Tag

வீட்டில் வளர்க்க கூடாத மரம்

Browsing

முள்சீத்தா மரம் வளர்ப்பு சுலபமான முறையில் செய்யலாம், ஏனென்றால் இது நன்கு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழ பயிர் ஆகும். முள் சீதாவின் பிறப்பிடம் அமேசான் காடுகள் ஆகும், தற்பொழுது வெகுவாக பல வெப்பமண்டல நாடுகளில் பரவலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. நம் இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் இயற்கையாகவே விளைகின்றது.
முள்சீத்தா-மரம்-வளர்ப்பு-1
வீட்டில் வளர்க்க கூடாத மரம் என்று முள் சீத்தா மரத்தை கூறுவதுண்டு, இயற்கையின் படைப்பில் வளர்க்க கூடாத மரமென்று ஏதுமில்லை. தாராளமாக இதை வீட்டில் வளர்க்கலாம். முள் சீதா மரம் வளர்ப்பது எப்படி, விதை வழி மரம் வளர்ப்பு, காய்க்காத மரம் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும், முள் சீத்தா பயன்கள், முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வளர்ச்சிக்கு ஏற்ற மண்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்ய நீர் தேங்காத எந்தவகை மண்ணையும் தேர்ந்தெடுக்கலாம். விதை மூலமாகவும் பயிர் செய்யலாம், மேலும் மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் முள் சீதாவை பயிர் செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

முள்சீத்தா மரம் வளர்ப்பு மற்றும் மகசூல்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மே மாதம் பூக்கள் பூத்து ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பழங்களை கொடுக்கும். ஒரு செடிக்கு ஏறக்குறைய நூறு பழங்கள் வரை கிடைக்கும், பழங்கள் அனைத்தையும் கனிவதற்கு முன்பாக பறித்து விற்பனை செய்துவிட வேண்டும்.

முள் சீத்தா பெரும்பாலும் இருபது அடி வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது. பசுமை மாறாத குணம் கொண்ட இம்மரம் மினுமினுப்பான இலையுடனும், பழங்களின் வெளிபுறப்பகுதியில் வளைந்த மிருதுவான முற்களோடு காணப்படும்.

முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை

மகசூல்
சீதா பழம் மரம் வளர்ப்பு முறை தனில் அடுத்து அதன் சாகுபடி முறைகளை காணப்போகிறோம். இதன் பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் இரண்டும் கலந்திருக்கும். முள் சீதா பழமானது இதய வடிவத்திலோ அல்லது நீள் முட்டை வடிவத்திலோ காணப்படும். முள் சீதா பழங்கள் தோற்றத்தில் பெரிதாக காணப்படும். ஒவ்வொரு முள் சீதா பழமும் 3 கிலோ முதல் 5 கிலோ வரையும் கூட எடை இருக்கும். முழுமையாக வளர்ந்த பழத்தின் நீளம் சுமார் 1 அடியும், அகலம் அரை அடியும் இருக்கும்.

முதலில் அடர்பச்சை நிறத்தில் காய்கள் இருக்கும், பின்பு பழுத்ததும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறிவிடும். சதைப்பகுதியானது நாட்டு சீத்தா பழத்தை போல வெண்மை நிறமாகவும், அதே சுவையும் கொண்டதாக இருக்கும், ஆனால் முள் சீத்தா நறுமணம், எலுமிச்சை, அண்ணாச்சி, முலாம்பழம், ஸ்டிராபெரி பழங்களின் நறுமணத்தை கலந்த ஒரு வித்தியாசமான வாசனையை பெற்றிருக்கும்.

பராமரிப்பு

சீதா-பழம்
முள் சீத்தாவிற்கு அதிகளவு தண்ணீர் தேவை இருக்காது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினாலே போதும். வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் தனி தனியே கலப்பு எரு வேர்ப்பகுதியில் இட்டால் போதுமானது. முள் சீத்தாவில் பூச்சி தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதற்கென்று பாதுகாப்பு முறையென்று ஏதுமில்லை. வேர் அழுகல் நோய் தோன்றினால் மட்டும் சிறிது வேப்பம்புண்ணாக்கை வேர் பகுதியில் வைத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும். இவ்வாறு செய்தால் முள்சீத்தா மரம் வளர்ப்பு சிறக்கும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

முள் சீத்தா அறுவடை

முள்சீத்தா மரம் வளர்ப்பு
தீவு பகுதிகளில் ஒரு வருடத்திற்கு மூன்று பருவங்களில் முள் சீத்தா பூ பூப்பதால், 3 முறை அறுவடை செய்யலாம். பிற பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தா மரமானது பூக்கிறது. ஜுன்-ஜுலை மாதங்களில் இதன் பழங்களை அறுவடை செய்யலாம்.

முள் சீத்தாப்பழம் நன்மைகள்

முள்சீத்தா பழம் சத்துக்கள் மற்றும் நன்மைகள்

  • முள் சீத்தாபழத்தில் நீர்சத்து மிகுந்துள்ளது , மேலும் மாவுசத்து, புரத சத்து, அத்தியாவசியமான தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து போன்ற பல சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ பன்னிரண்டு வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் காரணிகளை முள் சீத்தாப்பழம் பெற்றிருக்கிறது.
  • புற்றுநோய் பாதிப்பால் உருவாகும் கட்டிகளை கரைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
  • இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நம் செரிமான அமைப்பிற்கு நல்ல நன்மை தரக்கூடியது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
  • முள் சீத்தாப்பழம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தித்தனை அதிகரித்து உடலில் உள்ள நாற்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்குதலிருந்து பாதுகாக்கிறது.
  • இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், போன்ற பல்வேறுவகையான நோய்களை தீர்க்கவல்ல உன்னத மருந்தாகவும் முள்சீத்தாப்பழம் விளங்குகிறது.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை இந்த முள் சீதாப்பழ மரம். இதை நல்ல முறையில் வளர்த்து, அதன் பயன்களை பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

நாவல் பழம் மரம் அனைத்து மண்களிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத் தன்மை மிக்க மற்றும் நீர் தேங்கிய நிலையில் இருந்தாலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு சிறப்பாக இருக்கும், எனினும் அதிகமான உற்பத்தி மற்றும் நல்ல வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் களிமண் அல்லது செம்மண் சிறந்தது.
நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு
நாவல் பழம் மரம் மிகுந்த வறட்சியை கூட தாங்கி வளரக்கூடிய பழப்பயிர் ஆகும். நாவல் பழங்களில் இரும்புச்சத்தும், கனிமங்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது. நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி, நாவல் பழம் பயன்கள், நாவல் மரம் சாகுபடி, நாவல் பழம் வகைகள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நடவு செய்தல்

நடவு-செய்தல்
நாவல் பழம் மரம், விதை மற்றும் நாற்று முறையில் நடவு செய்யலாம். நல்ல விதைகளாக தேர்வு செய்து விதைக்கவும். விதைகள் முளைக்க சுமார் பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். நாற்றுகள் மூலம் நடவு செய்த நாவல் மரத்தில் எட்டு முதல் பத்து ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் மூலம் வளர்ந்த நாவல் மரங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலும் பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு-1
நாட்டு நாவல் மரம் நன்கு வளர்ந்த நிலையில், ஒரு மரத்திற்கு எழுபது கிலோ வரை தொழு உரத்தை அளிக்க வேண்டும், நாவல் மரம் வளரும் மண்ணில் அதிக ஊட்டசத்து காணப்பட்டால் அதன் இலைகள் அதிக அளவில் வளரும், எனவே தான் தொழு உரத்தை அளிக்கிறோம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


நாவல் செடிகள் வளர்ச்சி அடையும் காலம் வரை களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். நாவல் பழ மரத்திற்கு கவாத்து செய்யும் போது, உலர்ந்துபோன மற்றும் குறுக்கில் செல்லும் கிளைகளை நீக்கினால் போதுமானது, இவ்வாறு செய்வதால் நாவல் மரம் வளர்ப்பு சிறக்கும்.

மகசூல் மற்றும் சாகுபடி

நாவல்-பழம்
நாற்று மூலம் வளர்ந்த நாவல் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு எண்பது முதல் நூறு கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மூலம் வளர்ந்த மரத்திலிருந்து அறுபது முதல் எழுபது கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். நாவல் மரங்கள் தொடர்ந்து ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் ஒரு இலை உதிரா மரம் ஆகும். இதை பிப்ரவரி – மார்ச் மாதம் மற்றும் ஜுலை – ஆகஸ்ட் மாதம் ஆகிய இரண்டு பருவங்களிலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு செய்யலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நாவல் பழம் பயன்கள் மற்றும் மருத்துவகுணம்

நாவல் பழம் மரம் வளர்ப்பு

  • வெள்ளை நாவல் பழத்தின் சாறு மற்றும் மாம்பழத்தின் சாறை சம பங்கு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்துவந்தால் சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வரும், இதுவே வெள்ளை நாவல் மருத்துவ குணம் ஆகும்.
  • நன்கு பழுத்த நாவல் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரானது பசி தனை தூண்டும் குணம் உடையது.
  • நாவல் பழத்தை சாப்பிட்டால் குடற்புண் மற்றும் கல்லீரல் கோளாறுகள், போன்றவற்றை சரிசெய்ய வல்லது.
  • நாவல் பழத்தின் விதைதனில் மாவுச் சத்து மற்றும் புரதம் மிகுந்து உள்ளதால் கால்நடைகளுக்கு சத்துமிக்க தீவனமாகக் பயன்படுகிறது.
  • ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து அதிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மண்ணீரலில் ஏற்படும் நோய்களை தடுக்கவல்ல அரும் மருந்தாகும் இந்த நாவல் பழம்.
  • நாவல் மரத்தின் இலையை பொடி செய்து அதைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகள் வலுப்பெறும், நாவல் மர இலையின் சாம்பல் பூசிவர நாள்பட்ட தீக்காயங்கள் மற்றும் வெட்டு பட்ட காயங்கள் குணமாகும்.


நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும் என்று பார்த்தோம். நாவல் பழம் மிக சிறந்த மருத்துவ குணத்தை உடையது, பெருன்பான்மையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. நாவலின் இலை, பழம், பட்டை, விதை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அரும்மருந்தான நாவல் பழ மரத்தை வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

Pin It