Category

தோட்டம்

Category

கொத்தமல்லி கீரை வளர்ப்பு செய்வதற்கான வழிமுறைதனை தெரிந்துகொண்டால், கொத்தமல்லி கீரை வளர்ப்பை போல ஒரு எளிய மாடித்தோட்ட செயல்பாட்டு முறை இல்லை. அந்த சுலபமான முறையை இங்கு காணலாம், மேலும் கொத்தமல்லி பயிரிடும் முறை, கொத்தமல்லி கீரை சாகுபடி, கொத்தமல்லி கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்தக்கட்டுரையில் காணலாம்.
கொத்தமல்லி-கீரை-வளர்ப்பு

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி-கீரை-வளர்ப்பு-2
கொத்தமல்லி கீரை விதைக்கு, அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லியை உபயோகப்படுத்தலாம். கொத்தமல்லி விதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்றையும் இரண்டாக உடைத்து எடுத்து கொள்ளவும். காட்டன் துணி ஒன்றை எடுத்து, அதில் மண்புழு உரத்தைப் பரப்பிக்கொண்டு, அந்த துணியில் கொத்தமல்லி விதைகளைத் தூவி விடவும், பின்பு உரத்தையும், கொத்தமல்லி விதைகளையும் கலந்து அந்த துணியை கட்டவும், மிக இறுக்கிக் கட்டக்கூடாது.

பிறகு இந்தத் துணியை, நீரில் நனைத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் அந்த விதை கொண்ட துணி முடிச்சை ஈரம் காயாமல் நிழலில் வைக்கவேண்டும். மூன்று தினங்களுக்கு பின்பு அந்த துணியை பிரித்துப் பார்க்கவும். கட்டிவைத்த விதைகளில் முளைப்புத் திறன் இருக்குமேயானால், கொத்தமல்லி முளைப்புவிட்டிருக்கும். அப்படி முளைத்துள்ள விதைகள் தரமானதாகும், அந்த விதைகளை கொண்டு நாம் கொத்தமல்லி கீரை நடவு செய்யலாம்.

கொத்தமல்லி கீரை நடவு முறை

விதை
கொத்தமல்லி செடி வளர்ப்பு செய்வதற்கு தொட்டி அல்லது நெகிழிப்பை எடுத்துக் கொள்ளவும், அதில் நாற்பது சதவிகிதம் செம்மண், முப்பது சதவிகிதம் தேங்காய் நார்க்கழிவு, முப்பது சதவிகிதம் நன்கு மக்கிய கோழி எரு ஆகியவற்றை நன்றாக கலந்து மண்கலவையை தயார்செய்து அதில் நிரப்பி கொள்ளவும். பிறகு அதன்மீது கொத்தமல்லி விதைதனை தூவிவிடவும். பிறகு மீண்டும் சிறிது மண்கலவை இட்டு, விதை வெளியே தென்படாதபடி மூடவும், ஆனால் அதிகமாக மண்கலவை போட்டுவிடக் கூடாது, அப்படி அதிகமாக மண்கலவை விதை மீது இட்டால் கொத்தமல்லி கீரை வளர்வதற்கு கால தாமதம் ஆகலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


அடுத்து தண்ணீர், தண்ணீரை கைகளால் தெளித்துவிட வேண்டும். தண்ணீர் தெளித்து தயார் நிலையில் உள்ள தொட்டியை அப்படியே வெயிலில் வைக்க கூடாது, நிழலில் வைத்து ஈரம் காயாமல் தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஏழு நாட்களுக்குள் கொத்தமல்லி முளைக்க ஆரம்பித்துவிடும். அதன்பின்பு வெயில் படும்படி வைக்கலாம். சுமார் 20 நாட்களுக்குள் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துவிடும்.

கொத்தமல்லிக்கீரையில் பூச்சி தாக்குதல்

கொத்தமல்லி கீரை வளர்ப்பு
கொத்தமல்லிக்கீரையில் பூச்சி தாக்குதல் இலைபேன்கள், அசுவினி பூச்சிகள், மாவுபூச்சிகள், பச்சைபுழுக்கள் ஆகியவைகளே கொத்தமல்லியை தாக்கும் பூச்சிகள் ஆகும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம், அல்லது வேப்பம் எண்ணெயை இரண்டு மில்லியை ஒரு லிட்டர் அளவுள்ள நீரில் கலந்து ஒட்டு திரவம் சேர்த்து தெளிக்கலாம்.

கொத்தமல்லி கீரைகளுக்கு வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கும் போது அதிகமாக இல்லாமல், குறைவாக தெளிப்பது மிக அவசியமாகும். ஏனென்றால் கொத்தமல்லிக்கீரைகள் மிகவும் மிருதுவான தாவரம் ஆகும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொத்தமல்லி கீரையின் மருத்துவ பயன்கள்

மருத்துவ-பயன்கள்

  • கொத்தமல்லி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்கிறது. வைட்டமின் சி தோல் சம்பந்தப்பட்ட சொறி, சிரங்கு, அரிப்பு முதலிய நோய்களை சரிசெய்யவல்லது.
  • கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறையும். கொத்தமல்லி விதைகளை ஒரு நாள் ஊற வைத்து அடுத்தநாள் ஊறவைத்த நீரை குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
  • கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் அவசியமற்ற கொழுப்புகளை கரைக்க வழிவகை செய்கிறது.
  • கொத்தமல்லி கீரை குளிர்ச்சி மற்றும் உஷ்ணம் ஆகிய இரண்டு தன்மையை தனக்குள் கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், பனிக்காலத்தில் உடலுக்கு வெப்பத்தையும் தரவல்லது.
  • கொத்தமல்லி கீரைக்கு பசியினை தூண்டும் குணம் உள்ளது, பசியெடுக்காத பிரச்சினை இருக்குமேயானால் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கொத்தமல்லி கீரை சூப் சாப்பிட்டு வர பசி நன்றாக எடுக்கும்.


கொத்தமல்லி தழை சுலபமாக வளர்ப்பது எப்படி மேலும் இயற்கை முறையில் கொத்தமல்லி சாகுபடி செய்தல் எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கொத்தமல்லி வளர்ப்பு செய்து அதன் முழு பயனையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

சிட்ரஸ் ரக பழங்கள் என அறியப்படும் சாத்துக்குடி பழம், ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் பற்றி அதிகம் நாம் அறிந்திருப்போம், இதே சிட்ரஸ் ரகத்தை சேர்ந்தது தான் பப்ளிமாஸ் பழங்கள். தோட்டமாக பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்து சாகுபடி செய்பவர்கள் மிக குறைவு, வீட்டுத்தோட்டத்திலும், பண்ணைகளிலும் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பு செய்பவர்களே அதிகம். உடலுக்கு தேவையான பல நன்மைகளை தர வல்லது பப்ளிமாஸ், இதை அதிக அளவில் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
பப்ளிமாஸ்
இத்தகைய அரிதாகி வரும் பப்ளிமாஸ் பழத்தின் வளர்ப்பு முறை, பம்பளிமாஸ் பழம் சாகுபடி, பப்ளிமாஸ் பழத்தின் நன்மைகள், பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அரிய பழம் பப்ளிமாஸ்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு
வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களில் சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுக்கு அடுத்து பப்ளிமாஸ் பழங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே, பப்ளிமாஸ் அதிக புளிப்பு மற்றும் சிறிது கசப்புத்தன்மை சுவை கொண்டுள்ள காரணத்தால் இந்தியாவில் முன்பு பிரபலமாகவில்லை, இதன் தாயகமான மலேசியாவிலும் இதன் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.

அதை அனைவரும் உண்ணும் விதத்தில் ரகங்களை உருவாக்க எண்ணி 2020-ம் ஆண்டில் இனிப்புச் சுவையுள்ள இரண்டு பப்ளிமாஸ் ரகங்கள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரை எலுமிச்சை சாகுபடி மட்டுமே அதிகம் செய்யப்படுகிறது, ஆனால் இந்த பப்ளிமாஸ் பழ ரகங்களை எலுமிச்சை சாகுபடி நடைபெறும் அனைத்து இடம்தனிலும் சாகுபடி செய்யலாம்.

நடவு செய்தல்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு
பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்ய நல்ல கன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பப்ளிமாஸை ஒரு முறை நடவு செய்தோமேயானால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழத்தை அறுவடை செய்யலாம். குட்டையான மர வகைதனை சேர்ந்த இந்த ரகத்தை 15-க்கு 15 அடி வீதம் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

நல்ல முறையில் இயற்கை உரங்களை அளித்து வளர்த்தால் மூன்று ஆண்டில் வளர்ந்துவிடும், 4 – வது ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கத்தொடங்கும். ஒரு மரத்திலிருந்து சுமார் 35 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

ரகங்கள்

பம்பளிமாஸ்
அர்கா சந்திரா ரகத்தில் சதைப்பகுதியானது வெண்மை நிறத்தில் இருக்கும். அறுவடைசெய்யும் நான்காவது ஆண்டிலிருந்து ஒரு மரங்களில் இருந்து 35 – 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை எடை இருக்கக்கூடும்.
அரிய-பழம்
அர்கா ஆனந்தா ரகத்தில் பழத்தின் உள்ளே சதைப்பகுதியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். நான்காம் ஆண்டுதனில் இருந்து ஒரு மரத்திலிருந்து 45 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒன்னேகால் கிலோ வரை எடை இருக்கக்கூடும்.

பப்ளிமாஸ் பழம் விற்பனை

pomelo
பப்ளிமாஸ் பழம் விற்பனை சிறப்பாக இருக்குமிடங்கள் உத்தரப் பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் இப்பழத்தை உண்ண பயன்படுத்திகிறார்கள். மெகா சைஸில் பப்ளிமாஸ் பழங்கள் இங்கு அதிக அளவில் விரும்பப்படுகிறது. மேலும் பப்ளிமாஸ் பழத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.

பப்ளிமாஸ் பழத்தின் தேவை அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து அங்கே விற்பனை செய்தோமேயானால் நல்ல வருமானம் ஈட்டலாம். இதற்கென பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது, அறுவடை செய்யும் முறையும் எளிது. பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு தனில் பூச்சித்தாக்குதலும் பெருமளவில் இருக்காது.

பம்பளிமாஸ் பழம் பயன்கள்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு

  • கோடைகாலத்தில் வெயிலில் அலைபவர்கள், அதிக சூடான பகுதி தனில் வேலை செய்பவர்களின் உடல் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும், இவர்கள் எல்லாம் பம்பளிமாஸ் பழத்தின் சாறை குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும்.
  • பம்பளிமாஸ் பழத்தின் சாறை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
  • வைட்டமின் எ சத்து உள்ளதால் மாலைக்கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிற கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
  • பப்ளிமாஸ் பழம் ஜூஸ் குடிப்பதால் இரத்த சோகையை அடியோடு போக்கலாம்.
  • காமாலை நோயின் தாக்கத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது இந்த அரிய பழம் பப்ளிமாஸ்.


பப்ளிமாஸ் மரம் வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், அழிவின் விளிம்பில் பப்ளிமாஸ் பழம் உள்ளது, நேர்த்தியான முறையில் வளர்த்து பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் அனைத்தையும் பெற்று நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம்.

கொய்யா வளர்ப்பு , இன்றளவும் கிராமத்து மக்களை தாண்டி, பெரும்பாலும் நகரத்து உணவு பழக்கவழக்கங்களில் முழுமையாக சென்றடையவில்லை. அதற்கு காரணம், தோற்றம் மற்றும் உட்புறமுள்ள விதைகட்டமைப்பு. ஆப்பிள் பழம் அறுவடையாகி பல மாதங்கள் ஆனாலும் அதன் தோற்றத்தால் ஈர்க்கப்படும் மக்கள், பறித்தமாத்திரம் கைக்கு வரும் கொய்யா கனியால் ஈர்க்கப்படவில்லை. தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகளும், விவசாயி பெருங்குடி மக்களும் இப்போதுதான் அதிகமாக கொய்யாவை விளைவிக்க முன்வந்துள்ளனர்.
GUAVA
இதனால் கொய்யா தோட்டம் வளர்ப்பு பிரசத்தி பெற்று வருகிறது. மருத்துவத்திலும், கொய்யா கனியை தினமும் உண்ணுங்கள், நான்கு ஆரஞ்சு பழத்திற்கு ஈடானது ஒரு கொய்யா, மேலும் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது என கொய்யாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க கொய்யா மரம் வளர்ப்பு எப்படி, கொய்யா சாகுபடி, கொய்யா பழ நன்மைகள், மாடித்தோட்டத்தில் கொய்யா செடி வளர்ப்பு மேலும் அதன் வகைகளை இக்கட்டுரையில் காணலாம்.

நாட்டுரக கொய்யா வளர்ப்பு

நாட்டுரக-கொய்யா
கொய்யா ஒட்டு செடி மூலமாக விளைந்த பழம் தான் சமீபகாலமாக காணமுடிகிறது. இத்தகைய ஒட்டு ரக கொய்யா வகைகள் வரும்வரையில் இருந்த நாட்டுரக கொய்யா மிகவும் சிறப்பு மிக்கது, நாட்டுரக கொய்யா பழங்களில் சதைப்பகுதியானது மிகக் குறைவு, விதைகள் பெரிதாக இருக்கும், மேலும் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சதைப் பகுதி இருப்பினும், அளவில் சிறியதாக இருந்தாலும் அளப்பரிய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள கல்வில்லோ எனும் நகரம் தான் கொய்யாவின் தலைநகரம் என்று கூறப்படுகிறது. பல வித ரகங்களில் கொய்யா இங்கு காணப்படுகிறது. அந்த நகரத்தின் மொத்த பொருளாதாரமும் கொய்யாவையே முழுமையாக நம்பியுள்ளது. நம்முடைய தமிழ்நாட்டில், ஆயக்குடி எனும் கிராமம் பழனி அருகே உள்ளது, அந்த கிராமத்தின் பெருமளவு பொருளாதாரம் கொய்யாவை நம்பியுள்ளது. உத்தரப் பிரதேச தலைநகரமான லக்னோவே வட இந்தியாவின் கொய்யாவின் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. உலகளவிலான புள்ளிவிவரங்களை ஆராந்துபார்த்தால், உலகிலேயே இந்தியாவில் தான் பெருமளவு கொய்யா உற்பத்தி செய்யப்படுகிறது.

மாடித்தோட்டத்தில் கொய்யா செடி வளர்ப்பு

கொய்யா-வளர்ப்பு
கொய்யாவானது, விதைகள் மூலமாக விளைவிக்கப்படுவதில்லை. பதியன்கள் மூலமாகவே கொய்யா விளைவிக்கப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், கொய்யா நடவு செய்ய ஏற்ற காலமாகும். கொய்யா செடியை, பரந்து படரும் செடியாக வளரும்படி கவாத்து செய்து வளர்த்தோமேயானால், கொய்யா தனில் அதிக மகசூல் எடுக்க முடியும் மேலும் நல்ல அறுவடையும் இருக்கும். தரமான காய்க்கும் திறனும், அதிக மகசூலும், பருவம் மீறாது காய்க்கும் தன்னமையுடைய தாய் செடியில் இருந்து பதியன் போடப்பட்ட கொய்யா நாற்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், அதை செறிவுமிக்க மண்கலவை நிரப்பிய தொட்டியில் நட்டு வைக்கவும். நாற்றை நட்ட உடன் மண்ணானது கீழிறங்கி இறுக்கம் அடையும் வரை தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு, மண்ணின் உடைய தன்மை மற்றும் பருவ காலநிலை போன்றவற்றை கருத்தில்கொண்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

உரமேலாண்மை

கொய்யா-இலை
செப்டம்பர், அக்டோபர் மாதம்தனில் கொய்யா செடிக்கு நன்கு மக்கிய தொழு உரம், மண் புழு உரம் அல்லது தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை சமபங்கு கலந்து கொய்யாவின் வேர்ப்பகுதியில் குழி பறித்து அதில் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும் இதேபோல், வருடத்தில் இருமுறை செய்யவும் . கொய்யா பதியம் போட்ட செடி என்பதனால், நட்ட மூன்று மாதத்தில் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். முப்பது ஆண்டுகள் வரை பலன்களை தர வல்லது கொய்யா.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொய்யா மரம் பராமரிப்பு

கொய்யா-ஒட்டு-செடி
முதல் ஆண்டில் கொய்யா மரம்தனில் தோன்றும் பூக்கள் அனைத்தையும் கிள்ளிவிட வேண்டும். பின்பு, அடுத்தண்டில் பூங்கொத்து வளர்ந்தபிறகு விட்டுவிடலாம். கொய்யா செடியின் அடிப்புறத்தில், குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கிளைகளை கவாத்து கத்திரியை கொண்டு வெட்டி நீக்க விட வேண்டும். மேற்புறம் நோக்கி நீண்டு வளரும் கிளையின் நுனியை வெட்டி நீக்கிவிட்டு பக்கவாட்டு வளர்ச்சிதனை அதிகமாக்க வேண்டும். ஒரு முறை காய்ப்பு முடிந்த பிறகு காய்ந்துபோன மற்றும் உபயோகமற்ற குச்சிகளை நீக்கவும். இதில் துளிர்த்து வரும் புதிய பக்கக்கிளைகள் எல்லாம் நிறைவான மகசூலை கொடுக்கும். கொய்யா ஆண்டு முழுவதும் பலன் தந்தாலும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத பருவத்திலும், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத பருவத்திலும் அதிக காய்க்கும். பூ பூத்தபிறகு ஐந்து மாதங்களில் கொய்யா பழங்கள் கிடைக்கும்.

கொய்யா பழ நன்மைகள்

அதிக-மகசூல்

  • மலைவாழ் மக்கள் இன்றளவும் கொய்யா விவசாயம் சிறப்பாக செய்து வருகின்றனர். கொய்யா இலையை நன்கு அரைத்துப் பூசி, எந்தவிதப் புண்களையும் ஆற்றிக்கொள்ள பயன்படுத்துகின்றனர்.
  • காய்ச்சல் சரியாக கொய்யா இலையில் கசாயம் வைத்து குடிக்கலாம்.
  • கொய்யா இலையை மென்று திண்பதன் மூலம், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரி ஆகும்.
  • கொய்யா இலை தலைச் சாயம் தயாரிக்க பயன்படுகிறது.
  • நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது.

  • பல்வேறு மருத்துவ பயன்களையும், சிறப்புகளையும் உள்ளடக்கியது கொய்யா. வருடம் முழுதும் எளிதில் கிடைக்க கூடிய இத்தகைய சிறந்த கொய்யாப் பழத்தை இயற்கையான முறையில் வளர்த்து அதனுடைய பயன் அனைத்தும் அடைய வாழ்த்துகிறோம்.

மஞ்சள் வளர்ப்பு சமீபகாலமாக நமது நாட்டில் பெரிய அங்கீகாரம் பெற ஆரம்பித்திருக்கிறது. இந்த மூலிகை இந்தியா, இந்தோனேசியாவின் இயல் தாவரம் ஆகும். இந்த மஞ்சள் மூலிகையானது ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படும். மஞ்சள் தாவரத்தின் வேர் கிழங்கின் அறிய பண்புபை மக்கள் உணர ஆரம்பித்திருப்பதுதான், அதன் சமீபத்திய பிரபலத்துக்குக் காரணமாக விளங்குகிறது. மஞ்சளுக்கு இந்தியக் குங்குமப்பூ எனும் பெயரும் இருக்கிறது.
மஞ்சள்-சாகுபடி
மஞ்சள் செடி வளர்ப்பு, மஞ்சள் சாகுபடி செய்யும் முறை, மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு, மஞ்சள் குலை செடி வளர்ப்பு, மஞ்சள் பயிரில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள், மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும், மஞ்சள் வகைகள், மஞ்சள் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மஞ்சளில் விதை தேர்வு

அறுவடை
மண்கலவையின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றை பொருத்து நல்ல மஞ்சள் வகைகளை விதைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்கையான முறைகளில் தேர்ந்தெடுத்த விதைகள் தான் நல்லது. விரலி மஞ்சள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம்.

மஞ்சள் வகைகள்

வகைகள்
கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், என மஞ்சளில் பல வகைகள் இருக்கிறது. அனைத்து மஞ்சளும் வெவ்வேறு வகையான பயன்களை தர வல்லது.

மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு

மஞ்சள்-வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பது எப்படி என்று காணலாம், மஞ்சள் கிழங்கை உடைத்து 2 இன்ச் ஆழத்தில் நெகிழிப்பையில் அல்லது தொட்டியில் வைத்தால் மஞ்சள் செடி முளைத்து வரும். மஞ்சள் கிழங்கு முளைத்து வர ஒரு மாதம் கூட ஆகலாம்.

நெகிழிப்பையை பொறுத்தவரை ஒன்னேகால் அடி பை சரியாக இருக்கும். ஒரு பையில் ஒரு செடியை மட்டுமே வளர்க்க வேண்டும். கிழங்கு வகையை பொறுத்தவரை பை அல்லது தொட்டியில் வளர்க்கும் போது கூடுதல் உரமேலாண்மை மிக அவசியம். நல்ல செறிவுள்ள மண்கலவையை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பஞ்சகாவியாவை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்கலாம். மஞ்சள் அறுவடை செய்ய 8 முதல் 10 மாதங்கள் ஆகும். மஞ்சள் 60 சென்டிமீட்டர் முதல் 90 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மையுடையது.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மஞ்சள் கிழங்கு அறுவடை

விதை-தேர்வு
8 முதல் 10 மாதங்களுக்கு பிறகு மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை நிறம் மாறி இலையானது மஞ்சள் நிறமாக மாறி வாடத் தொடங்கும். அச்சமயம் அதன் தாள்களை அறுத்துவிடலாம், இதன் பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மஞ்சள் கிழங்கை சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.

மஞ்சளின் பயன்கள்

மஞ்சளின்-பயன்கள்

  • கப்பு மஞ்சள், புண்களை ஆற்றவும் மேலும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம்.
  • கறி மஞ்சள் என்பது நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்துவது.
  • விரலி மஞ்சளைப் நன்கு பொடிசெய்து, தினசரி பாலோடு கலந்து குடித்து வந்தால், சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வைக்கலாம்.
  • மர மஞ்சள் தனை வேப்பிலையுடன் சேர்த்து நன்கு அரைத்துப் பூசி வர அம்மை நோய் சரியாகும்.
  • கஸ்தூரி மஞ்சள் வளர்ப்பு பிரபலமாக காரணம், அது முகத்திற்கு பொலிவு சேர்க்க பயன்படுகிறது.
  • சளி பிரச்சனையால் சிரமப்படுகிறவர்கள், தினமும் காலை வேளையில் மூக்கடைப்பால் சிரமப்படுகிறவர்கள், மஞ்சள் மற்றும் அதனுடன் வேப்பிலை, தேன், மிளகு இவற்றை நன்கு அரைத்து உட்கொள்வதன் மூலம் விரைவில் பலனடையலாம்.

  • மஞ்சள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பொங்கல் மஞ்சள் ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த இந்த சஞ்சீவினியை (மஞ்சளை) பாதுகாத்து, மஞ்சள் இருக்க அஞ்சேல் எனும் அவர்களின் கூற்றிற்கு ஏற்ப, அனைவரும் அதை பயன்படுத்தி நன்மைகள் பல பெற வாழ்த்துகிறோம்

புடலை வளர்ப்பு மாடித்தோட்டங்களிலே மிக எளிதாக செய்யலாம். நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் நிறைய அற்புதமான காய்கறி, பழ வகைகள் பல இருந்தாலும் நவ நாகரிக வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக அவை பெருன்பான்மை மக்களால் உணவுக்கு பயன்படுத்தப்படாமல் ஒதுக்கப்படுகின்றன, அப்படி அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் அருமை பல நிறைந்த புடலங்காய் வளர்ப்பு முறை, புடலங்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
காய்

மாடித்தோட்டத்தில் புடலங்காய் வளர்ப்பது எப்படி?

மாடித்தோட்டம் புடலங்காய் செடி வளர்ப்பு முறைக்கு பின்வரும் பொருட்கள் தேவை :
மாடித்தோட்டம்

  • நாட்டு ரக புடலங்காய் விதைகள் 25 – 30 வரை.
  • பழைய நெகிழி சாக்கு பைகள் அல்லது 4 அடி உயரத்திற்கும் மேலாக உள்ள மண் தொட்டிகள்.
  • சிறிது அளவு ஆற்றுமணல், செம்மண், தென்னைநார்க்கழிவு சிறிது, மண்புழு உரம் மற்றும் பஞ்சகாவ்யா.
  • நீர் தெளிக்க உதவுகின்ற பூவாளி தெளிப்பான்கள் மற்றும் புடலங்காய் பந்தல் அமைப்பதற்கான உபகரணங்கள்.
  • புடலை விதையை விதைப்பதற்கு முன்பு சாக்கு பை அல்லது மண்சட்டியில் 2 பங்கு அளவு தேங்காயின் நார், நன்கு மக்கிய மாட்டு எரு 1 பங்கு ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து சாக்கு பை அல்லது தொட்டியில் இட்டு, ஒரு 11 நாட்களுக்கு நன்கு மட்கி போக விட வேண்டும். இதன் பிறகு ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்த புடலை விதைகளை இந்த கலவையில் விதைக்கலாம்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now


    புடலங்காய் உயரமாக வளரக்கூடிய கொடிவகையைச் சார்ந்த பயிர், அதிகபட்சமாக ஒரு தொட்டியில் 4 முதல் 5 புடலங்காய் விதைகளை விதைப்பு செய்யலாம். புடலங்காய் விதைகளை விதைத்த பின் தண்ணீர் தெளிப்பான் கொண்டு தண்ணீர் விட வேண்டும். அதன் பின் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

    பந்தல் அமைத்து புடலை வளர்ப்பு

    புடலை-வளர்ப்பு
    புடலங்காய் நன்கு வளர பந்தல் அமைப்பது மிகவும் முக்கியம், உங்கள் வீட்டு மாடியில் நான்கு புறங்களில் நான்கு மண் தொட்டிகளில் மணல் மற்றும் மண் இரண்டையும் நன்றாக கலந்து நிரப்பி, அதில் தடிமன் கொண்ட ஒரே உயரமுடைய நான்கு மூங்கில் குச்சிகளை நட்டு வைக்கவும். இதன்பிறகு கயிறு அல்லது இரும்பு கம்பியை கொண்டு அந்த நான்கு புறமும் இருக்கும் குச்சிகளை இணைத்து, பிறகு குறுக்கும் நெடுக்குமாக பந்தல் போட ஏதுவாக கட்டிவிட வேண்டும்.

    இதன் பின் நாம் புடலை விதையை போட்டு வளர்ந்துள்ள இளம் புடலை பயிர்கள் இருக்கின்ற தொட்டி அல்லது பைகளை அந்த நான்கு புறங்களிலும் தரையில் இருந்து உயரமாக இருக்கும் வகையில் சிறிய கற்களை வைத்து, அதன் மீது புடலை தொட்டி அல்லது சாக்கு பைகளை வைத்து, அந்த மூங்கில் குச்சிகளில் புடலங்காய் கொடி படர்ந்து போகுமாறு செய்து வைக்கவேண்டும்.

    பூச்சி தாக்குதல்

    புடலங்காய் செடி வளருகின்ற பருவத்தில் நிறைய பூச்சிகள் அந்த கொடியினை தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது, இதனால் புடலை வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. இந்தவகை பூச்சி தாக்குதல்களை சமாளிக்க இயற்கையான பூச்சி விரட்டி மருந்தான வேப்பெண்ணெய் கரைசலை மாதம் ஒரு முறை புடலை செடியின் மீது சிறிது அளவு தெளித்து வரவேண்டும், வேப்ப இலைகளை பறித்து நன்கு காயவைத்து அவற்றை பொடியாக்கி புடலை செடியின் வேர் பகுதிகளில் போட்டால், அவை அந்த கொடிகளுக்கு இயற்கை உரமாகவும், பூச்சிகளின் தாக்குதலை தடுக்கும் அரணாக செயல்படுகிறது.

    neem oil icon

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    புடலங்காய் கொடி வளர்ப்பது எப்படி?

    புடலங்காய்-செடி
    புடலங்காய் வளரும் காலத்தில் அந்த கொடியின் நுனிக்கிளைகளை அவ்வப்போது வெட்டுவதால் அதிகளவு புடலை கொடிகள் பரவுவதற்கு சூழ்நிலையை உண்டாக்குகிறது, மேலும் 2 வாரத்திற்கு ஒருமுறை புடலங்காய் செடி இருக்கும் மண்தொட்டியின் உள்ள மண்ணை நன்கு கிளறி விடுவதன் மூலம் அந்த மண் ஊட்டம் பெறுவதுமட்டுமின்றி, புடலங்காய் செடி விரைவில் வளர உதவிபுரியும். மேலும் பஞ்சகவ்யா திரவத்தை 1 லிட்டர் நீரில் 50 மில்லி அளவு சேர்த்து புடலை செடியின் வேர் பகுதிகளில் ஊற்றினால் புடலை செடியில் அதிகமாக பூக்கள் பூக்கும்.

    மாடியில் புடலை செடியை வளர்க்கும் போது அந்த புடலை செடி அதிகபட்சம் 3 மாதங்கள் வரை மட்டுமே பலனை தரும், அதன் பின் அந்த செடியில் காய்ந்து போன கிளைகள் மற்றும் இலையை வெட்டி, அது வளரும் தொட்டியின் வேர்ப்பகுதியில் இயற்கை உரமாயிட்டு பயன்படுத்தலாம். புடலங்காய்கள் நன்கு வளர்கின்றன தருணத்தில், காய்களை முற்ற விடாமல் சரியான
    காலத்தில் காய்களை அறுவடை செய்து பயன்படுத்தவும்.

    புடலை வகைகள்

    கொடிகள்
    புடலங்காயில் வகைகள் பல இருக்கிறது. கொத்துப்புடலை, பன்றி புடலை, நாய்ப்புடலை, பாம்பு புடலை, குட்டை புடலை, பேய்ப்புடலை என நிறைய வகைகள் இருக்கிறது, ஆனால் பலரும் சமையலில் புடலையை அடிக்கடி சேர்த்துகொள்வதில்லை, ஏனெனில் தற்போது நவீன உணவுகள் வந்த பிறகு புடலங்காயை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    புடலங்காய் பயன்கள்

    புடலை-வளர்ப்பு-1

  • வயிற்றுப்புண் மற்றும் தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வர அதன் பாதிப்புகள் குறையும்.
  • புடலையில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், மலச்சிக்கலை சரிசெய்யும்.
  • நரம்புகளுக்கு புத்துயிர் கொடுத்து ஞாபக திறனை அதிகரிக்கும்.
  • சருமத்திற்கு அதிக பளபளப்பு தன்மையை கொடுக்கும்.
  • காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுத்தால் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகும்.
  • உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
  • புடலை விதைப்பது முதல் அறுவடை வரை இக்கட்டுரையில் கண்டோம். இத்தகைய ஆரோக்கியம் தரும் புடலை வளர்த்து பயன் பல பெறுவோம்.

    பச்சை பட்டாணி வளர்ப்பு மற்ற செடி வளர்ப்பிலிருந்து சற்று வேறுபட்டது, ஏனெனில் விரைவில் பலனை தரக்கூடியது. பொதுவாக நாம் பச்சை பட்டாணியை கடைகளில் வாங்கி தான் சமைத்து சாப்பிடுவோம், ஆனால் அதை வீட்டில் முளைக்க வைத்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி திருப்தியை தரும். அதைவிட, இயற்கை முறையில் விளைவித்து சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை நல்ககூடியது.
    வளர்க்கும் முறை
    மகத்துவமிக்க இந்த பச்சைபட்டாணி வளர்ப்பது எப்படி, பச்சை பட்டாணி பயன்கள்,எப்படி வீட்டிலேயே பச்சை பட்டாணி செடி வளர்க்கலாம் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

    மாடி தோட்டத்தில் பச்சை பட்டாணி எளிதாக வளர்க்கும் முறை

    அறுவடை 1
    பச்சை பட்டாணியை விதைப்பதற்கு முன்பு, அதற்கு தொட்டி தயார் செய்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் உங்களிடம் நெகிழிப்பை அல்லது அகலமான தொட்டி இருக்குமேயானால் அதை எடுத்துக்கொள்ளவும். பட்டாணியின் வேர்கள் அதிகம் ஆழமாக போகாது, எனவே நீங்கள் தொட்டியில் அதிகமாக மண் நிரப்ப தேவையில்லை. ஒரு நெகிழிப்பையை எடுத்து அதில் பாதி மண்கலவை சேர்த்தால் போதும்.

    5kg potting mix icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

    மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

     Buy Now

    பச்சைபட்டாணி விதைப்பு முறை

    பச்சை-பட்டாணி-வளர்ப்பு
    பச்சை பட்டாணியை பயிரிட, உங்களுக்கு பச்சை பட்டாணி தேவைப்படும், அது உலர்ந்த பச்சை பட்டாணியாக இருந்தாலும் கூட அதையும் பயன்படுத்தலாம். அந்த பட்டாணியை ஒரு இரவு முழுதும் தண்ணீரில் ஊறவைக்கவும், பிறகு அந்த பச்சை பட்டாணியை நீரில் இருந்து வடிக்கட்டி எடுத்துக்கொண்டு, ஒரு காட்டன் துணியின் உள்ளே முடிந்து வைத்திருக்கவேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு பார்த்தால் அவை முளைப்பு விட்டு வளர்ந்திருக்கும்.

    முளைகட்டிய பச்சை பட்டாணிதனை, நீங்கள் தயார் நிலையில் வைத்திருந்த அந்த தொட்டியில் பட்டாணியை விதைப்பு செய்ய வேண்டியது தான், ஒவ்வொரு பட்டாணிக்கும் நான்கு அல்லது ஐந்து இன்ச் இடைவெளி விட்டு அடுத்த பட்டாணிதனை விதைக்கவும்.

    முக்கியமாக கவனிக்க வேண்டியது பட்டாணியை விதைக்கும்பொழுது முளைப்பு கீழிருக்கும்படி விதைக்க வேண்டும், விதைத்த பிறகு மண்ணை சற்று லேசாக வைத்து மூடினாலே போதுமானது. பிறகு அதன் மீது சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும்.

    பூச்சி தாக்குதல் மற்றும் உரமேலாண்மை

    பச்சை பட்டாணி பூச்சி விரட்டி
    பட்டாணிச்செடி வளர்ப்பு முறையில், பச்சை பட்டாணி ஆரோக்கியமாக வளர எந்தவித பூச்சி தொல்லையும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். பூச்சிகள் வராமல் தடுக்க, வேப்பம்புண்ணாக்கை அந்த தொட்டியில் உள்ள மண் கலவையின் மேல் சிறிது சேர்த்து கிளறிவிட்டால் போதுமானது, பட்டாணிச்செடி நல்ல முறையில் வளரும். மேலும் வீட்டில் மீதமாகும் காய்கறி கழிவுகள் மற்றும் அரிசி, பருப்பு கழுவிய நீரை அதில் தினமும் சேர்ப்பதன் மூலமாக சிறந்த முறையில் வளரும்.

    1kg neem cake

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    அறுவடை

    உலர்ந்த பச்சை பட்டாணி
    899789720

    பட்டாணி செடிகள் பொதுவாகவே 35 நாட்கள் அல்லது 40 நாட்களில் பூ வைக்கத்தொடங்கி விடும். பட்டாணி செடியானது 60 அல்லது 70 நாட்களில் பெருன்பான்மை வளர்ச்சியை அடைந்து விடும். இந்த செடிகள் முழுதும் வளர்ந்த பின்பு 80 ஆவது நாட்களில் பச்சை பட்டாணியை நீங்கள் அறுவடை செய்யலாம். கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி நீங்கள் பட்டாணி சாகுபடி செய்யலாம்.

    பச்சை பட்டாணி மருத்துவ குணங்கள்

    பச்சை பட்டாணி பயன்கள்
    Green peas
    • வளரும் குழந்தைகள், தினசரி மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் மூளை பலம் பெறும், நியாபக சக்தி மேம்படும். வெண்டைக்காயை விட மூன்று மடங்கு அதிகப்படியான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருக்கிறது, இது குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு உயர்த்தும்.
    • உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொண்டால் போதும், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிமையையும் பெறுவர். மேலும் உடலுக்குச் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். பச்சை பட்டாணி சூப் செய்து கூட குடிக்கலாம்.
    • நுரையீரலுக்கும், இதயத்திற்கும் தேவையான பலத்தைக் கொடுக்கவல்லது பச்சைப் பட்டாணி. எனவே, தினந்தோறும் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது.
    • ஆண்களுக்கு மலட்டுத் தன்மை பாதிப்பிலிருந்து தப்பிக்க பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் சேர்த்து கொள்ளலாம்.
    • மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிடவைத்தால், அவர்கள் விரைவில் குணமடைய வாய்ப்புகள் அதிகம்.

    நீங்களும் வீட்டில் பச்சை பட்டாணி செடி வளர்ப்பு செய்து , அதன் எல்லா நன்மைகளையும் பெற்று, அந்த செடி போல் போல் உங்கள் ஆரோக்கியமும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

    முருங்கை வளர்ப்பு செய்ய வழிவகைகள் மிக எளிதாகிவிட்டது. பல விவசாயிகளும் இயற்கை முறை முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். முருங்கை மரத்தின் இலை, பூ, காய்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் மிகுந்தது. இதில் தாது உப்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்துக்கள், புரோட்டீன், பொட்டாசியம், போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கிறது.
    முருங்கை-வளர்ப்பு
    முருங்கையில் நாட்டு முருங்கை மற்றும் செடிமுருங்கை என இரு வகைகள் இருக்கிறது. முருங்கையில் சுவையும், மருத்துவக் குணமும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள்காலம் இரு ஆண்டுகள் வரை. நாட்டு முருங்கையின் ஆயுள்காலம் ஐம்பது ஆண்டுகள் வரை. செடிமுருங்கை மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்து வளர்க்கலாம், நாட்டுமுருங்கை விதை மூலமாகவும், போத்துக்கள் மூலம் பதியம் போட்டும் வளர்க்கலாம். முருங்கைக்கு ஜூன் மாதம் முருங்கை பட்டம் மாதம் ஆகும்.

    மாடித் தோட்டத்திலேயே செடி முருங்கை வளர்ப்பது எப்படி , ஆரம்பத்திலிருந்து அறுவடை வரை என்ன செய்ய வேண்டும், மண் கலவை தயாரித்தல், உரங்கள் வைக்கும் முறை, பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு, அதிகம் அறுவடை எடுக்க என்ன செய்யவேண்டும், முருங்கை வளர்ப்பு சிறந்தது ஏன் ? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

    மாடித்தோட்டத்தில் செடி முருங்கை வளர்ப்பு

    செடி-முருங்கை
    மாடித்தோட்டத்தில் செடி முருங்கையை வளர்ப்பு செய்ய ஐம்பது லிட்டர் கேன் வசதியாக இருக்கும். வளர்ப்பு பைகளில் வளர்க்க வளர்ப்பு பை 2 X 2 இருக்குமாறு தேர்வு செய்வது நல்லது. மண் கலவை பொறுத்தவரையில் மணல் கலந்த, செம்மண்ணில் நன்றாக வளரும். உங்களிடம் செம்மண் இல்லையென்றாலும், தோட்டத்தின் மண் பயன்படுத்தலாம். இரண்டு பங்கு மண், ஒரு பங்கு மண்புழு உரம், ஒரு மடங்கு வேப்பம் புண்ணாக்கு, எடுத்துக்கொண்டு, இவை எல்லாம் நன்றாக கலந்து ஒன்பது நாட்கள் ஈரத்தன்மையோடு வைத்திருக்கவும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் அனைத்தும் வளர்ந்து செடி வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். ஒன்பது நாட்களுக்குப்பிறகு விதை விதைக்கலாம்.

    5kg cocopeat icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

    உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

     Buy Now


    செடிமுருங்கையை விதைத்தபின் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு நாட்களில் முளைத்து வர தொடங்கும். செடிமுருங்கையை விதைத்து 30 நாட்களில் ஒரு அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கும். அப்போது உயிர் உரங்கள், மண்புழு உரத்தை மண் கலவைதனில் சேர்க்கவும். செடி முருங்கை விதைத்து 40 – இல் இருந்து 50 நாட்களில் மூன்று அடி வரை வளர்ந்துவிடும். அச்சமயத்தில் நுனியை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் நிறைய வளர்ந்து, கீரை அதிகமாக கிடைக்கும். இவ்வேளையில் செடி முருங்கையின் வேருக்கு அருகில் பெருங்காயத்தை புதைக்கவும். இதனால், பெருங்காயச்சாறு செடியின் வேர்த்தண்டு முழுதும் பரவுவதால், கம்பளி பூச்சி தாக்குதலில் இருந்து செடி முருங்கையை எளிதாக பாதுகாக்கலாம். விதைத்த 180 நாட்களில் செடி முருங்கையானது காய்க்கத்தொடங்கும். ஆறு மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும்.

    காவாத்து செய்தல்

    காவாத்து-செய்தல்
    நடவு முதல் கவாத்து வரை பராமரிப்பு அவசியம். முருங்கை வளர்ப்பு முறை தனில் முருங்கை காய்த்து முடித்தபிறகு கவாத்து செய்தல் முக்கியமாகும். அப்போது தான் பக்கக் கிளைகள் மிகுந்து, எல்லா கிளைதனிலும் காய்க்க தொடங்கும். கவாத்து செய்தபிறகு கண்டிப்பாக இயற்கை உரங்கள் இடுவது அவசியம். இதனால் மீண்டும் நிறைய காய் காய்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

    பூச்சி தாக்குதல் மற்றும் பராமரிப்பு

    பராமரிப்பு
    செடி முருங்கையில் முதலில் தோன்றுவது இலைப்பேன், இவற்றை நீரை பீச்சி அடித்தால் கீழே உதிர்ந்து விடும். அடுத்ததாக, பிணைப்பு புழு உங்களது மரத்தில் இலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இலைகள் வெண்மை தன்மையாக இருக்கும், அந்த இலைகளின் நடுவில் புழுக்கள் காணப்படும், இதுவே இலை பிணைப்பு புழு ஆகும். இதற்கு வேப்ப எண்ணெய் (அ) பூண்டு மிளகாய் கரைசல் தெளித்தாலே போதுமானது. அடுத்ததாக மொட்டுதனை சேதம் செய்யும் மொட்டுப் புழு தாக்குதல் வரும், இது மொட்டுக்கள் தோன்றும்பொழுதே அதிகம் துளைத்து அதிலுள்ள சத்துக்களை எடுத்து உயிர்வாழும். இதனால் காய்களே தோன்றாமலே போய்விடும். இவற்றிற்கு பெருங்காயத்தை நீரில் கலந்து தெளிக்கலாம். இம்முறைகளை பின்பற்றினால் செடி முருங்கை சாகுபடி நன்றாக இருக்கும்.

    5 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    முருங்கை பயன்கள்

    முருங்கை-பயன்கள்

    • முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
    • முருங்கை கீரையுடைய பொடியானது மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகின்றது. மேலும் மன நலம், நியாபக சக்தி ஆகியவற்றைப் மேம்படுத்துகிறது.
    • முருங்கைக்காய் வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.
    • முருங்கைக்காய் உடலுக்கு சிறந்த வலுவைக் கொடுக்க வல்லது.
    • வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக உண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தமடையும்.


    முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போக மாட்டான் என்றொரு பழமொழி உண்டு எனும் நம் முன்னோர்களின் வாக்கிற்கு ஏற்ப முருங்கையை நட்டு அதன் பயன்களை முழுமையாக பெற்றவர்கள் வயதான பின்பும் கோலூன்றி நடக்கத் தேவை இருக்காது, ஏனென்றால் அவ்வளவு அளப்பரிய சத்துக்கள் முருங்கையில் இருக்கிறது. முருங்கை மரம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொண்டோம் . நீங்களும் முருங்கையை வளர்த்து அதன் பயன்கள் முழுமையாக பெற வாழ்த்துகிறோம்.

    குண்டுமல்லி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது மிகவும் எளிதாகும். பழங்காலத்தில் இருந்தே பெண்கள் பூக்கள் சூடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். அதிலும் குண்டுமல்லி பூ என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் பூக்களை சூடிக்கொள்ள மட்டும் இல்லாமல் பூச்செடி வளர்க்கவும் பிடிக்கும்.

    gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now


    குண்டுமல்லி, ஜாதிமல்லி, கரும் முல்லை, ஊசி மல்லி, நாக மல்லி என இருபத்தியாறு வகைகள் உண்டு. குண்டுமல்லி செடி வளர்க்க நினைப்பவர்கள் எந்த மாதிரியான மாதத்தில் குண்டுமல்லி செடி நடலாம் என்று தெரியாமல் இருப்பார்கள், ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்றதாகும்.

    குண்டுமல்லி பூக்கள்
    பெரும்பாலும் அனைவரும் ரோஜா செடி, மல்லிகைபூச்செடி போன்றவற்றை வளர்க்க விரும்புவார்கள். மல்லிகை பூ செடி வளர்ப்பது எப்படி, மல்லிகை பூ செடி பதியம் போடுவது எப்படி, குண்டுமல்லி செடியில் அதிகமான பூ வர என்ன செய்யலாம், மல்லிகை செடி உற்பத்தி போன்றவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

    குண்டுமல்லி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு – உற்பத்தி

    குண்டுமல்லி பூ
    குண்டுமல்லி செடி வளர்ப்பு பொறுத்தவரை பராமரிப்பு மிகவும் அவசியம். மல்லிகைக்கு மட்டுமல்லாமல் அனைத்து பூக்களுக்குமே பராமரிப்பு முக்கியம். மல்லி செடியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு, ஒன்று கொடி வகை, மற்றொன்று செடி வகை. கொடி வகை செடிகள் வீட்டில் வளர்க்க தகுந்ததாகும். தோட்டத்தில் பயிர் செய்ய செடி வகை சிறந்தது.

    பயிர் நட வேண்டிய நிலத்தை 2 அல்லது 3 முறையோ நன்கு உழ வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் பயிர் நட ஏற்றவை. பூக்கள் பூப்பதற்கு இயற்கை தொழு உரங்கள், மண்புழு உரம், காய்கறி கழிவுகள், புளித்த மோர் கரைசல். தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், எருக்கம் இலை கரைசல், கடலைப்பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு கரைசல் போன்றவை சிறந்தது. மல்லிகை செடியை கவாத்து செய்வது அவசியம்.

    மல்லிகை செடியை கண்டிப்பாக வெயில் படும்படியான இடத்தில வைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 6400 பதியங்கள் தேவைப்படும். செடிகள் மார்ச் முதல் நவம்பர் மாதங்களில் பூக்க தொடங்கும். என்றாலும் இரண்டாம் ஆண்டில் இருந்து சராசரியான விளைச்சல் இருக்கும். நன்கு வளர்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்து விட வேண்டும். எக்டருக்கு 875௦ கிலோ மொட்டுக்கள் வரை கிடைக்கும்.

    மல்லிகை பூ செடி பதியம்

    குண்டுமல்லி செடி பதியம்
    மல்லிகை பூ செடி பதியம் போடுவது மிகவும் எளிதாகும். மல்லிகை செடி பதியம் போட அக்டோபர், நவம்பர் மாதங்கள் சிறந்தவையாகும். மல்லிகை பூ செடி பதியம் போடும்போது தடிமனான கிளையாக இருப்பது நல்லது. கிளைகளை மண்ணில் ஊன்றும்போது நேராக இல்லாமல் 45 டிகிரி சாய்வாக வைக்க வேண்டும். பதியம் போடும்போது பட்டை தூள், கற்றாழை ஜெல் போன்றவற்றில் குச்சிகளை நனைத்து ஊன்றலாம்.

    மல்லிகை செடி பதியம் போடும்போது கண்டிப்பாக தண்டுகளின் மேல்பாகம் வெயில் படாதவாறு இருக்க வேண்டும். பதியம் போட்ட பிறகு செடியை நிழலில் வைக்க வேண்டும். பதியம் போட்டு நன்றாக துளிர் விட்ட பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

    எளிமையான முறையில் வீட்டில் குண்டுமல்லி பூச்செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

    குண்டுமல்லி செடி வளர்ப்பு

    பெண்கள் எப்போதும் பூச்செடிகள் வளர்க்க விரும்புவார்கள். அதிலும் பூச்செடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அவர்கள் முதலில் யோசிப்பது மல்லிகை செடி வளர்ப்பது எப்படி என்பதாகத்தான் இருக்கும். வீட்டில் பெண்களே எளிய முறையில் மல்லி செடி வளர்ப்பு தொடங்கலாம்.

    வீட்டில் மல்லி செடி வளர்க்க 50 லிட்டர் கேனில் வைத்து வளர்க்கலாம். மல்லி செடி வளர்க்க செம்மண் சிறந்தது. செடி நன்றாக வெயில் படும்படியான இடத்தில் இருக்க வேண்டும். மற்றபடி பராமரிப்பு முறைகள் மாடித்தோட்டமோ, சாகுபடி செய்யும் தோட்டமோ எல்லாவற்றுக்கும் ஒன்றே.

    10kg Cow Dung Manure icon

    இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

    உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    வெயில் காலங்களில் காலை, மாலை என இரு வேளையும் தண்ணீர் விட வேண்டும். குளிர் காலம் மற்றும் மழைக்காலங்களில் மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து தண்ணீர் விட வேண்டும்.

    குண்டுமல்லி செடியை கட்டிங் செய்யும் முறை

    குண்டுமல்லி செடி cutting

    குண்டுமல்லி செடியைப் பூக்கள் நன்றாக பூப்பதற்க்காக கட்டிங்(கவாத்து) செய்ய வேண்டும். செடியை சுற்றி அனைத்து பக்கங்களிலும் ஒரே மாதிரியாக வெட்ட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை இவ்வாறு வெட்டலாம். செடிகளை வெட்டிவிட்டு 25 நாட்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அதன் பின்னர் 8 நாட்கள் வரை பூக்கள் பூக்கும். பிறகு மீண்டும் செடிகளை வெட்ட வேண்டும் . செடிகளை வெட்டி விட்ட பிறகு தண்ணீர் அதிகம் பாய்ச்சக்கூடாது. குறைவான அளவில் தண்ணீர் பாய்ச்சுவது செடிகளுக்கு நல்லது.

    குண்டுமல்லியின் பயன்கள்

    குண்டுமல்லி benefits

  • குண்டுமல்லி பூக்கள் அழகுக்காக மட்டுமல்லாமல் மருத்துவத்துக்காகவும், பூஜைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • மல்லிகைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர வயிற்றில் உள்ள கொக்கி புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை அழிந்து விடும்.
  • மல்லிகைப்பூவை வெயிலில் காயவைத்து பொடிசெய்து தண்ணீரில் கலந்து குடுத்து வர சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
  • அடிப்பட்ட வீக்கம் அல்லது சுளுக்கு பிடித்த வீக்கம் போன்றவைக்கு
    மல்லிகைப்பூக்களை அரைத்து பூச வீக்கம் சரியாகும்.
  • பெண்களுக்கு உடல்சூடு, மனஅழுத்தம் குறைய தலையில் மல்லிகைப்பூக்களை சூடிக்கொண்டால் போதுமானது.

  • பயன்கள் பல இருக்கும் இந்த குண்டுமல்லி செடி வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூத்து குலுங்க வாழ்த்துகிறோம்.

    தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாகி விட்டது. தென்னை வளர்ப்பு முறை, வீட்டில் தென்னைமரம் வளர்ப்பு, மாடித்தோட்டத்தில் தென்னை வளர்ப்பு, தென்னங்கன்று உற்பத்தி செய்வது எப்படி, தென்னை மரத்தின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    coconut-fruit

    தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்

    kannu
    தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். குழி 3x3x3 அடிக்கு இருக்க வேண்டும். இரண்டு மரங்களுக்கு இடையே 20 முதல் 21 அடி இடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழி தோண்டிய பின் 2 முதல் 6 இன்ச் அளவிற்கு மணல் இட வேண்டும். பிறகு 5 இன்ச் அளவிற்கு இலைச்சருகுகளை நிரப்பி ஒரு அடி உயரத்திற்கு பசுந்தழை உரம் இட வேண்டும். குழி நிறையும்வரை நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.

    பின்னர் ஒரு மாதத்திற்கு தண்ணீர் விட்டு வந்தால் குழியின் அளவில் 1 ½ அடி முதல் 2 அடி வரை தொழு உரங்கள் மக்கி நடவுக்கான குழி தயாராகிவிடும்.

    குழியை தயார் செய்த பின் குழியின் நடுவில் 3 இன்ச் அளவிற்கு மணல் இட்டு குழியின் நடுவில் நாற்றை வைத்து சுற்றிலும் மணலும்,தொழுஉரமும் கலந்த கலவையை தென்னை நெற்றில் உள்ள தேங்காய் மறையும் அளவிற்கு இட வேண்டும். தென்னையில் வேர் பூச்சிகள் தாக்காமல் இருக்க ஒவ்வொரு குழிக்கும் ½ கிலோ வீதம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    தென்னை மரம் பராமரிப்பு

    தென்னைமரம்

  • தென்னங்கன்றுகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை களைச்செடிகளை நீக்கி மற்றும் கடலை பிண்ணாக்கு பயன்படுத்தி ஊட்டமளிக்கவேண்டும்.
  • முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரம் ஒரு முறையும், பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும்.
  • மரம் பூத்து காய்க்கத் தொடங்கும் சமயத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்பதால் நாம் வீட்டில் உபயோக படுத்தும் தண்ணீரையும் பயன்படுத்தலாம்.
  • சோப்பு தண்ணீரை இயற்கை முறையில் வடிகட்டி மரங்களுக்கு செல்லுமாறு செய்யலாம்.
  • ஒரு ஏக்கரில் எத்தனை தென்னை மரம் நடலாம் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை,ஆனால் ஒரு வரிசை தென்னை வளர்ப்பு முறையாக இருந்தால் இருபது அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 தென்னை வரை நடலாம்.
  • சதுர முறையில் தென்னை நடுவதாக இருந்தால் 25 அடி இடைவெளியில் ஒரு எக்டருக்கு 175 கன்றுகள் வரை நடலாம்.
  • வாய்க்கால் வரப்பில் ஒரே வரிசையில் மரம் நடுவதற்கு 15 முதல் 18 அடி இடைவெளியே போதுமானது.
  • பொதுவாக 22 அடி இடைவெளியில் நட்டால், முக்கோண முறையில் எக்டருக்கு 236 மரங்களும், சதுர முறையில் 204 மரங்களும் நடலாம்.
  • 25 அடி இடைவெளியில் நட்டால் முக்கோண முறையில் 205 மரங்களும், சதுர முறையில் 176 மரங்களும் நடலாம்.
  • தென்னையை குருத்து வண்டு, எலி போன்றவை தாக்கும் அபாயம் உண்டு, எனவே சரியான சமயத்தில் தகுந்த மருந்துகளை தெளித்து விட வேண்டும்.
  • 1kg neem cake

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் வீட்டிலும் கூட எளிதாக செய்யலாம்.
  • வீட்டில் இடவசதிக்கு ஏற்றபடி தென்னை மரங்களை நடலாம்.
  • தென்னை சாகுபடி

    உற்பத்தி

    தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் ஒற்றை வரிசை தென்னை வளர்ப்பில் வருடம் சுமார் 300 தேங்காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.

    ஒரு ஏக்கர் ஒற்றை பாத்தி தென்னை 20 முதல் 30 மரங்களில் வருடம் சுமார் 20,௦௦0 ரூபாய் முதல் 30,௦௦௦ ரூபாய் வரை உபரியாக வருமானம் கிடைக்கும்.

    தென்னை மரம் வளர்ப்பைப் பொறுத்தவரை ஊடுபயிர் செய்யலாம். நஞ்சை, புஞ்சை என்று எந்த நிலமாக இருந்தாலும் வாழை, இஞ்சி, மஞ்சள், கொள்ளு, நெல், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு வரிசை தென்னைமரம் வளர்ப்பு அதிகப்படியாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சேலம், நெல்லை, தருமபுரி, கம்பம், தேனி, தஞ்சை போன்ற ஊர்களில் ஒற்றை தென்னை வளர்ப்பு முறை பரவலாக நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டின் சீதோஷ்ணநிலை மற்றும் மண்வளமும் தென்னை வளர்ப்புக்கு ஏற்றதாக இருப்பதால் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

    தென்னை மரத்தின் பயன்கள்

    தேங்காய்

  • இளநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • தென்னை மட்டையிலிருந்து பெறப்படும் நாரிலிருந்து கயிறு தயாரிக்க உதவுகிறது.
  • தேங்காய் மட்டையை தாவரங்களுக்கு உரமாக போடலாம்.
  • தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், தலைமுடி வளர்வதற்கும் உதவுகிறது.
  • தேங்காய் சமையலுக்கும், பூஜைக்காகவும் பயன்படுகிறது.
  • தென்னை ஓலைகள் வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள் போன்றவற்றுக்கு பயன்படுகிறது.
  • தென்னை ஓலை குடிசை வீடுகள் வேய்தலுக்கு பயன்படுகிறது.
  • மேலும் தேங்காயின் தொட்டாங்குச்சி, தென்னை பாலைகள் போன்றவையும் அழகு பொருட்கள் தயாரிக்கவும், பாலைகள் பூஜை போன்றவற்றுக்கும் பயன்படுகிறது.
  • தென்னை மரங்களை நம் நாட்டில் குழந்தைகளை வளர்ப்பதற்கு நிகராக கருதுகின்றனர். அதனால்தான் தென்னங்கன்றை தென்னம்பிள்ளை என்று கூறுகின்றனர். எனவே தென்னை மரம் வளர்க்கும் பொழுது மிகவும் கவனமாக சரியான சமயத்தில் பராமரிப்பு முறைகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    அனைத்து இடங்களிலும் தென்னைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் பெரும்பாலும் ஒரே முறையில் தான் செய்யப்படுகிறது. மேலும் தென்னை மரங்கள் நடவு செய்யும் போது இடையில் ஊடு பயிர்கள் விளைவிப்பதால் அதிலும் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நீங்களும் தென்னையை வளர்த்து செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.

    பேரீச்சை மரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் பற்றி முன்பு நம் நாட்டில் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இப்பொழுது நம் நாட்டிலும் பேரீச்சை வளர்ப்பு அதிகளவில் செய்யப்படுகிறது. பேரீச்சை மரம் வளர்ப்பது எப்படி, பேரிச்சம்பழம் வகைகள், பேரிச்சம்பழம் சாகுபடி செய்வது எப்படி, பேரீச்சை காய் நன்மைகள் போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now


    பொதுவாகவே பேரீச்சை பழம் வளர்ப்பு, சாகுபடி போன்றவை பாலைவன பிரதேசங்களிலேயே நடைபெறும். ஏனென்றால் அதற்கான தட்ப வெட்ப நிலை பாலைவன நிலங்களில் உள்ளது. இதனாலேயே பேரீச்சை ‘பாலைவனப் பயிர்’ என்று அழைக்கப்படுகிறது.

    பேரிச்சை

      பேரீச்சைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்

    பேரீச்சை மரம் வளர்வதற்கு 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதுமானது. ஆனால் விதை மூலம் நடவு செய்யும் பொது ஆண் மரமா? பெண்ண மரமா? என்று தெரிவதற்கே இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். எனவே பேரீச்சை கன்று வாங்கி நடுவது சிறந்தது.
    பேரீச்சை மரம்
    ஒரு ஏக்கரில் 70 கன்றுகள் வரை நடலாம். ஒவ்வொரு கன்றுக்கும் இடையில் சுமார் 8 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். வெப்பநிலையை பொறுத்தவரை 30 லிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். வெப்பம் தாங்கக்கூடியதாக இருந்தாலும் தண்ணீர் அதிகம் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மரத்துக்கு தினசரி 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரம் நன்கு வளர்ந்த பின்னர் ஒரு மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் வரை விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பேரீச்சையை பொறுத்தவரை பெண் மரம் மட்டுமே நடவு செய்ய முடியும். எனினும் மகரந்த சேர்க்கைக்கு ஆண் மரம் தேவை என்பதால் அதுவும் நடுவது சிறந்தது. இருந்தாலும் மகரந்த சேர்க்கை இயற்கையாக நடைபெறாது என்பதால் செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.

    சாதாரணமாக ஜனவரி மாதத்தில் ஆண் மரம் பாளை விட்டு மகரந்த சேர்க்கைக்கு தயாராக இருக்கும். ஆனால் பெண் மரம் மார்ச் மாதம் தான் சேர்க்கைக்கு தயாராகும். ஆண் மரத்தின் பாளைகளை பொடி செய்து மார்ச் மாதம் பெண் மரம் பூ பூக்கும் போது அதன் மீது பொடி செய்த மகரந்தத்தைத் தூவி செயற்கையான சேர்க்கை செய்ய வேண்டும்.

    பேரீச்சை மரத்தில் வண்டுகள் வரக்கூடும். ஒன்றிரண்டு வண்டுகள் வந்ததும் அவற்றைக் கொன்று விட வேண்டும். இல்லாவிட்டால் வண்டுகள் அதிகரித்து விடும். பர்றி ரக பேரீச்சை பழங்கள் அப்படியே மரத்திலுருந்து பழங்களை பறித்து சாப்பிடலாம் என்பதால் கண்டிப்பாக மருந்து தெளிக்க கூடாது. இயற்கை உரங்கள் சிறந்தது.

    neem oil icon

    இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

    உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

     Buy Now

    பழங்கள் பழுத்ததும் வவ்வால், பறவைகள் போன்றவை பழங்களை சாப்பிட வரும் என்பதால் குலைகளைச் சுற்றி பாலிதீன் கவர்களைக் கொண்டு மூட வேண்டும்.

      பேரீச்சை மகசூல்

    பேரீச்சை மகசூல்
    பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கும். பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்கத் தொடங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பேரீச்சை சீசன் ஆகும். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை காய்க்கும். ஒரு குலையில் 10 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ பழங்கள் கிடைத்தாலும் ஒரு ஏக்கருக்கு 4200 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.

    நான்கு மாதங்களில் பழங்களை அறுவடை செய்து விடலாம். விளைச்சல் காணத் தொடங்கி ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க பழத்தின் எடையும் அதிகரிக்கும்.

      பேரீச்சம்பழம் வகைகள்

    பேரீச்சை வகைகள்

    மெட்ஜூல், பையோரம், டேக்லட் நூர், மசாபாதி, பர்ஹி, ரப்பி, தூரி, சயீர், டயரி, ஹலவ்ய், சபாவி என்று பல ரகங்கள் உண்டு. ஒவ்வொரு ரகங்களும் ஒவ்வொரு நாட்டில் விளைபவை. இந்தியாவை பொறுத்தவரை பர்ஹி ரக பழங்களே அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பேரீச்சையை பொறுத்தவரை நிறைய வகைகள் உண்டு. சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்ற நிறங்களில் காணப்படும் பேரீச்சைபழங்கள் ஒவ்வொரு வகைக்கு ஏற்றவாறு சுவையும் மாறுபடுகிறது.

      இந்தியாவில் விளையும் பர்ஹி ரக பேரீச்சை

    பர்ஹி பேரீச்சை

    இதன் தாயகம் ஈராக் ஆகும். பர்ஹி ரக பழங்கள் பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3 ஆம் நிலையாகும்.

    இந்த நிலை கலால் என்று அழைக்கப்படுகிறது. ஜோர்டான் நாட்டில் இந்த நிலை ரக பேரீச்சை கோல்டன் டேட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழங்களை அறுவடை செய்து 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். பர்ஹி ரக பேரீச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேலும் இந்த மஞ்சள் பேரிச்சம்பழம் மரத்தில் இருந்து பறித்து அப்படியே உண்ணலாம்.

      பேரீச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    பேரீச்சை-மரம்-வளர்ப்பு.jpg

    • பேரீச்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
    • இதயம் வலுப்பெறும்.
    • எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகும்.
    • நினைவாற்றல் அதிகரிக்கும்.
    • உடல் எடை அதிகரிக்கும்.
    • மாலைக்கண் நோய் குணமாகும்.
    • வயிற்றுப் புற்றுநோய் குணமாகும்.
      • கருப்பு பேரிச்சம்பழம் நன்மைகள்

    DATES

    • ஜீரணதிற்கு உதவுகிறது.
    • உடல் ஆற்றல் அதிகரிக்கிறது.
    • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
    • இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
    • முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
    • இயல்பாகவே பேரீச்சை பழத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்பதால் தினமும் கூட பேரீச்சம்பழம் சாப்பிடலாம். மேலும் வருமானமும் அதிகம் என்பதால் இப்போது நம் நாட்டில் அதிகளவில் பேரீச்சைமரம் வளர்ப்பு செய்யத் தொடங்கி உள்ளனர். இத்தைகைய பழத்தை உண்டு நலமோடு வாழ்வோம்.

    Pin It