Category

காய்கறிகள்

Category

முருங்கை வளர்ப்பு செய்ய வழிவகைகள் மிக எளிதாகிவிட்டது. பல விவசாயிகளும் இயற்கை முறை முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். முருங்கை மரத்தின் இலை, பூ, காய்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் மிகுந்தது. இதில் தாது உப்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்துக்கள், புரோட்டீன், பொட்டாசியம், போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கிறது.
முருங்கை-வளர்ப்பு
முருங்கையில் நாட்டு முருங்கை மற்றும் செடிமுருங்கை என இரு வகைகள் இருக்கிறது. முருங்கையில் சுவையும், மருத்துவக் குணமும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள்காலம் இரு ஆண்டுகள் வரை. நாட்டு முருங்கையின் ஆயுள்காலம் ஐம்பது ஆண்டுகள் வரை. செடிமுருங்கை மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்து வளர்க்கலாம், நாட்டுமுருங்கை விதை மூலமாகவும், போத்துக்கள் மூலம் பதியம் போட்டும் வளர்க்கலாம். முருங்கைக்கு ஜூன் மாதம் முருங்கை பட்டம் மாதம் ஆகும்.

மாடித் தோட்டத்திலேயே செடி முருங்கை வளர்ப்பது எப்படி , ஆரம்பத்திலிருந்து அறுவடை வரை என்ன செய்ய வேண்டும், மண் கலவை தயாரித்தல், உரங்கள் வைக்கும் முறை, பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு, அதிகம் அறுவடை எடுக்க என்ன செய்யவேண்டும், முருங்கை வளர்ப்பு சிறந்தது ஏன் ? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மாடித்தோட்டத்தில் செடி முருங்கை வளர்ப்பு

செடி-முருங்கை
மாடித்தோட்டத்தில் செடி முருங்கையை வளர்ப்பு செய்ய ஐம்பது லிட்டர் கேன் வசதியாக இருக்கும். வளர்ப்பு பைகளில் வளர்க்க வளர்ப்பு பை 2 X 2 இருக்குமாறு தேர்வு செய்வது நல்லது. மண் கலவை பொறுத்தவரையில் மணல் கலந்த, செம்மண்ணில் நன்றாக வளரும். உங்களிடம் செம்மண் இல்லையென்றாலும், தோட்டத்தின் மண் பயன்படுத்தலாம். இரண்டு பங்கு மண், ஒரு பங்கு மண்புழு உரம், ஒரு மடங்கு வேப்பம் புண்ணாக்கு, எடுத்துக்கொண்டு, இவை எல்லாம் நன்றாக கலந்து ஒன்பது நாட்கள் ஈரத்தன்மையோடு வைத்திருக்கவும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் அனைத்தும் வளர்ந்து செடி வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். ஒன்பது நாட்களுக்குப்பிறகு விதை விதைக்கலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


செடிமுருங்கையை விதைத்தபின் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு நாட்களில் முளைத்து வர தொடங்கும். செடிமுருங்கையை விதைத்து 30 நாட்களில் ஒரு அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கும். அப்போது உயிர் உரங்கள், மண்புழு உரத்தை மண் கலவைதனில் சேர்க்கவும். செடி முருங்கை விதைத்து 40 – இல் இருந்து 50 நாட்களில் மூன்று அடி வரை வளர்ந்துவிடும். அச்சமயத்தில் நுனியை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் நிறைய வளர்ந்து, கீரை அதிகமாக கிடைக்கும். இவ்வேளையில் செடி முருங்கையின் வேருக்கு அருகில் பெருங்காயத்தை புதைக்கவும். இதனால், பெருங்காயச்சாறு செடியின் வேர்த்தண்டு முழுதும் பரவுவதால், கம்பளி பூச்சி தாக்குதலில் இருந்து செடி முருங்கையை எளிதாக பாதுகாக்கலாம். விதைத்த 180 நாட்களில் செடி முருங்கையானது காய்க்கத்தொடங்கும். ஆறு மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும்.

காவாத்து செய்தல்

காவாத்து-செய்தல்
நடவு முதல் கவாத்து வரை பராமரிப்பு அவசியம். முருங்கை வளர்ப்பு முறை தனில் முருங்கை காய்த்து முடித்தபிறகு கவாத்து செய்தல் முக்கியமாகும். அப்போது தான் பக்கக் கிளைகள் மிகுந்து, எல்லா கிளைதனிலும் காய்க்க தொடங்கும். கவாத்து செய்தபிறகு கண்டிப்பாக இயற்கை உரங்கள் இடுவது அவசியம். இதனால் மீண்டும் நிறைய காய் காய்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

பூச்சி தாக்குதல் மற்றும் பராமரிப்பு

பராமரிப்பு
செடி முருங்கையில் முதலில் தோன்றுவது இலைப்பேன், இவற்றை நீரை பீச்சி அடித்தால் கீழே உதிர்ந்து விடும். அடுத்ததாக, பிணைப்பு புழு உங்களது மரத்தில் இலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இலைகள் வெண்மை தன்மையாக இருக்கும், அந்த இலைகளின் நடுவில் புழுக்கள் காணப்படும், இதுவே இலை பிணைப்பு புழு ஆகும். இதற்கு வேப்ப எண்ணெய் (அ) பூண்டு மிளகாய் கரைசல் தெளித்தாலே போதுமானது. அடுத்ததாக மொட்டுதனை சேதம் செய்யும் மொட்டுப் புழு தாக்குதல் வரும், இது மொட்டுக்கள் தோன்றும்பொழுதே அதிகம் துளைத்து அதிலுள்ள சத்துக்களை எடுத்து உயிர்வாழும். இதனால் காய்களே தோன்றாமலே போய்விடும். இவற்றிற்கு பெருங்காயத்தை நீரில் கலந்து தெளிக்கலாம். இம்முறைகளை பின்பற்றினால் செடி முருங்கை சாகுபடி நன்றாக இருக்கும்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

முருங்கை பயன்கள்

முருங்கை-பயன்கள்

  • முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
  • முருங்கை கீரையுடைய பொடியானது மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகின்றது. மேலும் மன நலம், நியாபக சக்தி ஆகியவற்றைப் மேம்படுத்துகிறது.
  • முருங்கைக்காய் வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.
  • முருங்கைக்காய் உடலுக்கு சிறந்த வலுவைக் கொடுக்க வல்லது.
  • வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக உண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தமடையும்.


முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போக மாட்டான் என்றொரு பழமொழி உண்டு எனும் நம் முன்னோர்களின் வாக்கிற்கு ஏற்ப முருங்கையை நட்டு அதன் பயன்களை முழுமையாக பெற்றவர்கள் வயதான பின்பும் கோலூன்றி நடக்கத் தேவை இருக்காது, ஏனென்றால் அவ்வளவு அளப்பரிய சத்துக்கள் முருங்கையில் இருக்கிறது. முருங்கை மரம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொண்டோம் . நீங்களும் முருங்கையை வளர்த்து அதன் பயன்கள் முழுமையாக பெற வாழ்த்துகிறோம்.

தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாகி விட்டது. தென்னை வளர்ப்பு முறை, வீட்டில் தென்னைமரம் வளர்ப்பு, மாடித்தோட்டத்தில் தென்னை வளர்ப்பு, தென்னங்கன்று உற்பத்தி செய்வது எப்படி, தென்னை மரத்தின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

coconut-fruit

தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்

kannu
தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். குழி 3x3x3 அடிக்கு இருக்க வேண்டும். இரண்டு மரங்களுக்கு இடையே 20 முதல் 21 அடி இடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழி தோண்டிய பின் 2 முதல் 6 இன்ச் அளவிற்கு மணல் இட வேண்டும். பிறகு 5 இன்ச் அளவிற்கு இலைச்சருகுகளை நிரப்பி ஒரு அடி உயரத்திற்கு பசுந்தழை உரம் இட வேண்டும். குழி நிறையும்வரை நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.

பின்னர் ஒரு மாதத்திற்கு தண்ணீர் விட்டு வந்தால் குழியின் அளவில் 1 ½ அடி முதல் 2 அடி வரை தொழு உரங்கள் மக்கி நடவுக்கான குழி தயாராகிவிடும்.

குழியை தயார் செய்த பின் குழியின் நடுவில் 3 இன்ச் அளவிற்கு மணல் இட்டு குழியின் நடுவில் நாற்றை வைத்து சுற்றிலும் மணலும்,தொழுஉரமும் கலந்த கலவையை தென்னை நெற்றில் உள்ள தேங்காய் மறையும் அளவிற்கு இட வேண்டும். தென்னையில் வேர் பூச்சிகள் தாக்காமல் இருக்க ஒவ்வொரு குழிக்கும் ½ கிலோ வீதம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

தென்னை மரம் பராமரிப்பு

தென்னைமரம்

  • தென்னங்கன்றுகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை களைச்செடிகளை நீக்கி மற்றும் கடலை பிண்ணாக்கு பயன்படுத்தி ஊட்டமளிக்கவேண்டும்.
  • முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரம் ஒரு முறையும், பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும்.
  • மரம் பூத்து காய்க்கத் தொடங்கும் சமயத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்பதால் நாம் வீட்டில் உபயோக படுத்தும் தண்ணீரையும் பயன்படுத்தலாம்.
  • சோப்பு தண்ணீரை இயற்கை முறையில் வடிகட்டி மரங்களுக்கு செல்லுமாறு செய்யலாம்.
  • ஒரு ஏக்கரில் எத்தனை தென்னை மரம் நடலாம் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை,ஆனால் ஒரு வரிசை தென்னை வளர்ப்பு முறையாக இருந்தால் இருபது அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 தென்னை வரை நடலாம்.
  • சதுர முறையில் தென்னை நடுவதாக இருந்தால் 25 அடி இடைவெளியில் ஒரு எக்டருக்கு 175 கன்றுகள் வரை நடலாம்.
  • வாய்க்கால் வரப்பில் ஒரே வரிசையில் மரம் நடுவதற்கு 15 முதல் 18 அடி இடைவெளியே போதுமானது.
  • பொதுவாக 22 அடி இடைவெளியில் நட்டால், முக்கோண முறையில் எக்டருக்கு 236 மரங்களும், சதுர முறையில் 204 மரங்களும் நடலாம்.
  • 25 அடி இடைவெளியில் நட்டால் முக்கோண முறையில் 205 மரங்களும், சதுர முறையில் 176 மரங்களும் நடலாம்.
  • தென்னையை குருத்து வண்டு, எலி போன்றவை தாக்கும் அபாயம் உண்டு, எனவே சரியான சமயத்தில் தகுந்த மருந்துகளை தெளித்து விட வேண்டும்.
  • 1kg neem cake

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் வீட்டிலும் கூட எளிதாக செய்யலாம்.
  • வீட்டில் இடவசதிக்கு ஏற்றபடி தென்னை மரங்களை நடலாம்.
  • தென்னை சாகுபடி

    உற்பத்தி

    தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் ஒற்றை வரிசை தென்னை வளர்ப்பில் வருடம் சுமார் 300 தேங்காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.

    ஒரு ஏக்கர் ஒற்றை பாத்தி தென்னை 20 முதல் 30 மரங்களில் வருடம் சுமார் 20,௦௦0 ரூபாய் முதல் 30,௦௦௦ ரூபாய் வரை உபரியாக வருமானம் கிடைக்கும்.

    தென்னை மரம் வளர்ப்பைப் பொறுத்தவரை ஊடுபயிர் செய்யலாம். நஞ்சை, புஞ்சை என்று எந்த நிலமாக இருந்தாலும் வாழை, இஞ்சி, மஞ்சள், கொள்ளு, நெல், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு வரிசை தென்னைமரம் வளர்ப்பு அதிகப்படியாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சேலம், நெல்லை, தருமபுரி, கம்பம், தேனி, தஞ்சை போன்ற ஊர்களில் ஒற்றை தென்னை வளர்ப்பு முறை பரவலாக நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டின் சீதோஷ்ணநிலை மற்றும் மண்வளமும் தென்னை வளர்ப்புக்கு ஏற்றதாக இருப்பதால் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

    தென்னை மரத்தின் பயன்கள்

    தேங்காய்

  • இளநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • தென்னை மட்டையிலிருந்து பெறப்படும் நாரிலிருந்து கயிறு தயாரிக்க உதவுகிறது.
  • தேங்காய் மட்டையை தாவரங்களுக்கு உரமாக போடலாம்.
  • தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், தலைமுடி வளர்வதற்கும் உதவுகிறது.
  • தேங்காய் சமையலுக்கும், பூஜைக்காகவும் பயன்படுகிறது.
  • தென்னை ஓலைகள் வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள் போன்றவற்றுக்கு பயன்படுகிறது.
  • தென்னை ஓலை குடிசை வீடுகள் வேய்தலுக்கு பயன்படுகிறது.
  • மேலும் தேங்காயின் தொட்டாங்குச்சி, தென்னை பாலைகள் போன்றவையும் அழகு பொருட்கள் தயாரிக்கவும், பாலைகள் பூஜை போன்றவற்றுக்கும் பயன்படுகிறது.
  • தென்னை மரங்களை நம் நாட்டில் குழந்தைகளை வளர்ப்பதற்கு நிகராக கருதுகின்றனர். அதனால்தான் தென்னங்கன்றை தென்னம்பிள்ளை என்று கூறுகின்றனர். எனவே தென்னை மரம் வளர்க்கும் பொழுது மிகவும் கவனமாக சரியான சமயத்தில் பராமரிப்பு முறைகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    அனைத்து இடங்களிலும் தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் பெரும்பாலும் ஒரே முறையில் தான் செய்யப்படுகிறது. மேலும் தென்னை மரங்கள் நடவு செய்யும் போது இடையில் ஊடு பயிர்கள் விளைவிப்பதால் அதிலும் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நீங்களும் தென்னையை வளர்த்து செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.

    கத்தரிக்காய் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறை, மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்ப்பது எப்படி, கத்தரிக்காய் விதை விதைப்பது எப்படி, வீட்டில் கத்தரி செடி வளர்ப்பது எப்படி, பயன்கள் ஆகியவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
    காய்-சாகுபடி

    மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்ப்பது எப்படி?

    பூ
    மாடித்தோட்டம் கத்தரிக்காய் செடி வளர்ப்பு செய்வதற்கு தொட்டிகளுக்கென்று தனி அளவு, குறிப்பிட்ட வடிவம் என்று எதுவும் தேவையில்லை. எனவே பிளாஸ்டிக், மண் தொட்டி அல்லது உலோகம் என எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    கத்தரி செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் மண் நிரப்பும்போது, பையின் உடைய நீளத்தில் 1 அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்பிடவேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

    7-10 தினங்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் எல்லாம் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

    விதை விதைத்தல்

    கத்தரி-செடி
    கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு முதலில் நன்கு முற்றிய கத்தரியில் இருந்து விதைகளை தனித்தனியே பிரித்து சாம்பல்,மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். கத்திரி விதைகளை சாம்பல் கலந்து சேமித்து வைப்பது மூலம் விதைகளை உண்ணும் வண்டுகளிடமிருந்து விதைகளை பாதுகாக்கலாம்.

    இவ்வாறு காய்ந்த கத்தரி விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும். கத்தரிக்காய் சாகுபடியில் விதை விதைத்த பிறகு அல்லது நாற்று நட்ட பிறகு பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    உரமிடுதல்

    கத்தரிக்காய்-வளர்ப்பு
    மாடித்தோட்டம் கத்தரிக்காய் வளர்ப்பு முறையில் செடிகளை பாதுகாக்கும் இயற்கை பூச்சி விரட்டியான வேப்பெண்ணெய் கரைசல் மாதம் ஒரு முறை தெளிக்கவும். வேப்ப இலைகளை நன்கு காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    neem oil icon

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now


    இந்தப்பொடியை செடி ஒன்றுக்கு ஒரு பிடி என செடியின் வேர் பகுதியில் போட்டு கொத்திவிட வேண்டும். இதுவே செடியின் அடி உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

    கத்தரிக்காய் பராமரிப்பு

    கத்தரி செடிக்கு பராமரிப்பு அவசியம், கத்தரி செடி தொடர்ந்து 6 மாதம் வரை காய்க்கக்கூடிய செடியாகும், அறுவடை முடிந்த பின் தேவையற்ற இலைகள் மற்றும் கிளைகளை அகற்றி விட வேண்டும்.

    அதன் பிறகு மீண்டும் தேமோர் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு கொடுப்பதன் மூலம் செடிகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். கடலைப் பிண்ணாக்குடன் கண்டிப்பாக வேப்பம் பிண்ணாக்கும் கலந்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எறும்புகள் மற்றும் பூச்சிகள் வந்து செடிகள் வீணாகி விடும்.

    கடலைப் பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு கரைசலுடன் தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து கொடுப்பதன் மூலம் கத்தரிக்காய் செடி அதிக விளைச்சலைக் கொடுக்கும்.

    20kg  Vermi Compost icon

    இப்போதே வாங்குங்கள்!! 20 கிலோ மண்புழு உரம் மூட்டை

    இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    கத்தரிக்காய் அறுவடை மற்றும் மகசூல்

    கத்தரிக்காய்-அறுவடை
    கத்தரி வளர்ப்பு முறைதனில் அதிக பராமரிப்பு தேவை. சரியான பராமரிப்பு இருந்தால் அதிக அறுவடை செய்து நல்ல மகசூல் பெறலாம். கத்தரிக்காய் நடவு செய்ய குறிப்பிட்ட பட்டம் என்றும் ஏதுமில்லை ஆனாலும் ஆடி பட்டதில் விதைக்கும் பொது அதிக மகசூல் எடுக்கலாம்.

    கத்தரிக்காய் காய்ப்பு குறைந்தது ஆறு மாதத்திற்க்கு குறையாமல்
    இருக்கும். ஒரு ஏக்கரில் ஒரு நாளைக்கு 100 கிலோவில் இருந்து 150 கிலோ வரை அறுவடை செய்யலாம். விழாக்காலங்களில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ 80 வரை விற்பனை ஆகும். கத்தரிக்காய் ரகத்திற்கு ஏற்ப அறுவடை நாட்கள் மாறுபடும்.

    கத்தரிக்காய் செடி நோய்கள்

    கத்தரிக்காய் சாகுபடியில் நோய்த் தாக்குதல் சற்று அதிகமாகவே காணப்படும், முறையான பராமரிப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

    ஹட்டா வண்டு, அசுவினி, தண்டு மற்றும் காய் துளைப்பான், சிகப்பு சிலந்தி, வெள்ளை ஈக்கள், சாம்பல் மூக்கு வண்டு, சிற்றிலை நோய், வேர்முடிச்சு நூற்புழு போன்ற பூச்சிகள் ஏற்படுத்தும் நோய்கள் அதிகம். வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு போன்றவற்றை சரியான அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

    கத்தரிக்காய் வளர்ப்பு மற்றும் பயன்கள்

    கத்தரி
    1.அடர்நீலம் மற்றும் பழுப்பு நிறக் கத்தரிக்காயின் தோளில் உள்ள தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

    2.முதல் கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.

    3.வாதநோய், ஆஸ்துமா, சளி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

    4.உடல் பருமனைக் குறைக்கிறது.

    5.இதில் வைட்டமின் பி உள்ளதால் இதய நோய் வருவதைத் தடுக்கிறது.

    6.மூச்சுவிடுவதில் சிரமம், தோல் மரத்துவிடுதல் போன்றப் பிரச்சனைகள் சரியாகிறது.

    7.இதில் வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மன அமைதியைத் தருகிறது.

    கத்தரிக்காய் செடியில் காய் பிடிக்க டிப்ஸ்

    1.ஆடிப் பட்டத்தில் கத்தரி விதைப்பது நல்லது.

    2.கோடைக் காலத்தில் விதைப்பதைத் தவிர்த்து மழைக் காலத்தில் விதைப்பது நல்லது.

    3.விதை நேர்த்தி செய்த பின் விதைப்பது அதிக காய்கள் காய்க்க உதவுகிறது.

    4.சோற்றுக் கற்றாழை நீரை கத்தரிக்காய் செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றுவதால் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி அதிக காய் பிடிக்க உதவுகிறது.

    இந்த கட்டுரையில் கத்தரிக்காய் பயிரிடும் முறை மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடிசெய்து, ரசாயன கலப்பற்ற முறையில் விளைவித்து கத்தரிக்காய் அதன் முழு பயன்களையும் பெற்று குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

    முட்டைக்கோஸ் வளர்ப்பு எளிது மட்டுமல்ல அதன் பயன்களும் அதிகம் ஆகும். முட்டைக்கோஸ் விளைச்சல், முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி, அறுவடை போன்றவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். முட்டைக்கோஸ் இலைகளால் ஆன ஒரு காயாகும். சீனா மற்றும் போலந்து நாடுகளில் பயன்படுத்தபட்ட முட்டைகோஸ் 1794 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு அறிமுகமானது.

    விதைகளிலிருந்து முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி

    உலகளவில் முட்டைக்கோஸ் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    நாற்றுகள் மூலம் முட்டைக்கோஸ் வளர்ப்பு

    முட்டைக்கோஸ் நாற்று

    முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு நாற்றுகள் போடுவதற்கு 100 ச.அடி நிலம் போதுமானது. 15 செ.மீ உயரம், 1 மீ அகலம், மற்றும் தேவையான அளவு நீளம் விட்டு விதைப்படுக்கையை தயார் செய்ய வேண்டும்.

    2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 1 ச.அடிக்கு அளிக்க வேண்டும். விதைப்படுக்கையில் 10 செ.மீ இடைவெளிவிட்டு விதைகளை விதைக்க வேண்டும்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now

    விதைப்பு முறை

    முட்டைக்கோஸ் வளர்ப்பு செய்வதற்கான நிலத்தை நன்றாக உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ இடைவெளிவிட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

    மலைப்பகுதியாக இருந்தால் 40×40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதியாக இருந்தால் 45×30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவேண்டும்.

    நீர் மேலாண்மையை பொறுத்தவரை தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருந்தால் போதுமானது.

    Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    உரம்

    மலைப்பகுதியில் முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு அடியுரமாக 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்ச்சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்ச்சத்து ஆகிய உரங்களை அளிக்க வேண்டும்.

    சமவெளிப்பயிர்களுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 கிலோ சாம்பல்சத்துக்களை இட வேண்டும். மேலுரமாக பயிர் செய்த 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

    பஞ்சகவ்யாவை பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத்தெளிப்பாக தெளிக்க வேண்டும். பயிர் செய்த ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 10 % வெர்மிவாஷ் தெளிக்க வேண்டும்.

    அசுவினிகள்

    ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 1௦% வேப்ப இலைச் சாற்றை 45,60,75 வது நாளில் தெளிக்க வேண்டும். வயலில் ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறியை பொருத்த வேண்டும்.

    வெட்டுப்புழுக்கள்

    கோடைக்காலத்தில் விளக்குப்பொறியை வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத்தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

    இலைப்புள்ளி நோய்

    பயிர் செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 5% மஞ்சூரியன் தேயிலைச்சாற்றை ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்.

    பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 3 % பஞ்சகவ்யாவை 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

    வேர்முடிச்சு நோய்

    நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும், மற்றும் மண்ணின் கார அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் வேர்முடிச்சு நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

    சரியான பராமரிப்பின் மூலம் இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும்.

    விளைச்சல் மற்றும் அறுவடை

    முட்டைக்கோஸ் செடி

    மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70 முதல் 80 டன்கள் வரை கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25 முதல் 35 டன்கள் வரை கிடைக்கும்.

    பயிர் செய்த 75 வது நாளில் காய்கள் அறுவடைக்கு தயார் ஆகி விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

    120 நாட்களில் சுமார் 8 முறை முட்டைகோஸுகளை அறுவடை செய்யலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று ஆனால் முற்றாமல் இருக்கும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

    பயன்கள்

  • இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது.
  • கண் நரம்புகளை சீராக இயங்கச்செய்யக்கூடியது.
  • அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யக்கூடியது.
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கக்கூடியது.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளும்,பற்களும் உறுதியாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நரம்புகளுக்கு வலிமை கொடுத்து நரம்புத்தளர்ச்சியை சரி செய்யக்கூடியது.
  • சருமத்திற்கு பொலிவைக்கொடுத்து சரும வறட்சியை போக்க க்கூடியது.
  • சிறுநீரைப் பிரித்து வெளியேற்றும் தன்மை உடையது.
  • முட்டைக்கோஸ் உண்ணும் முறை

    முட்டைக்கோஸ் பச்சையாக சாப்பிடலாமா என்று சிலருக்கு சந்தேகம் வருவதுண்டு. முட்டைகோஸை பச்சையாக ஜூஸ் போன்றும் குடிக்கலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். இதில் நிறைய சத்துக்கள் இருப்பதால் எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையே, ஆனால் நன்றாக சுத்தம் செய்தபின் உண்பது அவசியம் .

    தமிழில் முட்டைக்கோஸ் வளர்ப்பு வழிகாட்டி


    முட்டைக்கோஸ் வளர்ப்பு மற்றும் பயன்கள் பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டியாக நிறைய வலைத்தளங்கள் மற்றும் முகநூல் போன்றவைகள் உள்ளது. மேலும் முட்டைக்கோஸ் செடி வளர்ப்பது எப்படி, எளிய முறையில் வீட்டில் முட்டைகோஸ் பயிர் வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் வலைத்தளங்களில் அறிய முடியும்.

    Pin It