Category

கீரை

Category

பருப்புக்கீரை வளர்ப்பு மிகவும் சுலபமாக செய்யலாம். மிக குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித்தர கூடிய கீரைகளில் ஒன்றாகும் இந்த பருப்புக்கீரை. இந்தக்கீரை 20 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய செடியாகும். அதிக சத்துக்கள் அடங்கிய இந்த கீரைக்கு பராமரிப்பும் மிக குறைவாக இருந்தால் கூட போதுமானது.
பருப்புக்கீரை
பருப்புடன் இந்த கீரையை சமைத்து உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருவதினால் இதனை பருப்புக் கீரை என்று அழைக்கின்றனர். மேலும் இந்த பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ எனவும் அழைக்கபடுகிறது அதற்கு காரணம் பருப்புக்கீரையானது குழந்தைகள் ஈன்ற தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை சீராக்குகிறது.

பருப்புக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் பருப்புக்கீரை வளர்ப்பு, பருப்புக்கீரை சாகுபடி மற்றும் பருப்புக்கீரை பயன்கள் ஆகியவற்றை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மண்கலவை தயாரித்தல்

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை கொண்டு மண்கலவை தயார் செய்தால் நல்ல வளர்ச்சியை பெறலாம். செம்மண் 60 சதவிகிதம், மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம் எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்கு கலந்து மாடித்தோட்டத்தில் நடவு செய்ய ஏதுவாக நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் அந்த மண்கலவையை நிரப்பிக்கொள்ளவும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழுஉரம் மூட்டை

உங்கள் தோட்டத்திலுள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கைமுறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

விதை விதைத்தல்

பருப்புக்கீரை வளர்ப்பு
பருப்புக்கீரை விதைகள் கருப்புநிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை மண்கலவையின் மேல் தூவ வேண்டும். முதன் முதலாக நடவு செய்பவர்களுக்கு விதை தூவல் சரியாக செய்ய முடியவில்லை என்றால் மணல் அல்லது சாம்பலுடன் பருப்புக்கீரை விதைகளை கலந்து தூவலாம். தூவிய பிறகு அதன் மீது பூவாளிக்கொண்டு கவனமாக நீர் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் அறுவடை

பருப்புக்கீரை செடி
பருப்புக்கீரை நடவு செய்த 3 மூன்று நாட்களில் முளைத்து வர தொடங்கிவிடும். 7 நாட்களில் நல்ல வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம். சுமார் 20 நாட்களில் சாகுபடி செய்யும் அளவிற்கு வளர்ந்துவிடும். 20 நாளில் சிறிய மொட்டுக்கள் வைக்க ஆரம்பித்திருக்கும், தேவைக்கு போக மீதியை விதைக்காக விட்டுவிடலாம். அந்த மொட்டுக்கள் மஞ்சள் நிற பூக்களாக மாறி காய்வைக்கும். காய்கள் காய்ந்தபிறகு அதில் பருப்புக்கீரை விதைகள் நிறைந்திருக்கும்.

பருப்புக்கீரை பயன்கள்

கீரை பூ

  • வெய்யிலின் தாக்கத்தால் சிலருக்கு அக்கி தொல்லை ஏற்படும், பருப்புக்கீரையின் இலைகளை பறித்து தண்ணீரில் அலசி நன்கு அரைத்து அக்கி ஏற்பட்ட இடத்தின் மீது தடவி வர வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இதுபோல் செய்து வந்தால் எரிச்சல் தணிந்து அக்கி கொப்புளங்கள் குறைந்து குணமுண்டாகும்.
  • சிலருக்கு தலைவலி அடிக்கடி ஏற்படும், நாள் முழுதும் கூட அந்த வலி தொடரும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் பருப்புக்கீரையை நன்கு அரைத்து தலைக்கு பற்று போட்டுவந்தால் தலைவலி சரியாகிவிடும்.
  • பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் நுரையீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • gardening kit icon

    இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

    உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்களின் தோட்டத்திலுள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகளின் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

     Buy Now

  • ஒமேகா 3 உள்ள அற்புதமான கீரை இந்த பருப்புக்கீரை ஆகும், மேலும் கால்சியம் சத்து குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருப்புக்கீரையைப் பயன்படுத்தினால் மிக எளிதில் கால்சியம் சத்து பற்றாக்குறை நீங்கும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை இந்த பருப்புக்கீரை. இது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து நீண்ட கால நோய்களின் பாதிப்பை குறைக்க உதவுகிறது.


வீட்டில் பருப்புக்கீரை செடி வளர்ப்பது எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பருப்புக்கீரை வளர்ப்பு செய்து அதன் அற்புத பயன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

சிவப்பு தண்டுக்கீரையானது அதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் அந்த பெயர் பெற்றது. கீரை வகைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இந்த சிவப்பு தண்டுக்கீரையும் ஒன்று, எனவே தான் பெரும்பாலானோர் சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு செய்கின்றனர். இந்த சிவப்பு தண்டுக்கீரையின் தண்டுகள் மற்றும் இலைகள் ஆகிய அனைத்துப் பகுதிகளுமே உணவாகப் பயன்படுகிறது. நல்ல செழிப்பான இடங்களில் 6 அடி வரை உயரம் வரை வளரக் கூடியது இந்த சிவப்பு தண்டுக்கீரை.
சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்
இந்த பதிவில் சிவப்பு தண்டு கீரை வளர்ப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து விதை சேகரிப்பது எப்படி, சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு முறை மற்றும் பயன்கள் மற்றும் சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி காண்போம்.

மண் வளம்

மண் வளம்
செம்மண் சிவப்பு தண்டுக்கீரை செழித்து வளர ஏதுவான மண் ஆகும். நல்ல நிலையில் உள்ள செம்மண் 40 %, நன்கு மக்கிய தொழு உரம் 40 % மற்றும் மண்புழு உரம் 20 % ஆகிய மூன்றையும் சேர்த்து மண்கலவை தயார் செய்யவேண்டும். மண்புழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். தயார் செய்து வைத்துள்ள இந்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது சிறிய தொட்டியில் போட்டு நிரப்பி கொள்ளவும்.

சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்தல்

சிவப்பு தண்டுக்கீரை வளர்ப்பு
சிவப்பு தண்டுக்கீரை நடவு செய்ய சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசிப்பட்டங்கள் சிறந்தவையாகும். சிவப்பு தண்டுக்கீரையில் இருந்து நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இதன் விதைகள் கருப்பு நிறத்தில் சிறிது சிறிதாக இருக்கும், அதை நாம் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையில் போட்டு மூடி, அதன் மீது பூவாளிக்கொண்டு நீர் தெளிக்க வேண்டும், அதிகமாக நீர் ஊற்றினால் விதை வெளியே வந்துவிடும் எனவே கவனமாக நீர் ஊற்றவும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்திலுள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை சாகுபடி

பயிர் பாதுகாப்பு
விதைத்த 2 நாளிலே சிவப்பு தண்டுக்கீரை வெளியே முளைத்து வர தொடங்கிவிடும். நாளாக நாளாக அதன் வளர்ச்சி நன்றாக அமையும். சுமார் 30 நாள் முதல் 40 நாளில் சிவப்பு தண்டுக்கீரையை அறுவடை செய்து கொள்ளலாம். சாகுபடி செய்யும் சமயத்தில் கீரையின் உச்சியில் பூவும், அதனோடு சேர்ந்து விதைகளும் இருக்கும், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு அந்த விதைகளை சேகரித்து வைக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாகவே கீரைகளில் பூச்சிகள் அதிகமாக காணப்படும். இந்த பூச்சி தாக்குதலால் சிவப்பு தண்டுக்கீரையின் வளர்ச்சி தடைபட கூடும். இந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்ய முடியும். இஞ்சி, பூண்டு கரைசலை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் படிப்படியாக குறைந்து விடும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

சிவப்பு தண்டுக்கீரை பயன்கள்

  • சிகப்பு தண்டுக்கீரை கீரையை பொரியல் அல்லது கூட்டு செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாமல் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்.
  • பித்த நீரின் பாதிப்பால் உடலில் ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றை எளிமையான முறையில் இந்த சிகிப்பு தண்டுக்கீரை சரிசெய்யும் திறன்கொண்டது.
  • சிவப்பு தண்டுக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க வல்லது, உடல் உஷ்ணத்தால் சிரமப்படுகிறவர்கள் சிவப்பு தண்டுக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் பெறலாம்.
  • சிலருக்கு உடற்பருமன் அதிகமாக இருக்கும், எவ்வளவு தான் முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த சிவப்பு தண்டுக்கீரை அரும்மருந்தாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துகொண்டுவந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

எண்ணிலடங்கா நற்பலன்களை கொண்ட இந்த சிவப்பு தண்டுக்கீரையை மாடித்தோட்டத்தில் வளர்த்து அதன் முழு பலன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

நமது மாடி தோட்டங்களில் வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளில் அகத்திக்கீரை வளர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது, எனவே தான் இது அகத்திக்கீரை எனும் பெயர் பெற்றது. அதனால் தான் கால்நடைகளுக்கு தீவனத்தில் அகத்திக்கீரையை கலந்து கொடுக்கின்றார்கள். நாமும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு இருமுறையோ அகத்திக்கீரையை சாப்பிடுவது நமது உடல்நலத்தை சீராக்க உதவும்.
அகத்திக்கீரை-வளர்ச்சி
அகத்தைக் காக்கும் அகத்திக்கீரை விதையிலிருந்து வளர்ப்பது எப்படி, மாடி தோட்டத்தில் அகத்திக்கீரை வளர்ப்பு முறை, அகத்திக்கீரை பயன்கள் மற்றும் அகத்தி கீரை சாகுபடி ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

அகத்திக்கீரை பயிரிடும் முறை

மாடி தோட்டத்தில் அகத்திக்கீரை பயிரிட முற்படும் போது சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அகத்திக்கீரை 20 முதல் 25 அடி உயரம் வரை வளரும் என்பதால் சிறிய அளவிலான நெகிழி பையை விடுத்து பெரிய நெகிழிப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அதில் மண்கலவையை நிரப்பி விதைகளை நடவு செய்ய வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

அகத்திக்கீரை வளர்ச்சி

தீவனம்
அகத்திக்கீரை விதைத்த 4 முதல் 7 நாட்களுக்குள் முளைத்து வர தொடங்கிவிடும். 50 நாட்களில் நல்ல வளர்ச்சியை அடைத்திருக்கும், அப்போது செடியின் நுனியை கிள்ளி விடவும். கிள்ளி விட்டபிறகு மேல் நோக்கி வளர்வது நின்று பக்க கிளைகள் வளர்ந்து அடர்த்தியாக காணப்படும், இவ்வாறு செய்வதால் மாடி தோட்டத்தில் பராமரிக்க வசதியாக இருக்கும்.

இந்த அகத்தி செடியிலிருந்து கிடைக்கும் அகத்தி கீரை மற்றும் அகத்திப் பூ மிகச் சிறந்த உணவாகும், அதிக சத்துக்கள் இதில் உள்ளது மேலும் அகத்தி பலதரப்பட்ட மண்ணிலும் வளரும் திறன் கொண்டது.

கால்நடை தீவனம்

அகத்திக்கீரை-பயன்கள்
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் என்று பலருக்கும் எண்ணம் இருக்கும், பசு மாட்டிற்கு மட்டுமல்ல அனைத்து கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக அகத்தி கீரை இருக்கிறது. இந்த அகத்தியை ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பன்றி பண்ணை போன்ற பண்ணை விலங்குகளுக்கும் அகத்தியை கொடுக்கலாம்.

நோய் தாக்குதல்

அகத்தி கீரையில் சொல்லுமளவில் பெரிதாக எந்த நோய் தாக்குதலும் ஏற்படாது, அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் நடைபெறக்கூடும். அசுவினி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை நீரில் கரைத்து தினசரி தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் சரியாகி விடும்.

1kg neem cake

இப்போதே வாங்குங்கள்!! வேப்பம் புண்ணாக்கு கட்டி

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

அகத்திக்கீரை பயன்கள்

அகத்திக்கீரை-வளர்ப்பு-1

  • அகத்தி கீரையை பற்றி சித்த மருத்துவம் கூறுகையில், அகத்திக் கீரையில் 63 வகையான சத்துகள் இருப்பதாக கூறுகின்றது. அகத்தி செடியின் அனைத்து பகுதிகளும் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் 8.4 சதவிகிதம் புரதமும், 3.1 சதவிகிதம் தாது உப்புகளும் மற்றும் 1.4 சதவிகிதம் கொழுப்பும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
  • அகத்திக் கீரையின் சாறுடன் சிறிதளவு தேன் சேர்ந்து கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள சிறு குழந்தைகளின் உச்சித் தலையில் தடவினால் நீர்க்கோவை பிரச்சனை குணமாகும். அடிபட்ட காயங்களுக்கு அகத்தியை அரைத்துப் பூச புண்கள் ஆறிவிடும்.
  • அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பித்த தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதுடன் உணவு சீக்கிரத்தில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு ஒருமுறையேனும் அகத்திக் கீரை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
  • இதில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக இருக்கிறது, இது எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அகத்தி இலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் பாலில் அரைக் கரண்டி அளவு கலந்து குடித்தால் வயிற்றுவலி சரியாகும்.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அகத்தி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.


அகத்திக்கீரை பயிர் செய்யும் முறை தனை பார்த்தோம், நீங்களும் மேற்கண்ட முறையில் பயிர் செய்து அற்புதம் நிறைந்த அகத்திக்கீரை சாகுபடி செய்து மகிழ வாழ்த்துகிறோம்.

சோம்பு என்பது பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட ஆரோக்கியம் தர கூடிய தாவரமாகும். அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருளாக மட்டுமின்றி, அதன் சிறந்த மருத்துவ குணத்திற்காகவும் பெயர் பெற்றது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் சோம்பு செடி வளர்ப்பு செய்யப்படுகிறது.
சோம்பு-செடி-வளர்ப்பு
சோம்பு செடி எனும் பெருஞ்சீரகம் செடி வளர்ப்பு முறை, சோம்பு பயன்கள், பராமரிப்பு முறை, மாடித்தோட்டத்தில் அழகான சோம்பு செடி வளர்ப்பது எப்படி என்பது பற்றி இந்தக்கட்டுரையில் காண்போம்.

நடவு முறை

நடவு-முறை
சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பைக்கொண்டே சோம்பு செடி நடவு செய்யலாம். செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் இரண்டையும் சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும், பிறகு சோம்பை அதன் மேற்பரப்பில் தூவி லேசாக மண்ணை போட்டு மூடினாலே போதுமானது. பின்பு அதன் மீது தண்ணீர் தெளித்து விட வேண்டும், அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சோம்பு வெளிய வர வாய்ப்புள்ளது எனவே மிதமாக தெளிக்கவும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சோம்பு செடி வளர்ச்சி

சோம்பு-பூ
நடவு செய்த 5 முதல் 10 நாளில் சோம்பின் வளர்ச்சியை நம்மால் காணமுடியும். இந்த கால அளவு தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 60 நாட்களில் இதன் இலைகள் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம். இந்த சோம்பு கீரை பார்ப்பதற்கு சிறிய அளவு கொத்தமல்லி கீரையை போலவே இருக்கும். 100 நாட்களில் செடியின் மீது ஒரு தண்டு வளர்ந்து அதன் உச்சியில் அடர் மஞ்சள் நிறத்தில் பூவானது பூத்திருக்கும். இந்த பூக்களில் தேனெடுக்க அதிக அளவில் தேனீக்கள் வருவதால் மகரந்த சேர்க்கை சிறந்த முறையில் நடக்கும்.

சோம்பு அறுவடை

சோம்பு-அறுவடை
சோம்பு செடியில் பூத்திருக்கும் பூவின் அடியிலே சோம்பு வளர்ந்திருக்கும். செடியில் கொத்து கொத்தாக சோம்பு காணப்படும். 150 நாட்களுக்கு பிறகு சோம்பு காய தொடங்கும். அனைத்து கொத்துகளுமே ஒரே நேரத்தில் காயாது. சோம்பை தனியே எடுத்து காயவைப்பதை விட செடியிலே காய விட்டு பிறகு அதை சேகரித்து வைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

சோம்பு செடியில் நோய் தாக்குதல்

சோம்பு-செடி
சோம்பு செடியில் அஸ்வினி பூச்சி மற்றும் மாவு பூச்சி தொல்லை ஏற்படும். இது சோம்பின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். வேப்பண்ணெய் கரைசலை வாரம் மூன்று முறை தெளித்து வந்தால், இரண்டு வாரங்களில் செடி பழைய நிலையை அடைந்து விடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சோம்பின் பயன்கள்

சோம்பின்-பயன்கள்

  • சோம்பு தண்ணீரை தினமும் காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலின் எடையை குறைக்கலாம். சோம்பு தண்ணீரின் பலன் சற்று தாமதமாக கிடைக்கின்ற போதிலும் நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.
    அளவுக்கு மீறி அதிகமாக பசி ஏற்படுகிறவர்களுக்கு இந்த சோம்பு தண்ணீரைக் குடிக்கவைத்தால், தேவையற்ற பசி உணர்வை குறைக்கும்.
  • சோம்பு தண்ணீர் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும், மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • நட்சத்திர சோம்பு உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.
  • ஒரு சில நபர்களுக்கு அதிக வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் காரணமாக சரியாக தூக்கம் வராமல் சிறப்படுவார்கள். இந்த தூக்க பிரச்சனையை குணவாக்குவதற்கு தினமும் இந்த சோம்பு கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அதில் மிகுந்துள்ள மெக்னீசியம் சத்தானது நரம்புகளுக்கு வலிமை கொடுத்து ஆழ்ந்த உறக்கத்தை பெற வழிவகை செய்கிறது.
  • வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஜீரணமாகாமல் சிரம படுகிறவர்கள், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கினாள் விரைவில் செரிமானத்தை சீராக்கும் சோம்பு.


சோம்பு நடவு முதல் அறுவடை வரை எப்படி செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் சோம்பு செடி வளர்த்து அதன் பயன்கள் அனைத்தையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது மிக எளிதாகும். கடுகு கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. குட்டிக் கடுகு குறையாத நன்மைகள் எனும் கூற்றிற்கு ஏற்ப பல நன்மைகளை உள்ளடக்கியது. உலகனைத்திலும் உள்ள மக்களால் இந்த கடுகு பயன்படுத்தப்படுகிறது,
கடுகு-இலை
இருப்பினும் இந்த கடுகு கீரையை பயன்படுத்துபவர்கள் குறைவே ஆகும். விதையிலிருந்து கடுகுக்கீரையை எவ்வாறு வளர்ப்பது, மாடித்தோட்டத்தில் கடுகுக்கீரை வளர்ப்பு செய்வது எப்படி, கடுகுக்கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

விதைக்கும் முறை

கடுகுக்-கீரை-வளர்ப்பு
விதைப்பதற்கு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகே போதுமானது. சிறிதளவு கடுகை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும், அடுத்தநாள் ஊற வைத்த கடுகு சிறிதளவு பெரிதாகி காணப்படும், இச்செயல் கடுகு செடி சீக்கிரம் வளர உதவும்.

கடுகு செடிக்கென்று பிரத்தேக மண்கலவை தேவையில்லை, அனைத்து விதமான மண்ணிலும் இது வளரும் தன்மையை பெற்றது. நெகிழிப்பை அல்லது தொட்டியில் மண்ணை நிரப்பி, அதன் மீது ஊற வைத்து தயார் நிலையில் உள்ள கடுகை பரவலாக போட்டு, லேசாக மண் போட்டு மூடி சிறிதளவு நீர் தெளிக்கவேண்டும். நன்கு வெய்ல் படும் படி வைத்தால் போதும் ஓரிரு நாளில் முளைக்க தொடங்கிவிடும்.

கடுகுக்கீரை வளர்ப்பு தனில் உரமேலாண்மை

உரமேலாண்மை
நன்கு மக்கிய மாட்டு எரு நல்ல இயற்கை உரமாகும். இந்த உரத்தை கடுகுக்கீரையின் வேர் பகுதியில் படும்படி இட்டு நீர் விட வேண்டும். இதன் மூலம் கடுகு செடியின் வளர்ச்சியானது மேம்பட்டு, கடுகுக்கீரை வளர்ப்பு சிறக்கும்.

5kg  Vermi Compost icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மண்புழு உரம் பை

இயற்கை முறையில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையை அதிகரிக்கும் மண்புழு உரம். மிக குறைந்த விலையில்!

 Buy Now

கடுகுக்கீரை சாகுபடி

கடுகு-கீரை-சாகுபடி
கடுகு செடி நீளமாக வளரும் தன்மையை பெற்றது. இதன் தண்டுகள் மிக மிருதுவானதாக இருக்கும்.மேலும் கடுகுக்கீரையில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். கடுகுக்கீரையின் வயது தொன்னூறு முதல் நூறு நாட்கள் வரை ஆகும். கடுகு செடி தனில் அதன் நுனியை கிள்ளிவிட்டால் நிறைய கிளைகள் வளர வாய்ப்பு உள்ளது, இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.

வேர்ப்பகுதியில் நீர் தேங்கி காணப்பட்டால் கடுகு செடியின் வளர்ச்சி பாதிக்கும், எனவே நீர் தேங்காமல் நல்ல முறையில் பராமரித்து வந்தால் சுமார் இருபது நாளில் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு கடுகுக்கீரை வளர்ந்துவிடும்.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

நோய் தாக்குதல்

கடுகுக்-கீரை-வளர்ப்பு
கடுகு இலையில் பூச்சி தாக்குதல் குறைவாகவே இருக்கிறது. கடுகு செடியை பெரும்பாலும் சாற்றை உறிஞ்சும் பூச்சிககள் மட்டுமே தாக்குகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கற்பூரகரைசலை தெளிக்கவும். மேலும் கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பூத்து, கடுகுக்கீரை வளர்ப்பு சிறப்பாக இருக்கும்.

கடுகுக்கீரை பயன்கள்

கடுகுக்-கீரை-வளர்ப்பு-1

  • கடுகுக்கீரை சுவை மிகுந்தது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களை உள்ளடக்கியது. எனவே தான் மக்கள் அதிகளவில் சமையலில் பயன்படுகின்றனர்.
  • கடுகுக்கீரையில் வைட்மின் கே உள்ளதால் இதய ஆரோக்கியம் தனில் முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
  • கடுகுக் கீரையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • காய்கறி சாலட்டுகளில் கடுகு இலையை சேர்த்துக் கொள்ளலாம், மேலும் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகுக்கீரையை சிறிதளவு சேர்த்து கொள்ளும்போது கூடுதல் சுவையை கொடுக்கிறது.
  • கடுகுக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அஜீரண கோளாறு சரியாகும்.

  • கடுகுக்கீரையில் அப்படி என்ன இருக்கு என கேட்போரும் உண்டு, அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரை நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறோம். கடுகுக்கீரை வளர்ப்பு முறை பற்றி பார்த்தோம், நீங்களும் அந்த முறையில் வளர்த்து அதன் முழு பயன்களையும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம்.

மூலிகை செடி என்று சொன்னதுமே நம் நினைவில் முதலில் வருவது பிரண்டை செடி தான். பிரண்டை செடியில் அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்த அறிய மூலிகை செடியை வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவோரும் உண்டு, பிரண்டை செடி வீட்டில் வளர்க்கலாமா வேண்டாமா, பிரண்டை செடி வளர்ப்பு செய்வது எப்படி, பிரண்டை சாகுபடி, பிரண்டையை எளிய முறையில் மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பிரண்டை செடி வளர்ப்பு

பிரண்டையின் வளரும் தன்மை

பயன்கள்
அடுக்கு மாடி குடியிருப்புகளிலும், சிறிதான ஃப்ளாட் உள்ள இடத்திலும் தொட்டிகளிலேயே இந்த பிரண்டை வளர்ப்பு செய்யலாம். மருந்துக்கு மாற்றாக இந்த ரக மூலிகைகளே பயன்படுத்தலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now


சதைப்பற்று மிக்க நாற்கோண வடிவத்தண்டுகளை உடைய கொடி வகையை சார்ந்ததாகும், இதன் சாறு நம் உடலில் பட்டால் சிறிது அரிக்கும். சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவிலான சிறிய சதை பகுதியை உடைய கனியே விதையாக பயன்படுகிறது, மேலும் கொடிகளை பதியம் போட்டும் வளர்க்கலாம்.

பிரண்டை நடவு

பிரண்டை செடி வளர்ப்பு
பிரண்டை செடி வளர்ப்பு முறை மிகவும் எளிது. பிரண்டை அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. எந்த மண்ணை தேர்ந்தெடுத்தாலும் அதனுடன் நன்கு மக்கிய மாட்டு எருவை கலந்து மண்கலவையை தயார்செய்து கொள்ளவும். ஏற்கனவே வளர்ந்துள்ள பிரண்டையை சிறிது வெட்டி இரண்டு கணு மண்ணின் உள்ளே இருக்கும் படி நடவு செய்யவும். ஒரு கணுவில் வேர் பிடிக்கவில்லை என்றாலும் மற்றோரு கணுவில் வேர் பிடித்து பிரண்டை கொடி வளர்ந்துவிடும். நடவு செய்த 20 முதல் 25 நாளில் தளிர் பிடிக்க தொடங்கிவிடும்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

பிரண்டை வகைகள்

பிரண்டை-செடி-வளர்ப்பு
பிரண்டையில் பல வகைகள் உண்டு. சாதாரண பிரண்டை, தீம்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, இலை பிரண்டை, புளிப்பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை என பல வகைகளாக இருக்கிறது. மேலும், `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு.

பிரண்டையின் பயன்கள்

பிரண்டை

  • வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் எனும் கூற்றுக்கு ஏற்றாற்போல் எப்பேர்ப்பட்ட மூட்டு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரிசெய்யும் மேலும் கால்சியம் சம்பந்தப்பட்ட குறைப்பாட்டிற்கும் மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது இந்த பிரண்டை.
  • எலும்பு முறிவை சரிசெய்யவும் பிரண்டை பயன்படுகிறது. பிரண்டை தண்டுடன் சிறிது புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, பிறகு அதை காய்ச்சி பிரண்டை எண்ணெய் தயாரிப்பு செய்து மிதமான சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமின்றி, அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் சுளுக்கு உள்ள இடத்தில இதைப் பூசினால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
  • இரண்டு முதல் மூன்று கிராம் பிரண்டை உப்பை பாலில் கலந்து சாப்பிட இரண்டு மாதத்திற்குள் உடல்பருமன் மற்றும் ஊளைச் சதையை குறைக்கும்.
  • இளம் பிரண்டை கொடியின் இலையை பறித்து நன்கு அரைத்து நார் இல்லாத பிரண்டை துவையல் உண்டால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், குடல் புண், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
  • பசியின்மை மற்றும் நாக்குச் சுவையின்மை போன்ற பிரச்சனை குணமாக, நன்கு முற்றிய பிரண்டை தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மோரில் போட்டு விட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஊறவைத்து பிறகு உலர்த்தி வற்றல் தயார் செய்து அதை எண்ணையில் பொரித்து உண்ண வேண்டும்.


பிரண்டை செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொண்டோம். நீங்களும் மேற்கண்ட முறையில் பிரண்டை வளர்த்து அதன் அளப்பரிய பயன்களை பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.

கொத்தமல்லி கீரை வளர்ப்பு செய்வதற்கான வழிமுறைதனை தெரிந்துகொண்டால், கொத்தமல்லி கீரை வளர்ப்பை போல ஒரு எளிய மாடித்தோட்ட செயல்பாட்டு முறை இல்லை. அந்த சுலபமான முறையை இங்கு காணலாம், மேலும் கொத்தமல்லி பயிரிடும் முறை, கொத்தமல்லி கீரை சாகுபடி, கொத்தமல்லி கீரை பயன்கள் ஆகியவற்றை பற்றி இந்தக்கட்டுரையில் காணலாம்.
கொத்தமல்லி-கீரை-வளர்ப்பு

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி-கீரை-வளர்ப்பு-2
கொத்தமல்லி கீரை விதைக்கு, அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லியை உபயோகப்படுத்தலாம். கொத்தமல்லி விதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்றையும் இரண்டாக உடைத்து எடுத்து கொள்ளவும். காட்டன் துணி ஒன்றை எடுத்து, அதில் மண்புழு உரத்தைப் பரப்பிக்கொண்டு, அந்த துணியில் கொத்தமல்லி விதைகளைத் தூவி விடவும், பின்பு உரத்தையும், கொத்தமல்லி விதைகளையும் கலந்து அந்த துணியை கட்டவும், மிக இறுக்கிக் கட்டக்கூடாது.

பிறகு இந்தத் துணியை, நீரில் நனைத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் அந்த விதை கொண்ட துணி முடிச்சை ஈரம் காயாமல் நிழலில் வைக்கவேண்டும். மூன்று தினங்களுக்கு பின்பு அந்த துணியை பிரித்துப் பார்க்கவும். கட்டிவைத்த விதைகளில் முளைப்புத் திறன் இருக்குமேயானால், கொத்தமல்லி முளைப்புவிட்டிருக்கும். அப்படி முளைத்துள்ள விதைகள் தரமானதாகும், அந்த விதைகளை கொண்டு நாம் கொத்தமல்லி கீரை நடவு செய்யலாம்.

கொத்தமல்லி கீரை நடவு முறை

விதை
கொத்தமல்லி செடி வளர்ப்பு செய்வதற்கு தொட்டி அல்லது நெகிழிப்பை எடுத்துக் கொள்ளவும், அதில் நாற்பது சதவிகிதம் செம்மண், முப்பது சதவிகிதம் தேங்காய் நார்க்கழிவு, முப்பது சதவிகிதம் நன்கு மக்கிய கோழி எரு ஆகியவற்றை நன்றாக கலந்து மண்கலவையை தயார்செய்து அதில் நிரப்பி கொள்ளவும். பிறகு அதன்மீது கொத்தமல்லி விதைதனை தூவிவிடவும். பிறகு மீண்டும் சிறிது மண்கலவை இட்டு, விதை வெளியே தென்படாதபடி மூடவும், ஆனால் அதிகமாக மண்கலவை போட்டுவிடக் கூடாது, அப்படி அதிகமாக மண்கலவை விதை மீது இட்டால் கொத்தமல்லி கீரை வளர்வதற்கு கால தாமதம் ஆகலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


அடுத்து தண்ணீர், தண்ணீரை கைகளால் தெளித்துவிட வேண்டும். தண்ணீர் தெளித்து தயார் நிலையில் உள்ள தொட்டியை அப்படியே வெயிலில் வைக்க கூடாது, நிழலில் வைத்து ஈரம் காயாமல் தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஏழு நாட்களுக்குள் கொத்தமல்லி முளைக்க ஆரம்பித்துவிடும். அதன்பின்பு வெயில் படும்படி வைக்கலாம். சுமார் 20 நாட்களுக்குள் சமையலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துவிடும்.

கொத்தமல்லிக்கீரையில் பூச்சி தாக்குதல்

கொத்தமல்லி கீரை வளர்ப்பு
கொத்தமல்லிக்கீரையில் பூச்சி தாக்குதல் இலைபேன்கள், அசுவினி பூச்சிகள், மாவுபூச்சிகள், பச்சைபுழுக்கள் ஆகியவைகளே கொத்தமல்லியை தாக்கும் பூச்சிகள் ஆகும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம், அல்லது வேப்பம் எண்ணெயை இரண்டு மில்லியை ஒரு லிட்டர் அளவுள்ள நீரில் கலந்து ஒட்டு திரவம் சேர்த்து தெளிக்கலாம்.

கொத்தமல்லி கீரைகளுக்கு வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கும் போது அதிகமாக இல்லாமல், குறைவாக தெளிப்பது மிக அவசியமாகும். ஏனென்றால் கொத்தமல்லிக்கீரைகள் மிகவும் மிருதுவான தாவரம் ஆகும்.

neem oil icon

இப்போதே வாங்குங்கள்!! வேப்பெண்ணை பாட்டில்

உங்கள் செடிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அருமையான இயற்கை மருந்து. மிக குறைந்த விலையில்!

 Buy Now

கொத்தமல்லி கீரையின் மருத்துவ பயன்கள்

மருத்துவ-பயன்கள்

  • கொத்தமல்லி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்கிறது. வைட்டமின் சி தோல் சம்பந்தப்பட்ட சொறி, சிரங்கு, அரிப்பு முதலிய நோய்களை சரிசெய்யவல்லது.
  • கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறையும். கொத்தமல்லி விதைகளை ஒரு நாள் ஊற வைத்து அடுத்தநாள் ஊறவைத்த நீரை குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
  • கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் அவசியமற்ற கொழுப்புகளை கரைக்க வழிவகை செய்கிறது.
  • கொத்தமல்லி கீரை குளிர்ச்சி மற்றும் உஷ்ணம் ஆகிய இரண்டு தன்மையை தனக்குள் கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், பனிக்காலத்தில் உடலுக்கு வெப்பத்தையும் தரவல்லது.
  • கொத்தமல்லி கீரைக்கு பசியினை தூண்டும் குணம் உள்ளது, பசியெடுக்காத பிரச்சினை இருக்குமேயானால் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கொத்தமல்லி கீரை சூப் சாப்பிட்டு வர பசி நன்றாக எடுக்கும்.


கொத்தமல்லி தழை சுலபமாக வளர்ப்பது எப்படி மேலும் இயற்கை முறையில் கொத்தமல்லி சாகுபடி செய்தல் எப்படி என்று பார்த்தோம். நீங்களும் மேற்கண்ட முறையில் கொத்தமல்லி வளர்ப்பு செய்து அதன் முழு பயனையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

Pin It