Tag

தம்பட்ட அவரை வளர்ப்பு

Browsing

அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் தம்பட்டை அவரை அல்லது கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது வெகுவாக மக்களிடையே குறைந்து வருகிறது. நம் முன்னோர்களை மிக திடகாத்திரமாக வைத்திருக்க உதவியதில் இந்த கொடி தம்பட்டை அவரை காய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதில் செடி தம்பட்டை மற்றும் கொடி தம்பட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இந்த செடிகளில் பெரிதாக பூச்சி தாக்குதல்கள் இருக்காது. இது வாள் அவரை என்றும் அழைக்கப்படுகிறது.
கொடி தம்பட்டை
தற்காலத்தில் வீட்டுத்தோட்ட மற்றும் மாடித்தோட்ட ஆர்வலர்களால் அழிவிலிருந்து மீண்டு வரும் அரிய காய்கறிவகைகளில் இந்த கொடி தம்பட்டையும் இருக்கிறது. கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடித்தோட்டத்தில் கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு, தம்பட்டை அவரை அறுவடை மற்றும் தம்பட்டை அவரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை தயார் செய்தல்

தம்பட்டை அவரை ஒரு அடி நீளம் வரை வளரக்கூடிய காயாகும், எனவே அதன் தொடக்க மண்கலவையை சரியாக தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல் மற்றும் வளர்ச்சி

தம்பட்டை அவரை விதை
விதைகள் விதைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் 7 முதல் 15 நாட்களில் தம்பட்டை அவரை முளைக்க தொடங்கும். தம்பட்டை அவரை விதை அளவில் பெரியதாக இருப்பதினால் முளைப்பதற்கு சிறிது நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. கொடிகள் நன்கு வளர்ந்து சுமார் 60 நாட்களில் பூக்கள் பூக்கத்தொடங்கும். இந்த வளர்ச்சி அந்தந்த மண்கலவையை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. இதன் பூக்கள் வெண்மை நிறம் கலந்த ஊதா நிறத்தில் இருக்கக்கூடும்.

தம்பட்டை அவரை அறுவடை

அவரை
பூக்கள் பூக்க தொடங்கிய சில நாட்களில் பிஞ்சுகள் பிடிக்கத்தொடங்கும். 75 நாளில் இளம்பிஞ்சுகள் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் அப்போதே அதை பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். பிறகு 85 நாட்கள் முதல் 90 நாட்களில் கொடி தம்பட்டை அவரை அதன் முழு வளர்ச்சியை அடைத்திருக்கும், இப்போது கொடி தம்பட்டையை அறுவடை செய்து கொள்ளலாம். தம்பட்டை அவரை காய்கள் ஒரு அடியில் வாள் போன்ற தோற்றத்தில் வளர்ந்திருக்கும் எனவே தான் இது வாள் அவரை என பெயர் பெற்றது.

தம்பட்டை அவரை பயன்கள்

தம்பட்டை அவரை

  • கொடி தம்பட்டை அவரையில் நம் உடலுக்கு தேவையான Folate எனும் விட்டமின் சத்து 44 % இருக்கிறது. இந்த முக்கிய சத்து தான் நம்முடைய மரபணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
  • சிலருக்கு நாள்பட்ட சரும தொந்தரவு இருக்கும், அவர்களெல்லாம் இந்த கொடி தம்பட்டையை அடிக்கடி உண்டுவந்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைத்து, இனி ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • கொடி தம்பட்டை அவரை காயில் நார்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது, இதனால் மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பூரண குணமாகிறது.
  • 5 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • இரவில் உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம், உறங்குவதற்கு மருந்துகள் ஏதும் பயன்படுத்தாமல், உறங்க செல்லும் முன் உணவுடன் இந்த தம்பட்டையை உண்டால் ஆரோக்கியமான உறக்கம் பெறலாம்.
  • வெளிநாடுகளில் ஆரோக்கியபானங்கள், தேநீர் தயாரிப்பிலும், மேலும் பற்பசை, சோப்பு தயாரிப்பிலும் கூட கொடி தம்பட்டை அவரையை பயன்படுத்துகின்றனர்.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த கொடி தம்பட்டை அவரை வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் தம்பட்டை அவரை வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற வாழ்த்துகிறோம்.

கோழி அவரை எனப்படும் கொடி அவரை அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஓன்றாகும்.இது கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். செழிப்பாக வளர்ந்து, படர்ந்து வளர கூடியது இந்த கோழி அவரை செடி. கொடி வகை தாவரங்களில் அவரை தான் மிக அடர்த்தியாக வளரும் மேலும் அதிகப்படியான காய்களை கொடுக்கும், வெகு நாட்களுக்கு அறுவடை செய்யலாம்.
கோழி-அவரை-செடி-வளர்ப்பு
கோழி அவரை செடி வளர்ப்பு முதல் அறுவடை வரை, மாடித்தோட்டத்தில் கோழி அவரை செடி வளர்ப்பது எப்படி, அவரை வகைகள் மற்றும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கோழி அவரை பயன்கள் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

மண்கலவை-1
கோழி அவரைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, அதற்கு தகுந்தாற்போல மண்கலவை தயார் செய்வது சிறந்தது. செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்யலாம். மண்புழு உரம் கிடைத்தால் மூன்றையும் கலந்து பயன் படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கோழி அவரை நடவு

கோழி அவரை செடி வளர்ப்பு
நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும், ஒரு நெகிழிப்பையில் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை போட்டு நிரப்பவும். ஒரு பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். சிறிய அளவில் பள்ளம் தோண்டி விதையை வைத்து சிறிது மண்கலவையை அதன் மேலே போட்டு மூடி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்தால் போதுமானது. கொடி வளர ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சாகுபடி

கோழி-அவரை-செடி-வளர்ப்பு-1
கோழி அவரை விதைத்த 3 நாட்களுக்குள் முளைப்பு வீற்றிருக்கும். 20 நாட்களில் கொடியின் வளர்ச்சியை காணமுடியும், 35 நாட்களில் கோழி அவரை கொடி பந்தலை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கும். நட்டத்திலிருந்து 100 ஆம் நாள் பூ வைக்கத்தொடங்கும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம், அதிக காய்கள் காய்க்க கோழி அவரையை ஆடி பட்டத்தில் நடவு செய்ய வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் கோழி அவரை செடி பராமரிப்பு

பூச்சி-தாக்குதல்
காய்கறிகளில் அதிகமான பூச்சித் தாக்குதல் இந்த கொடி அவரையில் தான் வருகிறது. இது பொதுவாக வரும் பிரச்சனை தான், அசுவினி பூச்சி போல சாறு உறுஞ்சும் பூச்சிகள் கூட்டமாக கோழி அவரை செடியின் தளிர்கள் மற்றும் பூக்களில் இருந்து சாற்றை தனியே உறிஞ்சி எடுத்து அதை வாடிப்போக செய்து விடும். மேலும் காய் துளைப்பான் பூச்சி தொல்லையும் ஏற்படுகிறது, இது அவரையில் துளை இட்டு அதன் விதையை சாப்பிடும், இதனால் அவரையை சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போக நேரிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

இந்த பூச்சி தாக்குதலை சமாளிக்க, இரண்டு நாள் ஆன அடுப்பு சாம்பலை செடியின் மீது பரவலாக தூவுவதின் மூலம் அந்த பூச்சிகளை விரட்டலாம். இரண்டு நாள் ஆனா சாம்பலில் மீதமான சூடு இருக்கும், இதுவே அந்த பூச்சிகளை விரட்டும் காரணியாக அமையும். முக்கியமானதாக, அதிக சாம்பலை பயன்படுத்தினால் செடியின் வளர்ச்சி பாதிக்க வாய்ப்பு உண்டு, எனவே தேவையான அளவு பயன்படுத்தவும். இம்முறையை பயன்படுத்தினால் கோழி அவரை செடி வளர்ப்பு சிறக்கும்.

அவரை வகைகள்

கோழி அவரை, செடி அவரை, சப்பத்தவரை, சீனி அவரை, வெள்ளை அவரை, வாழவரை, காட்டவரை, பெயவரை, பூனைக்கால் அவரை, ஆட்டுக்கொம்பு அவரை.

கோழி அவரை பயன்கள்

வளர்ச்சி-மற்றும்-சாகுபடி

  • கோழி அவரை சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு குறையும், மேலும் இதயநோய் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோழி அவரைப் பிஞ்சில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அவரை பிஞ்சை உணவில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை குணமாகும்.
  • அவரைக்காய் சத்துக்கள் உடலுக்கு மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும்.
  • இரவில் சரிவர தூங்க முடியாதவர்கள், இரவு உணவில் கோழி அவரையை எடுத்துக் கொண்டால் ஆழமான உறக்கம் பெறலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் இந்த கோழி அவரையை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த அருமருந்தான கோழி அவரையை மேற்கண்ட வழிமுறைபடி வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.

Pin It