Tag

செடி வளர்ப்பு

Browsing

பெரும்பாலானோர் வீட்டை அழகு படுத்த பல வகையான செடிகளை வளர்ப்பார்கள், சிலர் அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள். அழகு மற்றும் அதிர்ஷ்டத்தை தர வல்லதாக இந்த மயில் மாணிக்கம் கருதப்படுகிறது. எனவே தான் பலரது வீட்டில் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
மயிர் மாணிக்கம்
விதையை வைத்து தான் இந்த செடியானது வளர்ப்பது செய்யப்படுகிறது. மயில் மாணிக்கம் என பெயர் வரக்காரணம் என்னவென்றால், இதன் செடியில் பூக்கும் பூக்களின் நிறமானது அடர் சிவப்பு நிறமாக மாணிக்கம் போன்றும், அதன் வடிவம் மயில் தோகை போல விரிவாக இருப்பதாலும் தான் இதற்கு மயில் மாணிக்கம் என்று பெயர் வந்தது. ஆனால், இதன் இலைகள் மயிர் கணுக்கள் போல உள்ளதால் மயிர் மாணிக்கம் என்ற பெயர் கொண்டதாகவும், நாளடைவில் அதுவே மருவி தான் மயில் மாணிக்கம் என ஆனதாக கூறுகிறார்கள்.

மகத்துவம் பல நிறைந்த இந்த மயில் மாணிக்கம் செடி வளர்ப்பது எப்படி, வீட்டுத்தோட்டம் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு மற்றும் மயில் மாணிக்க செடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

மயில் மாணிக்கம் விதைப்பு செய்தல்

மயில் மாணிக்கம் ஒரு கொடி வகை தாவரம் ஆகும். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கலந்து மண்கலவை தயார் செய்துக்கொள்ள வேண்டும். நெகிழி பை அல்லது பூந்தொட்டியில் அந்த மண்கலவையை போட்டு நிரப்பவும். பிறகு தேர்ந்தெடுத்த நேர்த்தியான மயில் மாணிக்கம் விதைகளை அந்த மண்கலவையில் சிறிது பள்ளம் தோண்டி விதையை உள்ளே வைத்து மூடி கொஞ்சமாக தண்ணீர் தெளிக்கவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

செடியின் வளர்ச்சி

மயில்-மாணிக்கம் செடி வளர்ப்பு
விதையை விதைத்தப்பிறகு சரியாக 16 நாட்களுக்குள் மயில் மாணிக்க கொடியானது முளைத்து வெளியில் வந்துவிடும். இந்த மயில் மாணிக்க கொடியானது ஆரம்ப நிலையில் சிறிது சிறிதாகத்தான் வளரும். ஓரளவு கொடி வளர்வதற்கு அதிகபட்சமாக 50 நாட்களுக்கு மேலாக ஆகும். கொடி வளர எதுவாக பந்தல் அமைப்பது சிறந்தது. மயிர் மாணிக்க பூக்கள் கண்களை கவரும் நிறம் உடையதாக இருக்கும்.

பராமரிப்பு

மயில்-மாணிக்கம் செடி வளர்ப்பு
மயில் மாணிக்க கொடிகளுக்கு நீர் எந்தளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு வெயிலும் தேவை. மயில் மாணிக்க செடியை அதிகமான வெப்பத்திலும் வளர்க்க முடியும். இந்த செடிக்கு காலை நேரத்து வெயில் மிகவும் அவசியமாகும், சாதாரணமாக ஒரு செடிக்கு எட்டு மணி நேரம் வெயிலானது தேவைப்படும். ஆகவே அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் இடத்தை தேர்வு செய்து பராமரித்துக்கொள்ளவும்.

உரமேலாண்மை

மயில் மாணிக்கத்திற்கு தனியாக எந்த விதமான உரமும் அவசியமே இல்லை, அதுவாகவே நன்கு வளரும், குறிப்பாக இந்த செடி நடவு செய்து 65 நாட்களில் மொட்டுக்கள் வைக்கத்தொடங்கிவிடும். ஆனால் பூக்கள் பூக்குவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். கொடி உயர வளர துவங்கியதும் மேற்புறம் நோக்கி நூல்களைகொண்டு கட்டிவிட்டால் கொடி அதுவாகவே மேலே ஏறிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மயில் மாணிக்க செடி பயன்கள்

மயில் மாணிக்கம்

  • பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது கருமுட்டைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் ஆகும். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய மயில் மாணிக்க சாறை குறைந்தது ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும், எனவே தான் இதை அழகுச்செடி மயில் மாணிக்கம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள்.
  • மயில் மாணிக்கத்தின் இலைகளை அரைத்து பூசிவந்தால் கை, கால்களில் உள்ள கட்டிகள் விரைவில் குணமாகும்.
  • பொதுவாக அனைவருக்கும் பொடுகு பிரச்சனை தீராத தொல்லையாக இருக்கும், அதை சரி செய்ய மயில் மாணிக்கத்தை அரைத்து தலையில் பூசிவந்தால் பொடுகு பிரச்சனை குறைந்து, தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • மயிர் மாணிக்க மூலிகை சிறுநீரக கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.


இந்த மயில் மாணிக்கத்தை வீட்டில் வளர்த்து வீட்டின் அழகையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

நிலக்கடலை பொதுவாக வேர்க்கடலை என்று அழைக்கப்படும், மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதன் பூர்விகம் தென் அமெரிக்காவாகும், என்றபோதிலும் இன்று உலக அளவில் நிலக்கடலை வளர்ப்பு செய்வதில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது.
நிலக்கடலை-வளர்ப்பு
விதையிலிருந்து வேர்க்கடலை செடி வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் நிலக்கடலை வளர்ப்பது எப்படி, நிலக்கடலை சாகுபடியில் உர நிர்வாகம், நிலக்கடலை ரகங்கள் மற்றும் நிலக்கடலை பயன்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

விதைநேர்த்தி

நிலக்கடலை-பயன்கள்
சரியான விதைகளை தேர்ந்தெடுக்கவிட்டால் நிலக்கடலை வளர்ப்பு சரிவர நடைபெறாது எனவே நேர்த்தியான விதைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். முற்றிய நிலக்கடலையை எடுத்து அதன் ஓட்டு பகுதியை உடைத்து உள்ளிருக்கும் கடலை பருப்பை தனியே எடுத்துக்கொள்ளவேண்டும், பிறகு அந்த கடலையை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவேண்டும். அடுத்து நாள் காலையில் ஊறவைத்த விதைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி நடவுக்கு தயாராக இருக்கும்.

மண்கலவை தயாரித்தல்

மண்கலவை-தயாரித்தல்
களிமண், மணற்பாங்கான வண்டல்மண் மற்றும் செம்மண் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை ஆகும். எந்த மண் எடுத்து கொண்டாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தை கலந்து பயன்படுத்தவும். மக்கிய தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். இப்படியாக மண்கலவை தயார் செய்யவேண்டும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நிலக்கடலை நடவு செய்தல்

நிலக்கடலை-நடவு-செய்தல்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நெகிழி பையில் போட்டு நிரப்பி கொள்ளவும். ஊற வைத்து தயார் நிலையில் இருக்கும் கடலையை மண்கலவையில் விதைப்பு செய்யவேண்டும், ஒரு பைக்கு அதிகபட்சமாக 4 விதைகளை வரை நடவு செய்யலாம். அரை இன்ச் ஆழம் இருந்தாலே போதுமானது, நடவு செய்த பிறகு மண்ணை போட்டு மூடி சிறிது தண்ணீர் தெளிக்கவும். இரண்டு அல்லது மூன்று நாட்களிலே நிலக்கடலை முளைத்து வர தொடங்கிவிடும். நிலக்கடலை நடவு செய்ய ஏற்ற பட்டம் ஆடி பட்டம் ஆகும்.

நிலக்கடலை அறுவடை

நிலக்கடலை-அறுவடை
நிலக்கடலை சாகுபடியில் உர நிர்வாகம் சரியாக இருப்பது அவசியமாகும். மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் மற்றும் முதிர்ந்த இலைகள் எல்லாம் காய்ந்து விடுதலும் கடலை அறுவடை காலத்தைக் குறிக்கும். பெரும்பாலும் 110 நாளில் இருந்து 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பூச்சித்தாக்குதல்

பூச்சித்தாக்குதல்
நிலக்கடலை ரகங்கள் பல இருந்தாலும் அனைத்திலும் இலைப்பேன், சுருள் பூச்சி மற்றும் அசுவினி பூச்சித்தாக்குதல் அதிக அளவில் இருக்கும், இது கடலையின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்கும். வேப்பெண்ணை கரைசலை தொடர்ந்து 2 வாரங்கள் தெளித்து வந்தால் விரைவில் இந்த பூச்சித்தொல்லைகள் இல்லாமல் போகும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

நிலக்கடலை பயன்கள்

நிலக்கடலை வளர்ப்பு

  • நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து மிகுந்து காணப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலிருந்து கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கப்பெற பயன்படுகிறது. பெண்கள் இந்த நிலக்கடலையை தொடர்ந்து உண்டு வந்தால் எலும்புத்துளை நோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
  • வேர்க்கடலை நமது இளமையை தக்கவைக்க பெரிதும் உதவுகிறது. இந்த நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்கிற ஆண்டி ஆக்ஸிடண்டு இருக்கிறது. இது நோய் ஏற்படுவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்க உதவுகிறது.
  • வேர்க்கடலையை வெல்லம் மற்றும் ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது சிறு குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும் மேலும் தாய்ப்பால் கொடுகின்ற தாய்மார்களுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்க வல்லது.
  • நிலக்கடலையைத் நீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு சாப்பிடலாம், கடலையைக் கூழாக்கி தேன் மற்றும் வாழைப்பழம் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் குழந்தைகள் அதிக பலம் பெறுவார்கள்.
  • நிலக்கடலை உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கை பிடி நிலக்கடலையை மட்டும் உண்டால் உடலையின் எடை அதிகரிக்காது. உடல் எடை அதிகரிக்க விரும்புவோர்கள், ஆரோக்கியமாக எடை கூட அதிகமாக வேர்க்கடலை சாப்பிடவேண்டும்.


விவசாயிகளுக்கு நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை தனை மாடி தோட்டத்தில் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம். நீங்களும் அந்த முறையில் நிலக்கடலை செடி வளர்த்து, அதன் பயன்கள் எல்லாம் பெற்று உங்கள் ஆரோக்கியம் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

கோழி அவரை எனப்படும் கொடி அவரை அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஓன்றாகும்.இது கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். செழிப்பாக வளர்ந்து, படர்ந்து வளர கூடியது இந்த கோழி அவரை செடி. கொடி வகை தாவரங்களில் அவரை தான் மிக அடர்த்தியாக வளரும் மேலும் அதிகப்படியான காய்களை கொடுக்கும், வெகு நாட்களுக்கு அறுவடை செய்யலாம்.
கோழி-அவரை-செடி-வளர்ப்பு
கோழி அவரை செடி வளர்ப்பு முதல் அறுவடை வரை, மாடித்தோட்டத்தில் கோழி அவரை செடி வளர்ப்பது எப்படி, அவரை வகைகள் மற்றும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கோழி அவரை பயன்கள் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மண்கலவை

மண்கலவை-1
கோழி அவரைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, அதற்கு தகுந்தாற்போல மண்கலவை தயார் செய்வது சிறந்தது. செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்யலாம். மண்புழு உரம் கிடைத்தால் மூன்றையும் கலந்து பயன் படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கோழி அவரை நடவு

கோழி அவரை செடி வளர்ப்பு
நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும், ஒரு நெகிழிப்பையில் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை போட்டு நிரப்பவும். ஒரு பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். சிறிய அளவில் பள்ளம் தோண்டி விதையை வைத்து சிறிது மண்கலவையை அதன் மேலே போட்டு மூடி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்தால் போதுமானது. கொடி வளர ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சாகுபடி

கோழி-அவரை-செடி-வளர்ப்பு-1
கோழி அவரை விதைத்த 3 நாட்களுக்குள் முளைப்பு வீற்றிருக்கும். 20 நாட்களில் கொடியின் வளர்ச்சியை காணமுடியும், 35 நாட்களில் கோழி அவரை கொடி பந்தலை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கும். நட்டத்திலிருந்து 100 ஆம் நாள் பூ வைக்கத்தொடங்கும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம், அதிக காய்கள் காய்க்க கோழி அவரையை ஆடி பட்டத்தில் நடவு செய்ய வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் கோழி அவரை செடி பராமரிப்பு

பூச்சி-தாக்குதல்
காய்கறிகளில் அதிகமான பூச்சித் தாக்குதல் இந்த கொடி அவரையில் தான் வருகிறது. இது பொதுவாக வரும் பிரச்சனை தான், அசுவினி பூச்சி போல சாறு உறுஞ்சும் பூச்சிகள் கூட்டமாக கோழி அவரை செடியின் தளிர்கள் மற்றும் பூக்களில் இருந்து சாற்றை தனியே உறிஞ்சி எடுத்து அதை வாடிப்போக செய்து விடும். மேலும் காய் துளைப்பான் பூச்சி தொல்லையும் ஏற்படுகிறது, இது அவரையில் துளை இட்டு அதன் விதையை சாப்பிடும், இதனால் அவரையை சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போக நேரிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

இந்த பூச்சி தாக்குதலை சமாளிக்க, இரண்டு நாள் ஆன அடுப்பு சாம்பலை செடியின் மீது பரவலாக தூவுவதின் மூலம் அந்த பூச்சிகளை விரட்டலாம். இரண்டு நாள் ஆனா சாம்பலில் மீதமான சூடு இருக்கும், இதுவே அந்த பூச்சிகளை விரட்டும் காரணியாக அமையும். முக்கியமானதாக, அதிக சாம்பலை பயன்படுத்தினால் செடியின் வளர்ச்சி பாதிக்க வாய்ப்பு உண்டு, எனவே தேவையான அளவு பயன்படுத்தவும். இம்முறையை பயன்படுத்தினால் கோழி அவரை செடி வளர்ப்பு சிறக்கும்.

அவரை வகைகள்

கோழி அவரை, செடி அவரை, சப்பத்தவரை, சீனி அவரை, வெள்ளை அவரை, வாழவரை, காட்டவரை, பெயவரை, பூனைக்கால் அவரை, ஆட்டுக்கொம்பு அவரை.

கோழி அவரை பயன்கள்

வளர்ச்சி-மற்றும்-சாகுபடி

  • கோழி அவரை சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு குறையும், மேலும் இதயநோய் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோழி அவரைப் பிஞ்சில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அவரை பிஞ்சை உணவில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை குணமாகும்.
  • அவரைக்காய் சத்துக்கள் உடலுக்கு மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும்.
  • இரவில் சரிவர தூங்க முடியாதவர்கள், இரவு உணவில் கோழி அவரையை எடுத்துக் கொண்டால் ஆழமான உறக்கம் பெறலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் இந்த கோழி அவரையை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த அருமருந்தான கோழி அவரையை மேற்கண்ட வழிமுறைபடி வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.

பீன்ஸ் பொதுவாக கொடிகளில் வளர்வதை பார்த்திருப்போம், அதே போல செடிகளிலும் நன்கு செழித்து வளரும். கொடிவகையாக வளர்க்கும் பொழுது அதிகமான இடவசதி தேவைப்படும், போதிய இடவசதி இல்லாதவர்கள் இந்த செடி பீன்ஸ் வளர்ப்பு செய்தால் சிறிய இடத்திலும் கூட நல்ல விளைச்சலை காண முடியும்.
செடி-பீன்ஸ்-வளர்ப்பு
செடி பீன்ஸ் விதைப்பு முதல் அறுவடை வரை , மாடியில் செடி பீன்ஸ் வளர்ப்பது எப்படி, செடி பீன்ஸ் பயன்கள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

விதை நேர்த்தி

விதை-நேர்த்தி
தேவைக்கு ஏற்ப விதைகளை எடுத்து கொண்டு அதை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வைக்கவேண்டும். அடுத்த நாள் ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சிக்கொண்டு விதைகள் சற்று பெரிதாகி இருக்கும், இந்த ஈரப்பதமானது செடி நன்கு வளர உதவும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை
செடி பீன்ஸ் வளர்ப்பு தனில் மண்கலவை முக்கிய வகிக்கிறது. நல்ல வளர்ச்சியை பெற செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபங்கு கலந்து பயன்படுத்தலாம். மண்புழு உரம் இருக்குமேயானால், செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மண்புழு உரம் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் கலந்து மண்கலவையை தயார் செய்யலாம்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

நடவு மற்றும் வளர்ச்சி

செடி-பீன்ஸ்
தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையில், ஊறவைத்து எடுத்து வைத்துள்ள விதைகளை நடவுசெய்ய வேண்டும். இது ஒரு அடி வரை மட்டுமே உயரம் வளரும் என்பதால், ஒரு நெகிழி பையில் 4 முதல் 6 செடிகள் வரை நடவு செய்யலாம்.

நடவு செய்த 7 முதல் 10 நாட்களில் செடி பீன்ஸின் வளர்ச்சியை கண்கூடாக காண முடியும், மேலும் 30 நாட்களில் செடி பீன்ஸ் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கும்.

செடி பீன்ஸ் சாகுபடி

பீன்ஸ்-சாகுபடி
செடி பீன்ஸ் 45 நாட்களில் பூ வைக்க தொடங்கிவிடும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும், ஒவ்வொன்றும் தனி தனியே காணப்படும், அதேபோல காய்களும் தனித்தனியே தன் காய்க்கும். 55 நாட்களுக்கு மேல் அறுவடை நிலையை அடைந்து விடும், அப்போது தாராளமாக அறுவடை செய்யலாம். ஒரு வேலை செடி பீன்ஸின் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் உன்ன நினைத்தால், 90 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்தால் உள்ளே இருக்கும் விதை நன்கு முற்றி, அதிக சுவை கொடுக்க கூடியதாகி இருக்கும்.

பூச்சி தாக்குதல்

செடி பீன்ஸை அஸ்வினி பூச்சிகள் அதிக அளவில் தாக்கக்கூடும், செடியின் ஆரம்ப கால வளர்ச்சியை இது பெரிதும் பாதிக்கும். இந்த அஸ்வினி பூச்சி தொல்லையில் இருந்து செடி பீன்ஸை பாதுகாக்க விட்டால் செடி முழுவதுமாக வீணாகிவிடும். வேப்பெண்ணெய் கரைசலை தெளிப்பதன் மூலமாக இந்த அஸ்வினி பூச்சியை முற்றிலுமாக அகற்றலாம்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

செடி பீன்ஸ் பயன்கள்

செடி-பீன்ஸ்-பயன்கள்

  • செடி பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால், அதிலிருக்கும் ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சி தனை தடுத்து நிறுத்தி, புற்றுநோய் தாக்கும் அபாயத்தை குறைகிறது.
  • பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்தத்தை உறையாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த செடி பீன்ஸை தினசரி உணவில் சேர்த்து கொண்டார்களேயானால் அந்த நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
  • செடி பீன்ஸில் நார்ச்சத்து, மாங்கனீஷ் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து அதை ஊட்ட சத்தாக மாற்றுகிறது.
  • இரும்புச்சத்தைக் கிரகித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது இந்த செடி பீன்ஸ், மேலும் செரிமான சக்தியை அதிகரித்து, வாயுத் தொல்லையயையும் நீக்குகிறது.
  • இரைப்பையில் ஏற்படும் பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவதுண்டு, அவர்காலம் இந்த செடி பீன்ஸை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.


பீன்ஸ் வகைகள் பல உண்டு அதில் செடி பீன்ஸ் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் செடி பீன்ஸ் வளர்த்து, அந்த பச்சை பீன்ஸ் போல உங்கள் வாழ்க்கையும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். பரங்கிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்கா ஆகும். பூசணி தமிழர்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றாகும் இந்த பரங்கிக்காய். பரங்கிக்காய் வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு, பரங்கிக்காய் சாகுபடி, வீட்டில் பரங்கிக்காய் வளர்ப்பது எப்படி, பரங்கிக்காய் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பரங்கிக்காய்

விதையை தேர்ந்தெடுத்தல்

பரங்கிக்காய்-விதை-1
நன்கு நேர்த்தியான பரங்கிக்காய் விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். அந்த விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். நீரில் போட்டவுடன் விதைகள் மிதந்து கொண்டிருக்கும், அடுத்த நாள் பார்க்கும்பொழுது நீரின் அடியில் காணப்படும், இந்த நிலை விதைகள் விதைக்க தயாரானதை குறிக்கும்.

மண்கலவை தயார் செய்தல் மற்றும் விதைத்தல்

மஞ்சள் பரங்கிக்காயை நடவு செய்ய ஏற்ற மாதம் ஜீன் – ஜீலை மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் ஆகும், இந்த மாதத்தில் நடவுசெய்தல் நல்ல சாகுபடி செய்யலாம்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now


பரங்கிக்காய்க்கு மண்கலவை தயார் செய்யும் போது, களிமண் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இம்மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்ய வேண்டும். பிறகு தயார் நிலையில் இருக்கும் விதைகளை விதைப்பு செய்யலாம்.

பரங்கிக்காய் வளர்ச்சி

பரங்கிக்காய்-கொடி
மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் விதைத்த ஏழாம் நாளில் இருந்து ஒன்பது நாற்களுக்குள் விதையானது முளைத்து, இலைகள் துளிர் விட தொடங்கி விடும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்தே தண்ணீர் விட வேண்டும். கோடைகாலங்களில் வாரத்திற்கு இருமுறையும், மற்ற நேரங்களில் வாரம் ஒரு முறையும் நீரை விட வேண்டும். இந்த நீர் மேலாண்மையே பரங்கிக்காய் செடி வளர்ப்பு முறை தனை மேம்படுத்தும்.

பரங்கிக்காய் வளர்ப்பு மற்றும் சாகுபடி

நல்ல-சாகுபடி
பரங்கிக்காய் செடி விதைத்த 45 நாளில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும்.

முதலில் ஆண் மொட்டுகள் அதிகம் வைக்கும், பின்பு பெண் மொட்டுக்கள் வரத்தொடங்கும். 60 நாட்களுக்கு பிறகு அடர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். பூக்கள் பூத்த உடனே தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளின் வரவு அதிகரிக்கும், மகரந்த சேர்க்கையும் துரிதமாக நடைபெறும். 70 நாட்களுக்கு பிறகு காய்கள் தோன்றும். 110 முதல் 115 நாளில் காய் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்கும், அப்போது அதை அறுவடை செய்து கொள்ளலாம்.
male and female flowers

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

பரங்கிக்காய் நன்மைகள்

பரங்கிக்காய்-நன்மைகள்

  • பரங்கிக்காய் உடலுக்கு அதிக அளவில் குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது, மேலும் சிறுநீர் நன்கு பிரிவதற்கு உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.
  • திடீரென்று தோன்றும் வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்யும் வல்லமை கொண்டுள்ளது.
  • பரங்கிக்காய் சாப்பிடுவதால் மழைக்கால் ஏற்படும் சளி மற்றும் தொடர் இருமலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது. பரங்கிக்காயில் உள்ள ஜீயாக்சாண்டின், வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் ஆகியவை நோய்த்தொற்றை எதிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்திதனை அதிகரிக்க மற்றும் விரைவில் குணமடையவும் வழிவகை செய்கிறது.
  • இதயம் பலகீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்த சோகை நோய் உள்ளவர்கள் இந்த பரங்கிக்காயை தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்து கொண்டால் சிறந்த பலன் வாய்க்கும்.
  • பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது, இது நம் கண்களுக்கு பெருமளவில் பயனுள்ளதாக விளங்குகிறது, மேலும் ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளதால், அவை நம் கண்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
  • தசை மண்டல பகுதிகளின் தளர்ச்சியை போக்கி, அதற்கு உறுதியை சேர்க்க வல்லது.


நாட்டு பரங்கிக்காய் விதைப்பு முதல் அறுவடை எப்படி செய்வது என்பதை பற்றி பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பரங்கிக்காய் வளர்ப்பு செய்து பலன்கள் அனைத்தையும் பெற்று, அதன் பூ போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.

முள்சீத்தா மரம் வளர்ப்பு சுலபமான முறையில் செய்யலாம், ஏனென்றால் இது நன்கு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழ பயிர் ஆகும். முள் சீதாவின் பிறப்பிடம் அமேசான் காடுகள் ஆகும், தற்பொழுது வெகுவாக பல வெப்பமண்டல நாடுகளில் பரவலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. நம் இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் இயற்கையாகவே விளைகின்றது.
முள்சீத்தா-மரம்-வளர்ப்பு-1
வீட்டில் வளர்க்க கூடாத மரம் என்று முள் சீத்தா மரத்தை கூறுவதுண்டு, இயற்கையின் படைப்பில் வளர்க்க கூடாத மரமென்று ஏதுமில்லை. தாராளமாக இதை வீட்டில் வளர்க்கலாம். முள் சீதா மரம் வளர்ப்பது எப்படி, விதை வழி மரம் வளர்ப்பு, காய்க்காத மரம் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும், முள் சீத்தா பயன்கள், முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வளர்ச்சிக்கு ஏற்ற மண்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்ய நீர் தேங்காத எந்தவகை மண்ணையும் தேர்ந்தெடுக்கலாம். விதை மூலமாகவும் பயிர் செய்யலாம், மேலும் மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் முள் சீதாவை பயிர் செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

முள்சீத்தா மரம் வளர்ப்பு மற்றும் மகசூல்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மே மாதம் பூக்கள் பூத்து ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பழங்களை கொடுக்கும். ஒரு செடிக்கு ஏறக்குறைய நூறு பழங்கள் வரை கிடைக்கும், பழங்கள் அனைத்தையும் கனிவதற்கு முன்பாக பறித்து விற்பனை செய்துவிட வேண்டும்.

முள் சீத்தா பெரும்பாலும் இருபது அடி வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது. பசுமை மாறாத குணம் கொண்ட இம்மரம் மினுமினுப்பான இலையுடனும், பழங்களின் வெளிபுறப்பகுதியில் வளைந்த மிருதுவான முற்களோடு காணப்படும்.

முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை

மகசூல்
சீதா பழம் மரம் வளர்ப்பு முறை தனில் அடுத்து அதன் சாகுபடி முறைகளை காணப்போகிறோம். இதன் பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் இரண்டும் கலந்திருக்கும். முள் சீதா பழமானது இதய வடிவத்திலோ அல்லது நீள் முட்டை வடிவத்திலோ காணப்படும். முள் சீதா பழங்கள் தோற்றத்தில் பெரிதாக காணப்படும். ஒவ்வொரு முள் சீதா பழமும் 3 கிலோ முதல் 5 கிலோ வரையும் கூட எடை இருக்கும். முழுமையாக வளர்ந்த பழத்தின் நீளம் சுமார் 1 அடியும், அகலம் அரை அடியும் இருக்கும்.

முதலில் அடர்பச்சை நிறத்தில் காய்கள் இருக்கும், பின்பு பழுத்ததும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறிவிடும். சதைப்பகுதியானது நாட்டு சீத்தா பழத்தை போல வெண்மை நிறமாகவும், அதே சுவையும் கொண்டதாக இருக்கும், ஆனால் முள் சீத்தா நறுமணம், எலுமிச்சை, அண்ணாச்சி, முலாம்பழம், ஸ்டிராபெரி பழங்களின் நறுமணத்தை கலந்த ஒரு வித்தியாசமான வாசனையை பெற்றிருக்கும்.

பராமரிப்பு

சீதா-பழம்
முள் சீத்தாவிற்கு அதிகளவு தண்ணீர் தேவை இருக்காது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினாலே போதும். வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் தனி தனியே கலப்பு எரு வேர்ப்பகுதியில் இட்டால் போதுமானது. முள் சீத்தாவில் பூச்சி தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதற்கென்று பாதுகாப்பு முறையென்று ஏதுமில்லை. வேர் அழுகல் நோய் தோன்றினால் மட்டும் சிறிது வேப்பம்புண்ணாக்கை வேர் பகுதியில் வைத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும். இவ்வாறு செய்தால் முள்சீத்தா மரம் வளர்ப்பு சிறக்கும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

முள் சீத்தா அறுவடை

முள்சீத்தா மரம் வளர்ப்பு
தீவு பகுதிகளில் ஒரு வருடத்திற்கு மூன்று பருவங்களில் முள் சீத்தா பூ பூப்பதால், 3 முறை அறுவடை செய்யலாம். பிற பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தா மரமானது பூக்கிறது. ஜுன்-ஜுலை மாதங்களில் இதன் பழங்களை அறுவடை செய்யலாம்.

முள் சீத்தாப்பழம் நன்மைகள்

முள்சீத்தா பழம் சத்துக்கள் மற்றும் நன்மைகள்

  • முள் சீத்தாபழத்தில் நீர்சத்து மிகுந்துள்ளது , மேலும் மாவுசத்து, புரத சத்து, அத்தியாவசியமான தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து போன்ற பல சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ பன்னிரண்டு வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் காரணிகளை முள் சீத்தாப்பழம் பெற்றிருக்கிறது.
  • புற்றுநோய் பாதிப்பால் உருவாகும் கட்டிகளை கரைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
  • இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நம் செரிமான அமைப்பிற்கு நல்ல நன்மை தரக்கூடியது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
  • முள் சீத்தாப்பழம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தித்தனை அதிகரித்து உடலில் உள்ள நாற்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்குதலிருந்து பாதுகாக்கிறது.
  • இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், போன்ற பல்வேறுவகையான நோய்களை தீர்க்கவல்ல உன்னத மருந்தாகவும் முள்சீத்தாப்பழம் விளங்குகிறது.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை இந்த முள் சீதாப்பழ மரம். இதை நல்ல முறையில் வளர்த்து, அதன் பயன்களை பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

நாவல் பழம் மரம் அனைத்து மண்களிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத் தன்மை மிக்க மற்றும் நீர் தேங்கிய நிலையில் இருந்தாலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு சிறப்பாக இருக்கும், எனினும் அதிகமான உற்பத்தி மற்றும் நல்ல வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் களிமண் அல்லது செம்மண் சிறந்தது.
நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு
நாவல் பழம் மரம் மிகுந்த வறட்சியை கூட தாங்கி வளரக்கூடிய பழப்பயிர் ஆகும். நாவல் பழங்களில் இரும்புச்சத்தும், கனிமங்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது. நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி, நாவல் பழம் பயன்கள், நாவல் மரம் சாகுபடி, நாவல் பழம் வகைகள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நடவு செய்தல்

நடவு-செய்தல்
நாவல் பழம் மரம், விதை மற்றும் நாற்று முறையில் நடவு செய்யலாம். நல்ல விதைகளாக தேர்வு செய்து விதைக்கவும். விதைகள் முளைக்க சுமார் பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். நாற்றுகள் மூலம் நடவு செய்த நாவல் மரத்தில் எட்டு முதல் பத்து ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் மூலம் வளர்ந்த நாவல் மரங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலும் பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு-1
நாட்டு நாவல் மரம் நன்கு வளர்ந்த நிலையில், ஒரு மரத்திற்கு எழுபது கிலோ வரை தொழு உரத்தை அளிக்க வேண்டும், நாவல் மரம் வளரும் மண்ணில் அதிக ஊட்டசத்து காணப்பட்டால் அதன் இலைகள் அதிக அளவில் வளரும், எனவே தான் தொழு உரத்தை அளிக்கிறோம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


நாவல் செடிகள் வளர்ச்சி அடையும் காலம் வரை களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். நாவல் பழ மரத்திற்கு கவாத்து செய்யும் போது, உலர்ந்துபோன மற்றும் குறுக்கில் செல்லும் கிளைகளை நீக்கினால் போதுமானது, இவ்வாறு செய்வதால் நாவல் மரம் வளர்ப்பு சிறக்கும்.

மகசூல் மற்றும் சாகுபடி

நாவல்-பழம்
நாற்று மூலம் வளர்ந்த நாவல் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு எண்பது முதல் நூறு கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மூலம் வளர்ந்த மரத்திலிருந்து அறுபது முதல் எழுபது கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். நாவல் மரங்கள் தொடர்ந்து ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் ஒரு இலை உதிரா மரம் ஆகும். இதை பிப்ரவரி – மார்ச் மாதம் மற்றும் ஜுலை – ஆகஸ்ட் மாதம் ஆகிய இரண்டு பருவங்களிலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு செய்யலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நாவல் பழம் பயன்கள் மற்றும் மருத்துவகுணம்

நாவல் பழம் மரம் வளர்ப்பு

  • வெள்ளை நாவல் பழத்தின் சாறு மற்றும் மாம்பழத்தின் சாறை சம பங்கு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்துவந்தால் சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வரும், இதுவே வெள்ளை நாவல் மருத்துவ குணம் ஆகும்.
  • நன்கு பழுத்த நாவல் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரானது பசி தனை தூண்டும் குணம் உடையது.
  • நாவல் பழத்தை சாப்பிட்டால் குடற்புண் மற்றும் கல்லீரல் கோளாறுகள், போன்றவற்றை சரிசெய்ய வல்லது.
  • நாவல் பழத்தின் விதைதனில் மாவுச் சத்து மற்றும் புரதம் மிகுந்து உள்ளதால் கால்நடைகளுக்கு சத்துமிக்க தீவனமாகக் பயன்படுகிறது.
  • ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து அதிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மண்ணீரலில் ஏற்படும் நோய்களை தடுக்கவல்ல அரும் மருந்தாகும் இந்த நாவல் பழம்.
  • நாவல் மரத்தின் இலையை பொடி செய்து அதைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகள் வலுப்பெறும், நாவல் மர இலையின் சாம்பல் பூசிவர நாள்பட்ட தீக்காயங்கள் மற்றும் வெட்டு பட்ட காயங்கள் குணமாகும்.


நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும் என்று பார்த்தோம். நாவல் பழம் மிக சிறந்த மருத்துவ குணத்தை உடையது, பெருன்பான்மையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. நாவலின் இலை, பழம், பட்டை, விதை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அரும்மருந்தான நாவல் பழ மரத்தை வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

மஞ்சள் வளர்ப்பு சமீபகாலமாக நமது நாட்டில் பெரிய அங்கீகாரம் பெற ஆரம்பித்திருக்கிறது. இந்த மூலிகை இந்தியா, இந்தோனேசியாவின் இயல் தாவரம் ஆகும். இந்த மஞ்சள் மூலிகையானது ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படும். மஞ்சள் தாவரத்தின் வேர் கிழங்கின் அறிய பண்புபை மக்கள் உணர ஆரம்பித்திருப்பதுதான், அதன் சமீபத்திய பிரபலத்துக்குக் காரணமாக விளங்குகிறது. மஞ்சளுக்கு இந்தியக் குங்குமப்பூ எனும் பெயரும் இருக்கிறது.
மஞ்சள்-சாகுபடி
மஞ்சள் செடி வளர்ப்பு, மஞ்சள் சாகுபடி செய்யும் முறை, மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு, மஞ்சள் குலை செடி வளர்ப்பு, மஞ்சள் பயிரில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள், மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும், மஞ்சள் வகைகள், மஞ்சள் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மஞ்சளில் விதை தேர்வு

அறுவடை
மண்கலவையின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றை பொருத்து நல்ல மஞ்சள் வகைகளை விதைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்கையான முறைகளில் தேர்ந்தெடுத்த விதைகள் தான் நல்லது. விரலி மஞ்சள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம்.

மஞ்சள் வகைகள்

வகைகள்
கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், என மஞ்சளில் பல வகைகள் இருக்கிறது. அனைத்து மஞ்சளும் வெவ்வேறு வகையான பயன்களை தர வல்லது.

மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு

மஞ்சள்-வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பது எப்படி என்று காணலாம், மஞ்சள் கிழங்கை உடைத்து 2 இன்ச் ஆழத்தில் நெகிழிப்பையில் அல்லது தொட்டியில் வைத்தால் மஞ்சள் செடி முளைத்து வரும். மஞ்சள் கிழங்கு முளைத்து வர ஒரு மாதம் கூட ஆகலாம்.

நெகிழிப்பையை பொறுத்தவரை ஒன்னேகால் அடி பை சரியாக இருக்கும். ஒரு பையில் ஒரு செடியை மட்டுமே வளர்க்க வேண்டும். கிழங்கு வகையை பொறுத்தவரை பை அல்லது தொட்டியில் வளர்க்கும் போது கூடுதல் உரமேலாண்மை மிக அவசியம். நல்ல செறிவுள்ள மண்கலவையை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பஞ்சகாவியாவை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்கலாம். மஞ்சள் அறுவடை செய்ய 8 முதல் 10 மாதங்கள் ஆகும். மஞ்சள் 60 சென்டிமீட்டர் முதல் 90 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மையுடையது.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மஞ்சள் கிழங்கு அறுவடை

விதை-தேர்வு
8 முதல் 10 மாதங்களுக்கு பிறகு மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை நிறம் மாறி இலையானது மஞ்சள் நிறமாக மாறி வாடத் தொடங்கும். அச்சமயம் அதன் தாள்களை அறுத்துவிடலாம், இதன் பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மஞ்சள் கிழங்கை சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.

மஞ்சளின் பயன்கள்

மஞ்சளின்-பயன்கள்

  • கப்பு மஞ்சள், புண்களை ஆற்றவும் மேலும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம்.
  • கறி மஞ்சள் என்பது நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்துவது.
  • விரலி மஞ்சளைப் நன்கு பொடிசெய்து, தினசரி பாலோடு கலந்து குடித்து வந்தால், சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வைக்கலாம்.
  • மர மஞ்சள் தனை வேப்பிலையுடன் சேர்த்து நன்கு அரைத்துப் பூசி வர அம்மை நோய் சரியாகும்.
  • கஸ்தூரி மஞ்சள் வளர்ப்பு பிரபலமாக காரணம், அது முகத்திற்கு பொலிவு சேர்க்க பயன்படுகிறது.
  • சளி பிரச்சனையால் சிரமப்படுகிறவர்கள், தினமும் காலை வேளையில் மூக்கடைப்பால் சிரமப்படுகிறவர்கள், மஞ்சள் மற்றும் அதனுடன் வேப்பிலை, தேன், மிளகு இவற்றை நன்கு அரைத்து உட்கொள்வதன் மூலம் விரைவில் பலனடையலாம்.

  • மஞ்சள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பொங்கல் மஞ்சள் ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த இந்த சஞ்சீவினியை (மஞ்சளை) பாதுகாத்து, மஞ்சள் இருக்க அஞ்சேல் எனும் அவர்களின் கூற்றிற்கு ஏற்ப, அனைவரும் அதை பயன்படுத்தி நன்மைகள் பல பெற வாழ்த்துகிறோம்

முட்டைக்கோஸ் வளர்ப்பு எளிது மட்டுமல்ல அதன் பயன்களும் அதிகம் ஆகும். முட்டைக்கோஸ் விளைச்சல், முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி, அறுவடை போன்றவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். முட்டைக்கோஸ் இலைகளால் ஆன ஒரு காயாகும். சீனா மற்றும் போலந்து நாடுகளில் பயன்படுத்தபட்ட முட்டைகோஸ் 1794 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு அறிமுகமானது.

விதைகளிலிருந்து முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி

உலகளவில் முட்டைக்கோஸ் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

நாற்றுகள் மூலம் முட்டைக்கோஸ் வளர்ப்பு

முட்டைக்கோஸ் நாற்று

முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு நாற்றுகள் போடுவதற்கு 100 ச.அடி நிலம் போதுமானது. 15 செ.மீ உயரம், 1 மீ அகலம், மற்றும் தேவையான அளவு நீளம் விட்டு விதைப்படுக்கையை தயார் செய்ய வேண்டும்.

2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 1 ச.அடிக்கு அளிக்க வேண்டும். விதைப்படுக்கையில் 10 செ.மீ இடைவெளிவிட்டு விதைகளை விதைக்க வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

விதைப்பு முறை

முட்டைக்கோஸ் வளர்ப்பு செய்வதற்கான நிலத்தை நன்றாக உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ இடைவெளிவிட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

மலைப்பகுதியாக இருந்தால் 40×40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதியாக இருந்தால் 45×30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவேண்டும்.

நீர் மேலாண்மையை பொறுத்தவரை தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருந்தால் போதுமானது.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

உரம்

மலைப்பகுதியில் முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு அடியுரமாக 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்ச்சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்ச்சத்து ஆகிய உரங்களை அளிக்க வேண்டும்.

சமவெளிப்பயிர்களுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 கிலோ சாம்பல்சத்துக்களை இட வேண்டும். மேலுரமாக பயிர் செய்த 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யாவை பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத்தெளிப்பாக தெளிக்க வேண்டும். பயிர் செய்த ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 10 % வெர்மிவாஷ் தெளிக்க வேண்டும்.

அசுவினிகள்

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 1௦% வேப்ப இலைச் சாற்றை 45,60,75 வது நாளில் தெளிக்க வேண்டும். வயலில் ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறியை பொருத்த வேண்டும்.

வெட்டுப்புழுக்கள்

கோடைக்காலத்தில் விளக்குப்பொறியை வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத்தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்

பயிர் செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 5% மஞ்சூரியன் தேயிலைச்சாற்றை ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்.

பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 3 % பஞ்சகவ்யாவை 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

வேர்முடிச்சு நோய்

நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும், மற்றும் மண்ணின் கார அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் வேர்முடிச்சு நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

சரியான பராமரிப்பின் மூலம் இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும்.

விளைச்சல் மற்றும் அறுவடை

முட்டைக்கோஸ் செடி

மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70 முதல் 80 டன்கள் வரை கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25 முதல் 35 டன்கள் வரை கிடைக்கும்.

பயிர் செய்த 75 வது நாளில் காய்கள் அறுவடைக்கு தயார் ஆகி விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

120 நாட்களில் சுமார் 8 முறை முட்டைகோஸுகளை அறுவடை செய்யலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று ஆனால் முற்றாமல் இருக்கும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்

  • இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது.
  • கண் நரம்புகளை சீராக இயங்கச்செய்யக்கூடியது.
  • அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யக்கூடியது.
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கக்கூடியது.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளும்,பற்களும் உறுதியாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நரம்புகளுக்கு வலிமை கொடுத்து நரம்புத்தளர்ச்சியை சரி செய்யக்கூடியது.
  • சருமத்திற்கு பொலிவைக்கொடுத்து சரும வறட்சியை போக்க க்கூடியது.
  • சிறுநீரைப் பிரித்து வெளியேற்றும் தன்மை உடையது.
  • முட்டைக்கோஸ் உண்ணும் முறை

    முட்டைக்கோஸ் பச்சையாக சாப்பிடலாமா என்று சிலருக்கு சந்தேகம் வருவதுண்டு. முட்டைகோஸை பச்சையாக ஜூஸ் போன்றும் குடிக்கலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். இதில் நிறைய சத்துக்கள் இருப்பதால் எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையே, ஆனால் நன்றாக சுத்தம் செய்தபின் உண்பது அவசியம் .

    தமிழில் முட்டைக்கோஸ் வளர்ப்பு வழிகாட்டி


    முட்டைக்கோஸ் வளர்ப்பு மற்றும் பயன்கள் பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டியாக நிறைய வலைத்தளங்கள் மற்றும் முகநூல் போன்றவைகள் உள்ளது. மேலும் முட்டைக்கோஸ் செடி வளர்ப்பது எப்படி, எளிய முறையில் வீட்டில் முட்டைகோஸ் பயிர் வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் வலைத்தளங்களில் அறிய முடியும்.

    Pin It