Tag

மரம்

Browsing

சரக்கொன்றை மரம் நம் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. சரக்கொன்றை பூவைப் சிவனின் பூஜைக்கு ஏற்றதாக கருதுகின்றனர், பழம்பெரும் இலக்கியங்கள் சிவபெருமானைக் கொன்றை மலரை முடியில் சூடியவராக வர்ணிக்கிறது. சிவபெருமான் சூடிய மலர் என்பதால் தான் இன்றளவும் சிவபெருமான் ஆலயங்களில் சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது.
சரக்கொன்றை மரம் வளர்ப்பு
தமிழர்களின் பாரம்பரியம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக, பொன்னிறமனா சரக்கொன்றை பூக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகிறார்கள். மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடைபெறும் பூஜையில் சரக்கொன்றை பூக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த பூவுக்கு சுவர்ண புஷ்பம் மற்றும் சித்திரைப் பூ எனும் சிறப்பு பெயர்களும் உண்டு.

வெப்ப மண்டலப்பகுதி மற்றும் குறைந்த வெப்ப மண்டலப்பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது இந்த சரக்கொன்றை. மேலும் கோடை வறட்சியையும் கூட தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் மற்றும் சரக்கொன்றை மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தயார் செய்தல்

விதை
சரக்கொன்றை மரத்திலிருந்து காய்ந்த காய்களை எடுத்துக்கொள்ளவும். காய்கள் உறுதியாக இருக்கும், அதை உடைத்து அதனுள்ள இருக்கும் விதைகளை சேகரித்துக்கொள்ளவும், விதைகளும் மிக உறுதியாக இருக்கும். நீரை கொதிக்கவைத்து, சேகரித்த விதைகளை அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிக்கவேண்டும். சூடான நீரில் விதைகளை போட்டால் விதைகள் வீணாகிவிடும் என்று பயப்படவேண்டாம், விதையின் தோலை இலகுவாக்கவே இந்த செயல் சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

அப்படி ஊற வைக்கும் பொழுது அடுத்த நாள் ஒரு சில விதைகள் சற்று பெரிதாகி இருக்கும். அந்த விதைகளே நடவுக்கு ஏற்ற விதைகள் ஆகும். ஊறவைத்தும் பெரிதாகாமல் இருக்கும் விதைகளை தவிர்த்து விடவும், அது முளைத்து வர வாய்ப்புகள் குறைவு.

மண்கலவை மற்றும் நடவுசெய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். நேர்த்தியான, தேர்ந்தெடுத்த விதைகளை மண்கலவையில் 2 இன்ச் ஆழம் தோண்டி அதில் போட்டு மூடிவிடவும். பிறகு தினமும் பூவாளிக்கொண்டு நீர் தெளித்து வரவும், 15 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள்

சரக்கொன்றை மரம்

  • சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறப்பாக அமையும் பட்சத்தில் 40 அடி வரை உயரம் வளரக்கூடியது.
  • மிக அகன்ற கிளைகளை கொண்ட இலையுதிர் மரமாகும் இந்த சரக்கொன்றை மரம்.
  • சரக்கொன்றை மரம் இளமையில் பச்சை நிறத்தை உடையதாகவும், முதிர்ந்தப் பின்பு சாம்பல் நிறமாகவும் மாறுதல் அடைகிறது.
  • இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தைக்கொண்டிருக்கும். முதிர்ந்த சரக்கொன்றை காய்களானது 30-60 செ.மீ நீளமும் 40-100 விதைகளை உடையதாக இருக்கும்.
  • அதிக வெப்ப நிலையை தாங்கி நன்கு வளரக்கூடியது.

சரக்கொன்றை பயன்கள்

 சரக்கொன்றை மரம் வளர்ப்பு

  • சரக்கொன்றை மலரின் மகிமைகள் பல உண்டு, சரக்கொன்றை மரம்தனில் முருங்கைக்காய் போல இரண்டு அடி நீளத்துக்குக் காய்கள் காய்க்கும். அதனுள்ளே பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே இருக்கும், இதை சரக்கொன்றை புளி என்று கூறுவார்கள். இந்த சரக்கொன்றை புளியை சாதாரணப் புளியுடன் சேர்த்து உண்டு வர பித்தக்கோளாறுகள் நீங்கும்.
  • சரகொன்றைப்பூவை கொதிக்கும் நீரில் வேக வைத்து, பின்பு அதனுடைய சாறைப்பிழிந்து எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து கால் லிட்டர் அளவு குடித்து வர வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.
  • சரகொன்றைப்பூவை நன்கு மையாக அரைத்து பத்து கிராம் எடுத்துப் பசுவெண்ணெயோடு குழைத்து உண்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வெட்டை நோய்கள் போன்ற மேக நோய்கள் சரியாகும்.
  • சரக்கொன்றை புளியை நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு திரிபலா சூரணம் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வந்தால் வயிறு சுத்தமாகும்.
  • காதுவலியால் அவதிப்படுகிறவர்கள், சரக்கொன்றை மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 சொட்டுகள் காதின் உள்ளே விட்டுவர காது வலி குணமாகும்.


வாழ்வை வளப்படுத்தும் தெய்வ விருட்சங்களில் ஒன்று இந்த சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்வது எப்படி என்பதை பார்த்தோம், நீங்களும் அதே முறையில் வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்வும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த புங்கன் மரம் வளர்ப்பு பரவலாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புங்கை மரம் காணப்படுகின்றது. நாட்டு வகையை சேர்ந்த புங்கை மரம், வாய்க்கால், வரப்பு, சாலையோரங்களிலும், பொது நிலங்கள் என புங்கை மரம் வளர்ந்து இருப்பதை காண முடியும்.
புங்கன்-மரம்-வளர்ப்பு
காற்றில் இருக்கும் நைட்ரஜனை மண்ணிலே நிலை பெற செய்யும் வகையிலான வேர் முடிச்சுகளை உடைய ஒரு சில மரங்களில் இந்த புங்கை மரமும் ஒன்று. கோடை காலத்தில் சிறிதளவே மட்டுமே இலையுதிரும், பசுமை மாறா தன்மை கொண்டது இந்த புங்கைமரம்.

இந்த புங்கன் மரம் வளர்ப்பது எப்படி, புங்க மரம் பொதுப்பண்புகள், புங்கன் மரம் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

புங்கன் நாற்று தயார் செய்தல்

புங்கன்-மரம்-வளர்ப்பு
நேர்த்தியான புங்கன் விதைகளை தேர்வு செய்யவும், சேகரித்து வைத்துள்ள புங்கன் விதைகளை நெகிழி பை அல்லது சிறிய தொட்டியில் மண் மற்றும் நன்கு மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சரிபங்கு கலந்து அந்த பையில் நிரப்பி அதில் விதைக்கவும். பத்து முதல் பதினைந்து நாளில் புங்கன் விதைகள் முளைத்து வந்துவிடும்.

மண் வகை மற்றும் நடவு செய்தல்

புங்கன்-மரம்-வளர்ப்பு-2
பல விதமான மண் வகைகளில் வளரக்கூடியது இந்த புங்கன் மரம், கரடு முரடான மணல் முதல் களிமண், செம்மண் வரையிலும் வளரக்கூடியது. உவர் மண்ணை கூட தாங்கி வளரும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் உடைய நாற்றுகளை போதிய இடைவெளியில் நடவு செய்யவும். நடுவு செய்யும் பொழுது தொழு உரத்தை குழியில் இட்டு நடுவது புங்கன் மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மகசூல்

புங்கன்-நாற்று
காய்களுக்காகவே பெரும்பாலும் புங்கன் மரம் வளர்க்கப்படுகிறது. இதில் இருபது முதல் இருபத்தைந்து சதவிகிதம் வரை எண்ணெய் இருக்கும். நன்கு வளர்ந்த மரத்தில் பத்து கிலோ வரை புங்கன் காய்கள் கிடைக்கும்.

புங்கன் மரம் தன்னுடைய வளர்ச்சி முறையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழ்நிலைகளில் பசுமை மாறாது, நேர்மாறான சூழ்நிலைகளில் இலைகள் பெருபாலும் உதிர்ந்தாலும் புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக மரத்தில் தோன்றிவிடும். ஏப்ரல் மாதம் முதல் ஜீலை மாதம் வரையில் புங்கன் மரத்தில் பூக்கள் தோன்றும். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் காய்கள் காய்க்கும். நான்கு ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கிவிடும்.

நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் முறை

வேப்பங்கொட்டை-கரைசல்
புங்கன் மரத்தில் முடிச்சு நோய்கள் பெரும்பாலும் காணப்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுகிறது, இந்த செயலினால் ஒளிச்சேர்க்கை மந்தமாகிறது, புங்கன் மரம் வளர்ப்பு பாதிக்க படுகிறது. பூச்சிகளினால் இந்த நோய் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது. இந்த இலை முடிச்சு நோயை சரிசெய்ய வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து இலைகள் மீது தெளிக்கவும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

புங்கன் மரத்தின் பயன்கள்

புங்கன்-மரம்-வளர்ப்பு

  • புங்கமரமானது வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள், வேளாண்மை கருவிகள் ஆகியவற்றை செய்வதற்கு பயன்படுகிறது.
  • புங்கன் இலைகளில் புரதம் நிறைந்துள்ளது, எனவே இவை கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகின்றது.
  • புங்க மர விதையிலிருந்து பயோடீசல் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் விளைவிக்காத பசுமை எரிப்பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • புங்கை மரத்தின் முக்கியமான பயன், மழையை ஈர்க்கும் திறனை அதிகம் கொண்டது.
  • புங்கமர இலைக்கு அல்சர் என்றழைக்கபடும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை உண்டு. இந்த இலையை அரைத்து சிறிதளவு அதன் சாற்றை தினமும் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வயிற்று வலி குணமாகிவிடும்.
  • புங்கன் இலையை காயவைத்து தூளாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும் புங்கன் தைலம் தனை தடவினால் காயம் குணமாகும்.
  • இதன் வித்துகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வாத வியாதி, மூட்டு வலி ஆகியவற்றை சரி செய்யும் மருத்துவ முறைகளில் பயன்படுத்த படுகிறது.


மகத்துவமிக்க இந்த புங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா என்று பலரும் ஐயம் கொண்டுள்ளனர், தாராளமாக இந்த மரத்தை வீட்டின் முன்பு வளர்த்து அதிக அளவு தூய பிராணவாயுவை பெறலாம். இயற்கையின் பரிசான இந்த புங்கன் மரத்தை வளர்த்து புகழோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It