Category

மரம் வளர்ப்பு

Category

விளா மரம் இந்தியாவை தன் தாயகமாகக்கொண்டதாகும். விளா மரமானது எங்கும் வளரக்கூடிய இயல்பை கொண்டது என்றாலும் காட்டுப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. வீடுகள், தோட்டங்கள் மற்றும் கோவில்களில் விளா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது, இந்த மரம் 30 அடி வரை உயரம் வளரக்கூடியது. இந்த மரத்தின் இலைகள் நல்ல மணம் வீசக்கூடியது, காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்றே உருண்டை வடிவத்தில் காணப்படும். பழத்தின் மேல் ஓடு அதிக கெட்டியாகவும், உள்ளிருக்கும் சதைப்பகுதி மரத்தின் நிறத்திலும், விதைகள் வெண்மை நிறத்திலும் காணப்படும்.
விளா மரம்
கடிபகை, கபித்தம், கவித்தம், தந்தசடம், பித்தம், விளவு, வெள்ளி மற்றும் வுட் ஆப்பிள் போன்ற பல பெயர்களை இந்த விளா மரம் கொண்டுள்ளது. இந்த மரத்தின் கொழுந்து, இலை, காய், பழங்கள், பிசின், ஓடு, பட்டை என எல்லாமே பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியவையாகும். இதன் பழங்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டாலும் யாரும் இந்த மரத்தை வளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அழிவின் விளிம்பில் விளா மரம் இருக்கிறது.

எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட விளா மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, விளாம்பழம் சாப்பிடும் முறை மற்றும் விளாம்பழம் நன்மைகள் ஆகியற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

விளா மரம் விதை

விளா மரம் வளர்ப்பு
நன்கு பழுத்த விளாம் பழத்தை வாங்கிக்கொள்ளவும், அதன் மேற்புற ஊடு கடினமாக இருக்கும். அதனை சுத்தியல் அல்லது கல்கொண்டு கவனமாக ஓட்டை உடைக்கவும். பிறகு உள்ளிருக்கும் சதைப்பகுதிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். விதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும், அதனை எடுத்து நீரில் அலசி நன்கு உலர வைக்கவேண்டும் அப்படி செய்வதன் மூலம் விதைப்பு செய்வதற்கு ஏதுவாக விதைகள் காய்ந்து தனி தனியே பிரிந்து வந்து விடும்.

விளா மர விதை நடவு செய்தல்

விளா மரத்திற்கு என்று பிரத்தேகமான மண்கலவை ஏதும் தேவை இல்லை அனைத்து வகை மண்ணிலும் நன்கு செழித்து வளரக்கூடியது. மரம் வளர இடவசதி உள்ள பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு, சேகரித்து வைத்துள்ள விதைகளை நடவு செய்யவும். விதைத்த 15 நாட்களுக்கு பிறகு விளா மர துளிர் முளைத்து வர தொடங்கியிருக்கும். 55 நாட்களுக்கு பிறகு 1 அடிக்கு மேல் விளா மர கன்று வளர்ந்திருக்கும்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின்மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்களை தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விளா மரத்தின் சிறப்புகள்

விளாம்பழம்
10 ஆண்டுகள் மழை பெய்யவில்லை என்றாலும் விளாம் மரம் தாக்குப் பிடிக்கும். வேறு எந்தத் தாவரமும் வளர தகுதி இல்லையென்று கூறப்படும் மண்ணிலும் கூட இந்த விளாமரம் வளரும். இதற்கு தனிப்பட்ட முறையில் உரம் ஏதும் இட தேவையில்லை. எனவே பராமரிப்பு செலவு ஏதும் கிடையாது. மேலும், 30 அடிக்கு மேல் விளா மரம் வளரும் என்பதால் விவசாயிகள் வேலிக்கு மாற்றாக விளா மரம் வளர்ப்பு செய்கின்றனர்.

விளாம்பழம் சாப்பிடும் முறை

விளாம்பழம்
நடவு செய்த 5 முதல் 7 வருடங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகியிருக்கும். விளாம் பழத்தை பறித்து, அதன் மேற்பகுதியை உடைக்கவேண்டும், விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும், பழுத்தபிறகு துவர்ப்பு சுவையும், புளிப்பு சுவையும் கலந்த சுவையாக இருக்கும். நறுமணம் வீசுகின்ற இந்தப் பழத்தை பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

விளாம்பழம் பயன்கள்

விளாம்பழம் நன்மைகள்

  • விளா மரத்தினுடைய பட்டையை நன்கு பொடியாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க செய்து கசாயம் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர, வறட்டு இருமல், வாய் கசப்பு, மூச்சு இழுப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.
  • விளாம் பழத்தை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் மேலும் விளாம் மரத்தினுடைய இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கிவிடும்.
  • விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது இது நம் எலும்பு மற்றும் பற்களை வலுவடையச் செய்ய உதவுகிறது. மேலும் விளாம்பழத்துடன் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.
  • bone meal icon

    இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

    உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

     Buy Now

  • விளா காயை சட்டியில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும், பின்பு வெந்ததும் அதை உடைத்து அதன் உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் அரை டம்ளர் தயிர் கலந்து தினசரி காலை வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை முழுமையாக குணமடையும்.
  • விளா மரத்தினுடைய பிசினை பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு எனும் கூற்று விளாம் பழத்தின் சிறப்பை குறிக்க கூறப்பட்டதாகும், பித்தத்தை தெளிவைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்த விளாம் பழம்.


நற்பலன்கள் பல அள்ளித்தரும் இந்த விளா மரம் உங்கள் ஆரோக்கியத்தை கீழே விழாமல் பாதுகாக்கிறது. இத்தகைய மரத்தினை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைப்பது நம் கடமையாகும்.

இந்தியன் பாதாம் எனும் வாதுமை என்பது பலராலும் விரும்பி உண்ணப்படும் கொட்டை அல்லது பருப்பை தரக்கூடிய மரமாகும். வாதுமை மரத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுகின்றனர். இந்தக் கொட்டைகள் ஆரோக்கியமிக்கவை மற்றும் சுவைமிக்கவை. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் பெருமளவு இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்யப்படுகின்றன.
இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு
இந்த மரம் ஒரு இலையுதிர் மரம் ஆகும், ஒரு வருடத்தில் இரண்டு முறை இலைகளை உதிர்த்து விடக்கூடியது. இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தையுடைய பெரிய இலைகளாக தோற்றமளிக்கும், நாட்கள் செல்ல செல்ல மஞ்சள் நிறத்திற்கு மாறி பின்பு இறுதியாக சிவப்பு நிறத்திற்கு மாறி உதிர்ந்துவிடும். இந்தியன் பாதாம் மரத்தைச் சுற்றி காய்ந்த இலை சருகுகள் எப்பொழுதும் இருக்கும்.

இந்த மரம் 35 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியது, இந்த மரத்தின் கிளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக மிக சீராக அடுக்கிவைத்தது போல் குடை வடிவத்தில் அழகாக தோற்றமளிக்கும். விதை மூலம் பாதாம் செடி வளர்ப்பு செய்வது எப்படி, பாதாம் பருப்பு எடுப்பது எப்படி மற்றும் பாதாம் மரம் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தேர்ந்தெடுத்தல்

பாதாம்
நல்ல பாதாம் பழத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதன் சதைப்பகுதி முழுவதையும் நீக்கிவிடவேண்டும், பிறகு ஒரு இரவு முழுவதும் பாதாம் கொட்டையை நீரில் ஊறவைக்கவேண்டும், அடுத்த நாள் காலை நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முளைக்கும் திறனுடன் தயாராகிருக்கும்.

பாதாம் விதை நடவு செய்தல்

வாதுமை
வீட்டுத்தோட்டத்தில் செறிவூட்டப்பட்ட மண்கலவை நிறைந்துள்ள இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பின்பு ஊறவைத்து தயார் செய்து வைத்துள்ள விதைகளை அதில் பள்ளம் தோண்டி உள்ளே வைத்து மண் போட்டு மூடவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்ற வேண்டும், குறிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மரத்தின் வளர்ச்சி மற்றும் அறுவடை

பாதாம் மரம்
நடப்பட்ட நாள் முதலே நன்கு பராமரிக்க வேண்டும். மரத்திற்கு சத்து குறைபாடுகள் ஏதேனும் ஏற்படும் பச்சத்தில் இயற்கை உரங்களை அளிக்கலாம். 5 முதல் 6 வருடங்களில் பாதாம் பழங்களை அறுவடை செய்யலாம். இந்த பாதாம் பழம் சிறியதாக முட்டை வடிவத்தில் கூர்மையாக இருக்கும். பச்சை நிற காயாக இருந்து பின்னர் மஞ்சள் நிறத்தில் நார் நிறைந்த ஓட்டின் மீது நல்ல சதை மிக்க பழமாக உருமாறி பின்பு சிவப்பு நிறமாகி கீழே விழும்.

இந்தியன் பாதாம் மரம் பயன்கள்

இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு


வளம் பல தரும் இந்த இந்தியன் பாதாம் மரம் வளர்ப்பு செய்து அதன் நன்மைகள் அனைத்தும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

நாவல் பழம் மரம் அனைத்து மண்களிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத் தன்மை மிக்க மற்றும் நீர் தேங்கிய நிலையில் இருந்தாலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு சிறப்பாக இருக்கும், எனினும் அதிகமான உற்பத்தி மற்றும் நல்ல வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் களிமண் அல்லது செம்மண் சிறந்தது.
நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு
நாவல் பழம் மரம் மிகுந்த வறட்சியை கூட தாங்கி வளரக்கூடிய பழப்பயிர் ஆகும். நாவல் பழங்களில் இரும்புச்சத்தும், கனிமங்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது. நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி, நாவல் பழம் பயன்கள், நாவல் மரம் சாகுபடி, நாவல் பழம் வகைகள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நடவு செய்தல்

நடவு-செய்தல்
நாவல் பழம் மரம், விதை மற்றும் நாற்று முறையில் நடவு செய்யலாம். நல்ல விதைகளாக தேர்வு செய்து விதைக்கவும். விதைகள் முளைக்க சுமார் பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். நாற்றுகள் மூலம் நடவு செய்த நாவல் மரத்தில் எட்டு முதல் பத்து ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் மூலம் வளர்ந்த நாவல் மரங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலும் பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு-1
நாட்டு நாவல் மரம் நன்கு வளர்ந்த நிலையில், ஒரு மரத்திற்கு எழுபது கிலோ வரை தொழு உரத்தை அளிக்க வேண்டும், நாவல் மரம் வளரும் மண்ணில் அதிக ஊட்டசத்து காணப்பட்டால் அதன் இலைகள் அதிக அளவில் வளரும், எனவே தான் தொழு உரத்தை அளிக்கிறோம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


நாவல் செடிகள் வளர்ச்சி அடையும் காலம் வரை களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். நாவல் பழ மரத்திற்கு கவாத்து செய்யும் போது, உலர்ந்துபோன மற்றும் குறுக்கில் செல்லும் கிளைகளை நீக்கினால் போதுமானது, இவ்வாறு செய்வதால் நாவல் மரம் வளர்ப்பு சிறக்கும்.

மகசூல் மற்றும் சாகுபடி

நாவல்-பழம்
நாற்று மூலம் வளர்ந்த நாவல் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு எண்பது முதல் நூறு கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மூலம் வளர்ந்த மரத்திலிருந்து அறுபது முதல் எழுபது கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். நாவல் மரங்கள் தொடர்ந்து ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் ஒரு இலை உதிரா மரம் ஆகும். இதை பிப்ரவரி – மார்ச் மாதம் மற்றும் ஜுலை – ஆகஸ்ட் மாதம் ஆகிய இரண்டு பருவங்களிலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு செய்யலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நாவல் பழம் பயன்கள் மற்றும் மருத்துவகுணம்

நாவல் பழம் மரம் வளர்ப்பு

  • வெள்ளை நாவல் பழத்தின் சாறு மற்றும் மாம்பழத்தின் சாறை சம பங்கு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்துவந்தால் சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வரும், இதுவே வெள்ளை நாவல் மருத்துவ குணம் ஆகும்.
  • நன்கு பழுத்த நாவல் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரானது பசி தனை தூண்டும் குணம் உடையது.
  • நாவல் பழத்தை சாப்பிட்டால் குடற்புண் மற்றும் கல்லீரல் கோளாறுகள், போன்றவற்றை சரிசெய்ய வல்லது.
  • நாவல் பழத்தின் விதைதனில் மாவுச் சத்து மற்றும் புரதம் மிகுந்து உள்ளதால் கால்நடைகளுக்கு சத்துமிக்க தீவனமாகக் பயன்படுகிறது.
  • ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து அதிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மண்ணீரலில் ஏற்படும் நோய்களை தடுக்கவல்ல அரும் மருந்தாகும் இந்த நாவல் பழம்.
  • நாவல் மரத்தின் இலையை பொடி செய்து அதைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகள் வலுப்பெறும், நாவல் மர இலையின் சாம்பல் பூசிவர நாள்பட்ட தீக்காயங்கள் மற்றும் வெட்டு பட்ட காயங்கள் குணமாகும்.


நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும் என்று பார்த்தோம். நாவல் பழம் மிக சிறந்த மருத்துவ குணத்தை உடையது, பெருன்பான்மையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. நாவலின் இலை, பழம், பட்டை, விதை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அரும்மருந்தான நாவல் பழ மரத்தை வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த புங்கன் மரம் வளர்ப்பு பரவலாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புங்கை மரம் காணப்படுகின்றது. நாட்டு வகையை சேர்ந்த புங்கை மரம், வாய்க்கால், வரப்பு, சாலையோரங்களிலும், பொது நிலங்கள் என புங்கை மரம் வளர்ந்து இருப்பதை காண முடியும்.
புங்கன்-மரம்-வளர்ப்பு
காற்றில் இருக்கும் நைட்ரஜனை மண்ணிலே நிலை பெற செய்யும் வகையிலான வேர் முடிச்சுகளை உடைய ஒரு சில மரங்களில் இந்த புங்கை மரமும் ஒன்று. கோடை காலத்தில் சிறிதளவே மட்டுமே இலையுதிரும், பசுமை மாறா தன்மை கொண்டது இந்த புங்கைமரம்.

இந்த புங்கன் மரம் வளர்ப்பது எப்படி, புங்க மரம் பொதுப்பண்புகள், புங்கன் மரம் பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

புங்கன் நாற்று தயார் செய்தல்

புங்கன்-மரம்-வளர்ப்பு
நேர்த்தியான புங்கன் விதைகளை தேர்வு செய்யவும், சேகரித்து வைத்துள்ள புங்கன் விதைகளை நெகிழி பை அல்லது சிறிய தொட்டியில் மண் மற்றும் நன்கு மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சரிபங்கு கலந்து அந்த பையில் நிரப்பி அதில் விதைக்கவும். பத்து முதல் பதினைந்து நாளில் புங்கன் விதைகள் முளைத்து வந்துவிடும்.

மண் வகை மற்றும் நடவு செய்தல்

புங்கன்-மரம்-வளர்ப்பு-2
பல விதமான மண் வகைகளில் வளரக்கூடியது இந்த புங்கன் மரம், கரடு முரடான மணல் முதல் களிமண், செம்மண் வரையிலும் வளரக்கூடியது. உவர் மண்ணை கூட தாங்கி வளரும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் உடைய நாற்றுகளை போதிய இடைவெளியில் நடவு செய்யவும். நடுவு செய்யும் பொழுது தொழு உரத்தை குழியில் இட்டு நடுவது புங்கன் மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மகசூல்

புங்கன்-நாற்று
காய்களுக்காகவே பெரும்பாலும் புங்கன் மரம் வளர்க்கப்படுகிறது. இதில் இருபது முதல் இருபத்தைந்து சதவிகிதம் வரை எண்ணெய் இருக்கும். நன்கு வளர்ந்த மரத்தில் பத்து கிலோ வரை புங்கன் காய்கள் கிடைக்கும்.

புங்கன் மரம் தன்னுடைய வளர்ச்சி முறையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழ்நிலைகளில் பசுமை மாறாது, நேர்மாறான சூழ்நிலைகளில் இலைகள் பெருபாலும் உதிர்ந்தாலும் புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக மரத்தில் தோன்றிவிடும். ஏப்ரல் மாதம் முதல் ஜீலை மாதம் வரையில் புங்கன் மரத்தில் பூக்கள் தோன்றும். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் காய்கள் காய்க்கும். நான்கு ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கிவிடும்.

நோய் தாக்குதல் மற்றும் தடுக்கும் முறை

வேப்பங்கொட்டை-கரைசல்
புங்கன் மரத்தில் முடிச்சு நோய்கள் பெரும்பாலும் காணப்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுகிறது, இந்த செயலினால் ஒளிச்சேர்க்கை மந்தமாகிறது, புங்கன் மரம் வளர்ப்பு பாதிக்க படுகிறது. பூச்சிகளினால் இந்த நோய் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது. இந்த இலை முடிச்சு நோயை சரிசெய்ய வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து இலைகள் மீது தெளிக்கவும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

புங்கன் மரத்தின் பயன்கள்

புங்கன்-மரம்-வளர்ப்பு

  • புங்கமரமானது வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள், வேளாண்மை கருவிகள் ஆகியவற்றை செய்வதற்கு பயன்படுகிறது.
  • புங்கன் இலைகளில் புரதம் நிறைந்துள்ளது, எனவே இவை கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகின்றது.
  • புங்க மர விதையிலிருந்து பயோடீசல் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் விளைவிக்காத பசுமை எரிப்பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • புங்கை மரத்தின் முக்கியமான பயன், மழையை ஈர்க்கும் திறனை அதிகம் கொண்டது.
  • புங்கமர இலைக்கு அல்சர் என்றழைக்கபடும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை உண்டு. இந்த இலையை அரைத்து சிறிதளவு அதன் சாற்றை தினமும் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வயிற்று வலி குணமாகிவிடும்.
  • புங்கன் இலையை காயவைத்து தூளாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும் புங்கன் தைலம் தனை தடவினால் காயம் குணமாகும்.
  • இதன் வித்துகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வாத வியாதி, மூட்டு வலி ஆகியவற்றை சரி செய்யும் மருத்துவ முறைகளில் பயன்படுத்த படுகிறது.


மகத்துவமிக்க இந்த புங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா என்று பலரும் ஐயம் கொண்டுள்ளனர், தாராளமாக இந்த மரத்தை வீட்டின் முன்பு வளர்த்து அதிக அளவு தூய பிராணவாயுவை பெறலாம். இயற்கையின் பரிசான இந்த புங்கன் மரத்தை வளர்த்து புகழோடு வாழ வாழ்த்துகிறோம்.

Pin It