நாவல் பழம் மரம் அனைத்து மண்களிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத் தன்மை மிக்க மற்றும் நீர் தேங்கிய நிலையில் இருந்தாலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு சிறப்பாக இருக்கும், எனினும் அதிகமான உற்பத்தி மற்றும் நல்ல வளர்ச்சிக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் களிமண் அல்லது செம்மண் சிறந்தது.
நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு
நாவல் பழம் மரம் மிகுந்த வறட்சியை கூட தாங்கி வளரக்கூடிய பழப்பயிர் ஆகும். நாவல் பழங்களில் இரும்புச்சத்தும், கனிமங்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக இருக்கிறது. நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி, நாவல் பழம் பயன்கள், நாவல் மரம் சாகுபடி, நாவல் பழம் வகைகள் ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நடவு செய்தல்

நடவு-செய்தல்
நாவல் பழம் மரம், விதை மற்றும் நாற்று முறையில் நடவு செய்யலாம். நல்ல விதைகளாக தேர்வு செய்து விதைக்கவும். விதைகள் முளைக்க சுமார் பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். நாற்றுகள் மூலம் நடவு செய்த நாவல் மரத்தில் எட்டு முதல் பத்து ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் மூலம் வளர்ந்த நாவல் மரங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலும் பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

நாவல்-பழம்-மரம்-வளர்ப்பு-1
நாட்டு நாவல் மரம் நன்கு வளர்ந்த நிலையில், ஒரு மரத்திற்கு எழுபது கிலோ வரை தொழு உரத்தை அளிக்க வேண்டும், நாவல் மரம் வளரும் மண்ணில் அதிக ஊட்டசத்து காணப்பட்டால் அதன் இலைகள் அதிக அளவில் வளரும், எனவே தான் தொழு உரத்தை அளிக்கிறோம்.

10kg Cow Dung Manure icon

இப்போதே வாங்குங்கள்!! 10 கிலோ மாட்டு எரு தொழு உரம் மூட்டை

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியை இயற்கை முறையில் அதிகரிக்க இப்போதே வாங்குங்கள். மிக குறைந்த விலையில்!

 Buy Now


நாவல் செடிகள் வளர்ச்சி அடையும் காலம் வரை களைகள் இல்லாமல் பராமரிப்பது அவசியம். நாவல் பழ மரத்திற்கு கவாத்து செய்யும் போது, உலர்ந்துபோன மற்றும் குறுக்கில் செல்லும் கிளைகளை நீக்கினால் போதுமானது, இவ்வாறு செய்வதால் நாவல் மரம் வளர்ப்பு சிறக்கும்.

மகசூல் மற்றும் சாகுபடி

நாவல்-பழம்
நாற்று மூலம் வளர்ந்த நாவல் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு எண்பது முதல் நூறு கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மூலம் வளர்ந்த மரத்திலிருந்து அறுபது முதல் எழுபது கிலோ வரை நாவல் பழங்கள் கிடைக்கும். நாவல் மரங்கள் தொடர்ந்து ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை பலனை கொடுக்கும்.

நாவல் பழம் மரம் ஒரு இலை உதிரா மரம் ஆகும். இதை பிப்ரவரி – மார்ச் மாதம் மற்றும் ஜுலை – ஆகஸ்ட் மாதம் ஆகிய இரண்டு பருவங்களிலும் நாவல் பழம் மரம் வளர்ப்பு செய்யலாம்.

gardening kit icon

இப்போதே வாங்குங்கள்!! தரமான தோட்டக்கருவிகள் பெட்டி

உங்களின் வேலைப்பளுவை குறைத்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை சிறப்பாக வளர்க்க தேவையான கருவிகள் பொட்டலம். இந்த ஒன்றே போதும். மிக குறைந்த விலையில்!

 Buy Now

நாவல் பழம் பயன்கள் மற்றும் மருத்துவகுணம்

நாவல் பழம் மரம் வளர்ப்பு

  • வெள்ளை நாவல் பழத்தின் சாறு மற்றும் மாம்பழத்தின் சாறை சம பங்கு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்துவந்தால் சர்க்கரை நோய்யானது கட்டுக்குள் வரும், இதுவே வெள்ளை நாவல் மருத்துவ குணம் ஆகும்.
  • நன்கு பழுத்த நாவல் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரானது பசி தனை தூண்டும் குணம் உடையது.
  • நாவல் பழத்தை சாப்பிட்டால் குடற்புண் மற்றும் கல்லீரல் கோளாறுகள், போன்றவற்றை சரிசெய்ய வல்லது.
  • நாவல் பழத்தின் விதைதனில் மாவுச் சத்து மற்றும் புரதம் மிகுந்து உள்ளதால் கால்நடைகளுக்கு சத்துமிக்க தீவனமாகக் பயன்படுகிறது.
  • ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து அதிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதில் நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மண்ணீரலில் ஏற்படும் நோய்களை தடுக்கவல்ல அரும் மருந்தாகும் இந்த நாவல் பழம்.
  • நாவல் மரத்தின் இலையை பொடி செய்து அதைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகள் வலுப்பெறும், நாவல் மர இலையின் சாம்பல் பூசிவர நாள்பட்ட தீக்காயங்கள் மற்றும் வெட்டு பட்ட காயங்கள் குணமாகும்.


நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும் என்று பார்த்தோம். நாவல் பழம் மிக சிறந்த மருத்துவ குணத்தை உடையது, பெருன்பான்மையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. நாவலின் இலை, பழம், பட்டை, விதை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அரும்மருந்தான நாவல் பழ மரத்தை வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற வாழ்த்துகிறோம்.

Comments are closed.

Pin It