முட்டைக்கோஸ் வளர்ப்பு எளிது மட்டுமல்ல அதன் பயன்களும் அதிகம் ஆகும். முட்டைக்கோஸ் விளைச்சல், முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி, அறுவடை போன்றவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். முட்டைக்கோஸ் இலைகளால் ஆன ஒரு காயாகும். சீனா மற்றும் போலந்து நாடுகளில் பயன்படுத்தபட்ட முட்டைகோஸ் 1794 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு அறிமுகமானது.

விதைகளிலிருந்து முட்டைக்கோஸ் வளர்ப்பது எப்படி

உலகளவில் முட்டைக்கோஸ் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இமாச்சலப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

நாற்றுகள் மூலம் முட்டைக்கோஸ் வளர்ப்பு

முட்டைக்கோஸ் நாற்று

முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு நாற்றுகள் போடுவதற்கு 100 ச.அடி நிலம் போதுமானது. 15 செ.மீ உயரம், 1 மீ அகலம், மற்றும் தேவையான அளவு நீளம் விட்டு விதைப்படுக்கையை தயார் செய்ய வேண்டும்.

2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 1 ச.அடிக்கு அளிக்க வேண்டும். விதைப்படுக்கையில் 10 செ.மீ இடைவெளிவிட்டு விதைகளை விதைக்க வேண்டும்.

5kg potting mix icon

இப்போதே வாங்குங்கள்!! 5 கிலோ மாடித்தோட்டம் ஸ்பெஷல் மண்கலவை

மாடித்தோட்டத்திற்கான பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மண் கலவை. செடிகள் செழித்து வளர மிக குறைந்த விலையில்!!

 Buy Now

விதைப்பு முறை

முட்டைக்கோஸ் வளர்ப்பு செய்வதற்கான நிலத்தை நன்றாக உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ இடைவெளிவிட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

மலைப்பகுதியாக இருந்தால் 40×40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதியாக இருந்தால் 45×30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவேண்டும்.

நீர் மேலாண்மையை பொறுத்தவரை தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருந்தால் போதுமானது.

Drip irrigation kit icon

இப்போதே வாங்குங்கள்!! சொட்டு நீர் பாசன கருவி

உங்கள் வேலைகளை குறைத்து, மிக குறைந்த நீர் செலவில் உங்கள் செடிகள் செழிப்பாக வைத்திருக்கும் சொட்டு நீர் பாசன கருவி. மிக குறைந்த விலையில்!

 Buy Now

உரம்

மலைப்பகுதியில் முட்டைக்கோஸ் வளர்ப்புக்கு அடியுரமாக 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்ச்சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்ச்சத்து ஆகிய உரங்களை அளிக்க வேண்டும்.

சமவெளிப்பயிர்களுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 கிலோ சாம்பல்சத்துக்களை இட வேண்டும். மேலுரமாக பயிர் செய்த 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யாவை பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத்தெளிப்பாக தெளிக்க வேண்டும். பயிர் செய்த ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் 10 % வெர்மிவாஷ் தெளிக்க வேண்டும்.

அசுவினிகள்

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 1௦% வேப்ப இலைச் சாற்றை 45,60,75 வது நாளில் தெளிக்க வேண்டும். வயலில் ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறியை பொருத்த வேண்டும்.

வெட்டுப்புழுக்கள்

கோடைக்காலத்தில் விளக்குப்பொறியை வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத்தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்

பயிர் செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 5% மஞ்சூரியன் தேயிலைச்சாற்றை ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்.

பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 3 % பஞ்சகவ்யாவை 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

வேர்முடிச்சு நோய்

நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும், மற்றும் மண்ணின் கார அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் வேர்முடிச்சு நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

சரியான பராமரிப்பின் மூலம் இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்றவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும்.

விளைச்சல் மற்றும் அறுவடை

முட்டைக்கோஸ் செடி

மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70 முதல் 80 டன்கள் வரை கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25 முதல் 35 டன்கள் வரை கிடைக்கும்.

பயிர் செய்த 75 வது நாளில் காய்கள் அறுவடைக்கு தயார் ஆகி விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

120 நாட்களில் சுமார் 8 முறை முட்டைகோஸுகளை அறுவடை செய்யலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று ஆனால் முற்றாமல் இருக்கும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்

  • இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது.
  • கண் நரம்புகளை சீராக இயங்கச்செய்யக்கூடியது.
  • அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யக்கூடியது.
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கக்கூடியது.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளும்,பற்களும் உறுதியாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நரம்புகளுக்கு வலிமை கொடுத்து நரம்புத்தளர்ச்சியை சரி செய்யக்கூடியது.
  • சருமத்திற்கு பொலிவைக்கொடுத்து சரும வறட்சியை போக்க க்கூடியது.
  • சிறுநீரைப் பிரித்து வெளியேற்றும் தன்மை உடையது.
  • முட்டைக்கோஸ் உண்ணும் முறை

    முட்டைக்கோஸ் பச்சையாக சாப்பிடலாமா என்று சிலருக்கு சந்தேகம் வருவதுண்டு. முட்டைகோஸை பச்சையாக ஜூஸ் போன்றும் குடிக்கலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். இதில் நிறைய சத்துக்கள் இருப்பதால் எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையே, ஆனால் நன்றாக சுத்தம் செய்தபின் உண்பது அவசியம் .

    தமிழில் முட்டைக்கோஸ் வளர்ப்பு வழிகாட்டி


    முட்டைக்கோஸ் வளர்ப்பு மற்றும் பயன்கள் பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டியாக நிறைய வலைத்தளங்கள் மற்றும் முகநூல் போன்றவைகள் உள்ளது. மேலும் முட்டைக்கோஸ் செடி வளர்ப்பது எப்படி, எளிய முறையில் வீட்டில் முட்டைகோஸ் பயிர் வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் வலைத்தளங்களில் அறிய முடியும்.

    Comments are closed.

    Pin It