Category

பூக்கள்

Category

சங்குப்பூ எனப்படும் காக்கட்டான் பூ கொடி வகையைச் சேர்ந்தது. இதன் கொடி எல்லா இடங்களிலும், வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் நீல நிறம் மற்றும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது கூட்டிலைகளை கொண்ட ஏறு கொடியாகும். அழகு செடிகளாக வீட்டின் முன்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது, தட்டையான காய்களை உடையது.
சங்குப்பூ கொடி வளர்ப்பு
பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிற சங்குப்பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப்படுகிறது, இது மிகச்சிறந்த மருத்துவ பயன்களை உடையது. மேலும் சிவபெருமானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. இதனுடைய பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போன்று இருப்பதால் சங்குப்பூ என பெயர் வந்தது.

சங்குப்பூ விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சங்குப்பூ கொடி வளர்ப்பு, சங்குப்பூ மருத்துவகுணம் மற்றும் சங்கு பூ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

சங்குப்பூ விதை

சங்குப்பூ விதைகள் அடர் காவி நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு அவரை விதைபோல இருக்கும் சங்குப்பூ விதையானது வெந்தயத்தைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்த விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு நீரில் ஊற வைக்கவேண்டும், அது நீரில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முளைப்பதற்கு தயாராகிருக்கும்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய்நாற்கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்கைநார்கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சங்குப்பூ விதை நடவு செய்தல்

சங்குப்பூ
சங்குப்பூ கொடி வளர்ப்பு அனைத்து வகை மண்கலவையிலும் சிறப்பாக இருக்கும். நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் மண்ணைப்போட்டு நிரப்பிக்கொள்ளவும், பிறகு ஏற்கனவே நாம் தேர்ந்தெடுத்து வைத்துள்ள நல்ல தரமான விதைகளை எடுத்து அந்த நெகிழிப்பையில் உள்ள மண்ணை சிறிது தோண்டி அதில் அந்த விதைகளை போட்டு மூடவும். மேற்பரப்பில் நீர் தேங்காதவாறு பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

சங்குப்பூ செடி வளர்ச்சி

வெள்ளைச்சங்குப்பூ
சங்குப்பூ விதைப்பு செய்த 10 நாட்களில் முளைத்து வரத்தொடங்கிவிடும். 15 நாட்களுக்கு பிறகு கொடி படர ஆரம்பிக்கும், கொடி பற்றி ஏற உதவும் விதமாக பந்தல் அமைத்தல் வேண்டும் அப்போது தான் சங்குப்பூ கொடி வளர்ப்பு சிறக்கும். 30 நாட்களில் சங்குப்பூ கொடி செழித்து வளர்ந்திருப்பதை காணலாம். சுமார் 40 நாட்களில் கண்ணைக்கவரும் வண்ணத்தில் பூக்கள் பூத்திருக்கும். இந்த வளர்ச்சிக்காலம் நீல நிற சங்குப்பூ மற்றும் வெள்ளைச்சங்குப்பூ இரண்டிற்கும் பொருந்தும்.

சங்கு பூ பயன்கள்

சங்குப்பூ தேநீர்

  • இரு தேக்கரண்டி சங்குப்பூ சாற்றுடன், சம பங்கு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு அதோடு தேவையான அளவு தேன் சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகினால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கிவிடும், மேலும் தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயுடன் சேர்த்து வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.
  • இந்த பூக்கள் மனசோர்வு மற்றும் மனக்கவலை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் அதிகம் ஆண்டி ஆக்சிடன்ட் உள்ளதால் இது நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் சேதப்படுவதை பெருமளவு தடுத்து நம்மை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கச்செய்வதுடன் நம்முடைய சருமம் என்றும் இளமையாக இருக்கவும் பயன்படுகிறது.
  • Drip irrigation kit icon

    இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவி

    உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • மூச்சுத் திணறல மற்றும் இருதய தொடர்பான நோய்களுக்கு இந்த சங்குப்பூ மருந்தாகப் பயன்படுகின்றது. உலர்ந்த சங்குப்பூக்கள், புளூ டீ எனும் சங்குப்பூ தேநீர் தயாரிக்கவே பிரத்யேகமாக விலை தந்து பல நாடுகளில் வாங்கப்படுகின்றன.
  • சங்குப்பூவினுடைய சாறு, கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. கரும்புள்ளி மற்றும் தேமலைக் குணமாக்கும். சங்குப்பூ செடியின் வேர், சிறுநீர்ப்பை நோய்களை கட்டுப்படுத்தும்.
  • சங்குப்பூவின் விதை புளிப்பு சுவைகொண்டதாக இருக்கும் மேலும் மணமிக்கதாக இருக்கும், இது உடலுக்கு வலிமை தருகின்ற சர்பத் மற்றும் பான வகைகளில் சேர்க்கப்படுகின்றது.


வீட்டிற்கு அழகு மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சங்குப்பூ கொடி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் சங்குப்பூ வளர்ப்பு செய்து அதன் வண்ணம் போல உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகிறோம்.

சரக்கொன்றை மரம் நம் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. சரக்கொன்றை பூவைப் சிவனின் பூஜைக்கு ஏற்றதாக கருதுகின்றனர், பழம்பெரும் இலக்கியங்கள் சிவபெருமானைக் கொன்றை மலரை முடியில் சூடியவராக வர்ணிக்கிறது. சிவபெருமான் சூடிய மலர் என்பதால் தான் இன்றளவும் சிவபெருமான் ஆலயங்களில் சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது.
சரக்கொன்றை மரம் வளர்ப்பு
தமிழர்களின் பாரம்பரியம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக, பொன்னிறமனா சரக்கொன்றை பூக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகிறார்கள். மேலும், கேரளாவில் சித்திரை விசு அன்று நடைபெறும் பூஜையில் சரக்கொன்றை பூக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த பூவுக்கு சுவர்ண புஷ்பம் மற்றும் சித்திரைப் பூ எனும் சிறப்பு பெயர்களும் உண்டு.

வெப்ப மண்டலப்பகுதி மற்றும் குறைந்த வெப்ப மண்டலப்பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது இந்த சரக்கொன்றை. மேலும் கோடை வறட்சியையும் கூட தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் மற்றும் சரக்கொன்றை மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தயார் செய்தல்

விதை
சரக்கொன்றை மரத்திலிருந்து காய்ந்த காய்களை எடுத்துக்கொள்ளவும். காய்கள் உறுதியாக இருக்கும், அதை உடைத்து அதனுள்ள இருக்கும் விதைகளை சேகரித்துக்கொள்ளவும், விதைகளும் மிக உறுதியாக இருக்கும். நீரை கொதிக்கவைத்து, சேகரித்த விதைகளை அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிக்கவேண்டும். சூடான நீரில் விதைகளை போட்டால் விதைகள் வீணாகிவிடும் என்று பயப்படவேண்டாம், விதையின் தோலை இலகுவாக்கவே இந்த செயல் சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறக்க உதவும்.

அப்படி ஊற வைக்கும் பொழுது அடுத்த நாள் ஒரு சில விதைகள் சற்று பெரிதாகி இருக்கும். அந்த விதைகளே நடவுக்கு ஏற்ற விதைகள் ஆகும். ஊறவைத்தும் பெரிதாகாமல் இருக்கும் விதைகளை தவிர்த்து விடவும், அது முளைத்து வர வாய்ப்புகள் குறைவு.

மண்கலவை மற்றும் நடவுசெய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். நேர்த்தியான, தேர்ந்தெடுத்த விதைகளை மண்கலவையில் 2 இன்ச் ஆழம் தோண்டி அதில் போட்டு மூடிவிடவும். பிறகு தினமும் பூவாளிக்கொண்டு நீர் தெளித்து வரவும், 15 நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள்

சரக்கொன்றை மரம்

  • சரக்கொன்றை மரம் வளர்ப்பு சிறப்பாக அமையும் பட்சத்தில் 40 அடி வரை உயரம் வளரக்கூடியது.
  • மிக அகன்ற கிளைகளை கொண்ட இலையுதிர் மரமாகும் இந்த சரக்கொன்றை மரம்.
  • சரக்கொன்றை மரம் இளமையில் பச்சை நிறத்தை உடையதாகவும், முதிர்ந்தப் பின்பு சாம்பல் நிறமாகவும் மாறுதல் அடைகிறது.
  • இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தைக்கொண்டிருக்கும். முதிர்ந்த சரக்கொன்றை காய்களானது 30-60 செ.மீ நீளமும் 40-100 விதைகளை உடையதாக இருக்கும்.
  • அதிக வெப்ப நிலையை தாங்கி நன்கு வளரக்கூடியது.

சரக்கொன்றை பயன்கள்

 சரக்கொன்றை மரம் வளர்ப்பு

  • சரக்கொன்றை மலரின் மகிமைகள் பல உண்டு, சரக்கொன்றை மரம்தனில் முருங்கைக்காய் போல இரண்டு அடி நீளத்துக்குக் காய்கள் காய்க்கும். அதனுள்ளே பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே இருக்கும், இதை சரக்கொன்றை புளி என்று கூறுவார்கள். இந்த சரக்கொன்றை புளியை சாதாரணப் புளியுடன் சேர்த்து உண்டு வர பித்தக்கோளாறுகள் நீங்கும்.
  • சரகொன்றைப்பூவை கொதிக்கும் நீரில் வேக வைத்து, பின்பு அதனுடைய சாறைப்பிழிந்து எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து கால் லிட்டர் அளவு குடித்து வர வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.
  • சரகொன்றைப்பூவை நன்கு மையாக அரைத்து பத்து கிராம் எடுத்துப் பசுவெண்ணெயோடு குழைத்து உண்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வெட்டை நோய்கள் போன்ற மேக நோய்கள் சரியாகும்.
  • சரக்கொன்றை புளியை நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு திரிபலா சூரணம் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வந்தால் வயிறு சுத்தமாகும்.
  • காதுவலியால் அவதிப்படுகிறவர்கள், சரக்கொன்றை மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 சொட்டுகள் காதின் உள்ளே விட்டுவர காது வலி குணமாகும்.


வாழ்வை வளப்படுத்தும் தெய்வ விருட்சங்களில் ஒன்று இந்த சரக்கொன்றை மரம் வளர்ப்பு செய்வது எப்படி என்பதை பார்த்தோம், நீங்களும் அதே முறையில் வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்வும் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.

சூரியகாந்தி பூ மத்திய அமெரிக்க நாடுகளை தன் தாயகமாக கொண்டது. கி.மு 2600 ஆண்டுகளில் முதன்முறையாக மெக்சிகோவில் இந்த சூரியகாந்தி பூ பயிரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை இந்த சூரியகாந்தி பயனளித்து கொண்டிருக்கிறது. இன்று உலகளவில் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு சிறப்பாகவும், பெருமளவிலும் செய்யப்படுகிறது.

சூரியகாந்தி பூ நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் மற்றும் புத்துணர்வுடனும் நம்மை வைத்திருக்கும் பூக்களில் ஒன்றாகும். இதனுடைய பிரகாசமிக்க மஞ்சள் நிறமானது மனதினை எப்போதுமே புத்துணர்வுடன் வைத்திருக்கும். மிக மெல்லிய நறுமணத்தை கொண்டவை இந்த பூக்கள், சூரியகாந்தியை அருகினில் சென்று முகர்ந்து பார்த்தால் தான் அதனுடைய நறுமணத்தை உணர முடியும்.
சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு
சூரியகாந்தியில் பல வகைகள் இருக்கிறது, அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தது. மாடித்தோட்டத்தில் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பது எப்படி, சூரியகாந்தி பூ அறுவடை, சூரியகாந்தி பயன்கள், சூரியகாந்தி விதை எப்படி சாப்பிடுவது மற்றும் சூரிய காந்தி விதையின் மருத்துவ பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

சூரியகாந்தி பூச்செடி நாற்றுகள்

தரமான மற்றும் நேர்த்தியான விதைகளை பார்த்து வாங்கிக்கொள்ளவும். அந்த விதைகளை வைத்து நாற்றுகள் வளர்த்து பின்பு நடவு செய்வது சிறந்ததாகும், ஏனெனில் சில சமயங்களில் நட்ட விதைகள் சில முளைக்காமல் போகும் அல்லது வளர்ச்சி சரிவர இருக்காது. நாற்றுகள் வளர்ப்பதன் மூலம் நல்ல நாற்றுகளை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாற்றுகள் வளர்க்கும் தட்டுகளில் விதைகளை போட்டு பராமரிக்கவும்.

மண்கலவை

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சரிபாதி நன்கு கலந்து நடவு செய்ய தேவையான மண்கலவையை தயார் செய்யவேண்டும். சூரிய காந்தி அதிக வேர்பிடிக்கும் என்பதால் எப்போதும் ஈரப்பதம் தேவை, எனவே தான் கோகோபீட் பயன்படுத்துகிறோம், இது ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது.

நடவு மற்றும் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு

சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு
தயார் செய்து வைத்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். சிறிய தொட்டியாக இல்லாமல் பெரிய தொட்டியாக இருந்தால் சூரிய காந்தி நன்கு வளரும். பிறகு நாற்றுகளை அந்த தொட்டியில் நடவு செய்யவும். சூரியகாந்தி நல்ல உயரமாக வளரும் தன்மை கொண்ட செடியாகும். பஞ்சகாவியா மற்றும் மீனமிலத்தை தெளித்து வந்தால் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு சிறக்கும் .

சூரியகாந்தி பூ அறுவடை

சூரியகாந்தி விதை
நடவு செய்தததிலிருந்து சுமார் 3 மாதத்தில் சூரிய காந்தி பூ நல்ல விதத்தில் முழு வளர்ச்சியை அடைந்திருக்கும், அப்போது நாம் அறுவடை செய்துகொள்ளலாம். தேவைக்கு போக மீதி பூக்களில் இருந்து விதைகளை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

சூரியகாந்தி பயன்கள்

சூரியகாந்தி

  • சூரியகாந்தி விதை பயன்கள் ஏராளம், சூரியகாந்தி விதைகளில் இருக்கும் துத்தநாக சத்துக்கள் மற்றும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக வளர பயன்படுகிறது. மேலும் இந்த பாஸ்பரஸ் இதய தசைகளை சீராக இயங்க செய்யவும், சிறுநீரக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.
  • சூரியகாந்தி விதைகளில் டயட்ரி நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இது அடிக்கடி தோன்றும் பசி உணர்வை குறைத்து வயிற்றை அமைதியாக வைத்திருக்கும், மேலும் ஜீரண கோளாறு பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுகிறது.
  • சூரியகாந்தி விதைகளில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின் பி 1 உள்ளது. இது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றலை உருவாக்கி, நாம் உற்சாகமாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்க இது உதவுகிறது.
  • சூரியகாந்தி எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, நரம்பு, வாஸ்குலார் மற்றும் மூளை செயல்பாடுகளை நன்றாக இயங்கச்செய்கிறது.


மனதிற்கும்,உடலிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சூரியகாந்தி வளர்த்து அதன் ஒப்பற்ற நற்பலன்களை பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.

பெரும்பாலானோர் வீட்டை அழகு படுத்த பல வகையான செடிகளை வளர்ப்பார்கள், சிலர் அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள். அழகு மற்றும் அதிர்ஷ்டத்தை தர வல்லதாக இந்த மயில் மாணிக்கம் கருதப்படுகிறது. எனவே தான் பலரது வீட்டில் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
மயிர் மாணிக்கம்
விதையை வைத்து தான் இந்த செடியானது வளர்ப்பது செய்யப்படுகிறது. மயில் மாணிக்கம் என பெயர் வரக்காரணம் என்னவென்றால், இதன் செடியில் பூக்கும் பூக்களின் நிறமானது அடர் சிவப்பு நிறமாக மாணிக்கம் போன்றும், அதன் வடிவம் மயில் தோகை போல விரிவாக இருப்பதாலும் தான் இதற்கு மயில் மாணிக்கம் என்று பெயர் வந்தது. ஆனால், இதன் இலைகள் மயிர் கணுக்கள் போல உள்ளதால் மயிர் மாணிக்கம் என்ற பெயர் கொண்டதாகவும், நாளடைவில் அதுவே மருவி தான் மயில் மாணிக்கம் என ஆனதாக கூறுகிறார்கள்.

மகத்துவம் பல நிறைந்த இந்த மயில் மாணிக்கம் செடி வளர்ப்பது எப்படி, வீட்டுத்தோட்டம் மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு மற்றும் மயில் மாணிக்க செடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

மயில் மாணிக்கம் விதைப்பு செய்தல்

மயில் மாணிக்கம் ஒரு கொடி வகை தாவரம் ஆகும். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கலந்து மண்கலவை தயார் செய்துக்கொள்ள வேண்டும். நெகிழி பை அல்லது பூந்தொட்டியில் அந்த மண்கலவையை போட்டு நிரப்பவும். பிறகு தேர்ந்தெடுத்த நேர்த்தியான மயில் மாணிக்கம் விதைகளை அந்த மண்கலவையில் சிறிது பள்ளம் தோண்டி விதையை உள்ளே வைத்து மூடி கொஞ்சமாக தண்ணீர் தெளிக்கவும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

செடியின் வளர்ச்சி

மயில்-மாணிக்கம் செடி வளர்ப்பு
விதையை விதைத்தப்பிறகு சரியாக 16 நாட்களுக்குள் மயில் மாணிக்க கொடியானது முளைத்து வெளியில் வந்துவிடும். இந்த மயில் மாணிக்க கொடியானது ஆரம்ப நிலையில் சிறிது சிறிதாகத்தான் வளரும். ஓரளவு கொடி வளர்வதற்கு அதிகபட்சமாக 50 நாட்களுக்கு மேலாக ஆகும். கொடி வளர எதுவாக பந்தல் அமைப்பது சிறந்தது. மயிர் மாணிக்க பூக்கள் கண்களை கவரும் நிறம் உடையதாக இருக்கும்.

பராமரிப்பு

மயில்-மாணிக்கம் செடி வளர்ப்பு
மயில் மாணிக்க கொடிகளுக்கு நீர் எந்தளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு வெயிலும் தேவை. மயில் மாணிக்க செடியை அதிகமான வெப்பத்திலும் வளர்க்க முடியும். இந்த செடிக்கு காலை நேரத்து வெயில் மிகவும் அவசியமாகும், சாதாரணமாக ஒரு செடிக்கு எட்டு மணி நேரம் வெயிலானது தேவைப்படும். ஆகவே அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் இடத்தை தேர்வு செய்து பராமரித்துக்கொள்ளவும்.

உரமேலாண்மை

மயில் மாணிக்கத்திற்கு தனியாக எந்த விதமான உரமும் அவசியமே இல்லை, அதுவாகவே நன்கு வளரும், குறிப்பாக இந்த செடி நடவு செய்து 65 நாட்களில் மொட்டுக்கள் வைக்கத்தொடங்கிவிடும். ஆனால் பூக்கள் பூக்குவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். கொடி உயர வளர துவங்கியதும் மேற்புறம் நோக்கி நூல்களைகொண்டு கட்டிவிட்டால் கொடி அதுவாகவே மேலே ஏறிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மயில் மாணிக்க செடி பயன்கள்

மயில் மாணிக்கம்

  • பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது கருமுட்டைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் ஆகும். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய மயில் மாணிக்க சாறை குறைந்தது ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும், எனவே தான் இதை அழகுச்செடி மயில் மாணிக்கம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள்.
  • மயில் மாணிக்கத்தின் இலைகளை அரைத்து பூசிவந்தால் கை, கால்களில் உள்ள கட்டிகள் விரைவில் குணமாகும்.
  • பொதுவாக அனைவருக்கும் பொடுகு பிரச்சனை தீராத தொல்லையாக இருக்கும், அதை சரி செய்ய மயில் மாணிக்கத்தை அரைத்து தலையில் பூசிவந்தால் பொடுகு பிரச்சனை குறைந்து, தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • மயிர் மாணிக்க மூலிகை சிறுநீரக கோளாறுகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.


இந்த மயில் மாணிக்கத்தை வீட்டில் வளர்த்து வீட்டின் அழகையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

குண்டுமல்லி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது மிகவும் எளிதாகும். பழங்காலத்தில் இருந்தே பெண்கள் பூக்கள் சூடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். அதிலும் குண்டுமல்லி பூ என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் பூக்களை சூடிக்கொள்ள மட்டும் இல்லாமல் பூச்செடி வளர்க்கவும் பிடிக்கும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


குண்டுமல்லி, ஜாதிமல்லி, கரும் முல்லை, ஊசி மல்லி, நாக மல்லி என இருபத்தியாறு வகைகள் உண்டு. குண்டுமல்லி செடி வளர்க்க நினைப்பவர்கள் எந்த மாதிரியான மாதத்தில் குண்டுமல்லி செடி நடலாம் என்று தெரியாமல் இருப்பார்கள், ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்றதாகும்.

குண்டுமல்லி பூக்கள்
பெரும்பாலும் அனைவரும் ரோஜா செடி, மல்லிகைபூச்செடி போன்றவற்றை வளர்க்க விரும்புவார்கள். மல்லிகை பூ செடி வளர்ப்பது எப்படி, மல்லிகை பூ செடி பதியம் போடுவது எப்படி, குண்டுமல்லி செடியில் அதிகமான பூ வர என்ன செய்யலாம், மல்லிகை செடி உற்பத்தி போன்றவற்றைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

குண்டுமல்லி செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு – உற்பத்தி

குண்டுமல்லி பூ
குண்டுமல்லி செடி வளர்ப்பு பொறுத்தவரை பராமரிப்பு மிகவும் அவசியம். மல்லிகைக்கு மட்டுமல்லாமல் அனைத்து பூக்களுக்குமே பராமரிப்பு முக்கியம். மல்லி செடியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு, ஒன்று கொடி வகை, மற்றொன்று செடி வகை. கொடி வகை செடிகள் வீட்டில் வளர்க்க தகுந்ததாகும். தோட்டத்தில் பயிர் செய்ய செடி வகை சிறந்தது.

பயிர் நட வேண்டிய நிலத்தை 2 அல்லது 3 முறையோ நன்கு உழ வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் பயிர் நட ஏற்றவை. பூக்கள் பூப்பதற்கு இயற்கை தொழு உரங்கள், மண்புழு உரம், காய்கறி கழிவுகள், புளித்த மோர் கரைசல். தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், எருக்கம் இலை கரைசல், கடலைப்பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு கரைசல் போன்றவை சிறந்தது. மல்லிகை செடியை கவாத்து செய்வது அவசியம்.

மல்லிகை செடியை கண்டிப்பாக வெயில் படும்படியான இடத்தில வைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 6400 பதியங்கள் தேவைப்படும். செடிகள் மார்ச் முதல் நவம்பர் மாதங்களில் பூக்க தொடங்கும். என்றாலும் இரண்டாம் ஆண்டில் இருந்து சராசரியான விளைச்சல் இருக்கும். நன்கு வளர்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்து விட வேண்டும். எக்டருக்கு 875௦ கிலோ மொட்டுக்கள் வரை கிடைக்கும்.

மல்லிகை பூ செடி பதியம்

குண்டுமல்லி செடி பதியம்
மல்லிகை பூ செடி பதியம் போடுவது மிகவும் எளிதாகும். மல்லிகை செடி பதியம் போட அக்டோபர், நவம்பர் மாதங்கள் சிறந்தவையாகும். மல்லிகை பூ செடி பதியம் போடும்போது தடிமனான கிளையாக இருப்பது நல்லது. கிளைகளை மண்ணில் ஊன்றும்போது நேராக இல்லாமல் 45 டிகிரி சாய்வாக வைக்க வேண்டும். பதியம் போடும்போது பட்டை தூள், கற்றாழை ஜெல் போன்றவற்றில் குச்சிகளை நனைத்து ஊன்றலாம்.

மல்லிகை செடி பதியம் போடும்போது கண்டிப்பாக தண்டுகளின் மேல்பாகம் வெயில் படாதவாறு இருக்க வேண்டும். பதியம் போட்ட பிறகு செடியை நிழலில் வைக்க வேண்டும். பதியம் போட்டு நன்றாக துளிர் விட்ட பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

எளிமையான முறையில் வீட்டில் குண்டுமல்லி பூச்செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

குண்டுமல்லி செடி வளர்ப்பு

பெண்கள் எப்போதும் பூச்செடிகள் வளர்க்க விரும்புவார்கள். அதிலும் பூச்செடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அவர்கள் முதலில் யோசிப்பது மல்லிகை செடி வளர்ப்பது எப்படி என்பதாகத்தான் இருக்கும். வீட்டில் பெண்களே எளிய முறையில் மல்லி செடி வளர்ப்பு தொடங்கலாம்.

வீட்டில் மல்லி செடி வளர்க்க 50 லிட்டர் கேனில் வைத்து வளர்க்கலாம். மல்லி செடி வளர்க்க செம்மண் சிறந்தது. செடி நன்றாக வெயில் படும்படியான இடத்தில் இருக்க வேண்டும். மற்றபடி பராமரிப்பு முறைகள் மாடித்தோட்டமோ, சாகுபடி செய்யும் தோட்டமோ எல்லாவற்றுக்கும் ஒன்றே.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வெயில் காலங்களில் காலை, மாலை என இரு வேளையும் தண்ணீர் விட வேண்டும். குளிர் காலம் மற்றும் மழைக்காலங்களில் மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து தண்ணீர் விட வேண்டும்.

குண்டுமல்லி செடியை கட்டிங் செய்யும் முறை

குண்டுமல்லி செடி cutting

குண்டுமல்லி செடியைப் பூக்கள் நன்றாக பூப்பதற்க்காக கட்டிங்(கவாத்து) செய்ய வேண்டும். செடியை சுற்றி அனைத்து பக்கங்களிலும் ஒரே மாதிரியாக வெட்ட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை இவ்வாறு வெட்டலாம். செடிகளை வெட்டிவிட்டு 25 நாட்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அதன் பின்னர் 8 நாட்கள் வரை பூக்கள் பூக்கும். பிறகு மீண்டும் செடிகளை வெட்ட வேண்டும் . செடிகளை வெட்டி விட்ட பிறகு தண்ணீர் அதிகம் பாய்ச்சக்கூடாது. குறைவான அளவில் தண்ணீர் பாய்ச்சுவது செடிகளுக்கு நல்லது.

குண்டுமல்லியின் பயன்கள்

குண்டுமல்லி benefits

  • குண்டுமல்லி பூக்கள் அழகுக்காக மட்டுமல்லாமல் மருத்துவத்துக்காகவும், பூஜைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • மல்லிகைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர வயிற்றில் உள்ள கொக்கி புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை அழிந்து விடும்.
  • மல்லிகைப்பூவை வெயிலில் காயவைத்து பொடிசெய்து தண்ணீரில் கலந்து குடுத்து வர சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
  • அடிப்பட்ட வீக்கம் அல்லது சுளுக்கு பிடித்த வீக்கம் போன்றவைக்கு
    மல்லிகைப்பூக்களை அரைத்து பூச வீக்கம் சரியாகும்.
  • பெண்களுக்கு உடல்சூடு, மனஅழுத்தம் குறைய தலையில் மல்லிகைப்பூக்களை சூடிக்கொண்டால் போதுமானது.

  • பயன்கள் பல இருக்கும் இந்த குண்டுமல்லி செடி வளர்த்து அதன் மலர் போல உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூத்து குலுங்க வாழ்த்துகிறோம்.

    தாமரை வளர்ப்பு சிறக்க முக்கியமானது நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது. தாமரை விதையின் மேற்புற ஓடு கடினமாக இருப்பதினால், முளை விடுவதில் கால தாமதம் அல்லது ஒரு சில நேரங்களில் முளைக்காமலும் போகவாய்ப்புள்ளது. எனவே நல்ல விதையை தேர்ந்தெடுக்கவும்.
    தாமரை வளர்ப்பு

    தாமரை வளர்ப்பு – விதையிலிருந்து வளர்க்கும் முறை

    தாமரை விதை
    தேர்ந்தெடுத்த தாமரை விதைகளை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போடவும். தண்ணீரின் மேலே மிதந்து காணப்படும் விதைகளுக்கு முளைக்கும் தன்மை இல்லாமல் கூட இருக்கலாம், எனவே தண்ணீரில் மூழ்கி அடிப்பகுதியில் இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

    gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now


    அடுத்து விதையின் அடிபுறப்பகுதி அல்லது பக்கவாட்டுப்பகுதியில் உப்பு காகிதத்தை கொண்டு விதையின் ஓட்டிற்கு அடுத்து உள்ள வெண்மை நிற பருப்பு தெரியும் வரை உரைத்து பிறகு அதை எடுத்துக்கொள்ளவும்.

    தயார் செய்துவைத்த தாமரை விதைகளை ஒரு பாத்திரத்தில் உள்ளே போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க வெயிலில் வைக்க வேண்டும். இந்த செயல் கடினமான தாமரை விதையுடைய ஓட்டை மென்மையானதாக ஆக்கும்.

    அடுத்த தினம் அந்த நீரை வடிகட்டி விட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். 3 முதல் 6 நாட்களில் விதை முளைவிட்டிருக்கும் அப்போது நீரை மாற்றி வைக்கவேண்டும். பிறகு முதல் தாமரை இலை வளர 3 முதல் 5 வாரங்கள் ஆகும்.

    தொட்டியில் தாமரை வளர்ப்பது எப்படி

    தாமரை கொடி
    தாமரை வளரும் மண், செம்மண் மற்றும் களிமண். அதை ஒரு தொட்டியில் போட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். தாமரையின் முதல் இலை வளர்ந்து விரியும் முன் அந்த தொட்டியில் முளைத்த விதையின் வேர், தண்டு அடிபடாமல் நட்டு பிறகு தொட்டி முழுவதும் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். சில வாரங்களில் செடி வளரத்தொடங்கும்.

    கிழங்கிலிருந்து தாமரை வளர்ப்பு

    தாமரைசெடி கிழங்கு
    தாமரை கிழங்கு நடவு செய்தல் மிகவும் சுலபமான ஒன்றாகும். ஒரு தொட்டியில் நன்கு மக்கிய மாட்டு எருவை போட்டுக்கொள்ளவும். பின்னர் தூளாக்கிய முட்டை ஓடுகளை போட்டுக்கொள்ளவும். பிறகு செம்மண் போட்டு மூன்றையும் நன்கு கலக்கவும். பின்னர் மெதுவாக தண்ணீர் ஊற்றவும் அப்போதுதான் எரு மேலே வராது. அதன்பிறகு ஒரு வாரம் ஊற வைத்த தாமரை கிழங்கை தொட்டியின் ஓரத்தில் வைத்து நடவு செய்யவும் . முக்கியமானது தண்ணீரை மிக மெதுவாக ஊற்ற வேண்டும். ஒரு வாரத்தில் தாமரை இலை நீரின் மேலே தெரிய ஆரம்பிக்கும்.

    வீட்டில் தாமரை வளர்க்கலாமா

    தாமரை விதை முளைப்பு
    வீட்டில் தாமரை வளர்ப்பு தற்போதைய மாடித்தோட்ட காலத்தில் மிக பிரபலமாகிவிட்டது. முன்பெல்லாம் நாம் தாமரை பூ காணுமிடம் தாமரை குளம், ஆனால் தற்போது தாமரை வளர்க்கும் முறை சுலபமாக அனைவரும் அறிந்துக்கொள்ளலாம் என்கிற சூழ்நிலையில் தாமரை பூ வளர்ப்பு மாடித்தோட்டத்தில், வீட்டின் முகப்பு பகுதியில் காண முடிகிறது. மேலும் தாமரை செடி வளர்ப்பு நல்ல நேர்மறையான ஆற்றலை ஈர்ப்பதாக நம்பப்படுகிறது. எனவே வீட்டில் தாமரையை வளர்க்கலாம்.

    தாமரை செடி டிப்ஸ்

    1.தாமரை செடி அல்லது தாமரை கொடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்துக்கொண்டோம். தாமரை வளரும் தொட்டியில் உள்ள நீரில் சிறிய ரக மீன்களை வளர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியை தடுத்து தாமரையின் வளர்ச்சியை சீராக்கலாம்.

    2.மீன்களின் கழிவுகளை உரமாக எடுத்துக்கொண்டு தாமரையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

    3.மண்புழு உரம் அல்லது பஞ்சகாவியா போன்ற உரங்களில் ஏதேனும் ஒன்றை மாதம் ஒரு முறை தாமரை செடி இருக்கும் நீரில் கரைப்பதன் மூலம் தாமரை செடியின் வளர்ச்சி சிறக்கும்.

    5kg  Vermi Compost icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

    இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    தாமரையின் அற்புத மருத்துவகுணங்கள்


    தாமரையின் கிழங்கு மற்றும் விதை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளவை. கிழங்குதனில் நார்சத்து அதிகம் காணப்படுகிறது, மேலும் வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. தாமரை இதழ்களை நிழலில் காயவைத்து பொடியாக செய்து அதை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராக அமையும்.

    தாமரை இதழோடு நெல்லிக்காய், மருதாணி இலை, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து அதனுடன் தேங்காயெண்ணை சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து அதை தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை மறையும், முடி உதிரும் பிரச்சனையும் சரியாகும்.

    தாமரை தண்டுகளை வெயிலில் காயவைத்து, நார் செய்து அதை விளக்கேற்ற திரியாக பயன்படுத்தலாம். தாமரை விதையானது கருப்பு நிறத்தில் கடினமாக இருக்கும், அதை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை சாப்பிட்டால் இருதயம் வலுப்பெறும்.

    இதுவரை தாமரை செடி எப்படி வளர்ப்பது என்று காண்டோம். நீங்களும் இந்த கட்டுரையின் வழிகாட்டுதலின் படி தாமரையை வளர்த்து அந்த மலர் போல உங்கள் வாழ்க்கையும் வளமாக வாழ்த்துகிறோம்.

    ரோஜா செடி வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு என்பது இன்று அனைவர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. ரோஜா செடி வகைகள், ரோஜா செடி வளர்ப்பு, ரோஜா செடி பராமரிப்பு, ரோஜா செடி பதியம் போடுவது எப்படி, பன்னீர் ரோஜா செடி வளர்ப்பது எப்படி, ரோஜா செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி, மாடித் தோட்டத்தில் ரோஜா செடி வளர்ப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    நாட்டு ரோஜா செடி

    ரோஜா செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு – ரோஜா செடி மண் கலவை

    ரோஜாச்செடி வளர்ப்புக்கு மண்கலவை மிகவும் முக்கியமானதாகும். ரோஜா செடி நன்றாக வளர்வதற்கு செடி வைக்கப்போகும் தொட்டியில் பாதி அளவிற்கு மண்ணும் மீதியில் 30% நன்கு மக்கிய தொழுஉரமும் 20% தேங்காய் நாரை நன்றாக காயவைத்து பொடி செய்து மண்ணில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மண்கலவையுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து செடியை நடலாம். ரோஜாச்செடி வளர்ப்பு அதன் பராமரிப்பு முறைகள் செடிகளின் வகைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

    5kg cocopeat icon

    இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

    உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    ரோஜா செடி வகைகள்

    டமாஸ்க், போர்போன், சீனா, சென்டிபோலியா, கழிக்க, டி, ஹைபிரிட் டி, மினியேசர் என்று பல வகை ரோஜாக்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு வகைக்கும் பூக்கும் காலம் மாறுபடுகிறது, எனவே நாம் செடியை நடும்போது என்ன வகையான செடியை நடுகிறோம் அதற்கான பராமரிப்பு முறைகள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    நாட்டு ரோஜா செடி

    ரோஜா பூ செடி

    நாட்டு ரோஜா செடி என்றுபார்க்கும் போது பன்னீர் ரோஸ் போன்றவை உண்டு. இவை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நாட்டு ரோஜா செடிகளை வளர்ப்பது மிகவும் சுலபமாகும்.

    ரோஜா செடி நோய்

    ரோஜாச்செடி நோய்

  • ரோஜாச்செடியில் சாறு உறிஞ்சும் பூச்சி, மாவு பூச்சி போன்றவற்றால் ஏற்படும் நோய்களே அதிகம் ஆகும், இதை சரி செய்ய வாரம் ஒரு முறை கற்பூரக்கரைசல் தெளிக்கலாம்.
  • ரோஜா செடியில் இலை சுருங்கல் நோய்,வேர் அழுகல், பூச்சி அரிப்பு போன்ற நோய்கள் ஏற்படும். இலைகள் மஞ்சளாக மாறும்.
  • மேலும் புதிய இலைகளும் நோய்வாய்ப்பட்ட இலைகளாக மஞ்சளாக துளிர்க்கும். அவ்வாறான இலைகளை வெட்டி விட வேண்டும்.
  • ஒரு பக்கெட் தண்ணீரில் மாட்டு சாணத்தைக் கரைத்து ஒரு கைப்பிடி அளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட செடியின் மீது தெளிக்க வேண்டும்.
  • பூச்சிகள்,எறும்புகள் போன்றவற்றைத் தடுக்க வேப்ப இலையுடன் சிறிது பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்தபிறகு இதை வடிகட்டி செடிகளுக்கு ஸ்பிரே செய்யலாம்.
  • 2 litter sprayer icon

    இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

    உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

     Buy Now

    தட்பவெப்பநிலை

    ரோஜாச்செடி வளர்ப்புக்கு வெயில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நேரடியான சூரியஒளி மற்றும் நிழல் இரண்டுமே இருக்கும் இடமாக தேர்வு செய்யவேண்டியது அவசியம். வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது, ஆனால் தண்ணீரை மொத்தமாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். மேலும் பழுத்த இலைகளை கண்டிப்பாக வெட்டி விட வேண்டும். பொதுவாகவே வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு சற்று அதிகப்படியான பராமரிப்பு தேவைப்படுகிறது.

    ரோஜா செடி அதிகம் பூக்க உரம்

    ரோஜா செடி அதிகம் பூக்க

  • ரோஜா செடி வளர்ப்புக்கு பெரிய அளவில் உரம் ஒன்றும் தேவை இல்லை. முட்டை ஓட்டுத்தூள், வெங்காயத்தோல், காய்கறி கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • பயன்படுத்திய தேயிலைத்தூள், பீட்ரூட் தோல், தர்பூசணி தோல் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதால் பூக்கள் அடர்த்தியாக பூக்கும் மற்றும் பூக்களின் நிறம் நல்ல அடர்த்தியாக இருக்கும்.
  • உருளைக்கிழங்கு தோல், மண்புழு உரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
  • அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து செடியை நல்ல காற்றோட்டத்துடன் வைத்து மண்ணை ஈரப்பதமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும். அதிக அளவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
  • வருடத்திற்கு ஒரு முறை ரோஜா செடியை கவாத்து செய்வது அவசியம். இதனால் செடி நன்றாக வளரும்.
  • பன்னீர் ரோஜா வளர்ப்பு

    பன்னீர் ரோஜா

    பன்னீர் ரோஸைப் பொறுத்தவரை அலங்காரப் பொருளாகவும், ஆரோக்ய பொருளாகவும் உள்ளது. பன்னீர் ரோஜாவை மாடித்தோட்டத்திலோ, வீட்டுத்தோட்டத்திலோ அல்லது பணப்பயிராக விவசாய நிலங்களிலோ வளர்க்கலாம். சாதாரண ரோஸ் செடிக்கு மண் தயாரிப்பதைப் போலவே இதற்கும் மண் கலவை தயார் செய்ய வேண்டும்.

    உரம் தயாரிப்பு

    தேவையான பொருட்கள்

  • டீத்தூள் கழிவுகள் – 50 கிராம்
  • முட்டை ஓட்டுத்தூள் – 2 ஸ்பூன்
  • வாழைப்பழத்தோல் – சிறிதளவு
  • புளித்த மோர் – 2 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • செய்முறை

    ஒரு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் பக்கெட்டில் உள்ள தண்ணீரில் நன்றாக கலந்து மூன்று நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் ரோஸ் செடி நட்டு வைத்துள்ள வேர்ப்பகுதியில் பாத்தி எடுத்து ஊற வைத்துள்ள தண்ணீரை வேர்பகுதியில் படுமாறு ஊற்றி பின் மண் அணைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது பதினைந்து நாளுக்கு ஒரு முறையோ இவ்வாறு செய்யலாம்.

    ரோஜாச்செடி வளர்த்து அதிக பூக்கள் பெறுவது எப்படி?

  • ரோஸ் செடியில் பூக்கள் பறிக்கும்போது பூக்களை மட்டும் பறிக்காமல் இரண்டு இலைகளையும் சேர்த்து பறிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் புதிய இலைகள் துளிர் விட உதவியாக இருக்கும்.
  • உரமாக டீத்தூள், வெங்காயத்தோல், முட்டை ஓடு, காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாக இடலாம்.
  • வாழைப்பழத்தோலை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றலாம்.
  • பழைய சாதத்தின் தண்ணீரை வடிகட்டி ஊற்றலாம்.
  • ரோஸ் செடிகளுக்கு உரம் வைப்பதாக இருந்தால் அன்று முழுவதும் செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.
  • ரோஜா செடியை பொறுத்தவரை உரம் வைப்பதாக இருந்தால் மாலை நேரத்தில் வைப்பது சிறந்தது.
  • எப்பொழுதும் ரோஜா செடி வளர்க்க இயற்கை உரங்கள் சிறந்தது.
  • ரோஜா செடி பதியம் போடுவது எப்படி?

    கொஞ்சம் நன்றாக வளர்ந்த தண்டாக இருப்பது பதியம் போட சிறந்தது. ரோஜா தண்டு துளிர்ப்பதற்கு காய்ந்து போகாமல் இருக்க வேண்டும், அதற்காக தண்டின் நுனியில் பசுசாணத்தை வைக்கலாம்.

    செடி துளிர்க்கும் வரை தண்ணீரை மட்டுமே தெளிக்க வேண்டும். செடி நன்றாக துளிர்த்து வளர ஆரம்பித்த பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

    ரோஜாச்செடி பதியம் போடுவது எப்படி என்று இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பார்க்கவும்.

    ரோஸ் செடி வளர்ப்பு என்பது இன்று அனைவரும் விரும்பும் ஒரு விஷயமாகும். விதவிதமான, அழகழகான ரோஜாப்பூக்கள் அனைவரையும் கவர்கின்றன. ரோஜாப்பூவின் நறுமணமும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது, இதனால் ரோஜாப்பூ அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

    Pin It