Category

கிழங்குகள்

Category

வெற்றிலை வள்ளி கிழங்கு பலரும் மறந்து போன பாரம்பரியமான கிழங்குகளில் ஒன்று. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த கிழங்கு அதிகமாக காணப்படுகிறது. காவள்ளிக் கிழங்கு மற்றும் ஏர் பொட்டேட்டோ என்றும் அழைக்கப்படுகிறது. மகத்துவம் பல நிறைந்தது இந்த கிழங்கு, இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை. வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு முறை செய்வது எப்படி, வெற்றிலை வள்ளி கிழங்கு சாகுபடி, வெற்றிலை வள்ளி கிழங்கு மருத்துவ குணம் மற்றும் அதன் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வெற்றிலை-வள்ளி-கிழங்கு-வளர்ப்பு

நடவு முறை

வெற்றிலைவள்ளிக்கிழங்கை நடவு செய்ய ஏற்ற காலம் ஆடி பட்டம் ஆகும். நடவு செய்வதற்கு மண்கலவை தயார் செய்யும் போது, செம்மண் 40 சதவிகிதம், நன்கு மக்கிய தொழு உரம் 40 சதவிகிதம், மணல் 20 சதவிகிதம் எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்கு கலந்து மண்கலவையை தயார் செய்யவும். வெற்றிலை வள்ளி கிழங்கை வாங்கி இரண்டு வாரங்கள் வைத்திருந்தால் சிறிது முளைப்பு விட்டிருக்கும் அப்போது நாம் அதை எடுத்து மண்கலவையில் நடவு செய்யலாம்.

5kg cocopeat icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ ஸ்பெஷல் தேங்காய் நார் கழிவு கட்டிகள்

உங்கள் மாடித்தோட்டத்தின் எடையை குறைத்து, செடிகளை ஈரமாக வைத்திருக்கும் தேங்காய் நார் கழிவு கட்டிகள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

வளர்ச்சி

வெற்றிலை-கிழங்
நடவு செய்த 15 நாளில் வெற்றிலை வள்ளி கிழங்கின் குருத்து வளர்ந்திருப்பதை காணமுடியும். சுமார் ஒரு மாதத்தில் இந்த கொடி வகை தாவரத்தில் இலைகள் வளர ஆரம்பிக்கும், இதன் இலைகள் வெற்றிலை இலை போலவே இருக்கும் எனவே தான் இதற்கு வெற்றிலை வள்ளி கிழங்கு என்று பெயர் வந்தது. பிறகு 50 நாளில் கொடியின் வளர்ச்சி ஏழு அடி வரை இருக்கும். கொடி வளர ஏதுவாக பந்தல் அமைப்பது அவசியமாகும், இவ்வாறு செய்தால் வெற்றிலை வள்ளி கொடி வளர்ப்பு சிறக்கும்.

வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு தனில் நோய் தாக்குதல்

நோய்-தாக்குதல்-1
வெற்றிலை வள்ளி கிழங்கை இலை சுருட்டல் நோய் தாக்க கூடும். இதனால் கொடியின் இலைகள் எல்லாம் சுருள தொடங்கும், கொடியின் வளர்ச்சியையும் பாதிக்கும். இதை சரி செய்ய, மீன் அமிலம் அல்லது பழக்கரைசலை நீரில் கலந்து தெளித்து வந்தால் மூன்று வாரத்தில் இந்த நோய் சரி ஆகிவிடும்.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

அறுவடை

அறுவடை-1
நடவு செய்த 130 நாளில் காய்கள் வைக்க தொடங்கும். தொடக்கத்தில் இது பச்சை நிறத்தில் இருக்கும், இந்த நிலை அறுவடைக்கு இன்னும் தயார் ஆகவில்லை என்பதை குறிக்கும். சுமார் 160 நாளில் உருளை கிழங்கின் நிறத்திற்கு மாறி இருக்கும். இப்போது நாம் இதை அறுவடை செய்யலாம். கொடியில் காய்க்கும் உருளை கிழங்கு போல் உள்ளதால் தான் இதை ஏர் பொட்டேட்டோ என்று அழைக்கின்றனர்.

வெற்றிலை வள்ளி கிழங்கின் பயன்கள்

வெற்றிலை-வள்ளி-கிழங்கு-வளர்ப்பு-1

  • வெற்றிலை கிழங்கு வள்ளி பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய பயிராகும். இது மாவுச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகிய அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது.
  • வெற்றிலை வள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சரும பிரச்சனைகள் குணமாகும்.
  • உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால், உடல் தேறி வலுப்பெறும்.
  • செரிமான கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் தன்மை கொண்டது.
  • நமது உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை ஏற்படும், வெற்றிலை வள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் இந்த தொல்லை நிவர்த்தியாகும்.


வெற்றிலை வள்ளி கிழங்கை எளிய முறையில் வளர்த்து, அடுத்த தலைமுறைக்கும் அதன் பலன்களை கொண்டு சேர்த்து தலைமுறை சிறக்க வாழ்த்துகிறோம்.

கொல்லங்கோவை எனப்படும் ஆகாச கருடன் கிழங்கை வளர்ப்பது மிக எளிது. இதை வளர்க்க குறைந்த பராமரிப்பே போதுமானது. மேலும் இந்த கிழங்கு பல பயன்களை தர வல்லது. இந்த ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு முறை மற்றும் ஆகாச கருடன் கிழங்கு பயன்கள், ஆகாச கருடன் கிழங்கு எடுப்பது எப்படி ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
கிழங்கு-வளர்ச்சி

தோற்றம்

ஆகாச-கருடன்-கிழங்கு-1
ஆகாச கருடன் கிழங்கின் இலை கோவை பழத்தின் இலை போன்று காணப்படும். இந்த கிழங்கின் கொடி மிக மென்மையாக இருக்கும். மேலும், ஆகாச கருடன் கிழங்கு பூ அளவில் சிறிதாகவும், மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். பூ பூத்த அடுத்த நாளே உதிர்ந்து விடும். உதிர்ந்த இடத்தில் சிறியதாக காய் தோன்றும். பிறகு அது சிவப்பு நிறத்துடன் பழுத்து, அதுவும் ஓரிரு நாளில் விழுந்து விடும்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு பெயர் காரணம்

ஆகாச கருடன் கிழங்கை வாசலில் கட்டி தொங்க விட்டிருப்பதை பாத்திருப்பீர்கள். அப்படி கட்டி தொங்க விடும் பொழுது பார்ப்பதற்கு கருடன் போல இருப்பதால், இதை ஆகாச கருடன் கிழங்கு என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான காரணம், பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாக இந்த கிழங்கு பயன்படுவதால், பாம்பின் எதிரியாக இருக்கும் கருடனை குறிக்கும் விதமாக அவ்வாறு அழைக்கப்படுகின்றது.

ஆகாச கருடன் கிழங்கை எப்படி கண்டுபிடிப்பது

ஆகாச கருடன் கிழங்கு சமவெளிப் பகுதியிலும், வேலி ஓரங்களிலும் பூமிக்கு அடியில் கிடைப்பதாகும். இலையை கொண்டு ஆகாச கருடன் கிழங்கு செடி தனை அடையாளம் காணலாம், ஆகாச கருடன் கிழங்கின் மீது காயம் ஏதும் படாமல் தோண்டி வெளியே எடுக்க வேண்டும், ஒருவேளை காயம் பட்டால் துளிர்க்காமல் போக வாய்ப்பு உண்டு.

நடவு செய்தல்

ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு
மண் மற்றும் நன்கு மக்கிய மாட்டு எரு இரண்டையும் கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். தோண்டி எடுத்து வைத்துள்ள ஆகாச கருடன் கிழங்கை அந்த மண்கலவையில் வைத்து நடவு செய்யவும். கிழங்கு மறையும் அளவிற்கு மண்ணை கொண்டு மூடினாலே போதுமானது. சிறிது நீர் தெளித்து வெயிலில் வைக்கவேண்டும்.

5kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாட்டு எரு தொழுஉரம் பை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now

ஆகாச கருடன் கிழங்கு வளர்ப்பு மற்றும் சாகுபடி

நடவு செய்த 45 நாளில் கொடியானது நன்கு வளர தொடங்கி இருக்கும். பின்பு 60 நாளில் பூ வைக்க தொடங்கும். ஆனால் கிழங்குகள் வேர் பகுதியில் தான் காணப்படும். சிலர் வீடு வாசலில் கட்டிருக்கும் போது காற்றின் ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு சிறிது வளரும் ஆனால் மண்ணில் வளரும் அளவுக்கு வளர்ச்சி இருக்காது.

ஆகாச கருடன் கிழங்கு நன்மைகள்

ஆகாச-கருடன்-கிழங்கு

  • பாம்பு கடித்துவிட்டால், இந்த ஆகாச கருடன் கிழங்கை எலுமிச்சை பழம் அளவிற்கு சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்பட்டு விஷத்தன்மையின் வீரியம் குறையும், பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றிவிடலாம்.
  • பொதுவாக இதை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவார்கள், அப்படி தொங்க விட்டால் வீட்டின் வாஸ்து குறைபாடுகள் குறைந்து, தீய சக்திகளை ஈர்த்துக்கொள்ளும், கண் திருஷ்டி மற்றும் பில்லி சூன்யம் விலக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
  • இளைத்துப்போன உடலைத் தேற்றவும், உடலில் உஷ்ணத்தை குறைக்கவும் உதவுகிறது, ஆனால் சித்த மருத்துவரிடத்து ஆலோசித்து பிறகு சாப்பிட வேண்டும்.
  • சீதப்பேதி பிரச்சனை சரியாக, ஐந்து மில்லி ஆகாச கருடன் கிழங்கு பொடிதனை நூறு கிராம் தண்ணீரில் கலந்து அதை காய்ச்சி காலை மற்றும் மாலை இருவேளையும் குடித்துவர குணமாகும்.
  • ஆகாச கருடன் கிழங்கு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. எனவே தான், சித்தர்கள் இதை மகா மூலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • கால்நடைகளுக்கு நோய் எதிர்சக்திக்காக இந்த கிழங்கு கொடுக்கப்படுகிறது.
  • ஆகாச கருடன் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை, சரும நோய்களுக்கு மேற்பூச்சாக பூசி குணப்படுத்தலாம்.


எளியமுறையில் வளர்க்க கூடிய இத்தகைய அற்புத சக்தி கொண்ட ஆகாச கருடன் கிழங்கை வளர்த்து, அதன் முழு பயன்களையும் பெற்று மகிழ வாழ்த்துகிறோம்.

மஞ்சள் வளர்ப்பு சமீபகாலமாக நமது நாட்டில் பெரிய அங்கீகாரம் பெற ஆரம்பித்திருக்கிறது. இந்த மூலிகை இந்தியா, இந்தோனேசியாவின் இயல் தாவரம் ஆகும். இந்த மஞ்சள் மூலிகையானது ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படும். மஞ்சள் தாவரத்தின் வேர் கிழங்கின் அறிய பண்புபை மக்கள் உணர ஆரம்பித்திருப்பதுதான், அதன் சமீபத்திய பிரபலத்துக்குக் காரணமாக விளங்குகிறது. மஞ்சளுக்கு இந்தியக் குங்குமப்பூ எனும் பெயரும் இருக்கிறது.
மஞ்சள்-சாகுபடி
மஞ்சள் செடி வளர்ப்பு, மஞ்சள் சாகுபடி செய்யும் முறை, மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு, மஞ்சள் குலை செடி வளர்ப்பு, மஞ்சள் பயிரில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள், மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும், மஞ்சள் வகைகள், மஞ்சள் நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மஞ்சளில் விதை தேர்வு

அறுவடை
மண்கலவையின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றை பொருத்து நல்ல மஞ்சள் வகைகளை விதைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்கையான முறைகளில் தேர்ந்தெடுத்த விதைகள் தான் நல்லது. விரலி மஞ்சள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம்.

மஞ்சள் வகைகள்

வகைகள்
கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், என மஞ்சளில் பல வகைகள் இருக்கிறது. அனைத்து மஞ்சளும் வெவ்வேறு வகையான பயன்களை தர வல்லது.

மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு

மஞ்சள்-வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பது எப்படி என்று காணலாம், மஞ்சள் கிழங்கை உடைத்து 2 இன்ச் ஆழத்தில் நெகிழிப்பையில் அல்லது தொட்டியில் வைத்தால் மஞ்சள் செடி முளைத்து வரும். மஞ்சள் கிழங்கு முளைத்து வர ஒரு மாதம் கூட ஆகலாம்.

நெகிழிப்பையை பொறுத்தவரை ஒன்னேகால் அடி பை சரியாக இருக்கும். ஒரு பையில் ஒரு செடியை மட்டுமே வளர்க்க வேண்டும். கிழங்கு வகையை பொறுத்தவரை பை அல்லது தொட்டியில் வளர்க்கும் போது கூடுதல் உரமேலாண்மை மிக அவசியம். நல்ல செறிவுள்ள மண்கலவையை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பஞ்சகாவியாவை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்கலாம். மஞ்சள் அறுவடை செய்ய 8 முதல் 10 மாதங்கள் ஆகும். மஞ்சள் 60 சென்டிமீட்டர் முதல் 90 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மையுடையது.

2 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 2 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

மஞ்சள் கிழங்கு அறுவடை

விதை-தேர்வு
8 முதல் 10 மாதங்களுக்கு பிறகு மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை நிறம் மாறி இலையானது மஞ்சள் நிறமாக மாறி வாடத் தொடங்கும். அச்சமயம் அதன் தாள்களை அறுத்துவிடலாம், இதன் பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மஞ்சள் கிழங்கை சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.

மஞ்சளின் பயன்கள்

மஞ்சளின்-பயன்கள்

  • கப்பு மஞ்சள், புண்களை ஆற்றவும் மேலும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம்.
  • கறி மஞ்சள் என்பது நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்துவது.
  • விரலி மஞ்சளைப் நன்கு பொடிசெய்து, தினசரி பாலோடு கலந்து குடித்து வந்தால், சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வைக்கலாம்.
  • மர மஞ்சள் தனை வேப்பிலையுடன் சேர்த்து நன்கு அரைத்துப் பூசி வர அம்மை நோய் சரியாகும்.
  • கஸ்தூரி மஞ்சள் வளர்ப்பு பிரபலமாக காரணம், அது முகத்திற்கு பொலிவு சேர்க்க பயன்படுகிறது.
  • சளி பிரச்சனையால் சிரமப்படுகிறவர்கள், தினமும் காலை வேளையில் மூக்கடைப்பால் சிரமப்படுகிறவர்கள், மஞ்சள் மற்றும் அதனுடன் வேப்பிலை, தேன், மிளகு இவற்றை நன்கு அரைத்து உட்கொள்வதன் மூலம் விரைவில் பலனடையலாம்.

  • மஞ்சள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பொங்கல் மஞ்சள் ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த இந்த சஞ்சீவினியை (மஞ்சளை) பாதுகாத்து, மஞ்சள் இருக்க அஞ்சேல் எனும் அவர்களின் கூற்றிற்கு ஏற்ப, அனைவரும் அதை பயன்படுத்தி நன்மைகள் பல பெற வாழ்த்துகிறோம்

சேனைக்கிழங்கு வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் பார்க்கமுடிவதில்லை, விவசாயிகள் பணப்பயிர்களை அதிகம் பயிரிட ஆரம்பித்துவிட்டதால் சேனை கிழங்கு சாகுபடி கணிசமான அளவு குறைந்துவிட்டது. அதிக சத்து கொண்ட கிழங்குகளில் முதன்மையானது சேனைக்கிழங்கு.

சேனைக்கிழங்கு தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றியதாக அறியப்படுகிறது. சேனைக்கிழங்கை பெரிய கரணை என்றும் அழைப்பர், ஏனென்றால் இதன் செடியும், இலைகளும் கருணைக்கிழங்கு செடியைப் போலவே காணப்படுவதால் இப்பெயர்க் கொண்டு அழைக்கப்படுகிறது.

மண்ணில் விளையக்கூடிய கிழங்குகளில் அளவில் பெரியது சேனைக்கிழங்கு. அதன் வளர்ப்பு முறை, உற்பத்தியை பெருக்கும் வழிமுறை மற்றும் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாடித்தோட்டத்தில் சேனைக்கிழங்கு வளர்ப்பு

வளர்ப்பு
மாடித்தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடுவதற்கு தேவையான பொருள்கள், வளர்ப்பு பை அல்லது தொட்டி , அடியுரமாகயிட மணல், விதைக்கிழங்குகள், தென்னை நார்க்கழிவுகள், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, செம்மண், பூவாளி தெளிப்பான்.

சேனைக்கிழங்கு செடி வளர்ப்புக்கு தயார்செய்யும் உரக்கலவையானது பொல பொலப்பு தன்மையுடன் இருக்க வேண்டும். அடியுரமாக தென்னை நார்க்கழிவு, மண், இயற்கை உரம் ஆகியவற்றை சமபங்காக கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும். கிழங்கு எளிதாக வளர, மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்க தென்னை நார்க்கழிவுகளை அடி உரமாக சேர்க்க வேண்டும்.

கிழங்குகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். முளைப்புடன் கூடிய கிழங்குகளை கூட பயன்படுத்தலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைத்தவுடன் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவும், அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறுவதற்கு தொட்டியின் அடியில் இரண்டு அல்லது மூன்று துளைகள் இட வேண்டும்.

5 litter sprayer icon

இப்போதே வாங்குங்கள்!! 5 லிட்டர் ஸ்பெஷல் தெளிப்பான்

உங்கள் செடிகளின் மேல் தண்ணீர், பூச்சி விரட்டிகள் மற்றும் திரவ உரங்கள் தெளிக்க தரமான தெளிப்பான். மிக குறைந்த விலையில்!

 Buy Now

சேனை கிழங்கு சாகுபடி

செடி
சேனைக்கிழங்கை ஆடி பட்டத்தில் பயிரிடுவது சிறப்பு. சேனை பத்து மாத பயிர். எட்டாம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். சேனை விதைத்து 8 வது மாதத்தில் தண்டுகள் பழுத்துத் தானாக மடங்கினால் கிழங்கு அறுவடைக்குத் தயார், தேவையைப் பொறுத்து அறுவடை செய்து கொள்ளலாம். கிழங்குகள் முதிர்ந்து அறுவடை செய்தவுடன் சுத்தப்படுத்தி காற்றோட்டமுள்ள அறைகளில் வைக்க வேண்டும். இதன் மூலம் கிழங்குகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்.

bone meal icon

இப்போதே வாங்குங்கள்!! எலும்பு தூள்

உங்கள் செடிகளுக்கு தேவையான கால்சியம் சதை இயற்கை முறையில் தரும் எலும்பு தூள் கலவை.

 Buy Now

சேனைக்கிழங்கு வகைகள்

சாகுபடி
சேனைக்கிழங்கில் இரண்டு வகை உண்டு. மிருதுவான மற்றும் கெட்டியான கிழங்கு. இதில் மிருதுவான கிழங்கு மிகுந்த காரம் உடையது. உண்ணும் போது வாய், தொண்டை ஆகியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும், ஆனால் இந்த வகை அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. இந்த வகை கிழங்குகள் சற்று பழைய கிழங்காக மாறிய பிறகு சமைத்து உண்பதால் இந்த அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கெட்டியான கிழங்கு, இதில் காரத் தன்மை இருக்காது. கிழங்கு வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கும்.

சேனைக்கிழங்கு நன்மைகள்

சேனைக்-கிழங்கு

  • கீழ் வாதம், நீரிழிவு, தொழு நோய், உடல் வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை குணப்படுத்துகிறது.
  • உணவு செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டுகிறது.
  • இதில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் பலம் பெற உதவுகிறது.
  • பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
  • இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் நிறைய விட்டமின்களும் உள்ளது.
  • 100 கிராம் கிழங்கில் 330 கலோரிச் சத்துக்கள் உள்ளது.
  • இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது. உடல் வலுப்பெற உதவுகிறது.


இந்த கட்டுரையில் சேனைக்கிழங்கு பயிரிடும் முறை, சேனை கிழங்கு வளர்ப்பு மற்றும் மருத்துவப்பயன்களை எல்லாம் பார்த்தோம். நீங்களும் இயற்கை முறையில் சேனைக்கிழங்கு சாகுபடிசெய்து, அதன் முழு பயன்களையும் பெற்று குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.

Pin It