இருப்பதை ஆய்வுகள் கூறுகின்றன. ஒமேகா-3 அதிகம் நிரம்பியுள்ள ஆளி விதைகள் இதய தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்த்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பெரிதும் அச்சுறுத்தும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆளி விதைகள் குறைக்கிறது மற்றும் ஆளிவிதைகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


ஆளி விதைகள் வளர்ப்பது எப்படி மற்றும் ஆளி விதை செய்யும் அற்புதங்கள் ஆகியவற்றை பார்த்தோம். நீங்களும் அந்த மேற்கண்ட முறையில் ஆளி விதை வளர்ப்பு செய்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.

மாம்பழம் நம் அனைவருடைய வாழ்க்கையோடு கலந்த ஒரு இனிமையான பழம் ஆகும். பெரும்பாலான விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிராக இந்த மா மரம் உள்ளது, எனவேதான் அதிகளவு மா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. முக்கனிகளில் முதன்மைக்கனி இந்த மாம்பழம்.
மா மரம் வளர்ப்பு
மாமரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி , மாமரம் கற்றாழை மூலம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மா மரம் வளர்ப்பு செய்வது எப்படி, மாம்பழம் பறிக்கும் முறை, மாம்பழம் பழுக்க வைக்கும் முறை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மா மர வளர்ச்சிக்கு ஏற்ற மண்

மா மரம் வளர்ப்பு
மா மரங்கள் பல்வேறு வகையான மண்ணையும் ஏற்று வளரும் தன்மை கொண்டது, ஆனால் லேசான மற்றும் வடிகால் வசதி உடைய மணல், களிமண் மரத்திற்கு சிறந்தது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

மாங்கன்று வளர்ப்பு

மா மரம் வளர்ப்பு
மாம்பழத்தை வாங்கி உண்டபிறகு, அதன் கொட்டையை மண்ணில் புதைத்து வைத்தால் போதும். மற்றோரு முறையும் உள்ளது, மாங்கொட்டையை கீறி அதன் உள்ளே இருக்கும் பருப்பை தனியே எடுத்து அதை மண்ணில் புதைத்தோ அல்லது டிஷ்யு பேப்பர் கொண்டு சுற்றி நீரில் நனைத்து வைக்கலாம். பொதுவாக இந்த முறையில் மா விதையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.

விதைகளில் இருந்து மா மரம் வளர்த்தல் காய் பிடிக்க 6 – 8 வருடங்கள் ஆகும், ஆனால் ஓட்டுக்கட்டிய செடிகள் மூலம் வளர்த்தால் 2 – 3 வருடங்களில் காய்பிடிக்க தொடங்கிவிடும், இருப்பினும் விதைகளில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடிக்கும், இது மரத்தின் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு அவசியமாகும். மாடி தோட்டத்தில் மாமரம் வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டை ரக மாங்கன்றுகளை வாங்கி பெரிய அளவு தொட்டிகளில் மாடியில் வளர்க்கலாம்.

மாமரம் ஒட்டுக்கட்டுதல்

ஒட்டுக்கட்டுவதற்கு நேர்த்தியான குச்சிகளை தேர்ந்தெடுத்து வெட்டி கொள்ளவும், ஒன்றோடு ஒன்று வைத்து ஒட்டு கட்டுவதற்கு முன் கற்றாழை சாற்றை வைத்து ஒட்டுக்கட்டினால் சீக்கிரமாக துளிர்த்து வரும், விண்பதியம் முறையில் கற்றாழை சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

நீர்மேலாண்மை

மா மரங்கள் கோடை வறட்சியைத் தாங்கும் திறன் உடையவை, இருந்தாலும் வறட்சியானது மாம்பழ உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடுவது அவசியம், அதே சமயம் மரத்தின் அடியில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிகமாக நீர் தேங்கினால் மா மரம் வளர்ப்பு சிறக்காது.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

மாம்பழம் அறுவடை

மாம்பழம் அறுவடை
மாங்காய் மரம் தனில் பூக்கள் பூத்த பிறகு காய் காய்க்க 3 முதல் 5 மாதங்கள் ஆகிறது. மாம்பழத்தின் ரகத்தை பொறுத்து அதன் நிறம் மாறுபடும். பெரும்பாலும் மாம்பழம் கைகளினால் அறுவடை செய்யப்படுகிறது, மாம்பழத்தின் தோல் சேதப்படாமல் கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.

மாம்பழம் பறித்தல் மற்றும் பழுக்க வைக்கும் முறை

நன்கு பதமான மாங்காய்களை அடி ஏதும்படாமல் முடிந்தவரை கைகளால் பறித்துக்கொள்ளவும். பறித்த மாங்காய்களை வைக்கோலில் வைத்து மூடிவைத்தால் இரண்டு அல்லது மூன்று நாளில் இயற்கையான முறையில் மாங்காய் பழுத்துவிடும்.

கவாத்து செய்தல்

மா மரம் வளர்ப்பு
மாமரம் வளர்ப்பு தனில் பராமரிப்பு மிக அவசியமாகும். பழங்கள் காய்த்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்தல் வேண்டும். பலவீனமான மற்றும் வளர்ச்சி குன்றிய கிளைகளை நீக்கிவிட்டு, அனைத்து கிளைகளிலும் சூரிய ஒளி நன்கு படும்படி கவாத்து செய்யவேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்காகவே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண்கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

மாம்பழத்தின் நன்மைகள்

மா மரம் வளர்ப்பு

  • மாம்பழம் தனில் நார் சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்வதோடு, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
  • மாம்பழம், பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும் திறன் கொண்டது, மாம்பழத்தை சிறு துண்டாக நறுக்கி வாயின் உள்ளே போட்டு ஈறுகள் மீது படும்படி வைத்திருந்து 10 நிமிடங்களுக்கு பிறகு துப்பிவிட்டால் பற்கள் பூரண நலம் பெரும்.
  • சிறுநீர் பையில் உருவாகும் உப்பு கற்களைப் மெல்ல மெல்ல கரைக்கும் திறன் மாம்பழத்திற்கு இருக்கிறது, மேலும் இரவில் தூங்கப்போகும் முன்பு மாம்பழம் உண்டுவிட்டு உறங்கினால் அடுத்த தினம் மலச்சிக்கல் இருக்காது.
  • கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச்சத்து பெருமளவில் தேவைப்படுகிறது, அவர்களுக்கு இந்த மாம்பழம் வரப்பிரசாதம், இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பதில் மாம்பழ சாற்றை தினமும் குடித்தால் போதும் தேவையான அளவிற்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
  • மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த மிகவும் அவசியமான வைட்டமின் பி6 மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது. குழந்தைகள் இதை அடிக்கடி சாப்பிடும் பொழுது அவர்களின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.


நீங்களும் மேற்கண்ட முறையில் மா மரம் வளர்ப்பு செய்து, அதன் முழு பயன்களையும் பெற்று, மாம்பழத்தின் இனிமை போல உங்கள் வாழ்க்கை இனிக்க வாழ்த்துகிறோம்.

சரக்கொன்றை மரம் நம் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. சரக்கொன்றை பூவைப் சிவனின் பூஜைக்கு ஏற்றதாக கருதுகின்றனர், பழம்பெரும் இலக்கியங்கள் சிவபெருமானைக் கொன்றை மலரை முடியில் சூடியவராக வர்ணிக்கிறது. சிவபெருமான் சூடிய மலர் என்பதால் தான் இன்றளவும் சிவபெருமான் ஆலயங்களில் சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது.
சரக்கொன்றை மரம் வளர்ப்பு
தமிழர்களின் பாரம்பரியம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக, பொன்னிறமனா சரக்கொன்றை பூக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகிறார்கள். மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடைபெறும் பூஜையில் சரக்கொன்றை பூக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த பூவுக்கு சுவர்ண புஷ்பம் மற்றும் சித்திரைப் பூ எனும் சிறப்பு பெயர்களும் உண்டு.

வெப்ப மண்டலப்பகுதி மற்றும் குறைந்த வெப்ப மண்டலப்பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது இந்த சரக்கொன்றை. மேலும் கோடை வறட்சியையும் கூட தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் மற்றும் சரக்கொன்றை மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தயார் செய்தல்

விதை
சரக்கொன்றை மரத்திலிருந்து காய்ந்த காய்களை எடுத்துக்கொள்ளவும். காய்கள் உறுதியாக இருக்கும், அதை உடைத்து அதனுள்ள இருக்கும் விதைகளை சேகரித்துக்கொள்ளவும், விதைகளும் மிக உறுதியாக இருக்கும். நீரை கொதிக்கவைத்து, சேகரித்த விதைகளை அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிக்கவேண்டும். சூடான நீரில் விதைகளை போட்டால் விதைகள் வீணாகிவிடும் என்று பயப்படவேண்டாம், விதையின் தோலை இலகுவாக்கவே இந்த செயல் சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

அப்படி ஊற வைக்கும் பொழுது அடுத்த நாள் ஒரு சில விதைகள் சற்று பெரிதாகி இருக்கும். அந்த விதைகளே நடவுக்கு ஏற்ற விதைகள் ஆகும். ஊறவைத்தும் பெரிதாகாமல் இருக்கும் விதைகளை தவிர்த்து விடவும், அது முளைத்து வர வாய்ப்புகள் குறைவு.

மண்கலவை மற்றும் நடவுசெய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். நேர்த்தியான, தேர்ந்தெடுத்த விதைகளை மண்கலவையில் 2 இன்ச் ஆழம் தோண்டி அதில் போட்டு மூடிவிடவும். பிறகு தினமும் பூவாளிக்கொண்டு நீர் தெளித்து வரவும், 15 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள்

சரக்கொன்றை மரம்

  • சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறப்பாக அமையும் பட்சத்தில் 40 அடி வரை உயரம் வளரக்கூடியது.
  • மிக அகன்ற கிளைகளை கொண்ட இலையுதிர் மரமாகும் இந்த சரக்கொன்றை மரம்.
  • சரக்கொன்றை மரம் இளமையில் பச்சை நிறத்தை உடையதாகவும், முதிர்ந்தப் பின்பு சாம்பல் நிறமாகவும் மாறுதல் அடைகிறது.
  • இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தைக்கொண்டிருக்கும். முதிர்ந்த சரக்கொன்றை காய்களானது 30-60 செ.மீ நீளமும் 40-100 விதைகளை உடையதாக இருக்கும்.
  • அதிக வெப்ப நிலையை தாங்கி நன்கு வளரக்கூடியது.

சரக்கொன்றை பயன்கள்

 சரக்கொன்றை மரம் வளர்ப்பு

  • சரக்கொன்றை மலரின் மகிமைகள் பல உண்டு, சரக்கொன்றை மரம்தனில் முருங்கைக்காய் போல இரண்டு அடி நீளத்துக்குக் காய்கள் காய்க்கும். அதனுள்ளே பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே இருக்கும், இதை சரக்கொன்றை புளி என்று கூறுவார்கள். இந்த சரக்கொன்றை புளியை சாதாரணப் புளியுடன் சேர்த்து உண்டு வர பித்தக்கோளாறுகள் நீங்கும்.
  • சரகொன்றைப்பூவை கொதிக்கும் நீரில் வேக வைத்து, பின்பு அதனுடைய சாறைப்பிழிந்து எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து கால் லிட்டர் அளவு குடித்து வர வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.
  • சரகொன்றைப்பூவை நன்கு மையாக அரைத்து பத்து கிராம் எடுத்துப் பசுவெண்ணெயோடு குழைத்து உண்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வெட்டை நோய்கள் போன்ற மேக நோய்கள் சரியாகும்.
  • சரக்கொன்றை புளியை நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு திரிபலா சூரணம் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வந்தால் வயிறு சுத்தமாகும்.
  • காதுவலியால் அவதிப்படுகிறவர்கள், சரக்கொன்றை மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 சொட்டுகள் காதின் உள்ளே விட்டுவர காது வலி குணமாகும்.


வாழ்வை வளப்படுத்தும் தெய்வ விருட்சங்களில் ஒன்று இந்த சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்வது எப்படி என்பதை பார்த்தோம், நீங்களும் அதே முறையில் வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்வும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

ரம்புட்டான் பழம் சுவை மிகுந்த மற்றும் சத்தான பழம் ஆகும். இது மருத்துவ ரீதியாகவும் பெருமளவில் பயன்படுகிறது. குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகளவில் ரம்புட்டன் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழத்தின் சுவை அதிகளவில் இனிப்பும், சிறிதளவு புளிப்பும் ஆகிய இரண்டு சுவைகளின் கலவையாக இருக்கும். இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக இருக்கும், இதனுள்ளே சதைப்பகுதி வெண்மை நிறத்திலும், அதனுள்ளே விதையும் இருக்கும்.
ரம்புட்டான் செடி வளர்ப்பு
ரம்புட்டான் பழத்தின் விதைகளில் இருந்து தயார்செய்யப்படும் நாற்றுகள் நல்ல வலிமை கொண்டதாக இருக்கும், மேலும் இந்த ரம்புட்டான் மரங்கள் பலனை கொடுக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை தேவைப்படும். மருத்துவ பலன்கள் பல கொண்ட இந்த ரம்புட்டான் செடி வளர்ப்பு இப்போது பொதுவான சமவெளிபரப்பிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

வீட்டில் விதையிலிருந்து ரம்புட்டான் செடி வளர்ப்பது எப்படி, ரம்புட்டான் பழம் அறுவடை மற்றும் ரம்பூட்டான் பழ ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை சேகரித்தல்

விதை-சேகரித்தல்
நல்ல ரம்பூட்டான் பழத்தை வாங்கிக்கொள்ளவும், அதன் சதை பகுதிகளை முழுவதும் நீக்கிவிட்டு விதையை தயார் செய்யவேண்டும், சதைப்பகுதி ஏதேனும் விதையில் சிறிது இருந்தால் கூட விதை முளைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக சதைப்பகுதி முழுவதும் நீக்கி நீரில் அலசி எடுத்துக்கொள்ளவும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை தயார் செய்தல்
மண்கலவைக்காக சிலர் கோகோபீட் கலவையை பயன்படுத்துகிறார்கள். அதுவும் பயன்படுத்தலாம், இல்லையெனில் செம்மண் மற்றும் மக்கிய தொழுஉரம் ஆகிய இரண்டும் சரிபாதி கலந்து பயன்படுத்தி கொள்ளலாம். தொழுஉரம் கிடைக்கவில்லை எனில் மண்புழு உரம் கூட பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை காணலாம்.

நடவு மற்றும் வளர்ச்சி

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

தயார் செய்த மண்கலவையில் நல்ல நேர்த்தியான விதைகளாக பார்த்து நடவு செய்யவேண்டும். ஒரு நெகிழிப்பையில் மண்கலவையை போட்டு நிரப்பி, சிறிது பள்ளம் தோண்டி விதையை அதில் போட்டு மூடி பூவாளி கொண்டு நீர் தெளிக்கவேண்டும். நீர் தேங்கி நிற்கக்கூடாது, சூரிய ஒளி அவசியமாகும். நடவு செய்த 20 நாட்களில் விதை முளைத்து வரத்தொடங்கிவிடும்.

கவாத்து செய்தல்

கவாத்து செய்தல்
ரம்புட்டான் செடி வளர்ப்பு தனில் கவாத்து மிக முக்கியமானதாகும். வீரியம் குறைந்த மற்றும் நலிந்த கிளைகளை வெட்டிவிடவேண்டும். குடைவடிவில் ரம்புட்டான் மரத்தை கவாத்து செய்தல் அதிக விளைச்சலை பெறலாம், சூரிய ஒளி உள்ளே படும்படி கவாத்து செய்தல் வேண்டும்.

ரம்புட்டான் பழம் அறுவடை

ரம்புட்டான் செடி வளர்ப்பு
ஒரு ரம்புட்டான் மரம் நடப்பட்ட 5 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்துவிடும். ரம்புட்டான் பழம் முழுமையாக பழுக்க 90 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். ரம்புட்டான் பழம் பிஞ்சாக இருக்கின்ற பொழுது பச்சை நிறமாக இருக்கும், பழுத்த பிறகு மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறிவிடும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு ரம்பூட்டான் மரமானது ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 கிலோ வரையிலான கனிகளை தரவல்லது.

ரம்புட்டான் பழ ஆரோக்கிய நன்மைகள்

ரம்புட்டான்

  • ரம்புட்டான் பழம் கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேரவிடாமல் தடுக்கிறது, இந்த செயலினால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.
  • ரம்புட்டான் பழத்தை தினமும் இரண்டு சாப்பிடுவதின் மூலமாக தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்திசெய்யும், வைட்டமின் சி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • ரம்புட்டான் பழத்தின் மேலே உள்ள முள் போன்ற தோல் பகுதியானது சீதபேதி பிரச்சனையை சரிசெய்யும். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நாக்கு வறண்டு போதலை தடுக்கிறது.
  • ரம்புட்டான் பழம் தனில் புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து இரண்டும் உள்ளது, இந்த இரண்டும் தேவைக்கேற்ப உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
  • பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் இந்த ரம்புட்டான் பழத்தை சாப்பிடும் போது, சிறுநீரகத்தில் உள்ள அவசியமற்ற கழிவுகள் வெளியேற உதவுகிறது.


அதிக மருத்துவ குணம் கொண்ட ரம்புட்டான் பழங்களை வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் ரம்புட்டான் செடி வளர்ப்பு செய்து அதன் பலன்கள் அனைத்தும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It