Category

பழங்கள்

Category

சொடக்கு தக்காளி என்ற பெயரே ஏதோ வினோதமாக இருக்கிறதே என்று நினைக்கீர்களா? இன்றைய கால கட்டத்தில் நாம் மறந்த போன சத்துநிறைந்த பழவகைகளுள் இதுவும் ஒன்றாகும். அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியே இந்த சொடக்குதக்காளியின் தாயகமாகும். விவசாயிகள் பெருமளவில் சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது கிடையாது, எனவே இது கடைகளில் மற்ற பழங்கள் போல கிடைப்பதில்லை, இவை சாதாரணமாக சாலை ஓரத்திலும், குப்பைகளிலும் மற்றும் காலி நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதை காணலாம்.
சொடக்கு தக்காளி வளர்ப்பு
இந்தப்பழமானது பலூன் போன்ற அமைப்புடைய உறையின் உள்ளே இருக்கும். கிராமங்களில் உள்ள சிறுவர்கள் முதிர்ந்த சொடக்கு தக்காளி பழத்தின் பலூன் போன்ற உறையினை வாயினால் அதை ஊதி தலையில் உடைத்து விளையாடுவார்கள், அப்படி தலையில் உடைக்கும்போது சொடக்கு போட்டதை போன்ற ஓலியை ஏற்படுத்தும், மேலும் இந்தப்பழம் பார்ப்பதற்கு தக்காளி பழத்தை போல இருக்கும். எனவே தான் இதை சொடக்கு தக்காளி என்று அழைக்கின்றனர்.

நமது நாட்டில் இந்தப்பழம் சந்தைப்படுத்த படவில்லை. எனவே இதை நகர்புறங்களில் வசிப்பவர்கள் மிகக்குறைந்தளவே அறிந்திருப்பார்கள். விதையிலிருந்து சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது எப்படி மற்றும் சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

வளரும் தன்மை

சொடக்கு தக்காளி வளர்ப்பு
சொடக்கு தக்காளி ஓராண்டுத் தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் தண்டுப்பகுதியானது கிளைத்துக் காணப்படுகின்றது. இந்தச்செடியானது பெரும்பாலும் களைச் செடியாகவே கருதுகின்றனர். மழைகாலங்களில் இந்த செடி தன்னிச்சையாக அதிகம் வளர்ந்திருப்பதை காணலாம். இந்தப்பழம் வெப்ப மண்டல பகுதி மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சொடக்கு தக்காளியின் அமைப்பு

சொடக்குதக்காளி வளர்ப்பு
சொடக்கு தக்காளி செடியானது 90 செமீ வரை உயரம் வளரக்கூடியது, சொடக்கு தக்காளி கீரை ஒவ்வொன்றும் 10 செமீ நீளம் வளரக்கூடியது. பூக்களிலிருந்து உறையை போன்ற பைக்குள் பச்சை நிறக்காய்கள் தோன்றுகிறது. இந்த உறைகள் பார்ப்பதற்கு பலூன் போல காட்சியளிக்கிறது. இந்தக்காய்கள் முற்றி பழமாகும் தருணத்தில் உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.

உறையினுள் உள்ளே இருக்கும் காயானது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். பழம் பழுத்தவுடன் மேல் உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறி விடும் மேலும் ஓரிரு நாளில் பழமானது உறையுடன் சேர்ந்து உதிர்ந்து விடும். இந்த சொடக்கு தக்காளி பழமானது 1.5 செமீ அளவில் இருக்கும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சொடக்கு தக்காளி பயன்கள்

சொடக்கு தக்காளி

  • சொடக்கு தக்காளி விதையில் விட்டமின் பி1 மிகுதியாக இருப்பதனால் தினமும் காலை எழுதவுடன் உட்கொண்டுவந்தால் இதயத் தமனியில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புதனை கரைக்கின்ற சக்தி இதற்கு இருக்கிறது. மேலும் கீழ் வாத கோளாறுகளை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
  • இந்தப்பழத்தை சாப்பிடும் பொழுது உங்களுடைய வயிறு விரைவில் திருப்தியான உணர்வை பெறும், இதன் காரணமாக நீங்கள் மேற்கொண்டு எதையும் சாப்பிட தோணாது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பர்களுக்கு இது பெரிதும் உதவும்.
  • நாம் உண்ணும் உணவுகள் சில சமயங்களில் கடினமானதாக இருக்கக்கூடும், அப்படி பட்ட கடினமான உணவுகள் கூட சுலபமாக ஜீரணம் ஆக இந்தப்பழத்தை சாப்பிட்டால் போதும், இந்த பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்தானது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய புண்கள் மற்றும் பிற ஆறாத புண்களுக்கு சொடக்கு தக்காளி இலைகள் மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதன் இலைகளை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்காய்ச்சி பின்பு புண்களின்மீது தடவினால் விரைவில் புண் ஆறும்.


அற்புத மருத்துவ பயன்களால் நம்மை சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி வளர்ப்பு செய்வது எப்படி என்று பார்த்தோம். இயற்கையின் அருட்கொடையாக சொடக்கு தக்காளியின் பயனை நீங்களும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

கோவைக்காய் கொடிவகையை சார்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இதை தொண்டைக்கொடி எனவும் அழைக்கின்றனர். தோட்டங்கள், வேலிகள், காடுகள் என அனைத்து இடங்களிலும் இந்த கோவை கொடி படர்ந்து காணப்படுகிறது. பல விவசாயிகளும் கோவை கொடி வளர்ப்பு செய்து நல்ல லாபம் பெறுகின்றனர். இந்த கோவை கொடி பழங்களின் சுவை இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய மூன்றும் கலந்த கலவையாக இருக்கும்.
கோவை கொடி வளர்ப்பு
‘கொவ்வை’ எனும் மற்றோரு பெயரும் இந்த கோவைக்கு இருக்கிறது. இலக்கியங்களில் அதிகளவில் கொவ்வை எனும் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ‘கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்…’ என்கிற வரிகளே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கொவ்வை என்பதே மருவி, கோவை எனும் பெயர் பெற்றது. கோவை என்றால் ‘தொகுப்பு’ என்று அர்த்தம்.

கோவை பழத்தின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு அதை பலவகையாகப் பிரிக்கின்றனர். மேலும் இதன் இலை, காய், தண்டு என அனைத்தும் மருத்துவப் பயன்கள் உடையவை. கோவை கொடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி, வீட்டுத் தோட்டத்தில் கோவைக்காய் கொடி வளர்ப்பது எப்படி மற்றும் கோவைக்காய் சாகுபடி மற்றும் கோவை கொடியின் பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வளர்ச்சிக்கேற்ற மண்கலவை

நல்ல வடிகால் வசதியை உடைய செம்மண், மணல்சாரி போன்ற மண்வகைகள் கோவை கொடி வளர்ப்பு செய்ய ஏற்றவை. செம்மண் 40 சதவிகிதம், மக்கிய தொழு உரம் அல்லது செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு மண்கலவை தயார் செய்தால் கோவை கொடி வளர்ப்பு சிறக்கும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல்

சித்திரை மாதத்தைத் தவிர்த்து மீதி அனைத்து மாதங்களிலும் கோவை கொடி விதை விதைப்பு செய்யலாம். இருப்பினும், ஆடிப்பட்டத்தில் விதை விதைத்தால் கோவை செடிகளின் வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும். ஒரு முறை கோவை கொடி வளர்ப்பு செய்தோமேயானால் 2 ஆண்டுகள் வரை பலன்களை கொடுக்க வல்லது. சேகரித்து வைத்துள்ள விதைகளை, தயார் நிலையில் உள்ள மண்கலவையில் விதைப்பு செய்து, அதன் மீது பூவாளி கொண்டு நீர் தெளிக்கவும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம்புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கோவை கொடி வளர்ச்சி

கோவை கொடி வளர்ப்பு
விதை விதைத்த 10 நாட்களுக்கு பிறகு கோவை கொடி முளைப்பு விட்டு வளர தொங்கிருப்பதை காணமுடியும். கொடி பற்றி ஏற ஏதுவாக பந்தல் அமைப்பது அவசியமாகும். 50 நாட்களுக்கு பிறகு வெள்ளை நிற பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். சுமார் 60 நாளில் காய்கள் காய்க்க தொடங்கிவிடும்.

கோவைக்காய் சாகுபடி

கோவை கொடி வளர்ப்பு
காய் காய்க்க தொடங்கிய பிறகு ஒரு வாரத்திலேயே கோவைக்காயை நாம் அறுவடை செய்யலாம். ஒரு நல்ல வளர்ந்த கொடியில் வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம், இதே போல தொடர்ந்து 5 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். 5 மாதங்களுக்கு பிறகு முதிர்ந்த இலைகளை நீக்கி கவாத்து செய்து பராமரித்தால், 1 மாதத்தில் அடுத்த அறுவடையை தொடங்கலாம்.

கோவைப்பழம் வகைகள்

மூவிரல் கோவை, கருங்கோவை, படப்பை, ஐவிரல் கோவை மற்றும் நமக்கோவை உள்ளிட்ட பல வகைகள் கோவைக்காயில் உள்ளது.

கோவை கொடியின் பயன்கள்

கோவைக்காய்

  • இரத்ததில் இருக்கின்ற சர்க்கரையின் அளவுதனை கோவைக்காய் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவிபுரிகிறது, நீரிழிவு நோயால் அவதிப்படுகிறவர்கள் இந்த கோவைப்பழத்தை தினசரி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கோடை காலம் வந்த உடனே முதலில் ஏற்படும் பாதிப்பு வியர்க்குரு. கோவை கொடியின் இலையை எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தோமேயானால் வியர்குரு வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றில் இருக்கும் கிருமிகளை நீக்கும் ஆற்றல் இந்த கோவை பழத்திற்கு உண்டு. கோவை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்குள்ளே இருக்கும் தீங்கை விளைவிக்கும் கிருமிகளை நீக்குகிறது.
  • கோவை இலைச்சாறுடன் கருஞ்சீரக பொடி சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து படை மீது பூசி, ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும், இவ்வாறாக தொடர்ந்து செய்து வர படை பிரச்சனை தீரும்.
  • வாய் புண்ணால் சிரமம் படுபவர்கள், கோவைக்காயை பச்சையாக வாயில் போட்டு மென்று துப்பிவிட்டாலே போதுமானது. இப்படி செய்யும் பொழுது வாய்ப்புண் விரைவில் குணமாகும்.


கோவை கொடி வளர்ப்பு செய்வது எப்படி என்று விரிவாக பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கோவை கொடி வளர்த்து, அதன் கொடி போல உங்கள் ஆரோக்கியமும் மெம்மேலும் உயர வாழ்த்துகிறோம்.

மாம்பழம் நம் அனைவருடைய வாழ்க்கையோடு கலந்த ஒரு இனிமையான பழம் ஆகும். பெரும்பாலான விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிராக இந்த மா மரம் உள்ளது, எனவேதான் அதிகளவு மா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. முக்கனிகளில் முதன்மைக்கனி இந்த மாம்பழம்.
மா மரம் வளர்ப்பு
மாமரம் விதையிலிருந்து வளர்ப்பது எப்படி , மாமரம் கற்றாழை மூலம் வளர்ப்பது எப்படி, மாடித்தோட்டத்தில் மா மரம் வளர்ப்பு செய்வது எப்படி, மாம்பழம் பறிக்கும் முறை, மாம்பழம் பழுக்க வைக்கும் முறை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

மா மர வளர்ச்சிக்கு ஏற்ற மண்

மா மரம் வளர்ப்பு
மா மரங்கள் பல்வேறு வகையான மண்ணையும் ஏற்று வளரும் தன்மை கொண்டது, ஆனால் லேசான மற்றும் வடிகால் வசதி உடைய மணல், களிமண் மரத்திற்கு சிறந்தது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

மாங்கன்று வளர்ப்பு

மா மரம் வளர்ப்பு
மாம்பழத்தை வாங்கி உண்டபிறகு, அதன் கொட்டையை மண்ணில் புதைத்து வைத்தால் போதும். மற்றோரு முறையும் உள்ளது, மாங்கொட்டையை கீறி அதன் உள்ளே இருக்கும் பருப்பை தனியே எடுத்து அதை மண்ணில் புதைத்தோ அல்லது டிஷ்யு பேப்பர் கொண்டு சுற்றி நீரில் நனைத்து வைக்கலாம். பொதுவாக இந்த முறையில் மா விதையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.

விதைகளில் இருந்து மா மரம் வளர்த்தல் காய் பிடிக்க 6 – 8 வருடங்கள் ஆகும், ஆனால் ஓட்டுக்கட்டிய செடிகள் மூலம் வளர்த்தால் 2 – 3 வருடங்களில் காய்பிடிக்க தொடங்கிவிடும், இருப்பினும் விதைகளில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடிக்கும், இது மரத்தின் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு அவசியமாகும். மாடி தோட்டத்தில் மாமரம் வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டை ரக மாங்கன்றுகளை வாங்கி பெரிய அளவு தொட்டிகளில் மாடியில் வளர்க்கலாம்.

மாமரம் ஒட்டுக்கட்டுதல்

ஒட்டுக்கட்டுவதற்கு நேர்த்தியான குச்சிகளை தேர்ந்தெடுத்து வெட்டி கொள்ளவும், ஒன்றோடு ஒன்று வைத்து ஒட்டு கட்டுவதற்கு முன் கற்றாழை சாற்றை வைத்து ஒட்டுக்கட்டினால் சீக்கிரமாக துளிர்த்து வரும், விண்பதியம் முறையில் கற்றாழை சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

நீர்மேலாண்மை

மா மரங்கள் கோடை வறட்சியைத் தாங்கும் திறன் உடையவை, இருந்தாலும் வறட்சியானது மாம்பழ உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடுவது அவசியம், அதே சமயம் மரத்தின் அடியில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிகமாக நீர் தேங்கினால் மா மரம் வளர்ப்பு சிறக்காது.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டுநீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர்ச்செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டுநீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

மாம்பழம் அறுவடை

மாம்பழம் அறுவடை
மாங்காய் மரம் தனில் பூக்கள் பூத்த பிறகு காய் காய்க்க 3 முதல் 5 மாதங்கள் ஆகிறது. மாம்பழத்தின் ரகத்தை பொறுத்து அதன் நிறம் மாறுபடும். பெரும்பாலும் மாம்பழம் கைகளினால் அறுவடை செய்யப்படுகிறது, மாம்பழத்தின் தோல் சேதப்படாமல் கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.

மாம்பழம் பறித்தல் மற்றும் பழுக்க வைக்கும் முறை

நன்கு பதமான மாங்காய்களை அடி ஏதும்படாமல் முடிந்தவரை கைகளால் பறித்துக்கொள்ளவும். பறித்த மாங்காய்களை வைக்கோலில் வைத்து மூடிவைத்தால் இரண்டு அல்லது மூன்று நாளில் இயற்கையான முறையில் மாங்காய் பழுத்துவிடும்.

கவாத்து செய்தல்

மா மரம் வளர்ப்பு
மாமரம் வளர்ப்பு தனில் பராமரிப்பு மிக அவசியமாகும். பழங்கள் காய்த்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்தல் வேண்டும். பலவீனமான மற்றும் வளர்ச்சி குன்றிய கிளைகளை நீக்கிவிட்டு, அனைத்து கிளைகளிலும் சூரிய ஒளி நன்கு படும்படி கவாத்து செய்யவேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்காகவே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண்கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

மாம்பழத்தின் நன்மைகள்

மா மரம் வளர்ப்பு

  • மாம்பழம் தனில் நார் சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்வதோடு, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
  • மாம்பழம், பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும் திறன் கொண்டது, மாம்பழத்தை சிறு துண்டாக நறுக்கி வாயின் உள்ளே போட்டு ஈறுகள் மீது படும்படி வைத்திருந்து 10 நிமிடங்களுக்கு பிறகு துப்பிவிட்டால் பற்கள் பூரண நலம் பெரும்.
  • சிறுநீர் பையில் உருவாகும் உப்பு கற்களைப் மெல்ல மெல்ல கரைக்கும் திறன் மாம்பழத்திற்கு இருக்கிறது, மேலும் இரவில் தூங்கப்போகும் முன்பு மாம்பழம் உண்டுவிட்டு உறங்கினால் அடுத்த தினம் மலச்சிக்கல் இருக்காது.
  • கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச்சத்து பெருமளவில் தேவைப்படுகிறது, அவர்களுக்கு இந்த மாம்பழம் வரப்பிரசாதம், இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பதில் மாம்பழ சாற்றை தினமும் குடித்தால் போதும் தேவையான அளவிற்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
  • மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த மிகவும் அவசியமான வைட்டமின் பி6 மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது. குழந்தைகள் இதை அடிக்கடி சாப்பிடும் பொழுது அவர்களின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.


நீங்களும் மேற்கண்ட முறையில் மா மரம் வளர்ப்பு செய்து, அதன் முழு பயன்களையும் பெற்று, மாம்பழத்தின் இனிமை போல உங்கள் வாழ்க்கை இனிக்க வாழ்த்துகிறோம்.

ரம்புட்டான் பழம் சுவை மிகுந்த மற்றும் சத்தான பழம் ஆகும். இது மருத்துவ ரீதியாகவும் பெருமளவில் பயன்படுகிறது. குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகளவில் ரம்புட்டன் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழத்தின் சுவை அதிகளவில் இனிப்பும், சிறிதளவு புளிப்பும் ஆகிய இரண்டு சுவைகளின் கலவையாக இருக்கும். இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக இருக்கும், இதனுள்ளே சதைப்பகுதி வெண்மை நிறத்திலும், அதனுள்ளே விதையும் இருக்கும்.
ரம்புட்டான் செடி வளர்ப்பு
ரம்புட்டான் பழத்தின் விதைகளில் இருந்து தயார்செய்யப்படும் நாற்றுகள் நல்ல வலிமை கொண்டதாக இருக்கும், மேலும் இந்த ரம்புட்டான் மரங்கள் பலனை கொடுக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை தேவைப்படும். மருத்துவ பலன்கள் பல கொண்ட இந்த ரம்புட்டான் செடி வளர்ப்பு இப்போது பொதுவான சமவெளிபரப்பிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

வீட்டில் விதையிலிருந்து ரம்புட்டான் செடி வளர்ப்பது எப்படி, ரம்புட்டான் பழம் அறுவடை மற்றும் ரம்பூட்டான் பழ ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை சேகரித்தல்

விதை-சேகரித்தல்
நல்ல ரம்பூட்டான் பழத்தை வாங்கிக்கொள்ளவும், அதன் சதை பகுதிகளை முழுவதும் நீக்கிவிட்டு விதையை தயார் செய்யவேண்டும், சதைப்பகுதி ஏதேனும் விதையில் சிறிது இருந்தால் கூட விதை முளைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக சதைப்பகுதி முழுவதும் நீக்கி நீரில் அலசி எடுத்துக்கொள்ளவும்.

மண்கலவை தயார் செய்தல்

மண்கலவை தயார் செய்தல்
மண்கலவைக்காக சிலர் கோகோபீட் கலவையை பயன்படுத்துகிறார்கள். அதுவும் பயன்படுத்தலாம், இல்லையெனில் செம்மண் மற்றும் மக்கிய தொழுஉரம் ஆகிய இரண்டும் சரிபாதி கலந்து பயன்படுத்தி கொள்ளலாம். தொழுஉரம் கிடைக்கவில்லை எனில் மண்புழு உரம் கூட பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை காணலாம்.

நடவு மற்றும் வளர்ச்சி

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

தயார் செய்த மண்கலவையில் நல்ல நேர்த்தியான விதைகளாக பார்த்து நடவு செய்யவேண்டும். ஒரு நெகிழிப்பையில் மண்கலவையை போட்டு நிரப்பி, சிறிது பள்ளம் தோண்டி விதையை அதில் போட்டு மூடி பூவாளி கொண்டு நீர் தெளிக்கவேண்டும். நீர் தேங்கி நிற்கக்கூடாது, சூரிய ஒளி அவசியமாகும். நடவு செய்த 20 நாட்களில் விதை முளைத்து வரத்தொடங்கிவிடும்.

கவாத்து செய்தல்

கவாத்து செய்தல்
ரம்புட்டான் செடி வளர்ப்பு தனில் கவாத்து மிக முக்கியமானதாகும். வீரியம் குறைந்த மற்றும் நலிந்த கிளைகளை வெட்டிவிடவேண்டும். குடைவடிவில் ரம்புட்டான் மரத்தை கவாத்து செய்தல் அதிக விளைச்சலை பெறலாம், சூரிய ஒளி உள்ளே படும்படி கவாத்து செய்தல் வேண்டும்.

ரம்புட்டான் பழம் அறுவடை

ரம்புட்டான் செடி வளர்ப்பு
ஒரு ரம்புட்டான் மரம் நடப்பட்ட 5 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்துவிடும். ரம்புட்டான் பழம் முழுமையாக பழுக்க 90 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். ரம்புட்டான் பழம் பிஞ்சாக இருக்கின்ற பொழுது பச்சை நிறமாக இருக்கும், பழுத்த பிறகு மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறிவிடும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு ரம்பூட்டான் மரமானது ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 கிலோ வரையிலான கனிகளை தரவல்லது.

ரம்புட்டான் பழ ஆரோக்கிய நன்மைகள்

ரம்புட்டான்

  • ரம்புட்டான் பழம் கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேரவிடாமல் தடுக்கிறது, இந்த செயலினால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.
  • ரம்புட்டான் பழத்தை தினமும் இரண்டு சாப்பிடுவதின் மூலமாக தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்திசெய்யும், வைட்டமின் சி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • ரம்புட்டான் பழத்தின் மேலே உள்ள முள் போன்ற தோல் பகுதியானது சீதபேதி பிரச்சனையை சரிசெய்யும். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நாக்கு வறண்டு போதலை தடுக்கிறது.
  • ரம்புட்டான் பழம் தனில் புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து இரண்டும் உள்ளது, இந்த இரண்டும் தேவைக்கேற்ப உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
  • பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் இந்த ரம்புட்டான் பழத்தை சாப்பிடும் போது, சிறுநீரகத்தில் உள்ள அவசியமற்ற கழிவுகள் வெளியேற உதவுகிறது.


அதிக மருத்துவ குணம் கொண்ட ரம்புட்டான் பழங்களை வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் ரம்புட்டான் செடி வளர்ப்பு செய்து அதன் பலன்கள் அனைத்தும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

ஆரஞ்சு செடி எலுமிச்சை (சிட்ரஸ்) குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது தோடம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டிலேயே ஆரஞ்சு செடி வளர்ப்பு செய்வதன் மூலம், அதிகமான சத்துகள் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தில் விஷத்தன்மை உள்ள வேதிப்பொருட்கள் சேராமல் அதன் பலன்களை நாம் பெறமுடியும் மேலும் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற ஆரஞ்சு பழத்தை கொடுக்கலாம்.
ஆரஞ்சு செடி வளர்ப்பு
இந்தியாவில் தமிழ்நாடு, மகராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு பழமானது பெருமளவில் விளைகிறது. நம் தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு பரியிடப்படுகிறது. ஆரஞ்சு பழம் பயிரிடும் முறை, ஆரஞ்சு பயன்கள், மாடி தோட்டத்தில் ஆரஞ்சு செடி வளர்ப்பு மற்றும் ஆரஞ்சு பழம் சாகுபடி முறைகள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை தேர்வு

ஆரஞ்சு விதை
ஆரஞ்சு பழத்திருந்து எடுத்த விதைகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது பழத்தை வெட்டிய பிறகு விதைகளை நீண்டநேரம் வைத்திருக்க கூடாது, உடனே அதை நாற்றுகள் தயார் செய்யும் குழித்தட்டுகளில் மண்கலவையுடன் சேர்த்து விதைப்பு செய்திட வேண்டும். நாற்றுகள் முளைத்து வந்தவுடன் அதை தனியே எடுத்து நடவு செய்யவேண்டும். இது ஆரஞ்சு பழத்தில் இருந்து செடி வளர்க்கும் முறை ஆகும்.

விதைகளில் இருந்து ஆரஞ்சு செடி வளர்ப்பது போல, ஓட்டுக்கட்டிய நாற்றுகளில் இருந்தும் கூட ஆரஞ்சு செடி வளர்க்கலாம் ஆனால் விதையில் இருந்து வளர்த்தால் மட்டுமே ஆணி வேர் பிடித்து வளரும், இந்த ஆணி வேர் தான் மரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். எனவே விதைகளில் இருந்து செய்யும் ஆரஞ்சு செடி வளர்ப்பு முறையே சிறந்தது.

மண்கலவை மற்றும் நடவு செய்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மண்புழு உரம் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பிறகு குழித்தட்டுகளில் இருக்கும் நாற்றுகளை எடுத்து இந்த மண்கலவையில் நடவு செய்யவும். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆரஞ்சு செடி நடவு செய்யலாம்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆரஞ்சு செடி வளர்ச்சி

ஆரஞ்சு மரம்
ஆரஞ்சு செடி வளர்ப்பு வீட்டுத்தோட்டம்தனை மிக அழகாக்கும். ஆரஞ்சு செடி நன்கு வளரும் வரை பராமரிப்பு மிக அவசியமாகும். களைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், காய்ந்து போன கிளைகள், பக்க கிளைகள் ஆகிவற்றை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். இயற்கை உரங்களை அளிப்பதே சிறந்தது. ஆரஞ்சு மரம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை கொடுக்கத்தொடங்கும். ஆரஞ்சு மரம் வளர்ப்பு செய்வதன் மூலம் 50 ஆண்டுகள் வரை அதன் பழங்களை பெற முடியும்.

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

ஆரஞ்சு செடி வளர்ப்பு

  • ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது நமது இரத்தத்தில் இருக்கும் அவசியமற்ற சர்க்கரையின் அளவை குறைக்க உதவிபுரிகிறது. ஆகையால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினசரி ஒரு ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும், குறிப்பாக இருதய கோளாறு மற்றும் இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாகும். ஆரஞ்சு பழத்தை உண்டுவந்தால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கிவிடும்.
  • ஆரஞ்சு பழம்தனில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளதால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும், மேலும் இது நோய் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
  • தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறவர்கள் இரவு உறங்கசெல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றுடன் தேன் கலந்து உண்டுவந்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
  • ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதன் பயனாக மேனி எப்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்கும்.


ஆரஞ்சு செடிகளை வீட்டில் முளைக்க வைக்க உதவும் வழிமுறைகளை கண்டோம். நீங்களும் மேற்கண்ட முறையில் ஆரஞ்சு வளர்த்து, அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

சப்போட்டா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில் தான் அதிகமாக காணப்படுகிறது, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவை தன் தாயகமாகக் கொண்டது. கடல்வழியே நம் இந்திய நாட்டிற்கு வருகை தந்த போர்த்துக்கீசியர்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சப்போட்டா பழம். இப்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா வளர்ப்பு அதிக அளவில் செய்யப்படுகின்றது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளான இலங்கை மற்றும் மலேசியா நாட்டிலும் சப்போட்டா அதிக அளவில் பயிரிட படுகிறது.
சப்போட்டா
விதையிலிருந்து சப்போட்டா வளர்ப்பது எப்படி, சப்போட்டா சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள், சப்போட்டா பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சப்போட்டா பயிரிட ஏற்ற மண்

ஏற்ற-மண்
சப்போட்டா பயிர் எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடிய பயிர் ஆகும். சிறந்த வடிகால் வசதியுள்ள மண்ணில் கூடுதல் வளர்ச்சியை காணலாம், மேலும் சப்போட்டா பழ மரம் ஓரளவு உப்புத் தன்மை கொண்ட நிலத்திலும் கூட உப்புத் தன்மை நீரையும் ஏற்று வளரும் திறன் கொண்டது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தையும் கலந்து மண்கலவையை தயார் செய்து கொள்ளவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சப்போட்டா நடவு முறை

சப்போட்டா-வளர்ப்பு
நன்கு கனிந்த சப்போட்டா பழத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பின்பு அதிலிருந்து விதைகளை தேர்வு செய்யவும், அடுத்து நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் அந்த விதைகளை விதைக்க வேண்டும். சப்போட்டா பழ விதையின் ஓடுகள் மிக கடினமாக இருக்கும், எனவே அது முளைத்து வர 90 முதல் 100 நாட்கள் ஆகலாம்.

ஒட்டு கட்டிய செடிகளை கூட வாங்கி பயிரிடலாம், ஆனால் விதையிலிருந்து ஒரு மரத்தை வளர்த்தால் மட்டுமே ஆணி வேறானது தோன்றும், ஆகையால் விதையை கொண்டு பயிரிடுவதே சிறந்தது. சப்போட்டா மரம் வளர்ப்பு செய்ய ஏற்ற மாதம் ஜூலை – அக்டோபர் ஆகும்.

பராமரிப்பு

பராமரிப்பு
சப்போட்டா செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதோடு அதன் பராமரிப்பு முறைகளையும் தெரிந்து கொள்வோம். சப்போட்டா செடியை தரை மட்டத்தில் இருந்து இரண்டு அடி உயரம் வரையிலும் கிளைகள் எந்தப்பக்கமும் பிரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சப்போட்டாவிற்கு கவாத்து செய்தல் அவசியமில்லை. நீண்டு வளரும் சில தண்டுகளை மட்டும் அகற்றினால் போதுமானது, மேலும் அடர்த்திமிக்க மற்றும் நிழல் விழுகின்ற கிளைகளையும் அகற்றிவிடவேண்டும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சப்போட்டா பழம் அறுவடை

சப்போட்டா-பயன்கள்
அறுவடை பருவத்தை அடைந்த சப்போட்டா பழத்தின் நிலையை அறிவது சற்று கடினமாகும். மற்ற பழங்களைப் போல் சப்போட்டாவில் நிறமாற்றம் ஏதும் ஏற்படுவது கிடையாது. இருப்பினும் சப்போட்டா பழத்தின் தோலின் மீதுள்ள சின்ன சின்ன கருநிறத்துகள் மறைந்து, மேலும் பழமானது சிறிது பளபளவென இருக்கும். சப்போட்டாவை நகத்தை கொண்டு கீறிப்பார்த்தால், பழத்தின் உள்ளே மிதமான மஞ்சள் நிறம் தென்படவேண்டும், பாலானது வடியக் கூடாது. சப்போட்டா தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகி இருக்கும். இப்படி காணப்பட்டால் சப்போட்டா பழத்தை அறுவடை செய்யலாம்.

சப்போட்டா பழ இரகங்கள்

சப்போட்டா-பழ-இரகங்கள்
கிரிக்கெட் பால், துவாரப்புடி, பாராமசி, தகரப்புடி, காளிப்பட்டி, ஓவல், கீர்த்தபர்த்தி, பாலா, கோ 1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம் 3, பெரிய குளம் 4, பெரிய குளம் 5.

சப்போட்டா பயன்கள்

பழம்-அறுவடை

  • சப்போட்டா பழத்தை நன்கு அரைத்து அதனுடைய சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வலிகள் எல்லாம் குணமாகிவிடும்.
  • சப்போட்டா பழத்தை தினசரி சாப்பிட்டால், சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
  • சப்போட்டா பழம் ஜூஸ் உடன், எலுமிச்ச பழச்சாறையும் கலந்து உட்கொண்டால் சளி சரியாகிவிடும்.
  • சப்போட்டா பழத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புண்ணை சரிசெய்யும்.
  • இந்த பழத்தில் வைட்டமின் A உள்ளதால், கண்பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.


வறட்சியைத் தாங்கி வளரும் பழமான சப்போட்டா பழம் பயிரிடும் முறைகள் பற்றி கண்டோம். அதிக மருத்துவ பயன்கள் கொண்ட சப்போட்டா பழமரத்தை வளர்த்து, அதன் அளப்பரிய பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

முள்சீத்தா மரம் வளர்ப்பு சுலபமான முறையில் செய்யலாம், ஏனென்றால் இது நன்கு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழ பயிர் ஆகும். முள் சீதாவின் பிறப்பிடம் அமேசான் காடுகள் ஆகும், தற்பொழுது வெகுவாக பல வெப்பமண்டல நாடுகளில் பரவலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்யப்படுகிறது. நம் இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் இயற்கையாகவே விளைகின்றது.
முள்சீத்தா-மரம்-வளர்ப்பு-1
வீட்டில் வளர்க்க கூடாத மரம் என்று முள் சீத்தா மரத்தை கூறுவதுண்டு, இயற்கையின் படைப்பில் வளர்க்க கூடாத மரமென்று ஏதுமில்லை. தாராளமாக இதை வீட்டில் வளர்க்கலாம். முள் சீதா மரம் வளர்ப்பது எப்படி, விதை வழி மரம் வளர்ப்பு, காய்க்காத மரம் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும், முள் சீத்தா பயன்கள், முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

வளர்ச்சிக்கு ஏற்ற மண்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மரம் வளர்ப்பு செய்ய நீர் தேங்காத எந்தவகை மண்ணையும் தேர்ந்தெடுக்கலாம். விதை மூலமாகவும் பயிர் செய்யலாம், மேலும் மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் முள் சீதாவை பயிர் செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

முள்சீத்தா மரம் வளர்ப்பு மற்றும் மகசூல்

முள்சீத்தா-மரம்-வளர்ப்பு
முள்சீத்தா மே மாதம் பூக்கள் பூத்து ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பழங்களை கொடுக்கும். ஒரு செடிக்கு ஏறக்குறைய நூறு பழங்கள் வரை கிடைக்கும், பழங்கள் அனைத்தையும் கனிவதற்கு முன்பாக பறித்து விற்பனை செய்துவிட வேண்டும்.

முள் சீத்தா பெரும்பாலும் இருபது அடி வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது. பசுமை மாறாத குணம் கொண்ட இம்மரம் மினுமினுப்பான இலையுடனும், பழங்களின் வெளிபுறப்பகுதியில் வளைந்த மிருதுவான முற்களோடு காணப்படும்.

முள்சீத்தாப்பழம் சாகுபடி முறை

மகசூல்
சீதா பழம் மரம் வளர்ப்பு முறை தனில் அடுத்து அதன் சாகுபடி முறைகளை காணப்போகிறோம். இதன் பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் இரண்டும் கலந்திருக்கும். முள் சீதா பழமானது இதய வடிவத்திலோ அல்லது நீள் முட்டை வடிவத்திலோ காணப்படும். முள் சீதா பழங்கள் தோற்றத்தில் பெரிதாக காணப்படும். ஒவ்வொரு முள் சீதா பழமும் 3 கிலோ முதல் 5 கிலோ வரையும் கூட எடை இருக்கும். முழுமையாக வளர்ந்த பழத்தின் நீளம் சுமார் 1 அடியும், அகலம் அரை அடியும் இருக்கும்.

முதலில் அடர்பச்சை நிறத்தில் காய்கள் இருக்கும், பின்பு பழுத்ததும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறிவிடும். சதைப்பகுதியானது நாட்டு சீத்தா பழத்தை போல வெண்மை நிறமாகவும், அதே சுவையும் கொண்டதாக இருக்கும், ஆனால் முள் சீத்தா நறுமணம், எலுமிச்சை, அண்ணாச்சி, முலாம்பழம், ஸ்டிராபெரி பழங்களின் நறுமணத்தை கலந்த ஒரு வித்தியாசமான வாசனையை பெற்றிருக்கும்.

பராமரிப்பு

சீதா-பழம்
முள் சீத்தாவிற்கு அதிகளவு தண்ணீர் தேவை இருக்காது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினாலே போதும். வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் தனி தனியே கலப்பு எரு வேர்ப்பகுதியில் இட்டால் போதுமானது. முள் சீத்தாவில் பூச்சி தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதற்கென்று பாதுகாப்பு முறையென்று ஏதுமில்லை. வேர் அழுகல் நோய் தோன்றினால் மட்டும் சிறிது வேப்பம்புண்ணாக்கை வேர் பகுதியில் வைத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும். இவ்வாறு செய்தால் முள்சீத்தா மரம் வளர்ப்பு சிறக்கும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

முள் சீத்தா அறுவடை

முள்சீத்தா மரம் வளர்ப்பு
தீவு பகுதிகளில் ஒரு வருடத்திற்கு மூன்று பருவங்களில் முள் சீத்தா பூ பூப்பதால், 3 முறை அறுவடை செய்யலாம். பிற பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தா மரமானது பூக்கிறது. ஜுன்-ஜுலை மாதங்களில் இதன் பழங்களை அறுவடை செய்யலாம்.

முள் சீத்தாப்பழம் நன்மைகள்

முள்சீத்தா பழம் சத்துக்கள் மற்றும் நன்மைகள்

  • முள் சீத்தாபழத்தில் நீர்சத்து மிகுந்துள்ளது , மேலும் மாவுசத்து, புரத சத்து, அத்தியாவசியமான தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து போன்ற பல சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ பன்னிரண்டு வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் காரணிகளை முள் சீத்தாப்பழம் பெற்றிருக்கிறது.
  • புற்றுநோய் பாதிப்பால் உருவாகும் கட்டிகளை கரைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
  • இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நம் செரிமான அமைப்பிற்கு நல்ல நன்மை தரக்கூடியது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
  • முள் சீத்தாப்பழம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தித்தனை அதிகரித்து உடலில் உள்ள நாற்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்குதலிருந்து பாதுகாக்கிறது.
  • இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், போன்ற பல்வேறுவகையான நோய்களை தீர்க்கவல்ல உன்னத மருந்தாகவும் முள்சீத்தாப்பழம் விளங்குகிறது.


இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை இந்த முள் சீதாப்பழ மரம். இதை நல்ல முறையில் வளர்த்து, அதன் பயன்களை பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

சிட்ரஸ் ரக பழங்கள் என அறியப்படும் சாத்துக்குடி பழம், ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் பற்றி அதிகம் நாம் அறிந்திருப்போம், இதே சிட்ரஸ் ரகத்தை சேர்ந்தது தான் பப்ளிமாஸ் பழங்கள். தோட்டமாக பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்து சாகுபடி செய்பவர்கள் மிக குறைவு, வீட்டுத்தோட்டத்திலும், பண்ணைகளிலும் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பு செய்பவர்களே அதிகம். உடலுக்கு தேவையான பல நன்மைகளை தர வல்லது பப்ளிமாஸ், இதை அதிக அளவில் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
பப்ளிமாஸ்
இத்தகைய அரிதாகி வரும் பப்ளிமாஸ் பழத்தின் வளர்ப்பு முறை, பம்பளிமாஸ் பழம் சாகுபடி, பப்ளிமாஸ் பழத்தின் நன்மைகள், பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அரிய பழம் பப்ளிமாஸ்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு
வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களில் சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சுக்கு அடுத்து பப்ளிமாஸ் பழங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே, பப்ளிமாஸ் அதிக புளிப்பு மற்றும் சிறிது கசப்புத்தன்மை சுவை கொண்டுள்ள காரணத்தால் இந்தியாவில் முன்பு பிரபலமாகவில்லை, இதன் தாயகமான மலேசியாவிலும் இதன் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.

அதை அனைவரும் உண்ணும் விதத்தில் ரகங்களை உருவாக்க எண்ணி 2020-ம் ஆண்டில் இனிப்புச் சுவையுள்ள இரண்டு பப்ளிமாஸ் ரகங்கள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரை எலுமிச்சை சாகுபடி மட்டுமே அதிகம் செய்யப்படுகிறது, ஆனால் இந்த பப்ளிமாஸ் பழ ரகங்களை எலுமிச்சை சாகுபடி நடைபெறும் அனைத்து இடம்தனிலும் சாகுபடி செய்யலாம்.

நடவு செய்தல்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு
பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு செய்ய நல்ல கன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், பப்ளிமாஸை ஒரு முறை நடவு செய்தோமேயானால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழத்தை அறுவடை செய்யலாம். குட்டையான மர வகைதனை சேர்ந்த இந்த ரகத்தை 15-க்கு 15 அடி வீதம் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

நல்ல முறையில் இயற்கை உரங்களை அளித்து வளர்த்தால் மூன்று ஆண்டில் வளர்ந்துவிடும், 4 – வது ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கத்தொடங்கும். ஒரு மரத்திலிருந்து சுமார் 35 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

ரகங்கள்

பம்பளிமாஸ்
அர்கா சந்திரா ரகத்தில் சதைப்பகுதியானது வெண்மை நிறத்தில் இருக்கும். அறுவடைசெய்யும் நான்காவது ஆண்டிலிருந்து ஒரு மரங்களில் இருந்து 35 – 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை எடை இருக்கக்கூடும்.
அரிய-பழம்
அர்கா ஆனந்தா ரகத்தில் பழத்தின் உள்ளே சதைப்பகுதியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். நான்காம் ஆண்டுதனில் இருந்து ஒரு மரத்திலிருந்து 45 – 50 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்யலாம். ஒரு பழம் 900 கிராமிலிருந்து ஒன்னேகால் கிலோ வரை எடை இருக்கக்கூடும்.

பப்ளிமாஸ் பழம் விற்பனை

pomelo
பப்ளிமாஸ் பழம் விற்பனை சிறப்பாக இருக்குமிடங்கள் உத்தரப் பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் இப்பழத்தை உண்ண பயன்படுத்திகிறார்கள். மெகா சைஸில் பப்ளிமாஸ் பழங்கள் இங்கு அதிக அளவில் விரும்பப்படுகிறது. மேலும் பப்ளிமாஸ் பழத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.

பப்ளிமாஸ் பழத்தின் தேவை அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து அங்கே விற்பனை செய்தோமேயானால் நல்ல வருமானம் ஈட்டலாம். இதற்கென பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது, அறுவடை செய்யும் முறையும் எளிது. பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு தனில் பூச்சித்தாக்குதலும் பெருமளவில் இருக்காது.

பம்பளிமாஸ் பழம் பயன்கள்

பப்ளிமாஸ் மரம் வளர்ப்பு

  • கோடைகாலத்தில் வெயிலில் அலைபவர்கள், அதிக சூடான பகுதி தனில் வேலை செய்பவர்களின் உடல் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும், இவர்கள் எல்லாம் பம்பளிமாஸ் பழத்தின் சாறை குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும்.
  • பம்பளிமாஸ் பழத்தின் சாறை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
  • வைட்டமின் எ சத்து உள்ளதால் மாலைக்கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிற கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
  • பப்ளிமாஸ் பழம் ஜூஸ் குடிப்பதால் இரத்த சோகையை அடியோடு போக்கலாம்.
  • காமாலை நோயின் தாக்கத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது இந்த அரிய பழம் பப்ளிமாஸ்.


பப்ளிமாஸ் மரம் வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம், அழிவின் விளிம்பில் பப்ளிமாஸ் பழம் உள்ளது, நேர்த்தியான முறையில் வளர்த்து பம்பளிமாஸ் மருத்துவப்பயன்கள் அனைத்தையும் பெற்று நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம்.

கொய்யா வளர்ப்பு , இன்றளவும் கிராமத்து மக்களை தாண்டி, பெரும்பாலும் நகரத்து உணவு பழக்கவழக்கங்களில் முழுமையாக சென்றடையவில்லை. அதற்கு காரணம், தோற்றம் மற்றும் உட்புறமுள்ள விதைகட்டமைப்பு. ஆப்பிள் பழம் அறுவடையாகி பல மாதங்கள் ஆனாலும் அதன் தோற்றத்தால் ஈர்க்கப்படும் மக்கள், பறித்தமாத்திரம் கைக்கு வரும் கொய்யா கனியால் ஈர்க்கப்படவில்லை. தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகளும், விவசாயி பெருங்குடி மக்களும் இப்போதுதான் அதிகமாக கொய்யாவை விளைவிக்க முன்வந்துள்ளனர்.
GUAVA
இதனால் கொய்யா தோட்டம் வளர்ப்பு பிரசத்தி பெற்று வருகிறது. மருத்துவத்திலும், கொய்யா கனியை தினமும் உண்ணுங்கள், நான்கு ஆரஞ்சு பழத்திற்கு ஈடானது ஒரு கொய்யா, மேலும் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது என கொய்யாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க கொய்யா மரம் வளர்ப்பு எப்படி, கொய்யா சாகுபடி, கொய்யா பழ நன்மைகள், மாடித்தோட்டத்தில் கொய்யா செடி வளர்ப்பு மேலும் அதன் வகைகளை இக்கட்டுரையில் காணலாம்.

நாட்டுரக கொய்யா வளர்ப்பு

நாட்டுரக-கொய்யா
கொய்யா ஒட்டு செடி மூலமாக விளைந்த பழம் தான் சமீபகாலமாக காணமுடிகிறது. இத்தகைய ஒட்டு ரக கொய்யா வகைகள் வரும்வரையில் இருந்த நாட்டுரக கொய்யா மிகவும் சிறப்பு மிக்கது, நாட்டுரக கொய்யா பழங்களில் சதைப்பகுதியானது மிகக் குறைவு, விதைகள் பெரிதாக இருக்கும், மேலும் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சதைப் பகுதி இருப்பினும், அளவில் சிறியதாக இருந்தாலும் அளப்பரிய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள கல்வில்லோ எனும் நகரம் தான் கொய்யாவின் தலைநகரம் என்று கூறப்படுகிறது. பல வித ரகங்களில் கொய்யா இங்கு காணப்படுகிறது. அந்த நகரத்தின் மொத்த பொருளாதாரமும் கொய்யாவையே முழுமையாக நம்பியுள்ளது. நம்முடைய தமிழ்நாட்டில், ஆயக்குடி எனும் கிராமம் பழனி அருகே உள்ளது, அந்த கிராமத்தின் பெருமளவு பொருளாதாரம் கொய்யாவை நம்பியுள்ளது. உத்தரப் பிரதேச தலைநகரமான லக்னோவே வட இந்தியாவின் கொய்யாவின் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. உலகளவிலான புள்ளிவிவரங்களை ஆராந்துபார்த்தால், உலகிலேயே இந்தியாவில் தான் பெருமளவு கொய்யா உற்பத்தி செய்யப்படுகிறது.

மாடித்தோட்டத்தில் கொய்யா செடி வளர்ப்பு

கொய்யா-வளர்ப்பு
கொய்யாவானது, விதைகள் மூலமாக விளைவிக்கப்படுவதில்லை. பதியன்கள் மூலமாகவே கொய்யா விளைவிக்கப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், கொய்யா நடவு செய்ய ஏற்ற காலமாகும். கொய்யா செடியை, பரந்து படரும் செடியாக வளரும்படி கவாத்து செய்து வளர்த்தோமேயானால், கொய்யா தனில் அதிக மகசூல் எடுக்க முடியும் மேலும் நல்ல அறுவடையும் இருக்கும். தரமான காய்க்கும் திறனும், அதிக மகசூலும், பருவம் மீறாது காய்க்கும் தன்னமையுடைய தாய் செடியில் இருந்து பதியன் போடப்பட்ட கொய்யா நாற்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், அதை செறிவுமிக்க மண்கலவை நிரப்பிய தொட்டியில் நட்டு வைக்கவும். நாற்றை நட்ட உடன் மண்ணானது கீழிறங்கி இறுக்கம் அடையும் வரை தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு, மண்ணின் உடைய தன்மை மற்றும் பருவ காலநிலை போன்றவற்றை கருத்தில்கொண்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

உரமேலாண்மை

கொய்யா-இலை
செப்டம்பர், அக்டோபர் மாதம்தனில் கொய்யா செடிக்கு நன்கு மக்கிய தொழு உரம், மண் புழு உரம் அல்லது தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை சமபங்கு கலந்து கொய்யாவின் வேர்ப்பகுதியில் குழி பறித்து அதில் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும் இதேபோல், வருடத்தில் இருமுறை செய்யவும் . கொய்யா பதியம் போட்ட செடி என்பதனால், நட்ட மூன்று மாதத்தில் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். முப்பது ஆண்டுகள் வரை பலன்களை தர வல்லது கொய்யா.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொய்யா மரம் பராமரிப்பு

கொய்யா-ஒட்டு-செடி
முதல் ஆண்டில் கொய்யா மரம்தனில் தோன்றும் பூக்கள் அனைத்தையும் கிள்ளிவிட வேண்டும். பின்பு, அடுத்தண்டில் பூங்கொத்து வளர்ந்தபிறகு விட்டுவிடலாம். கொய்யா செடியின் அடிப்புறத்தில், குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கிளைகளை கவாத்து கத்திரியை கொண்டு வெட்டி நீக்க விட வேண்டும். மேற்புறம் நோக்கி நீண்டு வளரும் கிளையின் நுனியை வெட்டி நீக்கிவிட்டு பக்கவாட்டு வளர்ச்சிதனை அதிகமாக்க வேண்டும். ஒரு முறை காய்ப்பு முடிந்த பிறகு காய்ந்துபோன மற்றும் உபயோகமற்ற குச்சிகளை நீக்கவும். இதில் துளிர்த்து வரும் புதிய பக்கக்கிளைகள் எல்லாம் நிறைவான மகசூலை கொடுக்கும். கொய்யா ஆண்டு முழுவதும் பலன் தந்தாலும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத பருவத்திலும், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத பருவத்திலும் அதிக காய்க்கும். பூ பூத்தபிறகு ஐந்து மாதங்களில் கொய்யா பழங்கள் கிடைக்கும்.

கொய்யா பழ நன்மைகள்

அதிக-மகசூல்

  • மலைவாழ் மக்கள் இன்றளவும் கொய்யா விவசாயம் சிறப்பாக செய்து வருகின்றனர். கொய்யா இலையை நன்கு அரைத்துப் பூசி, எந்தவிதப் புண்களையும் ஆற்றிக்கொள்ள பயன்படுத்துகின்றனர்.
  • காய்ச்சல் சரியாக கொய்யா இலையில் கசாயம் வைத்து குடிக்கலாம்.
  • கொய்யா இலையை மென்று திண்பதன் மூலம், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரி ஆகும்.
  • கொய்யா இலை தலைச் சாயம் தயாரிக்க பயன்படுகிறது.
  • நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது.

  • பல்வேறு மருத்துவ பயன்களையும், சிறப்புகளையும் உள்ளடக்கியது கொய்யா. வருடம் முழுதும் எளிதில் கிடைக்க கூடிய இத்தகைய சிறந்த கொய்யாப் பழத்தை இயற்கையான முறையில் வளர்த்து அதனுடைய பயன் அனைத்தும் அடைய வாழ்த்துகிறோம்.

பேரீச்சை மரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள் பற்றி முன்பு நம் நாட்டில் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இப்பொழுது நம் நாட்டிலும் பேரீச்சை வளர்ப்பு அதிகளவில் செய்யப்படுகிறது. பேரீச்சை மரம் வளர்ப்பது எப்படி, பேரிச்சம்பழம் வகைகள், பேரிச்சம்பழம் சாகுபடி செய்வது எப்படி, பேரீச்சை காய் நன்மைகள் போன்றவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


பொதுவாகவே பேரீச்சை பழம் வளர்ப்பு, சாகுபடி போன்றவை பாலைவன பிரதேசங்களிலேயே நடைபெறும். ஏனென்றால் அதற்கான தட்ப வெட்ப நிலை பாலைவன நிலங்களில் உள்ளது. இதனாலேயே பேரீச்சை ‘பாலைவனப் பயிர்’ என்று அழைக்கப்படுகிறது.

பேரிச்சை

    பேரீச்சைமரம் வளர்ப்பு மற்றும் நடவுமுறைகள்

பேரீச்சை மரம் வளர்வதற்கு 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதுமானது. ஆனால் விதை மூலம் நடவு செய்யும் பொது ஆண் மரமா? பெண்ண மரமா? என்று தெரிவதற்கே இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். எனவே பேரீச்சை கன்று வாங்கி நடுவது சிறந்தது.
பேரீச்சை மரம்
ஒரு ஏக்கரில் 70 கன்றுகள் வரை நடலாம். ஒவ்வொரு கன்றுக்கும் இடையில் சுமார் 8 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். வெப்பநிலையை பொறுத்தவரை 30 லிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். வெப்பம் தாங்கக்கூடியதாக இருந்தாலும் தண்ணீர் அதிகம் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மரத்துக்கு தினசரி 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரம் நன்கு வளர்ந்த பின்னர் ஒரு மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் வரை விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பேரீச்சையை பொறுத்தவரை பெண் மரம் மட்டுமே நடவு செய்ய முடியும். எனினும் மகரந்த சேர்க்கைக்கு ஆண் மரம் தேவை என்பதால் அதுவும் நடுவது சிறந்தது. இருந்தாலும் மகரந்த சேர்க்கை இயற்கையாக நடைபெறாது என்பதால் செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.

சாதாரணமாக ஜனவரி மாதத்தில் ஆண் மரம் பாளை விட்டு மகரந்த சேர்க்கைக்கு தயாராக இருக்கும். ஆனால் பெண் மரம் மார்ச் மாதம் தான் சேர்க்கைக்கு தயாராகும். ஆண் மரத்தின் பாளைகளை பொடி செய்து மார்ச் மாதம் பெண் மரம் பூ பூக்கும் போது அதன் மீது பொடி செய்த மகரந்தத்தைத் தூவி செயற்கையான சேர்க்கை செய்ய வேண்டும்.

பேரீச்சை மரத்தில் வண்டுகள் வரக்கூடும். ஒன்றிரண்டு வண்டுகள் வந்ததும் அவற்றைக் கொன்று விட வேண்டும். இல்லாவிட்டால் வண்டுகள் அதிகரித்து விடும். பர்றி ரக பேரீச்சை பழங்கள் அப்படியே மரத்திலுருந்து பழங்களை பறித்து சாப்பிடலாம் என்பதால் கண்டிப்பாக மருந்து தெளிக்க கூடாது. இயற்கை உரங்கள் சிறந்தது.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

பழங்கள் பழுத்ததும் வவ்வால், பறவைகள் போன்றவை பழங்களை சாப்பிட வரும் என்பதால் குலைகளைச் சுற்றி பாலிதீன் கவர்களைக் கொண்டு மூட வேண்டும்.

    பேரீச்சை மகசூல்

பேரீச்சை மகசூல்
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கும். பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்கத் தொடங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பேரீச்சை சீசன் ஆகும். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை காய்க்கும். ஒரு குலையில் 10 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ பழங்கள் கிடைத்தாலும் ஒரு ஏக்கருக்கு 4200 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.

நான்கு மாதங்களில் பழங்களை அறுவடை செய்து விடலாம். விளைச்சல் காணத் தொடங்கி ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க பழத்தின் எடையும் அதிகரிக்கும்.

    பேரீச்சம்பழம் வகைகள்

பேரீச்சை வகைகள்

மெட்ஜூல், பையோரம், டேக்லட் நூர், மசாபாதி, பர்ஹி, ரப்பி, தூரி, சயீர், டயரி, ஹலவ்ய், சபாவி என்று பல ரகங்கள் உண்டு. ஒவ்வொரு ரகங்களும் ஒவ்வொரு நாட்டில் விளைபவை. இந்தியாவை பொறுத்தவரை பர்ஹி ரக பழங்களே அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பேரீச்சையை பொறுத்தவரை நிறைய வகைகள் உண்டு. சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்ற நிறங்களில் காணப்படும் பேரீச்சைபழங்கள் ஒவ்வொரு வகைக்கு ஏற்றவாறு சுவையும் மாறுபடுகிறது.

    இந்தியாவில் விளையும் பர்ஹி ரக பேரீச்சை

பர்ஹி பேரீச்சை

இதன் தாயகம் ஈராக் ஆகும். பர்ஹி ரக பழங்கள் பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3 ஆம் நிலையாகும்.

இந்த நிலை கலால் என்று அழைக்கப்படுகிறது. ஜோர்டான் நாட்டில் இந்த நிலை ரக பேரீச்சை கோல்டன் டேட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழங்களை அறுவடை செய்து 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். பர்ஹி ரக பேரீச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேலும் இந்த மஞ்சள் பேரிச்சம்பழம் மரத்தில் இருந்து பறித்து அப்படியே உண்ணலாம்.

    பேரீச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பேரீச்சை-மரம்-வளர்ப்பு.jpg

  • பேரீச்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  • இதயம் வலுப்பெறும்.
  • எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகும்.
  • நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • உடல் எடை அதிகரிக்கும்.
  • மாலைக்கண் நோய் குணமாகும்.
  • வயிற்றுப் புற்றுநோய் குணமாகும்.
    • கருப்பு பேரிச்சம்பழம் நன்மைகள்

DATES

  • ஜீரணதிற்கு உதவுகிறது.
  • உடல் ஆற்றல் அதிகரிக்கிறது.
  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
  • இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
  • முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
  • இயல்பாகவே பேரீச்சை பழத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்பதால் தினமும் கூட பேரீச்சம்பழம் சாப்பிடலாம். மேலும் வருமானமும் அதிகம் என்பதால் இப்போது நம் நாட்டில் அதிகளவில் பேரீச்சைமரம் வளர்ப்பு செய்யத் தொடங்கி உள்ளனர். இத்தைகைய பழத்தை உண்டு நலமோடு வாழ்வோம்.

Pin It